search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temple festival"

    • ஆடிப்பெரும் தேர்த்திருவிழா இந்த ஆண்டு நடைபெற உள்ளது.
    • 26-ந் தேதி கொடியேற்றம் நடக்கிறது.

    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த புது பாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற குருநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் வெகு விமரிசையாக மாட்டுச்சந்தை, குதிரை சந்தையுடன் தேர் திருவிழா நடைபெறும்.

    இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக நடை பெறாமல் இருந்த ஆடிப் பெரும் தேர்த்திருவிழா இந்த ஆண்டு நடைபெற உள்ளது. வரும் 19-ந் தேதி பூச்சாட்டுடன் பண்டிகை தொடங்க உள்ளது. 26-ந் தேதி கொடியேற்றம் நடக்கிறது.

    இதனைத்தொடர்ந்து வரும் ஆகஸ்ட் மாதம் 2-ந் தேதி முதல் பூஜையும், 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை ஆடிப்பெரும் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. தொடர்ந்து 16-ந் தேதி பால் பூஜையுடன் பண்டிகை நிறைவடைகிறது.

    இதற்காக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்துதல், தற்காலிக கடைகள் புதுப்பாளையம் தண்ணீர்பந்தல் பகுதியில் இருந்து கெட்டிசமுத்திரம் ஏரி பகுதி வரை அமைப்பதற்கான ஏலம் அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அலுவலர் ஆனந்த் தலைமையில் நடைபெற உள்ளது.

    இதேபோல் அந்தியூர் வெள்ளைப்பிள்ளையார் கோவில் பகுதியில் இருந்து புதுப்பாளையம் தண்ணீர் பந்தல் வனப்பிரிவு வரையான பகுதிக்கு கெட்டிசமுத்திரம் ஊராட்சியில் தலைவர் மாறன் தலைமையில் ஏலம் நடைபெற உள்ளது.

    மேலும் விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செயல் அலுவலர் மோகனப்பிரியா, மற்றும் பரம்பரை தர்மகர்த்தா பி.எஸ்.எஸ்.சாந்தப்பன் ஆகியோர் செய்து வருகின்றார்கள்.

    • கொடைக்கானல் ஆனந்தகிரி பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • விழாவில் பழனி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் ஆனந்தகிரி பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் பழனி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கொடைக்கானல் நகர் மன்ற தலைவர் செல்லத்துரை, துணை தலைவர் மாயக்கண்ணன், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஸ்வேதா ராணி கணேசன், முன்னாள் நகர் மன்ற தலைவர்கள் முகமது இப்ராஹிம், கோவிந்தன், ஸ்ரீதர், மாரியம்மன் கோவில் தலைவர் முரளி, கொடைக்கானல் நகர்மன்ற உறுப்பினர்கள், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன், மாவட்ட மாணவ ரணி அமைப்பாளர் அஸ்வின் பிரபாகரன், மாவட்ட துணைச் செயலாளர் பிலால் உசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கோவில் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் இந்து சமய அறநிலையத்துறை அலுவல ர்களும் கலந்து கொண்டனர். கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த 3 மத தலைவர்கள் மற்றும் நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.

    கொடைக்கானல் டவுன், மூஞ்சிக்கல், அண்ணா நகர், நாயுடுபுரம் பள்ளி வாசல்களை சேர்ந்த ஜமாத்தார்களும், கொடை க்கானல் மூஞ்சிக்கல் திரு இருதய ஆலயத்தை சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்களும், உதவி பங்கு தந்தை நிக்கோலஸ், கொடைக்கானல் முன்னாள் நகர் மன்ற தலைவரும் இந்திய பெந்தகோஸ்தே சபையின் நிர்வாகியுமான டாக்டர் குரியன் ஆபிரகாம், கிளாசிக் சலாமத், டி.ஜி. அசோசியேட்ஸ் தனசேகரன், எஸ். ஆர் அசோசியேட்ஸ் ராம் மோகன், கொடைக்கா னல் நகர தி.மு.க. துணைச் செயலாளர்கள் சக்திமோ கன், சுப்பிரமணி, கோமதி சக்திவேல், நகர பொருளா ளர் முகமது நைனார், நகர அவைத் தலைவர் மரிய ஜெயந்தன், மாவட்ட பிரதிநிதிகள் சுதாகர், இளங்கோவன், அரசு வக்கீல் சக்திவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


