search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி பகுதியை சேர்ந்த  மகன்- மருமகள் கொலை மிரட்டல் விடுப்பதாக பெற்றோர் புகார் மனு
    X

    பண்ருட்டி பகுதியை சேர்ந்த மகன்- மருமகள் கொலை மிரட்டல் விடுப்பதாக பெற்றோர் புகார் மனு

    • பண்ருட்டி பகுதியை சேர்ந்த மகன்- மருமகள் கொலை மிரட்டல் விடுப்பதாக பெற்றோர் புகார் மனு அளித்தனர்.
    • கட்டையை எடுத்து வந்து கொன்றுவிடுவோம் என மிரட்டினர்.

    கடலூர்:

    பண்ருட்டி தோப்புகொல்லை பகுதியை சேர்ந்தவர் ராமர் (வயது 75). அவரது மனைவி ரோஜாவர்ணம் . இவர்கள் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர் . அனைவருக்கும் திருமணம் நடந்து தனித்தனி குடும்பம் நடத்தி வருகின்றனர். எனது 3 மகன்களுக்கும் பாகப்பிரிவினை செய்து கொடுத்துவிட்டேன். அவர்கள் தனித்தனியாக வீடு கட்டி அவர்கள் பாகத்தில் குடியிருந்து வருகின்றார்கள். இவர்கள் 3 பேரும் செல்வதற்கு பொதுப்பாதை அமைத்து கொடுத்துள்ளேன். இதில் தனசேகரன் என்பவர் பொதுப்பாதையில் மற்றவர்கள் செல்லும் வழியில் கார் மற்றும் இருசக்கரவாகனங்களை நிறுத்தி வைக்கின்றார். இது சம்பந்தமாக நாங்கள் கேட்ட போது என்னையும் எனது மனைவியையும் மூத்த மகன் சந்திரசேகரன், அவரது மனைவி தமிழ்ச்செல்வி இருவரும் சேர்ந்து கடந்த 23- ந்தேதி தேதி 2 பேரும் இரும்பு பைப்பு மற்றும் கட்டையை எடுத்து வந்து கொன்றுவிடுவோம் என மிரட்டினர். ஆகையால் இது சம்பந்தமாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×