search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இடைவிடா சகாய அன்னை ஆலய பெருவிழா
    X

     இடைவிடா சகாய அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இடைவிடா சகாய அன்னை ஆலய பெருவிழா

    • இடைவிடா சகாய அன்னை ஆலய பெருவிழா தொடங்கியது.
    • அன்பின் விருந்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    மதுரை

    மதுரை அஞ்சல் நகர் இடைவிடா சகாய அன்னை ஆலய பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை உயர்மறை மாவட்ட குடும்ப நல்வாழ்வு மைய இயக்குநர் அருட்தந்தை ஜேம்ஸ் பால்ராஜ் கொடியேற்றி விழாவை தொடங்கி வைத் தார். தொடர்ந்து தினமும் மாலை 5.30 மணிக்கு ஜெப மாலை வழிபாடும், சிறப்பு திருப்பலியும் நடைபெறு கிறது.

    அருட்தந்தையர்கள், பால் பிரிட்டோ (சமயநல்லூர்) ஜோசப் அந்தோணி (நாகமலைபுதுக்கோட்டை) ஜெயராஜ் ( பாஸ்டின் நகர்) அருளானந்தம் (வடக்கு வட்ட அதிபர்) மரிய மைக்கேல் (சதங்கை) பென டிக்ட் பர்னபாஸ் (மறைப் பணி நிலையம்) சகாயம் (ரட்சகர் சபை ) டேனியல், சந்தியாகு (அருளக குருக்கள்) ஆகியோர் பங்கேற்று சிறப்பு திருப்பலி நிறைவேற்று கிறார்கள்.

    விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 24-ந்தேதி (சனிக்கிழமை) மாலை சகாய அன்னை திரு உருவம் தாங்கிய மின் அலங்கார தேர் பவனி நடைபெறுகிறது. 25-ந்தேதி காலை திருப்பலி முடிந்ததும் கொடியிறக்கப் பட்டு அன்பின் விருந்துடன் திருவிழா நிறைவு பெறு கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை அருள் சேகர் தலைமையில் பங்கு அருட்பணி பேரவை யினர், துறவற சபையினர், அன்பிய பொறுப்பாளர்கள், பங்கு இறை மக்கள் ஆகி யோர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×