search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tamilisai"

    • பிரிவினையை பேசியதை கண்டித்த ராணுவவீரர் வீடு புகுந்து மிரட்டிய சம்பவத்தை ஏற்க முடியாது. இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது. புதுவையில் அரசு வக்கீல்கள் நியமனத்தில் முதல்-அமைச்சர் கொடுத்த பட்டியலை நான் புறக்கணித்ததாக கூறுவது தவறு.
    • புதுவை புறக்கணிக்க ப்படுவதை என்றும் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். புதுவைக்கு தேவையான உதவிகளை மத்திய அரசிடம் சென்று கேட்டு வருகிறேன்.

    புதுச்சேரி:

    காட்டேரிக்குப்பத்தில் பழங்குடியினர் கவுரவ விழாவில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரிவினையை பேசியதை கண்டித்த ராணுவவீரர் வீடு புகுந்து மிரட்டிய சம்பவத்தை ஏற்க முடியாது. இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது. புதுவையில் அரசு வக்கீல்கள் நியமனத்தில் முதல்-அமைச்சர் கொடுத்த பட்டியலை நான் புறக்கணித்ததாக கூறுவது தவறு.

    எனக்கும், வக்கீல்கள் தேர்வுக்கும் சம்பந்தமே இல்லை. பட்டியல் மட்டுமே என்னிடம் வந்தது. அதில் ஒருவர் மட்டும் சென்னையை சேர்ந்தவர், மற்றவர்கள் புதுவையை சேர்ந்தவர்கள். தலைமை செயலர், சட்டசபை செயலர் நேர்முகத்தேர்வு நடத்தி மதிப்பெண் கொடுத்து தகுதிபடைத்தவர்கள் என பட்டியல் கொடுத்தனர். இதில் எனது பங்கு எதுவும் இல்லை.

    புதுவை புறக்கணிக்க ப்படுவதை என்றும் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். புதுவைக்கு தேவையான உதவிகளை மத்திய அரசிடம் சென்று கேட்டு வருகிறேன். முதல்- அமைச்சருக்கும், எனக்கும் எந்தவித விரிசலும் இல்லை. தமிழக கவர்னர் காலாவதியானவர் என கனிமொழி எம்.பி கூறியுள்ளார். கவர்னர்களை மிகவும் மோசமாக விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விநாயகர் சதுர்த்தி, நாடு முழுவதும் பாரம்பரிய உற்சாகத்தோடும் மகிழ்ச்சி யோடும் கொண்டாடப்படும் விழாவாக இருந்து வருகிறது.
    • உலகின் அனைத்து நாடுகளிலும் மொழி மற்றும் மதம் கடந்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.

    புதுச்சேரி:

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    விநாயகர் சதுர்த்தி, நாடு முழுவதும் பாரம்பரிய உற்சாகத்தோடும் மகிழ்ச்சி யோடும் கொண்டாடப்படும் விழாவாக இருந்து வருகிறது.

    விநாயகக் கடவுள் அறிவின், ஞானத்தின், வளமையின் கடவுளாக பார்க்கப்படுகிறது. எந்த ஒரு புதிய முயற்சியைத் தொடங்கும் போதும் விநாயகரை வணங்கி தொடங்கப்படுகிறது.

    இந்த விநாயகர் சதுர்த்தி விழா அனை வரது வாழ்விலும் ஆரோக்கி யத்தையும், அமைதியையும், செழிப்பையும் அளிக்க வேண்டும் என்று கூறி புதுவை மக்கள் அனை வருக்கும் எனது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.

    புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:-

    வினை தீர்க்கும் விநாயக பெருமானை போற்றி வழிபடும் விநாயகர் சதுர்த்தி நன்னாள் அறிவு, கல்வி, செல்வம், ஆரோக்கியம் போன்றவற்றை அருளும் திருநாளாக அமையட்டும். புதுவை மாநில மக்கள் அனைவருக்கும் என் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:-

    உலகின் அனைத்து நாடுகளிலும் மொழி மற்றும் மதம் கடந்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. புதுவை மாநிலத்திலும் இந்த விழா சிறப்பாக அமைந்திடவும், குழந்தைகள் முதல் பெரியவர் வரை பொதுமக்கள் அனைவருக்கும் இந்த நாளில் எல்லா அருளும் கிடைத்திடவும் வறுமை நீங்கி வளம் கிடைக்க விநாயகர் சதுர்த்தி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ஞானமேவடிவான திருடேனியை கொண்ட விநாயக பெருமானின் திருவருளால் உலகெங்கும் அன்பும், அமைதியும் நிறையட்டும். புதுவை மாநிலம் முழுவதும் நலமும், வளமும் பெருகட்டும் மக்கள் வீடெங்கும் மகிழ்ச்சியும், மன நிம்மதியும் தவழட்டும். அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • கடலில் நாளுக்கு நாள் சேர்ந்து வரும் குப்பைகளால் மீனை விட அதிகமாக நெகிழி இருக்கும்.
    • புதுவை நிகழ்ச்சியிலும் பங்கெடுத்துக் கொள்வது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் கடலோர தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடலில் நாளுக்கு நாள் சேர்ந்து வரும் குப்பைகளால் மீனை விட அதிகமாக நெகிழி இருக்கும். இது நல்லது அல்ல. அதனால் தூய்மைப்படுத்த வேண்டும் என்ற ஒரு திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி உள்ளார். மத்திய மந்திரி சென்னையில் இருந்தபோதுகூட மகாபலிபுரம் கடற்கரையில் நெகிழிகளையும் அப்புறப்படுத்தினார்.

    அவர் புதுவை நிகழ்ச்சியிலும் பங்கெடுத்துக் கொள்வது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. கடலில் ஐஸ்கிரீம் கப், பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் காணப்படுகிறது, கடற்கரையை விழிப்புணர்வுக்காக தூய்மைப்படுத்த முடியும்.

    இந்த பொருட்களை கடலுக்குள் எறியக்கூடாது என்ற விழிப்புணர்வு அனைவருக்கும் இருக்க வேண்டும். இந்த பூமி பந்தையும், கடலையும் பாது காப்பதில் அனைவருக்கும் கடமை இருக்கிறது என்பதை உணர்ந்து, குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். நாமும் பிளாஸ்டிக் பொருட்களை கடலுக்குள் எறியாமல் இருப்போம். தூய்மையான புதுவையை நாம் உருவாக்குவோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தமிழகத்துக்கு மந்திரி பதவி வழங்குவது குறித்து பிரதமர் மோடி முடிவு எடுப்பார் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

    ஆலந்தூர்:

    டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இரண்டாவது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்று கொண்ட அற்புதமான நிகழ்விற்கு கட்சிக்காக உழைத்த தொண்டர்களான மாவட்ட தலைவர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் போலவே அழைப்பு விடுத்து அவர்களும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். இது தொண்டர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த உற்சாகத்தோடு தமிழ்நாட்டில் கட்சியை பலப்படுத்தி பணியாற்றுவோம்.

    இன்னும் நிறைய வாய்ப்புகள் வரும். மோடி தலைமையிலான இந்த அமைச்சரவை இந்தியாவை வல்லரசு நாடாக எடுத்துச் செல்லும்.

    இன்னும் பல வெற்றிகள் பல மாநிலங்களில் குவிக்க இருக்கிறது. தமிழகத்திலும் பா.ஜனதா பலம் பெற இருக்கிறது. தமிழகத்தில் பா.ஜனதா பலம் பெற பலம் பெற தமிழகத்திற்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும்.

    மக்களுக்கு எதிரான, மக்களுக்குத் துன்பம் தரக் கூடிய பிரச்சனைகளை இந்த அரசு ஆதரிக்க போவதில்லை, பாஜகவிற்கு தமிழகத்தின் மீது அக்கறை இல்லை என்ற தவறான பிரசாரம் எதிர்கட்சிகளால் செய்யப்படுகிறது. பா.ஜனதா தமிழகத்தின் மீது மிகுந்த அக்கறையோடு இருக்கிறது. பல நல்ல திட்டங்களை கொண்டு வருவதற்கான அடிப்படையில் எங்களுடைய பணி இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.


    மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் உங்கள் கூட்டணியில் வெற்றிபெற்ற ஒரே எம்.பி.யான ரவீந்திரநாத் பெயரை தமிழகத்திலிருந்து மேலிடத்திற்கு பரிந்துரை செய்வீர்களா? என்ற கேள்விக்கு,

    ‘இதுகுறித்து கட்சி தலைமையும், பிரதமர் மோடியும் தான் முடிவு எடுக்க வேண்டும். இப்போது அது பற்றி எதுவும் கூற விரும்பவில்லை’ என்று தெரிவித்தார்.

    தோல்விக்கான காரணத்தை கேட்டு கட்சி தலைமை என்னிடம் அறிக்கை எதையும் கேட்கவில்லை என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து பா.ஜ.க. போட்டியிட்டது. இந்த கூட்டணி தேர்தலில் படுதோல்வி அடைந்தது. ஒரு இடத்தில் மட்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. பா.ஜ.க. போட்டியிட்ட 5 இடங்களிலும் கடுமையான சரிவை கண்டது. இந்தியா முழுவதும் பா.ஜ.க. வெற்றி பெற்று வந்த நிலையில், தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட அக்கட்சி வெற்றி பெற முடியாமல் போனது. அக்கட்சி தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், தோல்விக்கான காரணம் குறித்து மத்திய பா.ஜ.க. தலைமை, தமிழக பா.ஜ.க.விடம் விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பியிருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவலை தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    அகில இந்திய பா.ஜ.க. தலைமைக்கு தமிழகத்தின் நிலைமை நன்றாகவே தெரியும். தேர்தலை நாங்கள் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வலிமையாகவே எதிர்கொண்டோம். இதுவும் கட்சியின் தலைமைக்கு தெரியும். கூட்டணி கட்சி தலைவர்கள் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார்கள்.

    இன்னும் சொல்லப்போனால், இந்தியா முழுவதும் பா.ஜ.க. வெற்றி கோஷம் ஒலித்து கொண்டிருந்த நேரத்தில், பின்னடைவு சந்தித்து கொண்டிருந்த மாநிலங்களில் கட்சி தலைமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கவலைப்படாதீர்கள், தொண்டர்களை உற்சாகமாக இருக்க சொல்லுங்கள் என்று தெரிவித்தார்கள்.

    ஆனால் சிலர் வேண்டுமென்றே இதுபோன்று பரப்புகிறார்கள். கட்சி தலைமை எங்களிடம் தோல்விக்கான விளக்க அறிக்கை எதையும் கேட்கவில்லை. இது முற்றிலும் தவறானது. 2 ஜி ஊழல் வழக்கில் சிக்கிய, பண பலத்துடன் தேர்தலை சந்தித்த கனிமொழியை எதிர்கொண்ட என்னை கட்சி தலைமை பாராட்டத்தான் செய்தது.

    பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு நான் தான் கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து செல்ல இருக்கிறேன். 

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தாலும் தமிழகத்தில் அக்கட்சி வேட்பாளர்கள் ஒருவர்கூட வெற்றிபெறாததால் தமிழிசையிடம் பா.ஜனதா தலைமை விளக்கம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தாலும் தமிழகத்தில் அக்கட்சி வேட்பாளர்கள் ஒருவர்கூட வெற்றிபெற வில்லை.

    தமிழகத்தில் குறைந்தது 2 அல்லது 3 தொகுதிகளையாவது கைப்பற்ற வேண்டும் என்று கருதிய பா.ஜனதா 5 தொகுதிகளிலும் நட்சத்திர வேட்பாளர்களை களம் இறக்கியது.

    தூத்துக்குடியில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கன்னியா குமரியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் தேசிய செயலாளர் எச்.ராஜா, கோவையில் கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர்.

    இவர்களை ஆதரித்து பிரதமர் மோடி, தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் பிரசாரம் செய்தனர். ஆனால் 5 பேரும் தோல்வியை தழுவினர்.

