search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதிஷ்குமார்"

    • பீகாரின் புர்னியா பகுதியில் நடந்த இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் ராகுல் காந்தி பேசினார்.
    • அப்போது, மகாகத்பந்தன் கூட்டணி சமூக நீதிக்காக தொடர்ந்து போராடும் என்றார்.

    பாட்னா:

    பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சிகள் இணைந்து மகாகத்பந்தன் என்ற கூட்டணி அமைக்கப்பட்டது. இதில் ஐக்கிய ஜனதா தளம் தலைவரான நிதிஷ்குமார் முதல்மந்திரியாகவும், ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் துணை முதல் மந்திரியாகவும் செயல்பட்டு வந்தனர்.

    இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்கும் பணியில் நிதிஷ்குமார் ஈடுபட்டார். இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மாநில கூட்டணியில் உள்ள ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சிகளுடன் முரண்பாடு ஏற்பட்டதால் கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகினார். இதனால் மகாகத்பந்தன் கூட்டணி அரசு கவிழ்ந்தது.

    இதையடுத்து, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்திற்கு பா.ஜ.க. ஆதரவளித்த நிலையில், பா.ஜ.க. ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் பீகாரின் முதல் மந்திரியாக 9-வது முறை மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.

    இந்நிலையில், நிதிஷ்குமார் இல்லாமல் மகாகத்பந்தன் கூட்டணி சமூக நீதிக்காக தொடர்ந்து போராடும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.

    பீகாரின் புர்னியா பகுதியில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையின்போது ராகுல் காந்தி பேசியதாவது:

    பீகார் மாநிலத்தில் சமூக நீதிக்காக மகாகத்பந்தன் கூட்டணி தொடர்ந்து போராடும். எங்களுக்கு நிதிஷ் குமார் தேவையில்லை.

    தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நாட்டின் அனைத்து துறைகளிலும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை.

    தலித்துகள், ஓ.பி.சி. மற்றும் பிற பிரிவினரின் சரியான மக்கள் தொகையைக் கண்டறிய நம் நாட்டில் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு தேவை.

    மணிப்பூரில் உள்நாட்டுப் போருக்கான சூழல் நிலவி வருகிறது. ஆனால் பிரதமர் மோடி இன்னும் அங்கு செல்லவில்லை என தெரிவித்தார்.

    • தனியாா் தொலைக்காட்சி செய்தியாளா் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் கண்டிக்கத்தக்கது.
    • அரசியல் நிலைபாடுகளை மாற்றியுள்ளதை தவறு என்று சொல்ல முடியாது.

    திருப்பூா்:

    சந்தா்ப்பவாத அரசியலின் அடையாளம் நிதிஷ்குமாா் என்று மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வு மான மு.தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பல்லடத்தில் தனியாா் தொலைக்காட்சி செய்தியாளா் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் கண்டிக்கத்தக்கது. இன்று ஒட்டு மொத்த இந்தியாவும் சந்தா்ப்பவாத அரசியலின் பேராபாயத்தை உற்று நோக்கி அதனைப் பற்றிய விவாதத்தைத் தொடங்கியுள்ளது.

    பீகாா் மாநில முதல்வா் நிதீஷ்குமாா் கடந்த காலங்களில் கூட்டணி, அரசியல் நிலைபாடுகளை மாற்றியுள்ளதை தவறு என்று சொல்ல முடியாது. இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் அரசியல் கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுப்பதும், நிா்வாகிகளின் முடிவுக்கு ஏற்ப கூட்டணி நிலைபாடுகளை மாற்றிக் கொள்வதும் தவிா்க்க முடியாதது. ஆனால் நிதிஷ்குமாா் பச்சை சந்தா்ப்பவாதத்தின் அடையாளமாக அரசியலில் காணப்படுகிறாா்.


