search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tamilisai"

    மக்கள் பணம் வீணாவதை தடுக்கவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காமராஜர் இருந்திருந்தால் நிச்சயம் மோடியை பாராட்டியிருப்பார் என்று தமிழிசை பேசியுள்ளார். #tamilisai #pmmodi #demonetization

    நாசரேத்:

    தூத்துக்குடி மக்களவை தொகுதி பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் நாசரேத் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் தீவிரமாக பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    சுமார் 30 வருடத்திற்கு முன்பாக எனது தந்தை குமரி அனந்தன் இந்த தொகுதியில் நிற்கும்போது நான் 3ம் வருட மருத்துவ கல்லூரி மாணவியாக இந்த தொகுதிக்கு வந்திருக்கிறேன். இந்த பகுதி எப்போதுமே தேசிய எண்ணம் கொண்ட அன்பர்கள் இருக்கும் பக்கம். அனைத்து மக்களுக்கும் மோடி பாதுகாப்பாக இருந்து வருகிறார். பணமதிப்பு இழப்பீடு மக்களின் நன்மைக்காக பிரதமர் மோடி எடுத்த முடிவாகும்.

    பாமர மக்களின் வரி பணம் வீணாகாமல் அவர்களிடமே சேருவதற்காகத்தான் இதனை செய்துள்ளார். பிரதமர் மோடிக்கு குடும்பம், பிள்ளைகள் என யாருமே கிடையாது. உண்மையான தலைவர் பெருந்தலைவர் காமராஜர் உயிரோடிருந்திருந்தால் இந்த செயலை பாராட்டியிருப்பார். நான் உங்கள் வீட்டு சகோதரியாக பெண்ணாக உங்களில் ஒருத்தியாக இருந்து உங்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பு தாருங்கள். தற்போது கூட மோடி ஐயாவை சந்தித்து தூத்துக்குடி தொகுதிக்குரிய தேர்தல் அறிக்கையை கொடுத்துள்ளேன்.

    இந்த தொகுதியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, புல்லட் ரெயில் விடுவதற்கும், ஐடி பார்க் கட்டுவதற்கு மற்றும் சிறு தொழிற்சாலைகள் அமைப்பதற்கும் இந்த அறிக்கையில் சமர்ப்பித்துள்ளேன். இத்தொகுதியில் நிற்கிற எனக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #tamilisai #pmmodi #demonetization  

    மக்களுக்கு உழைக்கவே அரசியலுக்கு வந்துள்ளேன். அதனால் என்னை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள் என்று தமிழிசை சவுந்தரராஜன் பேசியுள்ளார். #tamilisai #bjp #kanimozhi

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கோவில்பட்டி பகுதியில் நேற்று மாலை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    அரசு மற்றும் பெரிய நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெறுகிறவர்களுக்குத்தான் ஓய்வூதியம் கிடைக்கிறது. மாறாக கடைக்காரர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காததால், பொருளாதாரத்தில் நலிவடைந்து முதுமையில் வாடினர். இவர்களின் துயரங்களை அறிந்த பிரதமர் நரேந்திரமோடி, 60 வயதான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டார்.

    தமிழகத்திலும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வறுமைக் கோட்டுக்குகீழ் வாழும் மக்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கினார். ஏழை-எளிய மக்களின் நலனில் அக்கறை கொள்கிற மத்திய-மாநில அரசுகள் தொடர தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்.

    பெரும்பாலானவர்கள் அரசியலில் இருந்து கொண்டு படிக்காமலே பல டாக்டர் பட்டங்களை பெறுவார்கள். ஒருவேளை டாக்டராக சரியாக படிக்காததால் தமிழிசை அரசியலுக்கு சென்று விட்டாரோ? என்று சிலர் கருதலாம். ஆனால் நான் அவ்வாறு இல்லை. மகப்பேறு மருத்துவ உயர் சிறப்பு படிப்புகளை கனடா, ஆஸ்திரேலியா நாடுகளில் சென்று படித்தேன். எனது மருத்துவமனையில் இரவு 2 மணி வரையிலும் கண்விழித்து பெண்களுக்கு மருத்துவம் பார்த்தேன்.

