search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயி-முதியவர் சாவு
    X

    விவசாயி-முதியவர் சாவு

    • அடுத்தடுத்து விபத்துகளில் விவசாயி-முதியவர் இறந்தனர்.
    • இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை வேடர்புளியங்குளம் வி.பி.சிந்தன் நகரை சேர்ந்தவர் செல்வகுமார்(வயது43). விவசாயான இவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டு சென்றார். சமயநல்லூர்- திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் பாரதி நகர் அருகே சாலையை கடக்க முயன்றார்.

    விவசாயி சாவு

    அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், செல்வகுமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செல்வகுமார் படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி செல்வகுமார் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவரான தனக்கன்குளம் வள்ளுவர் நகரை சேர்ந்த மணி மகன் தமிழ்ச்செல்வன் (வயது 22) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதியவர்

    மதுரை உத்தபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் லட்சுமணன்(67). இவர் உசிலம்பட்டியில் இருந்து உத்தப்புரத்துக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது எழுமலை- உசிலம்பட்டி ரோட்டில் வேகத்தடையில் ஏறிய போது ஆட்டோ நிலை தடுமாறியது. இதில் எதிர்பாராத விதமாக லட்சுமணன் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்தார்.

    படுகாயம் அடைந்த அவா் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமணன் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக எழுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவரான அழகுராஜாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×