search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது"

    • மதுக்கடையால் பெண்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
    • கடையை அகற்ற வேண்டும்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமத்தில் ஊருக்கு அருகே டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருந்தும் மதுப்பிரியர்கள் இந்த பகுதி வழியாக செல்லும் பெண்கள், மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மதுவை ஒழிக்க தி.மு.க. அரசு தயங்குவது ஏன்? என டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி விடுத்துள்ளார்.
    • நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வந்து விடும்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் புதிய தமிழகம் கட்சியின் கிழக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற டாஸ்மாக்கில் ஒரு லட்சம் கோடி ஊழல் ஒழிப்பு யுத்தம் குறித்த பொதுக் கூட்டம் நடந்தது. இதில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசியதாவது:-

    தமிழகத்தில் ஆட்சிபுரிந்து வரும் தி.மு.க. கடந்த 2021 தேர்தல் வாக்குறுதியில் தமிழகத்தில் பூரண மது விலக்கு கொண்டு வரப்படும் என வாக்குறுதி களை கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டது. மேலும் மதுவால் தமிழகமே தள்ளாடுகிறது. ஒரு புறத்தில் டாஸ்மாக்கை அடைத்து விட்டு மறுபுறம் திறக்கப் பட்டு வருகிறது.

    தி.மு.க. ஆட்சியில் அமர்ந்து 2 ஆண்டுகளுக்கு பிறகும் மதுவை ஒழிக்க தயங்குவது ஏன்?. நாடாளு மன்ற தேர்தல் விரைவில் வந்து விடும்.

    அப்போது மீண்டும் தி.மு.க.வினர் வாக்குகள் கேட்டு உங்களி டம் வரும்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையான மதுவிலக்கு குறித்து பொது மக்கள் கேள்வி கேட்க வேண்டும்.

    மது ஒழிப்பு பிரச்சினை யில் கட்சி பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக் கும் சேர்த்தே புதிய தமிழகம் போராடுகிறது. தமிழகத்தில் டாஸ்மாக் கடையை வருகிற அக்டோபர் 2-ந் தேதிக்குள் மூட வேண்டும். இல்லை என்றால் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக யுவராஜ் என்பவரை கைது செய்தனர்.
    • புதிய பஸ் நிலையம் அருகே மது பாட்டில்கள் வைத்திருந்த ஜெயக்குமார் என்பவரை கைது செய்தனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில், முத்தூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது முத்தூர் அருகே உள்ள மேட்டுக்கடை என்ற இடத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக யுவராஜ் (வயது 40) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து மது பாட்டில்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதே போன்று வெள்ளகோவில் புதிய பஸ் நிலையம் அருகே மது பாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருந்த ஜெயக்குமார் (50) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த மதுபாட்டில்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அனுமதியின்றி மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை மருதங்காவெளி கால்நடை ஆஸ்பத்திரி அருகே சிலர் அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பநாதன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த பக்கிரிசாமி (வயது 45) என்பவர் அரசு மதுபானங்களை வாங்கி வந்து அனுமதியின்றி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் பக்கிரிசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • உடையாளூர் தபால் அலுவலகத்தில் தபால் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.
    • கடந்த 31-ந் தேதி வினோத், வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை மதுவில் கலந்து குடித்தார்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள கோவிந்தகுடி கம்மாள தெருவை சேர்ந்தவர் மணி.

    இவரது வினோத் (வயது 33).

    இவர், உடையாளூர் தபால் அலுவலகத்தில் தபால் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.

    அவர் பணிபுரிந்த காலத்தில் வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் வந்தன. இதையடுத்து தபால் அலுவலக மேலதிகாரிகள் அஞ்சலக கணக்கு மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

    அதில் முறைகேடு நடந்தது தெரியவந்தது.

    கடந்த 31-ந் தேதி வினோத், வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை மதுவில் கலந்து குடித்தார்.

    இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சாவூர் மருத்து வக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இந்த நிலையில் வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் மணி புகார் கொடுத்தார்.

    அதில், எனது மகன் வினோத், அஞ்சலக கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    ேமலும் அதிகாரிகள் மூன்று தவணைகளாக ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்தை வாங்கி சென்று விட்டனர்.

    மேலும் அவர்கள் எனது வீட்டில் இருந்த 2 மோட்டார் சைக்கிள்களையும் எடுத்து சென்றுவிட்டனர்.

    இது தவிர எனது மகன் உடையாளூரை சேர்ந்த 2 பேரிடம் ரூ.14 லட்சம் வட்டிக்கு வாங்கியுள்ளதாக அவர்களும் வட்டியுடன் பணத்தை தருமாறு கேட்டு மிரட்டுவதாக எனது குடும்பத்தினரிடம் வினோத் தெரிவித்துள்ளார்.

    தபால் அதிகாரிகள் எனது மகனை அழைத்து சென்று பணம் கேட்டு மிரட்டி அடித்து துன்புறுத்தி உள்ளனர்.

    இதனால் மனமுடைந்த அவர் மதுவில் விஷம் கலந்து குடித்து இறந்து வி்ட்டார்.

    எனவே எனது மகனின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சின்னமனூர் பகுதியில் அதிகாலையிலேயே மது, கஞ்சா விற்பனை அமோகமாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
    • மாணவர்களை குறிவைத்து கள்ளத்தனமாக மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை அமோகமாக உள்ளது.

    சின்னமனூர்:

    சின்னமனூர் பகுதியில் அதிகாலையிலேயே மது, கஞ்சா விற்பனை அமோகமாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதிைய சேர்ந்த பாஸ்கரன் கூறுகையில்,

    ெபாதுமக்களின் வசதிக்காக நகராட்சி சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் பூங்கா அமைக்கப்பட்டது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் நடைபயிற்சி செய்து வருகின்றனர். ஆனால் பூங்காவில் பல இடங்களில் சமூக விரோதிகள் நடமாட்டம் உள்ளது.

    அங்கு கள்ளத்தனமாக மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை அமோகமாக உள்ளது. இதனால் பெரியவர்கள் உள்பட நடைபயிற்சி செல்பவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குடிேபாதையில் சுயநினைவின்றி சாலையிலேயே படுத்து உறங்கும் குடிமகன்கள் பொதுமக்களிடம் தகராறிலும் ஈடுபடுகின்றனர். சின்னமனூர் பகுதியில் போன் செய்தால் வீடு தேடி வந்து மது, கஞ்சா சப்ளை செய்து வருகின்றனர்.

    பெரியவர்கள் மட்டுமல்லாது பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களை குறி வைத்து போதை பொருட்கள் விற்பனை செய்யும் கும்பல் இயங்கி வருகிறது. இதனால் சிறுவயதிலேயே வாழ்க்கையை தொலைத்து நிற்கின்றனர். எனவே போலீசார் மது, கஞ்சா விற்பனை செய்யும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி பூங்காவை சீர் செய்து பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றார்.

    • சங்கரன்கோவில் கலைவாணர் கலைக்குழு சார்பாக விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது.
    • விழிப்புணர்வு பிரசாரத்தின்போது கரகாட்டம், மரக்கால் ஆட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    சிவகிரி:

    மது அருந்துதல் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு அடிபணியோம் குடிப்பழக்கத்தை விட்டொழிப்போம் போன்ற கோட்பாடுகளை வலியுறுத்தி போதை பொருட்களை தவறான பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வு பிரசாரத்தை கடந்த 10 நாட்களுக்கு முன்பாக தென்காசியில் மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    விழிப்புணர்வு பிரசாரம்

    இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நாட்களாக நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இறுதி நாளான நேற்று சிவகிரி காந்திஜி கலையரங்கம் முன்பு தென்காசி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மற்றும் சங்கரன்கோவில் கலைவாணர் கலைக்குழு சார்பாக மது என்கிற அரக்கனை ஒழிப்போம் என்ற விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியை சிவகிரி பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபு தொடக்கி வைத்தார். சிவகிரி வருவாய் ஆய்வாளர் சுந்தரி, கிராம நிர்வாக அலுவலர் வீரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கிராம உதவியாளர் அழகுராஜா, அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கலைநிகழ்ச்சிகள்

    தொடர்ந்து மதுவிலக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கரகாட்டம், குச்சி, மரக்கால் ஆட்டம், தப்பாட்டம் போன்ற நிகழ்ச்சியும், போதை போன்றவற்றை அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்ற தத்துவத்தை விழிப்புணர்வு பாடல்கள் மூலமாகவும் விளக்கம் அளித்து கலைநிகழ்ச்சிகள் சிவகிரி அருகே ராயகிரி பஸ் நிறுத்தம் அருகில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியை ராயகிரி கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம் துவக்கி வைத்தார். சுகாதார பணி மேற்பார்வையாளர் முத்துச்செல்வம், கிராம உதவியாளர் மலைக்கனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பாண்டமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையால் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அதிக அளவு கள்ளத்தன மாக மது விற்பனையும், லாட்டரி விற்பனையும் நடக்கிறது.
    • பாண்டமங்கலத்தில் கஞ்சா, லாட்டரி, சந்து கடையில் மது விற்பனை நடக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் கண்டித்து வாட்ஸ் அப்பில் மெசேஜ் போட்டுள்ளேன்.

    பரமத்திவேலூர்;

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த பாண்டமங்கலம் பேரூராட்சி தலைவராக தி.மு.க.,வைச் சேர்ந்த சோமசேகர் உள்ளார்.

    போலீசில் புகார்

    இவர் பாண்டமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையால் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர். இப்பகுதியில் கள்ளத்தன மாக மது விற்பனையும், லாட்டரி விற்பனையும் நடக்கிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரமத்தி வேலூர் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து பாண்ட மங்கலம் பேரூராட்சி தலைவர் சோமசேகர் கூறியதாவது:-

    பாண்டமங்கலத்தில் கஞ்சா, லாட்டரி, சந்து கடையில் மது விற்பனை நடக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் கண்டித்து வாட்ஸ் அப்பில் மெசேஜ் போட்டுள்ளேன்.

    தொடர்ந்து இப்பகுதியில் கஞ்சா, லாட்டரி, சட்டவிரோத மது விற்பனையை அனுமதிக்க முடியாது. கஞ்சா விற்பனையால் இளைஞர்களை வாழ்வு சீரழிகின்றது. பொதுமக்கள் நலன் கருதி சட்ட விரோத செயல்களை தடுக்க பரமத்தி வேலூர் இன்ஸ்பெக்டர் இந்திராணியிடம் புகார் அளித்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் என கூறினார்.

    பாண்டமங்கலத்தில் நடக்கும் சட்டவிரோத செயல்களை போலீசார் கண்டு கொள்வதில்லை. மாவட்ட காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பலமுறை எச்சரித்தும் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக புகார் கூறப்படுகிறது.
    • சோதனையின் போது மது வாங்க வந்த குடிமகன்களிடம் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

     தாராபுரம்:

    தமிழக அரசு சார்பில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என பலமுறை எச்சரித்தும் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக புகார் கூறப்படுகிறது.

    இது குறித்து தாராபுரம் பகுதியில் இருந்து மதுபிரியர்கள் கோவை மண்டல மேலாளருக்கு புகார் மனுக்கள் அனுப்பினார்கள்.