    கருவில் இருக்கும் குழந்தைக்கு குறைபாடுகள் இருந்தால், அதனை கருவிலே சரி செய்யக்கூடிய படிப்பு படித்து உள்ளேன். என்னிடம் சிகிச்சைக்காக வருகிறவர்கள் ஒரு வாரத்துக்கு முன்னதாகவே முன்பதிவு செய்து காத்திருந்து சிகிச்சை பெற்றனர். நான் மருத்துவ கல்லூரியில் துணை பேராசிரியராக பணி புரிந்தேன். நான் நினைத்து இருந்தால் சுயநலமாக வாழ்ந்து இருக்கலாம். ஆனால் நான் எனது நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். அவர்களுக்காக உழைக்க வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வந்துள்ளேன்.

    கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் கடும் மின்வெட்டால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். பின்னர் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி, தமிழகத்தை மிகைமின் மாநிலமாக மாற்றியது. மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படும்போது, பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படுவது உறுதி. நாடு முழுவதும் தொழில்வளம் பெருக தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்.

    இங்கு எதிர்க்கட்சி வேட்பாளராக போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் முறைகேட்டால் திகார் ஜெயிலில் இருந்தவர். ஆனால் நான் என்றும் மக்களுக்கு சேவையாற்றுவதையே கடமையாக கொண்டுள்ளேன். நான் என்றும் இந்த மண்ணின் சொந்தக்காரிதான். என்றும் உங்களின் சகோதரிதான். எனவே தாமரை சின்னத்தில் வாக்களித்து, என்னை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #tamilisai #bjp #kanimozhi

    ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் மக்கள் பாதிக்கப்படவில்லை. வரி கட்டுவோர் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #tamilisai #kanimozhi #gsttax

    ஓட்டப்பிடாரம்:

    பா.ஜனதா மாநில தலைவரும் தூத்துக்குடி வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை கயத்தாறு அருகே உள்ள கடம்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் மக்கள் பாதிக்கப்படவில்லை. வரி கட்டுவோர் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இதனால் வங்கி கடன் எளிதாக கிடைக்கிறது. மாதந்தோறும் ஜி.எஸ்.டி.கவுன்சிலிங் கூடுவதால் வரிகள் குறைக்கப்பட்டு வருகின்றன. 124 நாடுகளில் ஜி.எஸ்.டி. நடைமுறையில் உள்ளது. மீண்டும் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் ஜி.எஸ்.டி. வரிவிகிதம் குறைக்கப்படும். நடைமுறைக்கு சாத்திய மில்லாதவற்றை தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி பேசுகிறார். 

    தூத்துக்குடியை பொறுத்தவரை குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. பல்வேறு வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மேலும் வளர்ச்சி பெற புதிய திட்ட அறிக்கையை கொடுத்துள்ளேன். ராஜ்யசபாவில் இதுவரை தூத்துக்குடியை பற்றி பேசாத கனிமொழிக்கு திடீர் அக்கறை ஏன்? அரசியலில் எனக்கு பயமே கிடையாது.

    நாங்கள் சொன்னதை செய்வோம். மீண்டும் மோடி ஆட்சிக்கு வருவார். எங்களது கனவு திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #tamilisai #kanimozhi #gsttax

    தமிழகத்தில் போட்டியிடும் ஐந்து தொகுதிகளுக்கான பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தூத்துக்குடியில் தமிழிசை போட்டியிடுகிறார். #bjp #tamilisai #ponradhakrishnan
    சென்னை:

    பா.ஜனதா கட்சி பாராளுமன்ற தேர்தலுக்கான 184 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்றிரவு வெளியிட்டது. இதில் தமிழகத்தில் உள்ள ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.

    அதன்படி கன்னியாகுமரில் பொன் ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுகிறார். தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து தமிழிசை போட்டியிடுகிறார்.

    ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரனும், சிவகங்கையில் எச். ராஜாவும், கோவையில் சி.பி. ராதாகிருஷ்ணனும் போட்டியிடுகிறார்கள். #bjp #tamilisai #ponradhakrishnan
    ராகுல்காந்தியை விமர்சிக்க தமிழிசைக்கு தகுதி இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கையில் தெரிவித்துள்ளார். #KSAzhagiri #RahulGandhi

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பங்கேற்போடு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைந்தது முதற்கொண்டு பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளிடையே மிகப்பெரிய கலக்கத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதை சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க.வினர் புலம்பிக் கொண்டிருப்பதை நம்மாலே புரிந்து கொள்ள முடிகிறது.

    மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு எதிராக அமைந்துள்ள கூட்டணி நாம் அமைத்ததைப் போல கொள்கைக் கூட்டணி அல்ல. நமது கூட்டணியைப் பற்றி விமர்சனம் செய்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக கேள்விகளை தொடுத்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க.வில் இணைந்த அவருக்கு அரசியல் வரலாற்றை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

    இலங்கை தமிழர் பிரச்சினையைப் பற்றி தமிழிசை நீலிக் கண்ணீர் வடிக்கிறார். இலங்கை தமிழர்களின் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி செயல்பட்டதை எவரும் மறந்திருக்க முடியாது. ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் தான் இன்றைக்கும் இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பு கவசமாக இருப்பதை தமிழிசையால் மறுக்க முடியுமா ?

    தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க ஒப்பந்தம் போட்ட காரணத்தினாலே இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர் ராஜீவ்காந்தி பங்கரவாத அமைப்பால் படுகொலை செய்யப்பட்டார். இத்தகைய உயிர் தியாகத்தைச் செய்த காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கிற ராகுல்காந்தியை விமர்சிக்க தமிழிசைக்கு என்ன தகுதி இருக்கிறது ? இலங்கை தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்து அவர் முன்னிலையில் பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடியின் துரோகத்தை தமிழக மக்கள் எவரும் மறக்க மாட்டார்கள்.

    1966-ம் ஆண்டில் தலைநகர் தில்லியில் காமராஜர் குடியிருந்த வீட்டின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சங்பரிவார் கும்பலின் வாரிசாக விளங்கி வருகிற பா.ஜ.க.வினர் அவரது பெயரை உச்சரிக்க கூட தகுதியற்றவர்கள். இவர்களுக்கு எங்களது தலைவர்கள் பெயரை குறிப்பிட்டு பேச என்ன உரிமை இருக்கிறது?

    தமிழகத்தில் தி.மு.க. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 2004 பொதுத் தேர்தலில் பெற்ற வெற்றியைப் போல நாற்பதும் நமதே என்ற இலக்கை நோக்கி பயணித்து வருகிறது. தமிழகம் இந்தியாவுக்கு வழிகாட்ட போகிறது. இந்தியாவின் எதிர்கால பிரதமராக ராகுல்காந்தியும், தமிழகத்தின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலினும் பதவியேற்கிற காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை தமிழிசை புரிந்து கொள்ள வேண்டும். ஆயிரம் தமிழிசைகள் ஒன்று சேர்ந்தாலும் எந்த சக்தியாலும் இதை தடுக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #KSAzhagiri #RahulGandhi

    பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என தமிழக பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது. #bjp #pollachimolestation #tamilisai
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் இளம்பெண்களை காதல் என வலைவீசி கொடூரமான முறையில் நடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து, பணம் பறித்து வார்த்தைகளால் சொல்ல முடியாத கொடூரங்களை ஒரு கும்பல் நிகழ்த்தியுள்ளது. இதுதொடர்பாக  சபரிராஜன் (வயது 25) திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோரை போலீஸ் கைது செய்தது. இச்சம்பவம் தொடர்பான அதிர்ச்சி சம்பவங்கள் வெளியாகியுள்ளது. பெண்களை புழுவாக துடிக்க வைத்து வீடியோ எடுத்த இவன்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்களும் நடைபெறுகிறது.

    இச்சம்பவத்தில் போலீஸ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இதற்கிடையே  பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என தமிழக பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக பா.ஜனதா தலைவர் தமிழிசை டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில்  “பொள்ளாச்சியில் நடைபெற்றதாக வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது, பெண்ணினம் கசக்கப்படுவதையும்.. நசுக்கப்படுவதையும்.. துளியும்,ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று, பாதிக்கப்பட்டபெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும், சரியான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும், சிறப்பு புலனாய்வு வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.  #bjp #pollachimolestation #tamilisai
    தூத்துக்குடி அத்திமரப்பட்டி சாலை பாரதிநகரில் பா.ஜ.க. கொடி யேற்று விழா நடைபெற்றது. இதில் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார்.

