என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து வேலூரில் தி.மு.க.வினர் மறியல்
வேலூர்:
சென்னையில் இன்று கவர்னர் மாளிகை நோக்கி பேரணி சென்று போராட்டம் நடத்திய தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து வேலூர் அண்ணாசாலையில் உள்ள கட்சி அலுவலகம் அருகில் இருந்து தி.மு.க.வினர் பேரணியாக சென்றனர்.
எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார் மற்றும் கார்த்திகேயன், அவைத் தலைவர் முகம்மது சகி உள்பட தி.மு.க.வினர் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். இன்ஸ்பெக்டர்கள் லோகநாதன், நாகராஜன் தலைமையிலான போலீசார் பேரணியை தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து, தி.மு.க.வினர் தெற்கு போலீஸ் நிலையம் அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் ராணிப்பேட்டை, ஆற்காடு, கலவை, அணைக்கட்டு ஆகிய பகுதிகளிலும் தி.மு.க.வினர் மறியல் செய்தனர். வேலூர் உள்பட மாவட்டத்தில் 5 இடங்களில் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆர்.காந்தி, நந்தக்குமார், கார்த்திகேயன் ஈஸ்வரப்பன் ஆகிய 4 எம்.எல்.ஏ.க்கள் உள்பட மொத்தம் 199 பேர் கைது செய்யப்பட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்