    • கோவில் திருவிழாவுக்கு சென்று திரும்பிய பெண் பரிதாப சாவு
    • கோவில் திருவிழாவுக்கு சென்று திரும்பிய பெண் பரிதாபமாக இறந்தார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே–யுள்ள பில்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி விஜய–லட்சுமி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

    இதற்கிடையே சாத்தங் குடி பகுதியில் உள்ள சூராயி அம்மன் கோவில் திருவிழா–வுக்கு பாலமுருகனின் தாய் அழகம்மாள் மகள்கள் அபிநயா, நாகலட்சுமி, அக்காள் மகன் சின்னமருது ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    பின்னர் திருவிழாவை முடித்துவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் 4 பேரும் புறப்பட்டனர். வழி–யில் சிவரக்கோட்டை அருகே திடீரென்று கட்டுப் பாட்டை இழந்து தாறுமா–றாக ஓடிய இருசக்கர வா–கனம் சென்டர் மீடியனில் வேகமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனை–யில் அனுமதிக்கப்பட்ட அபி–நயா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து திருமங்கலம் தாலுகா போலீ–சார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகி–றார்கள்.

    • புல்வநாயகி அம்மன் கோவில் ஆனி உற்சவ திருவிழா தேரோட்டம் நடந்தது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள பாகனேரி நகரில் பிரசித்தி பெற்ற புல்வநாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆனி மாத உற்சவ பெருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்ட வைபவம் வெகு விமரிசை யாக நடந்தது. இவ்விழா கடந்த 23-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    10 நாட்கள் நடைபெறும் விழாவில் உற்சவர் அம்மன் தினமும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சி யான 9-ம் திருநாளில் திரு தேரோட்ட வைபவம் நடைபெற்றது.

    முன்னதாக அலங்கரிக்கப் பட்ட பெரிய தேரில் உற்சவர் புல்வநாயகி அம்மன் சர்வ அலங்கா ரத்தில் எழுந்தருளினார். அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று கற்பூர ஆராதனை காண்பிக்கப் பட்டது. பின்னர் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

    தேர் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது. இவ்விழாவில் சுற்றுவட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    • சுரேஷ் தரப்பினர் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள எவ்வித ஆட்சேபனை இல்லை என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
    • கிராமத்தில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.

    தொப்பூர்:

    தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள வேப்பமரத்தூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெறுவதாக இருந்தது.

    கோவில் கும்பாபிஷேகத்திற்காக அந்த கிராமத்தில் உள்ள 250 குடும்பங்களிலும் வீட்டுக்கு ரூ.5 ஆயிரம் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் அதே கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (வயது37) என்பவர் மொரப்பூர் அருகே உள்ள பறையப்பட்டியில் வேறு சமூகத்தை சேர்ந்த சுதா (30) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

    இதனால் விழாக்குழுவினர் சுரேஷ் குடும்பத்தினரிடம் கோவில் விழாவுக்கு வரி வாங்கவில்லை. இதனால் கோவில் திருவிழாவில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுதா பொம்மிடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அந்த புகாரின் பேரில் இருரப்பினர்களையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கோவில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்க முடியாது விழா ஏற்பாடுகளை நிறுத்தி வையுங்கள் என்று கிராம மக்களிடம் தெரிவித்தனர்.

    இதனால் நேற்று முன்தினம் இரவு காதல் தம்பதி சுரேஷ், சுதா ஆகியோர் குடும்பத்தினர் கோவில் திருவிழாவில் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து அதே கிராமத்தை சேர்ந்த முருகன் மனைவி ராமு (வயது 35), மற்றொரு முருகன் மனைவி கவிதா (38), அனுமந்தன் மனைவி அலமேலு (36), மாதேஷ் மனைவி தேன்மொழி (35), ரமேஷ் மனைவி அமுதா (35), அசோகன் மனைவி விஜயா (23) ஆகிய 6 பேரும் கோவில் அருகே பாயாசம் செய்து அதில் விஷம் கலந்து குடித்து விட்டு தற்கொலைக்கு முயன்றனர்.

    இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதையடுத்து நேற்று வேப்பமரத்தூர் கிராமத்தில் தாசில்தார் ஜெயசெல்வம், அரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) நாகலிங்கம், போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, கோவிந்தசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் ஊர்கவுண்டர் துரை மற்றும் சுரேஷ், அவரது மனைவி சுதா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் சுரேஷ் தரப்பினர் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள எவ்வித ஆட்சேபனை இல்லை என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால் இருதரப்பிலும் சமரசம் ஏற்பட்டது.

    இதையடுத்து இன்று கோவில் கும்பாபிஷேகம் வெகுசிறப்பாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர். பிரச்சினை எதுவும் ஏற்படாமல் இருக்க அந்த கிராமத்தில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர். 

    • பெண்கள் அதிக அளவில் தொடர்ந்து கும்பாபிஷேக நிகழ்வுகளுக்கான வேலைகளை செய்து வந்தனர்.
    • பூச்சி மருந்து குடித்த 6 பேரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே வேப்பமரத்தூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2013-ம் ஆண்டு நடத்த முற்பட்டபோது அதே பகுதியைச் சேர்ந்த கலப்பு திருமணம் தம்பதியினரை கலந்து கொள்ளக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் அந்த தம்பதியினர், தங்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுக்கின்றனர். காதல் கலப்பு திருமணம் செய்ததால் தான் இவ்வாறு செய்கின்றனர் என்று கிராமத்தை சேர்ந்த 22 பேர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

    வழக்கு நீதிமன்றத்தில் 13 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த மாதம் நீதிமன்றத்தில் கிராம மக்கள் நாங்கள் கோவிலுக்கு வரும் யாரையும் தடுக்கவில்லை.

    மேலும் இது அனைவருக்குமான கோவில் தனிப்பட்ட நபர் அவருடைய சொந்த வெறுப்புகளின் காரணமாக தவறான வழக்கு தொடுத்துள்ளார் என கிராம மக்கள் கொடுத்த விளக்கத்தின் அடிப்படையில் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த தடை இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாக கூறப்படுகிறது.

    அதனைத் தொடர்ந்து கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி கோவில் இந்த வருடம் கும்பாபிஷேகம் நடத்துவது என முடிவெடுத்துள்ளனர். இதற்காக அப்பகுதியை சேர்ந்த பெண்கள் அதிக அளவில் தொடர்ந்து கும்பாபிஷேக நிகழ்வுகளுக்கான வேலைகளை செய்து வந்தனர்.

    இந்நிலையில் கோவில் கும்பாபிஷேகத்திற்கு கலப்பு திருமணம் செய்த தம்பதியினரிடம் வரி வாங்கவில்லை என்றும், தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விட்டதாக பொம்மிடி போலீஸ் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்துள்ளார்.

    இதுகுறித்து பொம்மிடி போலீசார் இருதரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கோவில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்க முடியாது விழா ஏற்பாடுகளை நிறுத்தி வையுங்கள் என்று கிராம மக்களிடம் தெரிவித்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்ற மகிழ்ச்சியில் பணிகளில் ஈடுபட்டு வந்த பெண்கள் கலப்பு திருமணம் செய்தவர்களால் கோவில் கும்பாபிஷேகம் மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டதை தாங்க முடியாமல் மனம் உடைந்து கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து நேற்று இரவு ஊர் நடுவில் பாயாசத்தை காய்ச்சினர்.

    பின்னர் அவர்கள் அதில் செடிக்கு அடிக்கும் பூச்சி மருந்தை கலந்து கிராம மக்களில் 6 பேர் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். உடனே போலீசார் தடுக்க முயன்றனர்.

    அதற்குள் அந்த பாயசாத்தை வேப்பமரத்தூரைச் சேர்ந்த ராமு (வயது35), கவிதா (35), அமுதா (35), அலமேலு, விஜயா, தேன்மொழி ஆகிய 6 பேர் குடித்துள்ளனர்.