    18 மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க.வுடன் இருந்தவா் முதல்வா் பதவிக்கு ஆபத்து என்றவுடன், லாலு பிரசாத் யாதவுடன் கூட்டணி ஏற்படுத்தி புதிய ஆட்சியை நடத்தப்போவதாக கூறினார்.

    இதன் பிறகு பா.ஜ.க.வுக்கு எதிராக பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தியா கூட்டணி என்ற களத்தை அமைத்தாா். கடந்த ஒரு வாரத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. முதல்வா் பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.க. கூட்டணியுடன் முதல்வா் பதவியை ஏற்று புதிய பாதையை த்தொடங்கியுள்ளாா். இத்தகைய அரசியல்வாதிகளை நாட்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

    திருச்சி மத்திய சிறைச்சாலையை வரும் பிப்ரவரி 10- ந்தேதி பல்லாயிரக்கணக்கான மக்களுடன் மனிதநேய ஜனநாயக கட்சி முற்றுகையிட உள்ளது. தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளைக் கடந்து சமூக வழக்குகள் தொடா்பாக வாடிவதங்கிக் கொண்டிருக்கும் 36 கைதிகள் உள்பட அனைவரையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் 2024 பாராளுமன்ற தேர்தல்தான் கடைசி தேர்தலாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த சந்திப்பின்போது மனித நேய ஜனநாயக கட்சியின் மாவட்டத் தலைவா் ராயல் ராஜா, மாநில செயலாளா்கள் ஷபி, ஜாபா் அலி உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

    • பாஜக ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் இன்று பீகாரின் முதல்-மந்திரியாக மீண்டும் பதவியேற்றார்.
    • பீகார் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர்.

    பீகாரில் பெரும் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் பாஜக ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் இன்று பீகாரின் முதல்-மந்திரியாக மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். அவர் 9வது முறையாக முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, "நிதிஷ்குமார் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்பியது பாஜகவிற்கு மகிழ்ச்சியான விஷயம். பீகார் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர். ஜேடியு மற்றும் நிதிஷ்குமாரின் உண்மையான கூட்டணி என்.டி.ஏ. மட்டுமே. இந்தியா கூட்டணி புனிதமற்ற, அறிவியலற்ற கூட்டணி. அவர்களின் எண்ணம் பலிக்காது. குடும்பம் மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்தியா கூட்டணி. பீகாரில் என்.டி.ஏ ஆட்சி அமைக்கும் போதெல்லாம் மாநிலத்தின் வளர்ச்சி சாதனை படைக்கும். பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கைப்பற்றி 2025ல் மீண்டும் ஆட்சி அமைக்கும்" எனக் கூறினார்.

    • பாரதிய ஜனதா கூட்டணியில் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் சேர்ந்துள்ளார்.
    • ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்த நிதிஷ்குமார் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தார்

    பீகாரில் லாலு பிரசாத் துடனான கூட்டணியை முறித்துக் கொண்டு பாரதிய ஜனதா கூட்டணியில் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் சேர்ந்துள்ளார்.

    இதையடுத்து ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்த நிதிஷ்குமார் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தார்.

     இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே கூறும்போது, "மகா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகி விடுவார் என்பது எங்களுக்கு முன் கூட்டியே தெரியும். தேஜஸ்வி யாதவ் இதனை எங்களிடம் கூறினார்" என்றார்.

    • இந்தியா கூட்டணி தனது திட்டங்களில் இருந்து முழுமையாக தோல்வி அடைந்துவிட்டது.
    • விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடங்கும்.

    பாட்னா:

    முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துவிட்டு வெளியில் வந்ததும் நிதிஷ்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:-

    பீகாரில் இதுவரை லல்லு பிரசாத் யாதவுடன் இருந்த கூட்டணியை நான் முறித்துக் கொள்கிறேன். அவர் தலைமையிலான மகா கூட்டணியில் இருந்து இன்று முதல் நான் வெளியேறுகிறேன். அரசியல் சூழ்நிலை காரணமாகவே நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.

