search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாசுதேவநல்லூர் கோவிலில் ராட்டினம் அமைக்க லஞ்சம் கேட்கும் அதிகாரிகள்-நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு
    X

    சண்முகவேல்.

    வாசுதேவநல்லூர் கோவிலில் ராட்டினம் அமைக்க லஞ்சம் கேட்கும் அதிகாரிகள்-நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு

    • லெனின் தர்மராஜ், சண்முகவேல் ஆகியோர் ராட்டினம் இயக்குவதற்கு அரசு துறைகளில் அனுமதி வாங்கியதாக கூறப்படுகிறது
    • சுமார் ரூ.40 லட்சம் தங்களுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக மனுவில் கூறியுள்ளனர்.

    தென்காசி:

    சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளத்தை சேர்ந்த லெனின் தர்மராஜ் மற்றும் ஆய்க்குடியை சேர்ந்த சண்முகவேல் ஆகியோர் கோவில் விழா காலங்களில் பொழுது போக்கிற்காக ராட்டினம் அமைத்து அதன் மூலம் தொழில் செய்து வந்தனர்.

    இந்நிலையில் வாசுதேவ நல்லூரில் உள்ள சிந்தாமணிநாதர் கோவிலில் மூன்று நாட்கள் நடைபெறும் திருவிழாவிற்கு ராட்டினம் இயக்குவதற்கு அரசு துறைகளில் அனுமதி பெற்று, முன்கட்டணம் உள்ளிட்டவை செலுத்தி அனுமதி வாங்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும் பொதுப்பணி துறையை சேர்ந்த சில அதிகாரிகள் தங்களுக்கு பணம் மட்டுமே ராட்டினத்தை இயக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவித்ததாக அவர்கள் புகார் கூறுகின்றனர்.

    இதுதொடர்பாக ராட்டின உரிமையாளர் சண்முகவேல் கலெக்டர் ரவிச்சந்திரனிடம் மனு அளித்துள்ளார். அதில், ராட்டினம் அமைக்க அனுமதி வழங்குகிறோம் என்ற பெயரில் அதிகாரிகள் அலைக்கழித்ததாகவும், இதனால் சுமார் ரூ.40 லட்சம் தங்களுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    Next Story
    ×