    இதனால் பதறிப்போன போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் பூச்சி மருந்து குடித்த 6 பேரையும் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பொம்மிடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6 பேரையும் பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ. கோவிந்தசாமி மற்றும் தருமபுரி தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் ஆகியோர் நேரில் சந்தித்து அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

    இச்சம்பவத்தால் அக்கிரமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • திருவிழா அன்று இரவில் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடந்துள்ளது.
    • கைது செய்யப்பட்ட 3 பேரையும் திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனத்தில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த 24-ந் தேதி திருவிழா நடந்தது. திருவிழா அன்று இரவில் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடந்துள்ளது.

    இந்த ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் கலைஞர்கள் ஆபாசமாக நடனம் ஆடியதாக கோவை அம்மன் நகர் போத்தனூர் பகுதியை சேர்ந்த தமிழ்நாடு-புதுச்சேரி நடன கலைஞர் நலச்சங்க மாநில தலைவர் ராஜசேகரன் என்கிற அஜித் ராஜா என்பவர் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அந்த புகாரில், கோர்ட்டு உத்தரவை மீறி சம்பந்தப்பட்ட கோவிலில் நிர்வாக கமிட்டியினரால் ஏற்பாடு செய்யப்பட்டு ஆபாச நடனம் நடந்துள்ளது. எனவே, இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    இதனையடுத்து முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் உத்தரவின் பேரில், வழக்குபதிவு செய்த முத்துப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் திருமுருகன், ஆனந்தன், தலைமை காவலர் ஆத்மநாதன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.

    விசாரணைக்கு பின்னர் கோவில் திருவிழாவில் ஆபாச நடனம் நடத்தியது தொடர்பாக இடும்பாவனம் கிராமத்தை சேர்ந்த கண்ணையன் (வயது 65), வேதாரண்யம் அடுத்த நெய்விளக்கு கீழக்காடு கிராமத்தை சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கோபிநாத் (31), நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் பகுதியை சேர்ந்த ஆபாச நடனம் ஆடிய ரவிக்குமார் (26) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    பின்னர், கைது செய்யப்பட்ட 3 பேரையும் திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் இரவு இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
    • கருவனூர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் எம்.சத்திரப்பட்டி அருகே உள்ளது கருவனூர் கிராமம். இங்குள்ள பத்திரகாளி அம்மன், பாரைகருப்பு அய்யனார் கோவிலில் கடந்த வாரம் திருவிழா நடந்தது. இந்த திருவிழாவில் ஊர் முக்கியஸ்தர்களுக்கு முதல் மரியாதை அளிக்கப்படுவது வழக்கம்.

    இந்த முதல் மரியாதையை பெறுவது தொடர்பாக முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொன்னம்பலத்தின் மருமகன் பழனிக்குமாருக்கும், தி.மு.க.வை சேர்ந்த வேல்முருகன் தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இவர்களை ஊர் பொதுமக்கள் தடுத்து சமரசம் செய்து வைத்தனர்.

    இந்த முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் இரவு இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் தி.மு.க., அ.தி.மு.க.வினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் ஒரு கும்பல் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொன்னம்பலத்தின் வீட்டு மீது சரமாரியாக கற்களை வீசி தாக்கியது. இதில் வீட்டின் ஜன்னல் கதவுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடிகள் உடைந்து சிதறின.

    வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காருக்கும் அந்த கும்பல் தீ வைத்தது. இதில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இருசக்கர வாகனங்களையும் சேதப்படுத்தினர். அப்போது வேல்முருகன் தரப்புக்கும், பொன்னம்பலம் தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் பொன்னம்பலத்தின் மருமகன் பழனிக்குமார் (40) மற்றும் சுப்பையா (68), சூர்யா (23), விஜய் (27), வேல்விழி (35) ஆகிய 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இந்த தாக்குதலில் வேல்முருகன் தரப்பை சேர்ந்த சிலருக்கும் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக இருதரப்பிலும் எம்.சத்திரப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து பழனிக்குமார் கொடுத்த புகாரின்பேரில் தி.மு.க.வை சேர்ந்த கிளை செயலாளர் வேல்முருகன், செந்தமிழன், ராஜ்மோகன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 18 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    திருப்பதி கொடுத்த புகாரின்பேரில் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொன்னம்பலம், அவரது மகன்கள் திருச்சிற்றம்பலம், தில்லையம்பலம் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 20 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள். இருதரப்பையும் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அந்த பகுதியில் நிலவிவரும் பதட்டத்தை தணிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    கருவனூர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கோவில் விழாவில் முதல் மரியாதை அளிப்பது தொடர்பான விவகாரத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தரப்பினரிடையே ஏற்பட்ட இந்த மோதல் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மர்ம நபர்களின் தாக்குதலில் பொன்னம்பலத்தின் வீடு போர்க்களம்போல் காட்சி அளித்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி சிலரை தேடி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை கருவனூரை சேர்ந்தவர் பொன்னம்பலம். இவர் சமயநல்லூர் தொகுதியில் 2001-2006ம் ஆண்டில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தார். கருவனூரில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் அங்குள்ள கருமாரியம்மன் கோவிலில் மரியாதை தருவது தொடர்பாக பொன்னம்பலத்துக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு குடும்பத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஒருவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது.

    அது தொடர்பாக இருவரது குடும்பத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது வீட்டுக்குள் சில மர்ம நபர்கள் கும்பலாக புகுந்தனர். அவர்கள் பொன்னம்பலம் வீட்டில் நிறுத்தப்பட்டி ருந்த கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை அடித்து உடைத்தனர்.

    ஒரு காரை தீ வைத்து எரித்தனர். மேலும் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களையும் அடித்து நொறுக்கினர். அதனை வீட்டில் இருந்த பொன்னம் பலத்தின் குடும்பத்தினர் தடுத்தனர். அவர்களை தாக்கி விட்டு பொன்னம் பலத்தின் வீட்டை அந்த நபர்கள் சூறையாடிவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.

    மர்ம நபர்களின் இந்த தாக்குதலில் பொன்னம்பலத்தின் வீடு போர்க்களம்போல் காட்சி அளித்தது. இந்த தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மர்ம நபர்கள் தாக்கியதில் பொன்னம்பலத்தின் குடும்பத்தினர் 5 பேர் காயம் அடைந்தனர்.

    அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்தில் பொன்னம் பலம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவிலில் மரியாதை கொடுக்கும் விவகாரத்தில் எதிர்தரப்பினர் தாக்குதலில் ஈடுபட்டது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சிலரை தேடி வருகின்றனர்.

    • கோவில் திருவிழாவில் தனிப்பட்ட நபர்களுக்கு முதல் மரியாதை வழங்கக்கூடாது.
    • ஐகோர்ட்டு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளது.

    மதுரை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா மலைக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஜெயந்தி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா மலைக்கோட்டை கிராமத் தில் பல்வேறு சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சாந்தி வீரன் சாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆனி மாதம் 8 நாட்கள் திருவிழா கொண்டாடுவது வழக்கம்.

    இந்த கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. கோவிலுக்கு தக்கார் நியமிக்கப் பட்டுள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு இந்து அறநிலையத்துறை கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்க கூடாது என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    அதனை எதிர்த்து கடந்த ஆண்டு சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா மலக்கோட்டை கிராமத்திலுள்ள சசி பாண்டிதுரை, பாலசுந்தரம், ஜெயபாலன் மற்றும் நவநீதன் ஆகியோர் நீதிமன்றத்தில் தலைப்பாகை அணியவும், குடை பிடிக்கவும், முதல் மரியாதை கோரியும் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் இந்த வருடம் திருவிழாவில் இவர்களால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் ஆனி மாத திருவிழா காலங்களில் இக்கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினர் மற்றும் அட்டவணைப் படுத்தப்பட்ட சமூகத்தினர் ஆகியோர் கோவில் உள்ளே அனுமதி வழங்கப்படுவது இல்லை. எனவே சிவகங்கை சாந்தி வீரன் சாமி கோவில் ஆனி மாத திருவிழாவில் யாருக்கு தலைப்பாகை அணியவும், குடை பிடிக்கவும், முதல் மரியாதை வழங்கவும் கூடாது என வும், அட்டவணைப்படுத்தப் பட்ட சமூகத்தினர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க வும், திருவிழாவில் கலந்து கொள்ளவும் அனுமதி வழங்க வேண்டும.

