என் மலர்

    நீங்கள் தேடியது "extended"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருச்செந்தூரில் இருந்து தென்திருப்பேரை வரை ஏரல், குரங்கணி வழியாக தினமும் 4 தடவை தென்திருப்பேரை வரை வந்து செல்லும் அரசு பஸ் இரவு 9 மணிக்கு இரவில் தென்திருப்பேரையில் தங்கி அடுத்த நாள் காலை 6 மணிக்கு திருச்செந்தூர் புறப்பட்டு செல்லும்.
    • கடையனோடைக்கு நேற்று இரவு 9.15 மணியளவில் வந்த பஸ்சை பஞ்சாயத்து தலைவர் பூல்பாண்டி மாவட்ட பிரதிநிதி சால்வை அணிவித்து வரவேற்றனர்.

    தென்திருப்பேரை:

    திருச்செந்தூரில் இருந்து தென்திருப்பேரை வரை ஏரல், குரங்கணி வழியாக தினமும் 4 தடவை தென்திருப்பேரை வரை வந்து செல்லும் அரசு பஸ் இரவு 9 மணிக்கு இரவில் தென்திருப்பேரையில் தங்கி அடுத்த நாள் காலை 6 மணிக்கு திருச்செந்தூர் புறப்பட்டு செல்லும்.

    இந்த பஸ் நேற்று முதல் கடையனோடை ஊராட்சி பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று கடையனோடை உலகம்மன் கோவிலின் முன்புறம் இரவு 9.30 மணியளவில் வந்து தங்கி அடுத்த நாள் அதிகாலையில் 5.30 மணியளவில் கடையனோடையில் இருந்து புறப்பட்டு தென்திருப்பேரை, குரங்கனி, ஏரல், ஆத்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் வழி மார்க்கமாக திருச்செந்தூர் சென்றடையந்தது.

    கடையனோடைக்கு நேற்று இரவு 9.15 மணியளவில் வந்த பஸ்சை பஞ்சாயத்து தலைவர் பூல்பாண்டி மாவட்ட பிரதிநிதி பாலசந்திரன் வார்டு உறுப்பினர் பசுங்கிளிராஜா மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பட்டாசு வெடித்து டிரைவர், கண்டக்டர் ஆகியோருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஏர்செல் மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை ஏப்ரல் 26-ம் தேதி வரை சிபிஐ நீதிமன்றம் நீட்டித்துள்ளது. #AircelMaxisCase #PChidambaram #KartiChidambaram
    புதுடெல்லி:

    ஏர்செல்-மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை தீவிரமடைந்த நிலையில், முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் சிபிஐ கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


     
    இந்த மனுக்களை விசாரித்த சிபிஐ நீதிமன்ற தலைமை நீதிபதி ஓ.பி.ஷைனி, இருவரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்தார். அதன்பின்னர் வழக்கு விசாரணையின் தன்மைக்கு ஏற்ப, இந்த தடை உத்தரவு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    கடைசியாக இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை மார்ச் 25ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இந்த தடை இன்றுடன் நிறைவடைந்ததையடுத்து இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை ஏப்ரல் 26-ம் தேதி தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். #AircelMaxisCase #PChidambaram #KartiChidambaram
     
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    எல்லைதாண்டி வந்ததாக கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேரின் நீதிமன்றக் காவலை நாளை வரை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #TNFishermen #SrilankanNavy
    யாழ்ப்பாணம்:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து கடந்த 12ம் தேதி 136 விசைப்படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள்  கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    இதில் ரத்தினம்மாள் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற மீனவர்கள் ஆனந்தராஜ் (வயது 22), விஷ்வா (23), அஜித் (22), வினோத் (21), ஆனந்தபாபு (35), இளங்கோவன் (30) ஆகிய 6 பேரும், ரத்தினவேல் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற ரத்தினவேல், செல்லத்துரை (70), முருகன் (45) ஆகிய 3 பேரும் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.



    எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட 9 மீனவர்களையும், ஜனவரி 17-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணைக் காவல் முடிவடைந்ததையடுத்து, 9 மீனவர்களும் இன்று ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களின் நீதிமன்றக் காவலை மேலும் ஒரு நாள் நீட்டித்து (நாளை வரை) நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 9 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    நீதிமன்றக் காவல் முடிந்து நாளை மீண்டும் ஆஜர்படுத்தப்படும்போது, 9 பேரையும் நீதிமன்றம் விடுவிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. #TNFishermen #SrilankanNavy
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஏர்செல் மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. #AircelMaxisCase #PChidambaram #KartiChidambaram
    புதுடெல்லி:

    ஏர்செல்-மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை தீவிரமடைந்த நிலையில், முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் சிபிஐ கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுக்களை விசாரித்த சிபிஐ நீதிமன்ற தலைமை நீதிபதி ஓ.பி.ஷைனி, இருவரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்தார். அதன்பின்னர் வழக்கு விசாரணையின் தன்மைக்கு ஏற்ப, இந்த தடை உத்தரவு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    கடைசியாக டிசம்பர் 18-ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிபிஐ தரப்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் சிலரை வழக்கில் சேர்ப்பதற்கு மத்திய அரசிடம் அனுமதி பெறவேண்டியிருப்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, ஜனவரி 11ம்தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.



    அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 1ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தலைமை நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவித்தார். அதுவரை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யக்கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார். #AircelMaxisCase #PChidambaram #KartiChidambaram
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சபரிமலையில 144 தடை உத்தரவு இன்று ஒருநாள் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. போலீஸ் கெடுபிடி காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைந்த நிலையில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. #Sabarimala
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் முக்கிய பூஜைகளில் ஒன்றான மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 16-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டது.

    சபரிமலை கோவிலில் இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து அங்கு ஐயப்ப பக்தர்கள், இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருவதால் ஐயப்ப பக்தர்கள் வருகையும் பாதியாக குறைந்தது.

    மேலும் சபரிமலையில 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. தற்போது இந்த தடை உத்தரவு இன்று ஒரு நாள் நீடிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் நிலவும் போலீஸ் கெடுபிடி காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஐயப்ப பக்தர்கள் வருகை சற்று அதிகரித்து உள்ளது.

    நேற்று ஒரேநாளில் 83 ஆயிரத்து 648 பக்தர்கள் சபரிமலை வருகை தந்து சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர். இதனால் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்தனர்.

    கடந்த ஆண்டு ஒரே நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வருகை தந்தனர். அவர்கள் 10 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்த பிறகுதான் சாமி தரிசனம் செய்ய முடிந்தது குறிப்பிடத்தக்கது.

    வருகிற 27-ந்தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளதால் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சபரிமலையில் கடந்த ஆண்டு மொத்தம் ரூ.356 கோடியே 60 லட்சம் வருமானம் கிடைத்திருந்தது. இதே நாளில் ரூ.123 கோடியே 93 லட்சம் வருமானம் கிடைத்திருந்தது. ஆனால் இந்த ஆண்டு இதுவரை ரூ.72 கோடியே 2 லட்சம் மட்டுமே வருமானம் கிடைத்துள்ளது.

    கடந்த ஆண்டு காணிக்கை மூலம் மட்டும் ரூ.100 கோடி வருமானம் வந்திருந்தது. இது இந்த ஆண்டு ரூ.28 கோடியே 13 லட்சமாக குறைந்துள்ளது. சபரிமலை கோவில் பிரசாதமான அரவணை மற்றும் அப்பம் பிரசாதம் மூலம் கிடைக்கும் வருமானமும் குறைந்துள்ளது.

    சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப தர்ம சேனை தலைவர் ராகுல் ஈஸ்வர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது வன்முறை நடைபெற்றதால் ராகுல் ஈஸ்வர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    அவர் ஒவ்வொரு சனிக்கிழமையும் பத்தினம் திட்டா போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. ஆனால் அவர், கடந்த சனிக்கிழமை போலீஸ் நிலையத்தில் கையெழுந்து இடவில்லை. இதை தொடர்ந்து அவரது ஜாமீனை ரத்து செய்த கோர்ட்டு அவரை கைது செய்யவும், போலீசுக்கு உத்தரவிட்டது.

    இதை தொடர்ந்து பாலக்காட்டில் வைத்து ராகுல் ஈஸ்வரை போலீசார் கைது செய்தனர்.  #Sabarimala
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சபரிமலையில் 144 தடை உத்தரவை இன்று முதல் 8-ந்தேதி வரை நீடிப்பு செய்து பத்தனம்திட்டா கலெக்டர் அறிவித்துள்ளார். 4-வது முறையாக இந்த நீடிப்பு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. #Sabarimala #Section144
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக தற்போது கோவில் நடை திறந்துள்ளது.

    சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள், அரசியல் கட்சிகள், இந்து அமைப்புகள் அங்கு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இதனால் சபரிமலையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் நடை திறந்த கடந்த மாதம் 16-ந்தேதி முதல் அங்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சபரிமலையில் இதுபோன்ற போலீஸ் கெடுபிடி காரணமாக பக்தர்களின் வருகையும் இந்த ஆண்டு குறைந்து உள்ளது.

    சபரிமலையில் 144 தடை உத்தரவை பத்தனம்திட்டா கலெக்டர் நீடிப்பு செய்து அறிவித்து வருகிறார். அதன்படி இன்று முதல் 8-ந்தேதி வரை 144 தடை உத்தரவு நீடிக்கப்பட்டு உள்ளது. 4-வது முறையாக இந்த நீடிப்பு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தடை உத்தரவு இளவங்கல் முதல் சன்னிதானம் வரை அமலில் இருக்கும். அதே சமயம் ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் சரணகோ‌ஷம் எழுப்பவோ, நாமஜெபம் நடத்தவோ தடை இல்லை.

    சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு செய்யப்பட்டு உள்ள அடிப்படை வசதிகள், போலீஸ் கெடுபிடிகள் பற்றி ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதிகள் ராமன், ஸ்ரீஜெகன், முன்னாள் டி.ஜி.பி. ஹேமச்சந்திரன் ஆகியோர் கொண்ட குழுவை கேரள ஐகோர்ட்டு நியமித்துள்ளது. அவர்கள் முதலில் நிலக்கல், பம்பையில் ஆய்வு மேற்கொண்டனர். நேற்று 2-வது நாளாக சபரி மலை சன்னிதானத்தில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பக்தர்களுக்கு கழிவறை, குளியல் அறை, குடிநீர் வசதி உள்பட அடிப்படை வசதிகள் திருப்தியாக உள்ளதாக தெரிவித்தனர். போலீஸ் கெடுபிடி மட்டும் அதிகமாக இருப்பதாக குழுவினர் கூறினர்.

    ஐகோர்ட்டு நியமித்த 3 பேர் குழு சபரிமலை சன்னிதானத் தில் ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.

    இந்த 3 பேர் குழு வருகிற 10-ந்தேதிக்குள் தங்களது அறிக்கையை கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளது.

    சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்தும், பக்தர்களிடம் போலீசாரின் கெடுபிடியை கண்டித்தும் பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் ராதா கிருஷ்ணன் கேரள தலைமை செயலகம் முன்பு இன்று 3-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். பா.ஜனதா எம்.பி. சுரேஷ்கோபி, ஓ.ராஜ கோபால் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

    இதே கோரிக்கைக்காக காங்கிரஸ் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களான சிவக்குமார், அப்துல்லா, ஜெயராஜன் ஆகியோர் சட்டசபை முன்பு காலவரையற்ற சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கி உள்ளனர். அவர்களை முதல்-மந்திரி பினராயி விஜயன், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். அப்போது போராட்டத்தை கைவிடும்படி அவர்கள் கேட்டுக்கொண்டனர்.  #Sabarimala #Section144
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ள சுற்றுப்புற பகுதியில் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு வரும் 4-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. #Sabarimala #SabarimalaProhibition
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகிறது.

