என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கவலைக்கிடம்"
- கடலில் அலை அதிகமாக இருந்ததால் பாலம் சேதமடைந்து விழுந்ததாக தகவல்.
- கடலில் விழுந்தவர்கள் லைப் ஜாக்கெட் போட்டிருந்ததால் உயிர் சேதம் தவிர்ப்பு.
கேரள மாநிலத்தில் ஏராளமான சுற்றுலா தலங்கள் மற்றும் கடற்கரை பீச்சுகள் உள்ளன. திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கலா கடற்கரை நீந்துவதற்கும், சூரிய குளியலுக்கும் ஏற்ற இடமாக இருக்கிறது.
இதனால் இந்த கடற்கரைக்கு ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும் இந்த கடற்கரையில் மிதக்கும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாலம் கடற்கரையில் இருந்து கடலுக்குள் 100 மீட்டர் நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
கேரளா வரும் சுற்றுலா பயணிகள், கண்டிப்பாக மிதக்கும் பாலத்தில் நடந்து அந்த அனுபவத்தை பெறுவது வழக்கமாகிவிட்டது.
இந்நிலையில், மிதக்கும் பாலம் உடைந்ததில் 15 பேர் கடலில் விழுந்தனர்.
கடலில் அலை அதிகமாக இருந்ததால் பாலம் சேதமடைந்து விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடலில் விழுந்தவர்கள் லைப் ஜாக்கெட் போட்டிருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், கடல் நீரைக் குடித்ததால் 15 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில், 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல் வௌியாகியுள்ளது.
- சுதீர்கான் மீதான ஆசிட் வீச்சு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
- சுதீர்கான் மற்றும் சஜிகுமார் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் மாறநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுதீர்கான் (வயது45). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூர் செயலாளரான இவர், மாறநல்லூர் பஞ்சாயத்தின் நிலைக்குழு தலைவராகவும் இருந்து வருகிறார்.
சம்பவத்தன்று காலை சுதீர்கான் தனது வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சஜிகுமார் வீட்டுக்குள் புகுந்து, சுதீர்கானின் மீது ஆசிட் வீசிவிட்டு தப்பிச் சென்றார். இதில் அவருக்கு முகம், கண்கள், மார்பு, வயிறு மற்றும் கைகளில் படுகாயம் ஏற்பட்டது.
அவரை அவருடைய மனைவி ஹிருனிசா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கட்டக்கடை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். பின்பு மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சுதீர்கான் சேர்க்கப்பட்டார். அங்கு கவலைக்கிடமான நிலையில் சுதீர்கான் சிகிச்சை பெற்று வருகிறார்.
சுதீர்கான் மீதான ஆசிட் வீச்சு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல தகவல்கள் கிடைத்தன. வெள்ளூர்கோணம் பால் கூட்டுறவு சங்க தலைவராக சுதீர்கான் இருந்து வரும் நிலையில், அங்கு சஜிகுமார் செயலாளராக இருந்திருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற சஜிகுமார், சில பொறுப்புகளை வகித்து வந்திருக்கிறார். அப்போது சங்கத்தின் சில பண பரிவர்த்தனைகள் தொடர்பாக சுதீர்கான் மற்றும் சஜிகுமார் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் அவர் ஆசிட் வீச்சில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. இருந்தபோதிலும் சஜிகுமார் பிடிபட்டால் தான் சரியான காரணம் தெரியவரும் என்பதால் தலைமறைவாகிய அவரை போலீசார் தீவிரமாக தேடினர்.
அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல இடங்களுக்கு சென்று அவரை தேடிவந்தனர். மேலும் அவரது செல்போனை வைத்து அவர் எங்கு இருக்கிறார் என்று கண்டறியும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.
அப்போது அவரது செல்போன் சிக்னல் தமிழக பகுதியில் இருப்பது போன்று காண்பித்தது. இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தமிழகம் விரைந்தனர். மேலும் சஜிகுமார் குறித்து தமிழக காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டு, தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது
இந்தநிலையில் மதுரையில் உள்ள ஒரு லாட்ஜில் சஜிகுமார் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கேரள போலீசார், மதுரைக்கு விரைந்தனர். போலீசாருக்கு வந்த முதற்கட்ட தகவலில், சஜிகுமார் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
ஆசிட் வீசிய சம்பவத்தில் போலீசாரிடம் சிக்கிக்கொள்வோம் என்று கருதி, பயத்தில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக கேரளா போலீசார் மதுரை விரைந்துள்ளனர்.
- மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சுதீர்கான் சேர்க்கப்பட்டார்.
- திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் சுதீர்கானின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் மாற நல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுதீர்கான் (வயது45). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூர் செயலாளரான இவர், மாறநல்லூர் பஞ்சாயத்தின் நிலைக்குழு தலைவராகவும் இருந்து வருகிறார்.
சம்பவத்தன்று காலை சுதீர்கான் தனது வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சஜிகுமார் வீட்டுக்குள் புகுந்து, சுதீர்கானின் மீது ஆசிட் வீசிவிட்டு தப்பிச் சென்றார். இதில் அவருக்கு முகம், கண்கள், மார்பு, வயிறு மற்றும் கைகளில் படுகாயம் ஏற்பட்டது.
அவரை அவருடைய மனைவி ஹிருனிசா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கட்டக்கடை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். பின்பு மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சுதீர்கான் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
வெள்ளூர்கோணம் பால் கூட்டுறவு சங்க தலைவராக சுதீர்கான் இருந்து வரும் நிலையில், அங்கு சஜிகுமார் செயலாளராக இருந்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற சஜிகுமார், சில பொறுப்புகளை வகித்து வந்திருக்கிறார்.
சங்கத்தின் சில பண பரிவர்த்தனைகளில் சுதீர்கான் மற்றும் சஜிகுமார் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அவர் ஆசிட் வீச்சில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் தலைமறைவாகிவிட்ட சஜிகுமாரை போலீசார் தீவிரமாக தேடினர்.
அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல இடங்களுக்கு சென்று அவரை தேடிவந்தனர். மேலும் அவரது செல்போனை வைத்து அவர் எங்கு இருக்கிறார் என்று கண்டறியும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.
அப்போது அவர் சென்னையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை போலீசார் சென்னைக்கு விரைந்துள்ளனர். இந்நிலையில் திருவனந்த புரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் சுதீர்கானின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- அலங்காநல்லூர் அருகே மனைவி-குழந்தைகளை கொன்ற விவசாயி கவலைக்கிடமாக உள்ளது.
- இவர் பலரிடம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
மதுரை
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருேக பெரிய இலந்தைகுளத்தைச் சேர்ந்தவர் உத்தராஜ். இவரது மகன் முருகன் (வயது 38). இவர் அலங்காநல்லூர் குலமங்கலம் ரோட்டின் அருகில் உள்ள பொம்மாத்தேவர் என்பவருக்கு சொந்தமான கொய்யா தோப்பில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
அவர் நிலத்தை குத்த கைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். இதில் அவருக்கு சரியான லாபம் கிடைக்கவில்லை. இதனால் பலரிடம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் முருகனின் மனைவி சுரேகா, மகள் யோகிதா, மகன் மோகனன் ஆகியோர் அங்குள்ள தோட்டத்து கிணற்றில் பிணமாக கிடந்தனர். முருகன் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சி செய்த தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் அலங்கா நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கிணற்றில் பிணமாக கிடந்த 3 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் போலீசாரின் விசாரணையில் முருகன், தனது மனைவியின் கை, கால்களை கட்டிப்போட்டு கொலை செய்ததாகவும், அதே போல் மகன், மகளையும் கொலை செய்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து முருகன் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அலங்காநல்லூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் முருகன் கழுத்ைத அறுத்துக்கொண்டதால் அவரது கழுத்து நரம்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சுய நினைவு இழந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
முருகன் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு தனது நண்பர்கள் மற்றும் ஜோதிடர் ஒருவ ருக்கு போன் செய்து அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப்போவ தாகவும், அவர்களது உடல்களை நல்லடக்கம் செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார். அப்போது அவர் தன்னிடம் ரூ. 4 ஆயிரம் மட்டும் உள்ளதாகவும் தெரி வித்துள்ளார்.
முருகன் சிலரிடம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அதனை திருப்பி செலுத்த முடியாமல் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக தெரிகி றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்