    இந்த தோல்வி பா.ஜனதா தலைவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. எனவே மாநில தலைவரை மாற்ற பா.ஜனதா தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ஏற்கனவே தமிழிசை சவுந்தரராஜன் மாநில தலைவர் பதவிகாலம் முடிந்த பிறகும் அவர் 2-வது முறையாகவும் மாநில தலைவராகவே பதவி வகித்து வந்தார். தற்போது அவரை மாற்ற முடிவு செய்துள்ள தேசிய தலைமை, புதிய தலைவராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. வானதி சீனிவாசன், சி.பி.ராதா கிருஷ்ணன், கே.டி.ராகவன் ஆகியோரது பெயர்கள் முன்னிலையில் உள்ளது.


    இதற்கிடையே தமிழ்நாட்டில் ஏற்பட்ட தோல்விக்கு காரணம் என்ன? என்பது குறித்து பா.ஜனதா தலைமை விளக்கம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுடன் அல்லாமல் போட்டியிட்ட போதே 5.48 சதவீத ஓட்டுகள் பா.ஜனதாவுக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் இந்த முறை அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த பிறகும் 3.65 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளது.

    அ.தி.மு.க.வை பொறுத்த வரை 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தான் கவனத்தை செலுத்தியது. பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்காக ஆளும் கட்சியினர் ஆர்வம் காட்டவில்லை.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில்கூட கன்னியாகுமரி, தர்மபுரி தொகுதிகளில் எங்கள் கூட்டணி கைப்பற்றி இருந்தது. ஆனால் இம்முறை அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த பிறகும் ஒரு தொகுதிகள்கூட வெற்றி பெற முடியாதது வருத்தமாக உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    குட்டையில் நீர் இல்லாததால் தமிழகத்தில் தாமரை மலராது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கூறி உள்ளார்.
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் எங்கள் கூட்டணிக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக வாக்குகள் அளித்து மக்கள் எங்களை வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள்.

    எங்கள் கூட்டணி சந்தர்ப்பவாதம் இல்லாத கொள்கை ரீதியான கூட்டணி. தமிழ்நாட்டில் கல்வி, விவசாயம் தொழில் ஆகியவற்றுக்கு வளர்ச்சியை விரும்புகிற மக்கள் எங்கள் அணிக்கு வாக்களித்துள்ளனர். வாக்களித்த அனைவருக்கும் எங்கள் நன்றி.

    காங்கிரஸ் ஒரு மிகப் பெரிய இயக்கம் காங்கிரஸ் தோல்வி அடையவில்லை, காங்கிரஸ்காரர்கள் தான் தோல்வியடைந்துள்ளனர். அதை சரி செய்யலாம் சரி செய்ய முடியாது என்று எதுவும் கிடையாது நெப்போலியன், காமராஜர், அண்ணா, இந்திரா காந்தி ஆகியோரும் தோல்வியடைந்துள்ளனர்.

    வெற்றியும் தோல்வியும் ஒரு வீரனுக்கு சகஜம் தென்னிந்தியாவில் வெற்றி பெற்றிருக்கிறோம் வரும் காலங்களில் வட இந்தியா மேற்கு இந்தியாவில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடிப்போம்.

    காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலில் சறுக்கல் தானே தவிர, வீழ்ச்சி அல்ல. கடைசியில் தனிமனித விமர்சனத்தை முன்வைத்து பிரசாரம் செய்தவர் மோடி.

    தமிழகத்தில் மீண்டும் தாமரை மலர்ந்தே தீரும் என்கிற தமிழிசை கருத்துக்கு, ஒரு மலர் மலர்வதை யாரும் தடுக்க முடியாது. ஒரு மலர் மலர வேண்டும் என்றால் தண்ணீர் வேண்டும். நாங்கள் எதையும் தடுக்கவில்லை. ஆனால் நீரற்ற குட்டையில் எவ்வாறு தாமரை மலரும்?.