    இதனால், ஐயப்பன் கோவில் அமைந்திருக்கும் சபரிமலையை சுற்றியுள்ள பம்பை, இலவுங்கல், நிலக்கல், சன்னிதானம்  உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதத்தில் இருந்து 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.



    இந்நிலையில், இந்த ஊரடங்கு உத்தரவை டிசம்பர் 4-ம் தேதி வரை நீட்டித்து பத்தினம்திட்டா கலெக்டர் நேற்று மாலை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட அறிக்கை மற்றும் மாஜிஸ்திரேட்களின் கருத்தின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. #Sabarimala  #SabarimalaProhibition

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் வணிகர்கள் ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்ய மத்திய அரசு கால அவகாசத்தை நீட்டித்து உள்ளது. #GST #AndhraPradesh #TamilNadu #GajaCyclone
    புதுடெல்லி:

    புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் வணிகர்கள் ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்ய மத்திய அரசு கால அவகாசத்தை நீட்டித்து உள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், நாகை, தேனி, தஞ்சை, சிவகங்கை, திருச்சி, கரூர், ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் வணிகம் செய்பவர்கள், அக்டோபர் மாதத்துக்குரிய ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்வதற்கான தேதி, டிசம்பர் 20-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    அதுபோல், ‘தித்லி’ புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் வியாபாரம் செய்பவர்கள், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்துக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்ய நாளை வரை (வெள்ளிக்கிழமை) அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.  #GST #AndhraPradesh #TamilNadu #GajaCyclone 
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த 25-ம் தேதி முதல் வழங்கப்பட்ட இலவச சேவைக்கு பொதுமக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை அடுத்து, நாளையும் இலவச சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. #ChennaiMetro
    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் சென்டிரல் மற்றும் டிஎம்எஸ் ஆகிய புதிய வழித்தடங்கள் கடந்த 25-ம் தேதி தொடங்கப்பட்டது. இதனை அடுத்து, மூன்று நாட்களுக்கு சென்டிரல் - விமான நிலையம், டிஎம்எஸ் - விமான நிலையம் ஆகிய வழித்தடங்களில் பொதுமக்கல் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

    நேற்றுடன் லட்சக்கணக்கான மக்கள் இலவசமாக பயணித்த நிலையில், இன்றும் இலவச சேவை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், பொதுமக்களின் வரவேற்பை அடுத்து நாளையும் இலவச சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. #ChennaiMetro 
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தூத்துக்குடியில் பதற்றம் இன்னும் தனியாத நிலையில் மேலும் நாளை காலை 8 மணி முதல் 27-ந்தேதி காலை 8 மணி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. #ThoothukudiShooting #ThoothukudiCollector
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது நேற்று முன்தினம் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். இதனால் தூத்துக்குடியில் பதற்றமான நிலை இருந்து வந்தது. அதனை தொடர்ந்து கடந்த 21-ந்தேதி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.



    இந்நிலையில், வன்முறை மேலும் பரவாமல் தடுக்கவும், வதந்திகள் பரவாமல் தடுக்கவும் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளதாக தமிழக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மூன்று நாட்களாகியும் இதுவரை அமைதி முழுவதுமாக திரும்பவில்லை. கடைகளை திறப்பதற்கான முயற்சிகளை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு சட்டம்- ஒழுங்கை பராமரித்திட நாளை காலை (25-ந்தேதி) 8 மணி முதல் 27-ந்தேதி காலை 8 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதனால் மேலும் மூன்று நாட்கள் 144 நீட்டிக்கப்பட்டுள்ளது. #ThoothukudiShooting #ThoothukudiCollector
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin