search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sau"

    • கார்த்தி மரக்காணம் பகுதியில் தங்கி, சவுண்டு சர்வீஸ் வேலை செய்து வந்தார்.
    • மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த கார்த்திக் மயங்கி விழுந்தார்.

    விழுப்புரம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 42). இவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் தங்கி, சவுண்டு சர்வீஸ் வேலை செய்து வந்தார். இவர் மரக்காணம் அருகேயுளள கோமுட்டி சாவடிகுப்பத்தில் நடைபெறும் கோவில் திருவிழாவிற்கு ஒலி, ஒளி அமைக்கும் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து அவரது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் ஏறி, மரக்காணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கார்த்திக் சென்றார். அப்போது மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த கார்த்திக் மயங்கி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை, 108 ஆம்புலன்ஸ் மூலம் மரக்காணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கார்த்திக் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது தொடர்பாக மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவில் திருவிழாவுக்கு சென்று திரும்பிய பெண் பரிதாப சாவு
    • கோவில் திருவிழாவுக்கு சென்று திரும்பிய பெண் பரிதாபமாக இறந்தார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே–யுள்ள பில்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி விஜய–லட்சுமி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

    இதற்கிடையே சாத்தங் குடி பகுதியில் உள்ள சூராயி அம்மன் கோவில் திருவிழா–வுக்கு பாலமுருகனின் தாய் அழகம்மாள் மகள்கள் அபிநயா, நாகலட்சுமி, அக்காள் மகன் சின்னமருது ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    பின்னர் திருவிழாவை முடித்துவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் 4 பேரும் புறப்பட்டனர். வழி–யில் சிவரக்கோட்டை அருகே திடீரென்று கட்டுப் பாட்டை இழந்து தாறுமா–றாக ஓடிய இருசக்கர வா–கனம் சென்டர் மீடியனில் வேகமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனை–யில் அனுமதிக்கப்பட்ட அபி–நயா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து திருமங்கலம் தாலுகா போலீ–சார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகி–றார்கள்.

    • அடுத்தடுத்து விபத்துகளில் விவசாயி-முதியவர் இறந்தனர்.
    • இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை வேடர்புளியங்குளம் வி.பி.சிந்தன் நகரை சேர்ந்தவர் செல்வகுமார்(வயது43). விவசாயான இவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டு சென்றார். சமயநல்லூர்- திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் பாரதி நகர் அருகே சாலையை கடக்க முயன்றார்.

    விவசாயி சாவு

    அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், செல்வகுமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செல்வகுமார் படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி செல்வகுமார் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவரான தனக்கன்குளம் வள்ளுவர் நகரை சேர்ந்த மணி மகன் தமிழ்ச்செல்வன் (வயது 22) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதியவர்

    மதுரை உத்தபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் லட்சுமணன்(67). இவர் உசிலம்பட்டியில் இருந்து உத்தப்புரத்துக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது எழுமலை- உசிலம்பட்டி ரோட்டில் வேகத்தடையில் ஏறிய போது ஆட்டோ நிலை தடுமாறியது. இதில் எதிர்பாராத விதமாக லட்சுமணன் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்தார்.

    படுகாயம் அடைந்த அவா் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமணன் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக எழுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவரான அழகுராஜாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×