    கடந்த ஆண்டு இந்தியா கூட்டணியை நான் உருவாக்கினேன். ஆனால் இந்தியா கூட்டணியில் நான் நினைத்தது நடக்கவில்லை. எனது எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை.

    இந்தியா கூட்டணி தனது திட்டங்களில் இருந்து முழுமையாக தோல்வி அடைந்துவிட்டது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் எதிர்பார்ப்புகள் எதையும் குறிப்பிட்ட கால அளவில் நிறைவேற்றப்படவில்லை.

    சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் இந்தியா கூட்டணி தொடக்கத்தில் இருந்தே எதையும் செய்யவில்லை. எந்தவொரு திட்டத்தையும் இந்தியா கூட்டணியால் கொண்டு வரவும் இயலவில்லை.

    அதற்கு மாறாக இந்தியா கூட்டணியின் போக்கு வேறு விதமாக அமைந்து விட்டது. இந்தியா கூட்டணியில் உள்ள சில கட்சிகள் கவனத்தை திசை திருப்பியதால் குறிப்பிட்ட இலக்குக்கு செல்ல இயலவில்லை. அந்த வகையில் இந்தியா கூட்டணி தோல்வி அடைந்த கூட்டணி என்றுதான் சொல்ல வேண்டும்.

    இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் நான் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி இருக்கிறேன். அதன் தொடர்ச்சியாக இன்று முதல்-மந்திரிபதவியை ராஜினாமா செய்து விட்டேன்.

    ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடங்கும்.

    இனி நான் புதிய கூட்டணி அமைப்பேன். அந்த கூட்டணி மிகவும் வலிமையான கூட்டணியாக நிச்சயம் அமையும். எனது அரசுக்கு ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு நிதிஷ்குமார் கூறினார்.

    • பீகாரில் காங்கிரசுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளிலும் திருப்தி ஏற்படவில்லை.
    • பாஜகவை சேர்ந்த இருவர் துணை முதல்வர்களாக பதவியேற்க உள்ளதாகவும் தகவல்.

    பாட்னா:

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக பீகார் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டி இந்தியா கூட்டணி என்ற 27 கட்சிகள் அடங்கிய கூட்டணியை உருவாக்கினார்.

    தொடக்கத்தில் இருந்தே அந்தக் கூட்டணியில் ஒருமித்த உணர்வுடன் சுமூகமான சூழ்நிலை காணப்படவில்லை.


    இதற்கிடையே, பீகாரில் காங்கிரசுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளிலும் திருப்தி ஏற்படவில்லை. அதே சமயத்தில் தோழமைக் கட்சியான லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதாதளம் கட்சியுடனும் நிதிஷ்குமாருக்கு மோதல் ஏற்பட்டது.

    இதனால் இன்று காலை 10 மணிக்கு பாட்னாவில் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. அதில் நிதிஷ்குமார் கலந்துகொண்டு அரசியல் நிலவரங்கள் குறித்து விளக்கிப்பேசினார். அப்போது முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

    நிதிஷ்குமாரை ஆதரிப்பதாக ஐக்கிய ஜனதாதளம் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தனித்தனியாக கையெழுத்திட்டு கடிதமும் வழங்கினர். இதற்கிடையே பாட்னாவில் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டமும் நடந்தது. 78 எம்.எல்.ஏ.க்களும் அதில் கலந்து கொண்டனர்.


    அவர்களும் நிதிஷ்குமாரை முதல் மந்திரியாக்க ஆதரிப்பதாக எழுத்துப்பூர்வமாக தனித்தனி கடிதங்களில் எழுதி கையெழுத்திட்டு கொடுத்தனர். இதன்மூலம் ஆட்சி அமைப்பதற்கு தேவையான எம்.எல்.ஏ.க்கள் பலத்தை நிதிஷ்குமார் பெற்றார்.

    எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதங்களைப் பெற்றதைத் தொடர்ந்து நிதிஷ்குமார் ஐக்கிய ஜனதாதளம் மூத்த தலைவர்களுடன் ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார். ஆளுநரை ராஜேந்திர அர்லேகர் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தற்போதைய முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக கூறி கடிதம் கொடுத்தார்.

    இந்நிலையில் மீண்டும் இன்று ஆளுநரை சந்தித்து நிதிஷ்குமார் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

    இன்று மாலை நிதிஷ்குமார் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பாஜகவை சேர்ந்த இருவர் துணை முதல்வர்களாக பதவியேற்க உள்ளனர்.

    • தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி என அனைத்து கட்சிகளும் இணைந்து போராடும்.
    • 18 எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டத்தை நிதிஷ் குமார் கடந்த ஆண்டு ஜூன் 23-ந்தேதி அன்று பாட்னாவில் கூட்டினார்.

    கொல்கத்தா:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த 26 எதிர்க்கட்சிகள் கொண்ட இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

    தொகுதி பங்கீடு பிரச்சனையால் திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி ஆகியவை தனித்து போட்டியிடுவதாக அறிவித்தன. இந்தியா கூட்டணி உருவாக காரணமாக இருந்த நிதிஷ்குமாரும் அங்கிருந்து வெளியேறி உள்ளார். இதனால் இந்தியா கூட்டணி உடையும் நிலையில் காணப்படுகிறது.

    இந்த நிலையில் இந்தியா கூட்டணி பலமாக இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்து உள்ளது. மேற்கு வங்காள மாநிலம் பாக்டோக்ராவில் காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் இதுதொடர்பாக கூறியதாவது:-

    இந்தியா கூட்டணி பலமாக உள்ளது. ஆங்காங்கே சில தடைகள் உள்ளன. ஆனால் பா.ஜனதாவுக்கு எதிராக ஒருங்கிணைந்து போராடுவோம். தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி என அனைத்து கட்சிகளும் இணைந்து போராடும்.


    18 எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டத்தை நிதிஷ் குமார் கடந்த ஆண்டு ஜூன் 23-ந்தேதி அன்று பாட்னாவில் கூட்டினார். 2-வது கூட்டம் பெங்களூரில் ஜூலை 17 மற்றும் 18-ந் தேதிகளிலும், 3-வது கூட்டம் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1-ந்தேதி மும்பையிலும் நடந்தது.

    இந்த 3 கூட்டங்களிலும் அவர் முக்கிய பங்கு வகித்ததால் பா.ஜனதா மற்றும் அதன் சித்தாந்தத்தை கடைசி வரை எதிர்த்து போராட நிதிஷ்குமாரை நாங்கள் பரிசீலித்து வருகிறோம்.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

    • முதல் மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
    • இதையடுத்து, நிதிஷ்குமார் ராஜ்பவன் சென்று ஆளுநரைச் சந்தித்தார்.

    பாட்னா:

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக பீகார் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டி இந்தியா கூட்டணி என்ற 27 கட்சிகள் அடங்கிய கூட்டணியை உருவாக்கினார்.

    தொடக்கத்தில் இருந்தே அந்தக் கூட்டணியில் ஒருமித்த உணர்வுடன் சுமூகமான சூழ்நிலை காணப்படவில்லை.

    கடந்த 13-ம் தேதி டெல்லியில் நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில் கூட்டணி ஒருங்கிணைப்பாளராக நிதிஷ்குமாரை தேர்வு செய்யலாம் என அனைத்துக் கட்சிகளும் சொன்ன நிலையில் ராகுல் அதை நிராகரித்தார். இது தனக்கு ஏற்பட்ட அவமதிப்பாக நிதிஷ்குமார் கருதினார்.

    இதற்கிடையே, பீகாரில் காங்கிரசுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளிலும் திருப்தி ஏற்படவில்லை. அதே சமயத்தில் தோழமைக் கட்சியான லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சியுடனும் நிதிஷ்குமாருக்கு மோதல் ஏற்பட்டது.

