என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புல்வநாயகி அம்மன் கோவில் ஆனி உற்சவ திருவிழா தேரோட்டம்
    X

    தேரில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன்.

    புல்வநாயகி அம்மன் கோவில் ஆனி உற்சவ திருவிழா தேரோட்டம்

    • புல்வநாயகி அம்மன் கோவில் ஆனி உற்சவ திருவிழா தேரோட்டம் நடந்தது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள பாகனேரி நகரில் பிரசித்தி பெற்ற புல்வநாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆனி மாத உற்சவ பெருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்ட வைபவம் வெகு விமரிசை யாக நடந்தது. இவ்விழா கடந்த 23-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    10 நாட்கள் நடைபெறும் விழாவில் உற்சவர் அம்மன் தினமும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சி யான 9-ம் திருநாளில் திரு தேரோட்ட வைபவம் நடைபெற்றது.

    முன்னதாக அலங்கரிக்கப் பட்ட பெரிய தேரில் உற்சவர் புல்வநாயகி அம்மன் சர்வ அலங்கா ரத்தில் எழுந்தருளினார். அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று கற்பூர ஆராதனை காண்பிக்கப் பட்டது. பின்னர் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

    தேர் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது. இவ்விழாவில் சுற்றுவட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    Next Story
    ×