என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து மதுரையில் தி.மு.க.வினர் சாலை மறியல்-70 பேர் கைது
மதுரை:
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஆய்வு நடத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி காட்டிய தி.மு.க.வினர் 192 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 4 பிரிவு களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனை கண்டித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கவர்னர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்ல தி.மு.க.வினர் முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையில் பெரியார் பஸ் நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே போராட்டம் நடைபெற்றது.
மாநகர் மாவட்டச் செயலாளர்கள் தளபதி, வேலுச்சாமி தலைமையில் சுமார் 70க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் மறியலில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து கவர்னருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதன் காரணமாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 70 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்