search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kadaiyanodai"

    • திருச்செந்தூரில் இருந்து தென்திருப்பேரை வரை ஏரல், குரங்கணி வழியாக தினமும் 4 தடவை தென்திருப்பேரை வரை வந்து செல்லும் அரசு பஸ் இரவு 9 மணிக்கு இரவில் தென்திருப்பேரையில் தங்கி அடுத்த நாள் காலை 6 மணிக்கு திருச்செந்தூர் புறப்பட்டு செல்லும்.
    • கடையனோடைக்கு நேற்று இரவு 9.15 மணியளவில் வந்த பஸ்சை பஞ்சாயத்து தலைவர் பூல்பாண்டி மாவட்ட பிரதிநிதி சால்வை அணிவித்து வரவேற்றனர்.

    தென்திருப்பேரை:

    திருச்செந்தூரில் இருந்து தென்திருப்பேரை வரை ஏரல், குரங்கணி வழியாக தினமும் 4 தடவை தென்திருப்பேரை வரை வந்து செல்லும் அரசு பஸ் இரவு 9 மணிக்கு இரவில் தென்திருப்பேரையில் தங்கி அடுத்த நாள் காலை 6 மணிக்கு திருச்செந்தூர் புறப்பட்டு செல்லும்.

    இந்த பஸ் நேற்று முதல் கடையனோடை ஊராட்சி பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று கடையனோடை உலகம்மன் கோவிலின் முன்புறம் இரவு 9.30 மணியளவில் வந்து தங்கி அடுத்த நாள் அதிகாலையில் 5.30 மணியளவில் கடையனோடையில் இருந்து புறப்பட்டு தென்திருப்பேரை, குரங்கனி, ஏரல், ஆத்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் வழி மார்க்கமாக திருச்செந்தூர் சென்றடையந்தது.

    கடையனோடைக்கு நேற்று இரவு 9.15 மணியளவில் வந்த பஸ்சை பஞ்சாயத்து தலைவர் பூல்பாண்டி மாவட்ட பிரதிநிதி பாலசந்திரன் வார்டு உறுப்பினர் பசுங்கிளிராஜா மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பட்டாசு வெடித்து டிரைவர், கண்டக்டர் ஆகியோருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.

    ×