search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boiler explosion"

    • பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்து குறித்து போலீசார் விசாரணை.
    • பாதுகாப்பை உறுதி செய்யப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு.

    சென்னை தண்டையார்பேட்டையில் இயங்கு வரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இன்று எண்ணெய் கசிவு ஏற்பட்டு பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவரின் பெயர் பெருமாள் வயது (52) கரிமேடு பகுதியை சேர்ந்தவர்.

    இச்சம்பவம் அறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

    மேலும், பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

    மராட்டிய மாநிலத்தில் மத்திய மந்திரி நிதின் கட்காரி பண்ணையில் கொதிகலன் வெடித்த விபத்தில் பிரதீப் ஸ்ரீராம் என்பவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
    நாக்பூர்:

    மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு மராட்டிய மாநிலம், நாக்பூர் அருகே பண்ணை ஒன்று உள்ளது. அந்தப் பண்ணையில் நேற்று முன்தினம் மஞ்சள் உற்பத்தி பணி நடந்து கொண்டு இருந்தது.

    அதற்கான சூளையில் தண்ணீர் கொதிகலனுக்காக விறகு போடுகிற பணியில் 3 தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் தண்ணீர் கொதிகலன் வெடித்தது. அதைத்தொடர்ந்து தொழிலாளர்கள் 3 பேரும் ஓட்டம் பிடித்தனர். அவர்களில், பிரதீப் ஸ்ரீராம் என்பவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

    உடனடியாக அவர் கல்மேஷ்வர் நகரத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.இந்த விபத்து குறித்து கல்மேஷ்வர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். 
    ×