    இதையடுத்து இந்தியா கூட்டணியில் இருந்து விலக நிதிஷ்குமார் முடிவு செய்தார். மேலும் கடந்த 2 ஆண்டாக ஆதரவு பெற்று வந்த லல்லு பிரசாத் யாதவ் கட்சியுடனான தொடர்பை துண்டிக்கவும் தீர்மானித்தார். அதே சமயத்தில் மீண்டும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து முதல் மந்திரி பதவியை தொடரவும் திட்டமிட்டார்.


    இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக பீகார் அரசியலில் கடுமையான பரபரப்பு நிலவியது. நிதிஷ்குமாரை சமரசம் செய்ய காங்கிரஸ் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இது இந்தியா கூட்டணிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வீழ்ச்சியாகக் கருதப்படுகிறது.

    நிதிஷ்குமாரிடம் ஏற்பட்ட மாற்றத்தை அறிந்த பாரதிய ஜனதா கட்சி மேலிடம் அவரை கெட்டியாகப் பிடித்துக் கொண்டது. மத்திய மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தலைவர் நட்டா இருவரும் அடுத்தடுத்து நிதிஷ்குமாருடன் பேசி அவரை தங்களது வளையத்துக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து நேற்று பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 2 தடவை கூடி ஆலோசனை நடத்தினர்.

    இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு பாட்னாவில் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. அதில் நிதிஷ்குமார் கலந்துகொண்டு அரசியல் நிலவரங்கள் குறித்து விளக்கிப்பேசினார். அப்போது முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

    குறிப்பாக முதல் மந்திரி நிதிஷ்குமார் கூட்டணி தொடர்பாகவோ, ஆட்சி மாற்றம் தொடர்பாகவோ எந்த முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம் என ஐக்கிய ஜனதாதளம் எம்.எல்.ஏ.க்கள் ஒப்புதல் வழங்கினர். நிதிஷ்குமார் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு ஒத்துழைப்பு தருவதாக எம்.எல்.ஏ.க்கள் உறுதி அளித்தனர்.

    நிதிஷ்குமாரை ஆதரிப்பதாக ஐக்கிய ஜனதாதளம் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தனித்தனியாக கையெழுத்திட்டு கடிதமும் வழங்கினர். இதற்கிடையே பாட்னாவில் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டமும் நடந்தது. 78 எம்.எல்.ஏ.க்களும் அதில் கலந்து கொண்டனர்.

    அவர்களும் நிதிஷ்குமாரை முதல் மந்திரியாக்க ஆதரிப்பதாக எழுத்துப்பூர்வமாக தனித்தனி கடிதங்களில் எழுதி கையெழுத்திட்டு கொடுத்தனர். இதன்மூலம் ஆட்சி அமைப்பதற்கு தேவையான எம்.எல்.ஏ.க்கள் பலத்தை நிதிஷ்குமார் பெற்றார்.

    பீகாரில் மொத்தமுள்ள 243 எம்.எல்.ஏ.க்களில் ஆட்சி அமைக்க 122 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. பாரதிய ஜனதா-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்கு 127 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கிடைத்திருக்கிறது.

    எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதங்களைப் பெற்றதைத் தொடர்ந்து நிதிஷ்குமார் ஐக்கிய ஜனதாதளம் மூத்த தலைவர்களுடன் ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார். ஆளுநரை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தற்போதைய முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக கூறி கடிதம் கொடுத்தார்.

    அதை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் புதிய ஆட்சி அமைப்பதாகக் கூறி கடிதங்களைக் கொடுத்தார். அதையும் ஆளுநர் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து நிதிஷ்குமார் 9-வது முறையாக பீகார் முதல் மந்திரியாக பதவி ஏற்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் தொடங்கி உள்ளது.

