என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mkstalin arrested"

    தி.மு.க.செயல் தலைவர் ஸ்டாலினை கைது செய்யப்பட்டதை கண்டித்து பெரம்பலூரில் தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.
    பெரம்பலூர்:

    நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை கண்டித்து கருப்பு கொடி காட்டி முற்றுகையிட்ட தி.மு.க.வினரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்ததை கண்டித்து கவர்னரிடம் மனு கொடுக்க சென்ற தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர்.

    இதனை கண்டித்து பெரம்பலூர் புதுபஸ் ஸ்டாண்டில் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமையில் சாலை மறியலில் ஈடுப்பட்ட நகர செயலாளர் பிரபாகரன், மாநில நிர்வாகிகள் துரைசாமி, வல்லபன், தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன்,  ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, நல்லதம்பி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிபாஸ்கர், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் உட்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருச்சி மாவட்டம் துறையூரில் பேருந்து நிலையம் முன்பு சட்டமன்ற  உறுப்பினர் ஸ்டாலின்குமார் தலைமை யில்  சாலை மறியல்  போராட்டம் நடைபெற்றது. இதில்  மாவட்ட பொருளாளர் தர்மன் ராசேந்திரன், நகர செய லாளர் முரளி, ஒன்றிய செயலாளர்கள் துறைïர் அண்ணா துரை, உப்பிலியபுரம் முத்துசெல்வன், ஆதி திராவிடர் நலக்குழு கஸ்டம்ஸ் மகாலிங்கம், இளைஞரணி  கிட்டப்பா, பிரபு மும்மூர்த்தி, முன்னாள் கவுன் சிலர்கள் மனோகர், கார்த்தி, அன்பு காந்தி, செங்கை அசோகன், அசோக்குமார் உள்பட 40 பேர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். 

    கீரனூரில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லப்பாண்டியன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றியச் செயலாளர்கள் சேட்டு,  வெங்கடாச்சலம், சத்தியசீலன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் எம்.எம்.பாலு, கீரனூர் பேரூர் கழக பொறுப்பாளர் வக்கீல் அண்ணாத்துரை, மண்டையூர் பாண்டியன், வக்கீல் ராமையா, ஜி.டி.எஸ்.இளவரசன், பன்னீர்செல்வம், கே.ஆர்.பி. ஜெயச்சந்திரன், முருகேசன், குமரவேல், ராஜ் குமார், ஜெயகாந்தி, பேராசிரியர் குறிஞ்சி வாணன், கிருஷ்ணமூர்த்தி, இம்தியாஸ்,பொறியாளர் பாலா, குளத்தூர் மணி ராஜன், கார்த்திக், சவுந்தர் ராஜன் உள்பட 500 பேர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
    மு.க.ஸ்டாலின் கைது நடவடிக்கையை கண்டித்து தஞ்சையில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க எம்.எல்.ஏ உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

    தஞ்சாவூர்:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாமக்கல் மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று கலந்து கொண்டார். தி.மு.க.வினர் எதிர்ப்பு- தெரிவித்து நாமக்கலில் கருப்பு கொடி போராட்டம் நடத்தினர். இதில் கலந்து கொண்ட தி.மு.க எம்.எல்.ஏ உள்பட 192 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை சைதாப் பேட்டையில் தி.மு.க சார்பில் இன்று கண்டன போராட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். 

    இதைதொடர்ந்து கவர்னர் மாளிகைக்கு பேரணியாக செல்லும் போராட்டத்தில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் கைது நடவடிக்கையை கண்டித்து தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பு தி.மு.க சார்பில் சாலை மறியல் போராட்டம் இன்று நடந்தது. மாவட்ட செயலாளர் துரை.சந்திர சேகரன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் து.செல்வம், ஒன்றிய செயலாளர்கள் அருளாணந்தசாமி, முரளிதரன், இளைஞர் அணி அமைப்பாளர் சண்.ராமநாதன், மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த போராட்டம் குறித்து துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜனநாயக முறையில் நாமக்கல்லில் கருப்பு கொடி போராட்டம் நடத்திய தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து போராட்டம் நடத்தி கவர்னரிடம் மனு கொடுக்க சென்ற மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து போராட்டம் நடத்தினோம். எங்கள் போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    தி.மு.க. சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் டி.எஸ்.பி ஜெயசீலன் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினரை கைது செய்தனர்.

    நாமக்கல்லில் கவர்னருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியதால் கைது செய்யப்பட்ட தி.மு.க. வினரை விடுதலை செய்யக்கோரி தி.முக.வினர் பல்வேறு இடங்களில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். 