    முள்ளக்காடு:

    தூத்துக்குடி அத்திமரப்பட்டி சாலை பாரதிநகரில் பா.ஜ.க. கொடி யேற்று விழா நடைபெற்றது. மாநகர தெற்கு மண்டல தலைவர் சின்னத்தங்கம் தலைமை வகித்தார்.பொதுச் செயலாளர் கணேச பெருமாள், துணைத்தலைவர் ஆனந்தகுமார், தெற்கு மண்டலம் ஷிவன். இளைஞரணி தலைவர் ஸ்ரீனிவாஸ் ஜெயசந்திரன், ஒன்றிய மேலிட பார்வையாளர் இளங்கோவன், கணேசன், ஒன்றிய பொதுச்செயலாளர் பிரபாகர், சண்முகம், முருகேசன், மாநகர மாவட்ட இந்து முன்னணி செயலாளர் மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட ஓ.பி.சி. அணி துணைத்தலைவர் ராஜபாண்டியன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் பிரபு, சிவராமன் ஆகியோர் வரவேற்றனர். இதில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு கொடியேற்றிவைத்து கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திரமோடியின் ஆட்சியால் உலகின் வலிமை மிக்க நாடாக இந்தியா மாறியுள்ளது. பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை- சாமானிய மக்களுக்கும் சொந்த வீடு கனவு நிறைவேறியுள்ளது. இது பா.ஜ.க.வின் சாதனையாகும்.

    தமிழகத்தில் பெண்களுக்கு முத்ரா வங்கி கடன் 1 கோடியே 90 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு இலவசமாக கேஸ் வழங்கப்படுகிறது. பெண்களுக்காக பள்ளிகளிலும் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் கழிப்பறைகள் அமைக்கும் மத்திய அரசின் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் படிக்க செல்லும் பெண்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. வேலைக்கு செல்லும் பெண்கள் மனநிறைவு கொண்டுள்ளனர். வல்லரசு நாடாக இந்தியாவை உருவாக்கிட பிரதமர் நரேந்திர மோடியால் தான் முடியும். எனவே பா.ஜ.க. - அ.தி.மு.க.கூட்டணியை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் பாலாஜி, தேசிய செயற்குழு உறுப்பினர் சந்தானகுமார், இந்து அன்னையர் முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் முத்துலெட்சுமி, மாவட்ட வர்த்தக அணி துணைதலைவர் உமரி சத்தியசீலன், மாவட்ட விவசாய அணி பொதுச்செயலாளர் ராஜேந்திரன், பெருங்குளம் நகர தலைவர் ஜோசியர் சின்னத்துரை, வக்கீல் அணி வெற்றிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு, மாவட்ட அ.தி.மு.க. வக்கீல் பிரிவு தலைவர் முள்ளக்காடு வக்கீல் செல்வக்குமார் சால்வை அணிவித்து வரவேற்றார். இதில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் தாமரையை இரட்டை இலை தாங்கிக் கொண்டிருக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் கோவில்பட்டியில் பேசியுள்ளார். #admk #bjp #tamilisai #parliamentelection

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற பா.ஜ.க. கொடியேற்று நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று கொடியேற்றி பேசியதாவது:-

    தமிழகத்திலும், அகில இந்திய அளவிலும் வெற்றி பெறக் கூடிய கூட்டணியாக எங்கள் கூட்டணி அமைந்துள்ளது. தமிழகத்தில் தாமரையை இரட்டை இலை தாங்கிக் கொண்டிருக்கிறது. மாம்பழமும் பழுத்துக் கொண்டிருக்கிறது. மிக விரைவில் எல்லா கூட்டணியும் அறிவிக்கப்பட்டுவிடும். இதைப் பொறுத்துக் கொள்ளாமல் தான் எதிர்கட்சியினர் பதற்றத்தோடு இருக்கிறார்கள். தற்போதைய காலக்கட்டத்தில் பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி கொடுத்துக் கொண்டிருக்கிறார். 50 கோடி மக்களுக்கு இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைக் கொடுத்திருக்கிறார். இலவச எரிவாயு சிலிண்டர் திட்டம், 8 கோடி இலக்கு வைத்து இதுவரை 7 கோடி பேருக்கு இலவச எரிவாயு சிலிண்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