    இந்திய தேசம் ஒரு கூட்டாட்சி தத்துவம் உள்ளது. ஒரு மாநிலத்தை தனிமைப்படுத்த நினைத்தால் அது ஒரு சர்வாதிகாரம் அனைவருக்கும் சம உரிமை உள்ளது.

    இந்தியாவை வழிநடத்த ராகுலை தவிர வேறு சிறந்த தலைவர் யாருமில்லை. காங்கிரஸ் தொண்டர்கள் ராகுலை தான் விரும்புகின்றனர் என்றார். ராகுல் பதவி விலக்கூடாது. நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம்.

    காங்கிரசில் இருந்து பிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் ஏற்றுக் கொள்வோம் அதற்காக பேச்சு வார்த்தை எல்லாம் நடத்த மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    விளை நிலங்களை நாசமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கக்கூடாது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை தொகுதி அ.தி.மு.க.,முன்னாள் எம்.பி., ராஜா பரமசிவம் மரணமடைந்தார். ஆலங்குடியில் நடைபெற்ற அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சியில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராஜா பரமசிவம் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்து அ.தி.மு.க.வில் எம்.பி.யாக, மாவட்டச் செயலாளராக சிறப்பாக பணியாற்றினார். அவரது மரணம் புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு இழப்பாக உள்ளது. 

    மேலும் ஹைட்ரோ கார்பன் போன்ற விளை நிலங்களை நாசமாக்கும், விவசாயிகளை அழிக்கும், குடிதண்ணீரை மாசுபடுத்தும் எந்த திட்டத்தையும் விவசாயிகளிடையே திணிக்கக்கூடாது. இது போன்ற நாசகார திட்டங்களை அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்துவோம் என்றார். தொடர்ந்து கமலின் பேச்சு குறித்தும், தமிழிசை பேச்சு குறித்தும் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, மதுரை இடைத்தேர்தல் தொகுதிக்கு செல்கிறேன். அங்கு இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன் என்று கூறி விட்டு புறப்பட்டு சென்றார்.
    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று நான் சொன்னது சரித்திர உண்மை என்று கமல் மீண்டும் கூறி உள்ளதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்தபோது, முஸ்லிம்கள் அதிகம் வாழும் பள்ளப்பட்டி என்ற ஊரில் பேசுகையில் இந்து தீவிரவாதம் என்பது பற்றி குறிப்பிட்டு பேசினார்.

    அவர் கூறுகையில், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. அவர் காந்தியை கொலை செய்ததற்கு நியாயம் கேட்டு வந்துள்ளேன்” என்றார்.

    நடிகர் கமல்ஹாசனின் பேச்சு இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக மக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்தது. இதையொட்டி பல இடங்களில் கமல்ஹாசன் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட ஊர்களில் கமல்ஹாசன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மன்னார்குடி ஜீயர் உள்பட ஏராளமானவர்கள் கமல்ஹாசனுக்கு கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தனர். இதற்கிடையே இந்து தீவிரவாதி என்று கூறியதால் கமல்ஹாசனால் அடுத்த 2 நாட்களுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

    தாக்குதல் அச்சுறுத்தல் ஏற்பட்டதால் அவர் 2 நாட்கள் பிரசாரத்தை ரத்து செய்தார்.

    இந்த நிலையில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுத்ததைத் தொடர்ந்து நேற்று கமல்ஹாசன் பிரசாரத்தை தொடர முடிவு செய்தார். அதன்படி நேற்று அவர் திருப்பரங்குன்றம் தொகுதியில் திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்தார்.



    அப்போது அவர், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று நான் சொன்னது சரித்திர உண்மை” என்று உறுதிபட கூறினார். கமல்ஹாசன் மீண்டும் இந்து தீவிரவாதி பற்றி பேசியதால் அவருக்கு மீண்டும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    கமல்ஹாசன் நாக்கை மக்கள் அறுப்பார்கள் என்று முதல் ஆளாக எச்சரித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் கமலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    சட்டை கலையாமல் கமல்ஹாசனை அரசியலில் இருந்து தமிழக மக்கள் அப்புறப்படுத்துவார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) மாலை கமல்ஹாசன் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்வது உறுதியாகியுள்ளது. பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் அதிகாரி அனுமதி வழங்கி விட்டதாக கரூர் மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்தனர்.

    இன்று மாலை 5 மணிக்கு தென்னிலையில் திறந்தவேன் மூலம் கமல்ஹாசன் பிரசாரத்தை தொடங்குகிறார். பின்னர் தொப்பம்பட்டி, நொய்யல், தளவாபாளையம் ஆகிய இடங்களில் வேட்பாளர் மோகன் ராஜீக்கு ஆதரவு கேட்டு தொடர்ந்து பேசுகிறார்.

    பின்னர் வேலாயுதம்பாளையம் மலை வீதியில் இரவு 8.15 மணியளவில் நடக்கிற பொதுக்கூட்டத்திலும் கமல்ஹாசன் பங்கேற்று பேசுகிறார். இதற்கிடையே இந்து முன்னணியினர் அரவக்குறிச்சியில் கமல்ஹாசனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியுள்ளனர். அனுமதி கிடைக்காவிட்டாலும் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என கூறியுள்ளனர்.

    கமல்ஹாசன் பிரசாரத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அரவக்குறிச்சி தொகுதியில் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.

    பா.ஜ.க.வுடன் பேசியதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசைக்கு முக ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க.வுடன் பேசி வருவதாக இன்று காலை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், பா.ஜ.க.வுடன் பேசியதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என பா.ஜ.க. தலைவர் தமிழிசைக்கு ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோடியுடன் நான் பேசியதாக பச்சைப் பொய் கூறிய தமிழிசைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்



    பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் பிறந்த தமிழிசை இந்த அளவு தரம் தாழ்த்திக் கொண்டது வேதனை அளிக்கிறது. 

    ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதில் இரட்டிப்பு உறுதியாக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
    மறைமுகமாக திமுகவுடன் தினகரன் கூட்டணி வைத்துள்ளார் என்று தமிழிசை சவுந்திரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். #tamilisai #dmk #dinakaran
    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

    மக்கள் எனக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். நிச்சயமாக தூத்துக்குடியில் வெற்றி பெறுவேன். திமுக, அமமுக கூட்டணி என்று நாங்கள் கூறியது இப்போது உண்மையாகி விட்டது. மறைமுகமாக திமுகவுடன், தினகரன் கூட்டணி வைத்துள்ளார்.

    வாக்குப்பதிவு இயந்திர மைய அறைகளில் தவறுகள் நடைபெறக்கூடாது. திமுகவின் பழைய கதைகளை எல்லாம் தோண்டினால் ஸ்டாலினால் திண்ணை பிரசாரத்திற்கு கூட செல்ல முடியாது.

    தமிழர்கள் பிரதமர் ஆவதை தடுத்தது திமுகதான். அப்துல்கலாம் மீண்டும் ஜனாதிபதியாக ஆவதை தடுத்தது திமுக தான். மூப்பனார் போன்றவர்கள் பிரதமர் ஆவதை தடுத்தது திமுக தான். திமுக என்றாலே நாடக அரசியல் தான்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilisai #dmk #dinakaran
    தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் நன்றாக இருந்தன என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். #tamilisai #electioncommission #kanimozhi
    சென்னை:

    சென்னையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் நன்றாக இருந்தன. சிலர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றியதாக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை திமுக கூறி உள்ளது. 

    திமுகவினரும், அமமுகவினரும் பணம் கொடுத்தார்கள் என பொதுமக்களே தெரிவித்தார்கள். 

    தூத்துக்குடியில் மக்களுக்கு ரூ.200, 300 தான் கொடுத்தனர். இது அவர்களுக்கு சிறிய தொகை தான். மக்களின் ஏழ்மையை தங்கள் லாபத்திற்காக பயன்படுத்திக்கொள்வது தவறு என்பது எனது கருத்து.

    கனிமொழியை விட தூத்துக்குடியில் போட்டியிட எனக்கு அதிக உரிமை உள்ளது என நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilisai #electioncommission #kanimozhi
    ×