    இவ்வாறு தனது மனுவில் கூறியிருந்தார்.

    அந்த மனு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்கா பூர்வாலா, மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி சுப்பிரமணியன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், தனிப்பட்ட நபர்களுக்கு கோவில் திருவிழாவில் முதல் மரியாதை வழங்கக் கூடாது, அனைத்து சமூகத்தை சேர்ந்த மக்களும் கோவில் திருவிழாவிற்கு சென்று வழிபடுவதையும் இந்து அறநிலையத்துறை உறுதி செய்ய வேண்டும். இதனை சாந்தி வீரன் சாமி கோயில் தக்கார் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    • இடைவிடா சகாய அன்னை ஆலய பெருவிழா தொடங்கியது.
    • அன்பின் விருந்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    மதுரை

    மதுரை அஞ்சல் நகர் இடைவிடா சகாய அன்னை ஆலய பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை உயர்மறை மாவட்ட குடும்ப நல்வாழ்வு மைய இயக்குநர் அருட்தந்தை ஜேம்ஸ் பால்ராஜ் கொடியேற்றி விழாவை தொடங்கி வைத் தார். தொடர்ந்து தினமும் மாலை 5.30 மணிக்கு ஜெப மாலை வழிபாடும், சிறப்பு திருப்பலியும் நடைபெறு கிறது.

    அருட்தந்தையர்கள், பால் பிரிட்டோ (சமயநல்லூர்) ஜோசப் அந்தோணி (நாகமலைபுதுக்கோட்டை) ஜெயராஜ் ( பாஸ்டின் நகர்) அருளானந்தம் (வடக்கு வட்ட அதிபர்) மரிய மைக்கேல் (சதங்கை) பென டிக்ட் பர்னபாஸ் (மறைப் பணி நிலையம்) சகாயம் (ரட்சகர் சபை ) டேனியல், சந்தியாகு (அருளக குருக்கள்) ஆகியோர் பங்கேற்று சிறப்பு திருப்பலி நிறைவேற்று கிறார்கள்.

    விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 24-ந்தேதி (சனிக்கிழமை) மாலை சகாய அன்னை திரு உருவம் தாங்கிய மின் அலங்கார தேர் பவனி நடைபெறுகிறது. 25-ந்தேதி காலை திருப்பலி முடிந்ததும் கொடியிறக்கப் பட்டு அன்பின் விருந்துடன் திருவிழா நிறைவு பெறு கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை அருள் சேகர் தலைமையில் பங்கு அருட்பணி பேரவை யினர், துறவற சபையினர், அன்பிய பொறுப்பாளர்கள், பங்கு இறை மக்கள் ஆகி யோர் செய்து வருகின்றனர்.

    • அம்மனுக்கு காசு மாலை அணிவித்தனர்
    • அன்னதானம் வழங்கப்பட்டது

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அருகே உள்ள வேப்பங்குப்பத்தில்கெங்கை யம்மன் கோவிலில் 152-ம் ஆண்டு திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதற்காக நேற்று காலை அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்று காலை 6 மணியளவில் தேசத்து மாரியம்மன் சிரசுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    பின்னர், வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்களின் பெரும் வெள்ளத்தில் தாரை தப்பட்டை முழங்க, கோலாட்டம், மயிலாட்டாம், பொய்கால் குதிரை, சிலம்பம் போன்றவைகளின் முன்பாக அம்மன் சிரசு ஊர்வலமாக சென்றது.

    அப்போது, பக்தர்கள் தங்களின் நேர்த்தி கடனுக்காக வழிநெடுக்கிலும் ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடந்து, அம்மனுக்கு காசு மாலை, வண்ண மலர்களை கொண்டு தரிசனம் செய்தனர்.

    காலை 6 மணிக்கு தொடங்கிய ஊர்வலம் மதியம் 2 வரை தொடந்து நடைபெற்று வந்தது. ஒடுகத்தூர், வேப்பங்குப்பம் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

    விழாவிற்க்கனா ஏற்ப்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா உமாபதி செய்திருந்தார். மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×