    மு.க.ஸ்டாலின் பதற்றத்தில் இருக்கிறார். நிச்சயமாக எங்கள் கூட்டணி வெற்றி பெறும். காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி இந்திய தமிழர்களையும், இலங்கை தமிழர்களையும் பாதுகாக்கவில்லை. நிச்சயமாக இந்தக் கூட்டணி தோல்வியடையும். ஏனென்றால், தோல்வியடைந்த அனைவரும் அவர்களிடம் உள்ளனர். வைகோவின் கருப்புக் கொடிக்கும், அவரது கருப்புத் துண்டுக்கும், அவரது கருத்துக்கும் மரியாதை கிடையாது. காமராஜரை பற்றி பேச தகுதி படைத்த ஒரே தலைவர் பிரதமர் மோடி மட்டும்தான். நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் மோடி பிரதமராக வர வேண்டும். மத்தியில் தாமரை மலர வேண்டும். மாநிலத்தில் அ.தி.மு.க. பலம் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #admk #bjp #tamilisai #parliamentelection

    சென்னையில் உள்ள கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்து பேசினார். #Tamilisai #edappadipalanisamy #vijayakanth
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, கூட்டணி அமைப்பதிலும், தொகுதி பங்கீடுகளை முடிப்பதிலும் அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தனித்து களம் கண்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. இந்த முறை மெகா கூட்டணியுடன், தேர்தலை சந்திக்க இருக்கிறது. 

    அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்த பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. புதுச்சேரி தொகுதி என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்று பாஜக தலைவர் தமிழிசை சென்னையில் உள்ள கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். 

    இந்த சந்திப்பிற்கான காரணம், அதிமுக கூட்டணியில் தேமுதிகவின் நிலை பற்றி அறியவும், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. #Tamilisai #edappadipalanisamy #vijayakanth
    தே.மு.தி.க. எங்களுடன் இணைந்து விடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். #tamilisai #bjp #admk #vijayakanth #parliamentelection

    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் பா.ஜனதா மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பா.ஜ.க. உடன் யார் வருவார்? பா.ஜ.க. தனிமைப்படுத்தப்படும் தமிழகத்தில் பா.ஜ.க. கால் ஊன்றுமா? கை ஊன்றுமா? என்று பெரிய கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

    இன்று அவர்கள் முன்னாலேயே வலிமையான கூட்டணி ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறோம். மிகப்பிரம்மாண்டமான மெகா கூட்டணி என்று கூறினால் அது அ.தி. மு.க., பா.ஜ.க., பா.ம.க. இடம் பெற்றிருக்கும் கூட்டணிதான். தே.மு.தி.க. எங்களுடன் இணைந்து விடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


    இது மங்களகரமான கூட்டணி. தி.மு.க. பக்கம் எல்லாம் வெட்டு குத்து என்று சொல்லியிருக்கிறார் ஜெயக்குமார்.

    தி.மு.க. கூட்டணியில் வன்முறைகளும் இழுபறிகளும் இருக்கின்றது. மதிமு.க, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் எந்த சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்று அவர்களுக்கே சந்தேகமாக இருக்கிறது.

    எங்களைப் பொறுத்த மட்டில் ஏறக்குறைய தே.மு.தி.க.வை தவிர மற்ற எல்லா கட்சிகளுடனும் சுமுகமாக இணைப்பு நடந்திருக்கிறது. இது கட்டாய திருமணம் போல இந்த கூட்டணி என்று திருநாவுக்கரசு கூறியிருக்கிறார்.

    தற்கொலைக்கு சமம் என்று தினகரன் கூறுகிறார். உண்மையிலேயே இயல்பான அன்பான நட்புறவுடன் ஏற்பட்டிருக்கின்ற கூட்டணி. இதை பார்த்தவர்கள் அனைவரும் பதட்டப்படுகிறார்கள். அந்தப் பதட்டத்தின் விளைவாக அவர்கள் இவ்வாறு பேசுகின்றனர்.

