என் மலர்
உள்ளூர் செய்திகள்

152-ம் ஆண்டு கெங்கையம்மன் கோவில் திருவிழா
- அம்மனுக்கு காசு மாலை அணிவித்தனர்
- அன்னதானம் வழங்கப்பட்டது
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அருகே உள்ள வேப்பங்குப்பத்தில்கெங்கை யம்மன் கோவிலில் 152-ம் ஆண்டு திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதற்காக நேற்று காலை அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்று காலை 6 மணியளவில் தேசத்து மாரியம்மன் சிரசுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர், வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்களின் பெரும் வெள்ளத்தில் தாரை தப்பட்டை முழங்க, கோலாட்டம், மயிலாட்டாம், பொய்கால் குதிரை, சிலம்பம் போன்றவைகளின் முன்பாக அம்மன் சிரசு ஊர்வலமாக சென்றது.
அப்போது, பக்தர்கள் தங்களின் நேர்த்தி கடனுக்காக வழிநெடுக்கிலும் ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடந்து, அம்மனுக்கு காசு மாலை, வண்ண மலர்களை கொண்டு தரிசனம் செய்தனர்.
காலை 6 மணிக்கு தொடங்கிய ஊர்வலம் மதியம் 2 வரை தொடந்து நடைபெற்று வந்தது. ஒடுகத்தூர், வேப்பங்குப்பம் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
விழாவிற்க்கனா ஏற்ப்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா உமாபதி செய்திருந்தார். மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.






