search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விநாயகர் சதுர்த்தி விழா-கவர்னர் தமிழிசை ரங்கசாமி வாழ்த்து
    X

    கவர்னர் தமிழிசை

    விநாயகர் சதுர்த்தி விழா-கவர்னர் தமிழிசை ரங்கசாமி வாழ்த்து

    • விநாயகர் சதுர்த்தி, நாடு முழுவதும் பாரம்பரிய உற்சாகத்தோடும் மகிழ்ச்சி யோடும் கொண்டாடப்படும் விழாவாக இருந்து வருகிறது.
    • உலகின் அனைத்து நாடுகளிலும் மொழி மற்றும் மதம் கடந்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.

    புதுச்சேரி:

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    விநாயகர் சதுர்த்தி, நாடு முழுவதும் பாரம்பரிய உற்சாகத்தோடும் மகிழ்ச்சி யோடும் கொண்டாடப்படும் விழாவாக இருந்து வருகிறது.

    விநாயகக் கடவுள் அறிவின், ஞானத்தின், வளமையின் கடவுளாக பார்க்கப்படுகிறது. எந்த ஒரு புதிய முயற்சியைத் தொடங்கும் போதும் விநாயகரை வணங்கி தொடங்கப்படுகிறது.

    இந்த விநாயகர் சதுர்த்தி விழா அனை வரது வாழ்விலும் ஆரோக்கி யத்தையும், அமைதியையும், செழிப்பையும் அளிக்க வேண்டும் என்று கூறி புதுவை மக்கள் அனை வருக்கும் எனது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.

    புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:-

    வினை தீர்க்கும் விநாயக பெருமானை போற்றி வழிபடும் விநாயகர் சதுர்த்தி நன்னாள் அறிவு, கல்வி, செல்வம், ஆரோக்கியம் போன்றவற்றை அருளும் திருநாளாக அமையட்டும். புதுவை மாநில மக்கள் அனைவருக்கும் என் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:-

    உலகின் அனைத்து நாடுகளிலும் மொழி மற்றும் மதம் கடந்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. புதுவை மாநிலத்திலும் இந்த விழா சிறப்பாக அமைந்திடவும், குழந்தைகள் முதல் பெரியவர் வரை பொதுமக்கள் அனைவருக்கும் இந்த நாளில் எல்லா அருளும் கிடைத்திடவும் வறுமை நீங்கி வளம் கிடைக்க விநாயகர் சதுர்த்தி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ஞானமேவடிவான திருடேனியை கொண்ட விநாயக பெருமானின் திருவருளால் உலகெங்கும் அன்பும், அமைதியும் நிறையட்டும். புதுவை மாநிலம் முழுவதும் நலமும், வளமும் பெருகட்டும் மக்கள் வீடெங்கும் மகிழ்ச்சியும், மன நிம்மதியும் தவழட்டும். அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×