    28-ந் தேதி அனைத்து மண்டல தலைவர்களுடனும் மோடி காணொளிக்காட்சி மூலம் பேசுகிறார். தமிழ் நாட்டில் மட்டும் 600 இடங்களில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

    இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #tamilisai #bjp #admk #vijayakanth #parliamentelection

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பிரம்மாண்ட கூட்டணி அமைத்து வருகிறோம் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #tamilisai #bjp #pmmodi #parliamentelection

    ஈரோடு:

    தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களையும் உதவிகளையும் செய்து வருகிறது. பிரதமர் மோடி தொடர்ந்து தமிழகத்துக்கு வந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார்.

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா, திருப்பூரில் மெட்ரோ ரெயில் திட்டம், ஈ.எஸ்.ஐ.ஆஸ்பத்திரி திட்டங்களை தொடங்கி வைத்து உள்ளார்.

    பிரதமரை தொடர்ந்து தேசிய தலைவர் அமித்ஷா ஈரோடு வர உள்ளார். தொடர்ந்து மத்திய மந்திரிகள் மூத்த தலைவர்கள் தமிழகத்துக்கு வர உள்ளனர். இதனால் பாரதிய ஜனதா தொண்டர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

    கஜா புயலின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராணுவ மந்திரியும் நானும் அங்கேயே 3 நாட்கள் தங்கி தேவையான உதவிகளை செய்து வந்தோம்.


    வைகோ தமிழகத்துக்கு என்ன நல்ல திட்டங்களை கொண்டு வந்தாலும் எதிர்க்கிறார். அவர் பிரதமர் வரும்போது கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபடுவது வெற்று போராட்டம் ஆகும். அந்த போராட்டம் ஊர்ந்து போகும் யானையின் பலத்தை சுண்டெலியால் தடுத்து விட முடியாது.

    முதல்வர் ஏழை குடும்பத்துக்கு 2 ஆயிரம் ரூபாய் அறிவித்தது நல்ல திட்டம் அதை வரவேற்கிறேன். தமிழக முதல்வர் மக்களுக்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.

    கூட்டணி பற்றி பேசி வருகிறோம். விரைவில் நல்ல முடிவு வரும். எங்களுக்கு பொதுவான எதிரி தி.மு.க.வும் காங்கிரசும் தான் தமிழகத்தை பொருத்தவரை பலமான பிரம்மாண்டமான கூட்டணி அமைத்து வருகிறோம். தேர்தலில் வெற்றி பெறுவோம்.

    பாரதீய ஜனதாவுக்கு இந்தியா முழுவதும் செல்வாக்கு அதிகரித்து உள்ளது. ஒரு எதிர்கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவ் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று கூறி உள்ளார். இதன் மூலம் மோடியின் செல்வாக்கு அதிகரித்து உள்ளதை தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு தமிழிசை கூறினார். #tamilisai #bjp #pmmodi #parliamentelection

    மோடியின் தமிழகம் வருகையால் அரசியலில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். #tamilisai #modi #parliamentelection

    மதுரை:

    பாரதீய ஜனதாவின் மகளிர் அணி சார்பில் மதுரையில் இன்று இரு சக்கர வாகன யாத்திரை நடைபெற்றது. மகளிர் அணி தலைவர் மகாலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த யாத்திரையை கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாங்கள் நேர்மறை அரசியல் செய்து வருகிறோம். எதிர்வினை ஆற்றுபவர்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை.

    அரசியல் ரீதியாக மோடியின் தமிழகம் வருகை திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது. கட்சியின் பலம், வளர்ச்சி இதன்மூலம் கூடியுள்ளது. பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நாளை ஈரோடு வருகிறார். ரவிசங்கர் பிரசாத் நாளை மதுரை வருகிறார். தலைவர்களின் வருகை எங்களுக்கு மகிழ்ச்சியையும், எழுச்சியையும் தருகின்றது.

    தமிழகத்தில் அதிக தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும். இந்த வெற்றிக்கு கூட்டணியும் அமைப்போம். தேர்தலில் நிச்சயமாக நல்ல சூழல் நிலவும். பிரதமர் மோடியின் வளர்ச்சித் திட்டங்கள், மக்களை சென்றடைந்துள்ளன. இந்த திட்டங்கள் மூலம் வருங்காலத்தில் தமிழகம் பொருளாதார வளர்ச்சி பெறும்.

    அனைத்து கட்சிகளும் தேர்தலில் தனித்து போட்டியிட்டால் நாங்களும் போட்டியிட தயார்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilisai #modi #parliamentelection

    ×