என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
பூமியையும் கடலையும் பாதுகாக்கும் கடமை அனைவருக்கும் உள்ளது-கவர்னர் தமிழிசை அறிவுரை
- கடலில் நாளுக்கு நாள் சேர்ந்து வரும் குப்பைகளால் மீனை விட அதிகமாக நெகிழி இருக்கும்.
- புதுவை நிகழ்ச்சியிலும் பங்கெடுத்துக் கொள்வது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
புதுச்சேரி:
புதுவையில் கடலோர தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
கடலில் நாளுக்கு நாள் சேர்ந்து வரும் குப்பைகளால் மீனை விட அதிகமாக நெகிழி இருக்கும். இது நல்லது அல்ல. அதனால் தூய்மைப்படுத்த வேண்டும் என்ற ஒரு திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி உள்ளார். மத்திய மந்திரி சென்னையில் இருந்தபோதுகூட மகாபலிபுரம் கடற்கரையில் நெகிழிகளையும் அப்புறப்படுத்தினார்.
அவர் புதுவை நிகழ்ச்சியிலும் பங்கெடுத்துக் கொள்வது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. கடலில் ஐஸ்கிரீம் கப், பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் காணப்படுகிறது, கடற்கரையை விழிப்புணர்வுக்காக தூய்மைப்படுத்த முடியும்.
இந்த பொருட்களை கடலுக்குள் எறியக்கூடாது என்ற விழிப்புணர்வு அனைவருக்கும் இருக்க வேண்டும். இந்த பூமி பந்தையும், கடலையும் பாது காப்பதில் அனைவருக்கும் கடமை இருக்கிறது என்பதை உணர்ந்து, குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். நாமும் பிளாஸ்டிக் பொருட்களை கடலுக்குள் எறியாமல் இருப்போம். தூய்மையான புதுவையை நாம் உருவாக்குவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்