search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜித்தன் ராம் மஞ்சி"

    • ஜித்தன் ராம் மஞ்சியை முதல் மந்திரியாக ஆக்கியது என் தவறு.
    • எனது முட்டாள்தனத்தால் அவர் முதல் மந்திரி ஆனார் என நிதிஷ்குமார் தெரிவித்தார்.

    பீகார்:

    பீகார் மாநில சட்டசபையில் இட ஒதுக்கீடு தொடர்பான விவாதம் நடந்தது. அப்போது பேசிய முதல் மந்திரி நிதிஷ்குமார், ஜித்தன் ராம் மஞ்சியை முதல் மந்திரியாக ஆக்கியது என் தவறு. என்னுடைய முட்டாள்தனத்தால் அவர் முதல் மந்திரி ஆனார் என தெரிவித்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மஞ்சி, முதல்வர் மீது புகார் அளித்து அவரை பதவி நீக்கம் செய்யக் கோருவேன் என்று கூறினார்.

    இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜித்தன் ராம் மஞ்சி, முதல் மந்திரி நிதிஷ்குமார் மீது கவர்னர் மற்றும் மத்திய உள்துறை மந்திரியிடம் புகார் செய்வேன். அவரை பதவி நீக்கம் செய்து மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக் கோருவேன் என தெரிவித்தார்.

    இந்நிலையில், சட்டசபையில் முதல் மந்திரி நிதிஷ்குமார் பேசியது தொடர்பாக, முன்னாள் முதல் மந்திரியும், இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஜித்தன் ராம் மஞ்சி மவுன விரத போராட்டம் இருந்தார்.

    இதுதொடர்பாக ஜித்தன் ராம் மஞ்சி கூறுகையில், இன்று பாபா பீம் ராவ் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க என்னை அனுமதிக்கவில்லை. நிதிஷ்குமாருக்கு நல்ல புத்தி வரவேண்டும் என காந்திஜியிடம் பிரார்த்தனை செய்ய டெல்லி ராஜ்காட் செல்ல உள்ளேன். பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் சட்டசபையில் என்னை அவமானப்படுத்தினார். இது எனது அவமானம் மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து தலித் மக்களுக்குமான அவமானம் என தெரிவித்துள்ளார்.

    ×