    இன்று மாலை நிதிஷ்குமார் தலைமையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நிதிஷ்குமார் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக பீகார் அரசியலில் இன்று அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாரதிய ஜனதாவும், ஐக்கிய ஜனதா தளமும் மீண்டும் ஒன்றிணைந்து புதிய ஆட்சியை அமைக்கின்றன. இதன்மூலம் பீகாரில் இந்தியா கூட்டணி மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

    பா.ஜ.க. கூட்டணியில் நிதிஷ்குமாரை சேர்ப்பதற்கு சிராக் பஸ்வான் கடும் எதிர்ப்பு தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அவரை டெல்லிக்கு அழைத்து அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் பா.ஜ.க. கூட்டணியில் நிதிஷ்குமார் இணைந்தால் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என சிராக் பஸ்வான் அறிவித்திருப்பது பீகார் அரசியலில் முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.

    பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா , நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் கட்சி மற்றும் சில கட்சிகள் ஒருங்கிணைவதன் மூலம் பீகாரில் இந்தக் கூட்டணி வலிமையானதாக மாறி உள்ளது

    • ஆளுநரைச் சந்திக்க முதல் மந்திரி நிதிஷ்குமார் நேரம் கேட்டுள்ளார் என தகவல் வெளியானது.
    • முதல் மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

    பாட்னா:

    எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த நிதிஷ்குமாருக்கு, இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மாநில கூட்டணியில் உள்ள ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சிகளுடன் முரண்பாடு ஏற்பட்டது. இதனால் இந்தியா கூட்டணியில் இருந்து விலக நிதிஷ்குமார் முடிவெடுத்துள்ளார் என தகவல் வெளியானது.

    அதேபோல், மாநிலத்திலும் ராஷ்டிரீய ஜனதா தளத்துடன் உள்ள கூட்டணியில் இருந்தும் விலக நிதிஷ்குமார் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியது. இந்தக் கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ராஷ்டிரீய ஜனதா தளம் கூட்டணியில் இருந்து விலகி முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து மீண்டும் முதல் மந்திரி பதவியேற்க நிதிஷ்குமார் திட்டமிட்டுள்ளார். இதற்காக நிதிஷ்குமார் முதல் மந்திரி பதவியை இன்று ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

    இதற்கிடையே, பீகார் மாநில ஆளுநரைச் சந்திக்க முதல் மந்திரி நிதிஷ்குமார் இன்று காலை நேரம் கேட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பீகார் மாநில ஆளுநர் அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • இந்தியா கூட்டணியில் இருந்து விலக நிதிஷ்குமார் முடிவெடுத்துள்ளார் என தகவல் வெளியானது.
    • இதையடுத்து, பீகாரில் முதல் மந்திரி பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்ய உள்ளார்.

    பாட்னா:

    பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரீய ஜனதா தளம் இணைந்து மகாகட்பந்தன் என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நிதிஷ்குமார் முதல் மந்திரியாகவும், லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல் மந்திரியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்கும் பணியில் நிதிஷ்குமார் ஈடுபட்டு வந்தார். ஆனால், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மாநிலத்தில் கூட்டணியில் உள்ள ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சிகளுடன் நிதிஷ்குமாருக்கு முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா கூட்டணியில் இருந்து விலக நிதிஷ்குமார் முடிவெடுத்துள்ளார் என தகவல் வெளியானது.

    அதேபோல், மாநிலத்திலும் ராஷ்டிரீய ஜனதா தளத்துடன் உள்ள கூட்டணியில் இருந்தும் விலக நிதிஷ்குமார் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியது. இந்தக் கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ராஷ்டிரீய ஜனதா தளம் கூட்டணியில் இருந்து விலகி முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து மீண்டும் முதல் மந்திரி பதவியேற்க நிதிஷ்குமார் திட்டமிட்டுள்ளார். இதற்காக நிதிஷ்குமார் முதல் மந்திரி பதவியை இன்று ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், பீகார் மாநில ஆளுநரைச் சந்திக்க முதல் மந்திரி நிதிஷ்குமார் இன்று காலை நேரம் கேட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

    முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ள நிதிஷ்குமார், அதன்பின் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல் மந்திரியாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
    • சிறப்பு அந்தஸ்து கேட்டு பீகார் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பாட்னா:

    பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல் மந்திரி நிதிஷ் குமார் பேசினார். அப்போது அவர் கூறுகையில், உயர் சாதியினர் முதல் ஏழைகள் வரை அனைவரின் முன்னேற்றத்திற்காக நாங்கள் உழைத்து வருகிறோம். பீகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து தர வேண்டும். சிறப்பு மாநில அந்தஸ்து கோரி போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

    சமீபத்தில் அங்கு சாதிவாரி கணக்கெடுப்பு வெளியிடப்பட்டது. இதன்மூலம் மாநிலத்தில் ஏழைகள் அதிகம் வசிப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக அரசு கூறியது. எனவே மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி மக்களை மேம்படுத்த வேண்டும் என மத்திய அரசை பீகார் அரசு மீண்டும் வலியுறுத்தி உள்ளது.

    இந்நிலையில், பீகார் அமைச்சரவையில் நேற்று சிறப்பு தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதை முதல் மந்திரி நிதிஷ்குமார் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில், சாதிவாரி கணக்கெடுப்புப்படி 94 லட்சம் ஏழை குடும்பங்கள் மாநிலத்தில் உள்ளன. அவர்களின் மேம்பாட்டுக்கு ரூ.2.50 லட்சம் கோடி அளவிலான திட்டங்கள் தேவை. இது மிகப்பெரிய நிதி என்றாலும், மத்திய அரசு உதவினால் இந்தப் பணிகளை செய்துமுடிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

    • ஜித்தன் ராம் மஞ்சியை முதல் மந்திரியாக ஆக்கியது என் தவறு.
    • எனது முட்டாள்தனத்தால் அவர் முதல் மந்திரி ஆனார் என நிதிஷ்குமார் தெரிவித்தார்.

    பீகார்:

    பீகார் மாநில சட்டசபையில் இட ஒதுக்கீடு தொடர்பான விவாதம் நடந்தது. அப்போது பேசிய முதல் மந்திரி நிதிஷ்குமார், ஜித்தன் ராம் மஞ்சியை முதல் மந்திரியாக ஆக்கியது என் தவறு. என்னுடைய முட்டாள்தனத்தால் அவர் முதல் மந்திரி ஆனார் என தெரிவித்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மஞ்சி, முதல்வர் மீது புகார் அளித்து அவரை பதவி நீக்கம் செய்யக் கோருவேன் என்று கூறினார்.

    இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜித்தன் ராம் மஞ்சி, முதல் மந்திரி நிதிஷ்குமார் மீது கவர்னர் மற்றும் மத்திய உள்துறை மந்திரியிடம் புகார் செய்வேன். அவரை பதவி நீக்கம் செய்து மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக் கோருவேன் என தெரிவித்தார்.

    இந்நிலையில், சட்டசபையில் முதல் மந்திரி நிதிஷ்குமார் பேசியது தொடர்பாக, முன்னாள் முதல் மந்திரியும், இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஜித்தன் ராம் மஞ்சி மவுன விரத போராட்டம் இருந்தார்.

    இதுதொடர்பாக ஜித்தன் ராம் மஞ்சி கூறுகையில், இன்று பாபா பீம் ராவ் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க என்னை அனுமதிக்கவில்லை. நிதிஷ்குமாருக்கு நல்ல புத்தி வரவேண்டும் என காந்திஜியிடம் பிரார்த்தனை செய்ய டெல்லி ராஜ்காட் செல்ல உள்ளேன். பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் சட்டசபையில் என்னை அவமானப்படுத்தினார். இது எனது அவமானம் மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து தலித் மக்களுக்குமான அவமானம் என தெரிவித்துள்ளார்.

    ×