search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dmk strike"

    பழனி நகர கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் ஒட்டப்பட்ட வேட்பாளர் பட்டியலை சிலர் கிழித்து சென்றதால் இதனை கண்டித்து திமுகவினர் திடீர் மறியலில் ஈடுப்பட்டனர்.

    பழனி:

    பழனி காந்தி ரோட்டில் பஸ் நிலையம் அருகே பழனி நகர கூட்டுறவு வங்கி உள்ளது.இவ்வங்கியின் தலைவர் மற்றும் இயக்குனர் பதவிகளுக்கு இறுதியாக 34 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இப்பட்டியலை வங்கி அலுவலகம் முன்பு நேற்று பகல் ஒட்டப்பட்டது.

    அதில் தேர்தல் நடைபெறும் நாள் நேரம் மற்றும் தேர்தல் குறித்த குறிப்புகள் அடங்கியிருந்தது. இந்நிலையில் அங்கு வந்த சிலர் சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த வேட்பாளர் பட்டியலை கிழித்து எறிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    வேட்பாளர் பட்டியல் கிழித்து எறியப்பட்டது குறித்த தகவல் கிடைத்த திமுகவினர் பழனி நகர கூட்டுறவு வங்கி அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அதிமுகவினர் தேர்தலை நடத்த கூடாது என்று திட்டமிட்டு இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஆகவே போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு சங்க துணைபதிவாளர் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோசமிட்டனர். அதன் பின்னர் கூட்டுறவு சங்க துணைபதிவாளர் குழந்தைவேலிடம் மனு கொடுத்துள்ளனர். அவர் அவர்களிடம் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

    வேலூர் மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் உள்பட 199 பேர் கைது செய்யப்பட்டனர்.

    வேலூர்:

    சென்னையில் இன்று கவர்னர் மாளிகை நோக்கி பேரணி சென்று போராட்டம் நடத்திய தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து வேலூர் அண்ணாசாலையில் உள்ள கட்சி அலுவலகம் அருகில் இருந்து தி.மு.க.வினர் பேரணியாக சென்றனர்.

    எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார் மற்றும் கார்த்திகேயன், அவைத் தலைவர் முகம்மது சகி உள்பட தி.மு.க.வினர் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். இன்ஸ்பெக்டர்கள் லோகநாதன், நாகராஜன் தலைமையிலான போலீசார் பேரணியை தடுத்து நிறுத்தினர்.

    இதையடுத்து, தி.மு.க.வினர் தெற்கு போலீஸ் நிலையம் அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

    இதேபோல் ராணிப்பேட்டை, ஆற்காடு, கலவை, அணைக்கட்டு ஆகிய பகுதிகளிலும் தி.மு.க.வினர் மறியல் செய்தனர். வேலூர் உள்பட மாவட்டத்தில் 5 இடங்களில் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆர்.காந்தி, நந்தக்குமார், கார்த்திகேயன் ஈஸ்வரப்பன் ஆகிய 4 எம்.எல்.ஏ.க்கள் உள்பட மொத்தம் 199 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ×