என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
பூமியையும் கடலையும் பாதுகாக்கும் கடமை அனைவருக்கும் உள்ளது-கவர்னர் தமிழிசை அறிவுரை
- கடலில் நாளுக்கு நாள் சேர்ந்து வரும் குப்பைகளால் மீனை விட அதிகமாக நெகிழி இருக்கும்.
- புதுவை நிகழ்ச்சியிலும் பங்கெடுத்துக் கொள்வது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
புதுச்சேரி:
புதுவையில் கடலோர தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
கடலில் நாளுக்கு நாள் சேர்ந்து வரும் குப்பைகளால் மீனை விட அதிகமாக நெகிழி இருக்கும். இது நல்லது அல்ல. அதனால் தூய்மைப்படுத்த வேண்டும் என்ற ஒரு திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி உள்ளார். மத்திய மந்திரி சென்னையில் இருந்தபோதுகூட மகாபலிபுரம் கடற்கரையில் நெகிழிகளையும் அப்புறப்படுத்தினார்.
அவர் புதுவை நிகழ்ச்சியிலும் பங்கெடுத்துக் கொள்வது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. கடலில் ஐஸ்கிரீம் கப், பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் காணப்படுகிறது, கடற்கரையை விழிப்புணர்வுக்காக தூய்மைப்படுத்த முடியும்.
இந்த பொருட்களை கடலுக்குள் எறியக்கூடாது என்ற விழிப்புணர்வு அனைவருக்கும் இருக்க வேண்டும். இந்த பூமி பந்தையும், கடலையும் பாது காப்பதில் அனைவருக்கும் கடமை இருக்கிறது என்பதை உணர்ந்து, குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். நாமும் பிளாஸ்டிக் பொருட்களை கடலுக்குள் எறியாமல் இருப்போம். தூய்மையான புதுவையை நாம் உருவாக்குவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