    பேராவூரணியில் ஒன்றிய பொருப்பாளர் அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நகர செயலாளர் நீலகண்டன், முன்னாள் பேரூராட்சி தலைவர் அசோக்குமார், சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் முத்துமாணிக்கம், நகர செயலாளர் நீலகண்டன் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து ஈரோட்டில் தி.மு.க.வினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் அமைச்சர் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஈரோடு:

    கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு கருப்பு கொடி காட்டிய நாமக்கல் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

    மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஈரோடு பெரியார் நகரில் காந்திஜி ரோட்டில் தி.மு.க. வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முத்துசாமி தலைமை தாங்கினார்.

    சாலை மறியலில் மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி.ப. சச்சிதானந்தம், மாநில கொள்கை பரப்பு இணை செயலாளர் வி.சி.சந்திரகுமார், மாவட்ட அவைத்தலைவர் குமார் முருகேஷ், தலைமை செயற் குழு உறுப்பினர்கள் குமார சாமி, மணிராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.இ.பிரகாஷ், மாநகர செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் குண சேகரன், கோட்டை பகுதி செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி சந்திரசேகர் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    சாலை மறியல் காரணமாக அங்கு பரபரப்பும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விஜயன், ராஜ்குமார், முருகையன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

    மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஆய்வு நடத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி காட்டிய தி.மு.க.வினர் 192 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 4 பிரிவு களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதனை கண்டித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கவர்னர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்ல தி.மு.க.வினர் முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

    மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையில் பெரியார் பஸ் நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே போராட்டம் நடைபெற்றது.

    மாநகர் மாவட்டச் செயலாளர்கள் தளபதி, வேலுச்சாமி தலைமையில் சுமார் 70க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் மறியலில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து கவர்னருக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினர்.

    இதன் காரணமாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 70 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    வேலூர் மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் உள்பட 199 பேர் கைது செய்யப்பட்டனர்.

    வேலூர்:

    சென்னையில் இன்று கவர்னர் மாளிகை நோக்கி பேரணி சென்று போராட்டம் நடத்திய தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து வேலூர் அண்ணாசாலையில் உள்ள கட்சி அலுவலகம் அருகில் இருந்து தி.மு.க.வினர் பேரணியாக சென்றனர்.

    எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார் மற்றும் கார்த்திகேயன், அவைத் தலைவர் முகம்மது சகி உள்பட தி.மு.க.வினர் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். இன்ஸ்பெக்டர்கள் லோகநாதன், நாகராஜன் தலைமையிலான போலீசார் பேரணியை தடுத்து நிறுத்தினர்.

    இதையடுத்து, தி.மு.க.வினர் தெற்கு போலீஸ் நிலையம் அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

    இதேபோல் ராணிப்பேட்டை, ஆற்காடு, கலவை, அணைக்கட்டு ஆகிய பகுதிகளிலும் தி.மு.க.வினர் மறியல் செய்தனர். வேலூர் உள்பட மாவட்டத்தில் 5 இடங்களில் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆர்.காந்தி, நந்தக்குமார், கார்த்திகேயன் ஈஸ்வரப்பன் ஆகிய 4 எம்.எல்.ஏ.க்கள் உள்பட மொத்தம் 199 பேர் கைது செய்யப்பட்டனர்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டதில் முகஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து கந்தர்வக்கோட்டையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கந்தர்வக்கோட்டை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டதில் துப்பாக்கி சூட்டை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தின் போது  தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கைதைக் கண்டித்து கந்தர்வக்கோட்டை பேருந்து நிலையம் எதிரே சாலை மறியல் போராட்டம் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்அய்யா தலைமையில் நடைபெற்றது. 

    போராட்டத்தில் நகர செயலாளர் ராஜா, சுந்தை ராமசாமி, ரங்கராஜன், அண்டனூர் முருகையா, மாரிமுத்து,சவுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
    சென்னையில் போராட்டம் நடத்திய முகஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கடலூரில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கடலூர்:

    சென்னையில் தலைமை செயலகம் முன்பு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இதில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த சம்பவத்தை கண்டித்து கடலூரில் நகர தி.மு.க. அலுவலகம் முன்பு நகர செயலாளர் ராஜா தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, வி.ஆர்.அறக்கட்டளை நிறுவனர் விஜயசுந்தரம், தொ.மு.ச. தலைவர் பழனிவேல், மாணவரணி அகஸ்டின் உள்பட பலர் திரண்டனர். அவர்கள் கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர். தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் மற்றும் புதுநகர் போலீசார் அங்கு வந்தனர்.

    மறியலில் ஈடுபட்ட 30 பேரை கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    ×