    இந்த புகாரை தொடர்ந்து டாஸ்மாக் கோவை மண்டல மேலாளர் ெஜகதீசன் தாராபுரம் வந்தார்.பின்னர் அவர் தாராபுரம் ஐந்து முக்கு, என்.என்.பேட்டை வீதி, பஸ் நிறுத்தம், பொள்ளாச்சி ரோடு, உடுமலை ரோடு, அலங்கியம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது டாஸ்மாக் கடைகளில் இருப்பு பதிவேட்டின்படி மது பாட்டில்கள் இருப்பு உள்ளதா? பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கப்படுகிறதா? உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். சோதனையின் போது மது வாங்க வந்த குடிமகன்களிடம் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

    • சாலையோர ‘பார்’களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    • டாஸ்மாக் நிர்வாகம் நினைத்தால் ரோட்டில் மது அருந்துவது நிச்சயம் குறையும்.

    சென்னை மாநகரில் பார்களை ஏலம் விடுவது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகத்துக்கும் பார் உரிமையாளர்களுக்கும் இடையே நீடித்து வரும் பிரச்சினையால் பார்கள் மூடப்பட்டுள்ளன.

    சென்னையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் மாலை நேரங்களில் பார் களில் கூட்டம் அலை மோதும். குளிர்சாதன வசதிக்கொண்ட பார்கள் மற்றும் சாதாரண பார்கள் என இரண்டிலுமே மதுபிரி யர்கள் நிரம்பி இருப்பார்கள். பல மணி நேரங்களை பார் களிலேயே செலவழித்து... சில பாட்டில்களை உள்ளே தள்ளிவிட்டு 'ரிலாக்ஸ்' ஆக உற்சாகத்தோடு பொழுதை போக்கும் மது பிரியர்கள் பார்கள் மூடப்பட்டுள்ள தால் திண்டாடி வருகிறார் கள்.

    பார்கள் மூடப்பட்டிருந்த போதிலும் டாஸ்மாக் மதுக் கடைகள் எப்போதும் போல திறக்கப்பட்டு வா... வா... என்று அழைப்பதால் குடி மகன்கள் கையில் பாட்டிலை வாங்கி வைத்துக்கொண்டு எங்கே போய் குடிப்பது? என தவிக்கும் நிலையே காணப் படுகிறது.

    இதனால் சென்னையில் பல இடங்களில் சாலையில் நின்று மது குடிப்பது என்பது சர்வ சாதாரணமாகி விட்டது.

    முகப்பேர் சர்ச் ரோடு, சூளைமேடு நெல்சன்மாணிக் கம் ரோடு, பழைய வண்ணா ரப்பேட்டை மேயர் பசுதேவ் தெரு, அடையாறு கெனால் பேங்க் ரோடு மற்றும் எழும் பூர் பகுதியில் உள்ள டாஸ் மாக் மதுக்கடை என சென்னை மாநகரில் அனைத்து கடைகள் முன்பும் நின்று கொண்டு மதுபிரியர்கள் குடித்து கும்மாளமடித்து வருகிறார் கள். கடைகளில் நின்று டீ குடிப்பது போல தெருக் களை பார்களாகவே நினைத்து ஹாயாக அமர்ந்து குடிமகன்கள் மது அருந்தி வருகிறார்கள்.

    டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கிவிட்டு சாலையோரமாக அமர்ந்து கொண்டு ரோட்டில் செல் லும் பள்ளி மாணவ-மாண விகள் மற்றும் குழந்தைகள் என யாரைப் பற்றியும் கவலைப்படாமல் 'சைடிஸ்' சகிதமாக உற்சாக பானத்தை உள்ேள தள்ளிவிட்டு ரோட்டில் போகிறவர்களை பார்த்து "இன்னாப்பா... மொறைக்கிற" என்று கேள்வி கேட்பதால் நமக் கெதுக்கு வம்பு என பலர் ஒதுங்கி செல்வதையும் பார்க்க முடிகிறது.

    ரோட்டில் நின்று பொது மக்களுக்கு இடையூறாக மது அருந்துபவர்களை போலீ சார் எச்சரித்து விரட்டி விடுவது உண்டு. ஆனால் தற்போது அதுபோன்று எந்தவிதமான இடையூறும் செய்யப்படுவதில்லை.

    இதனால் குடிமகன்கள் எந்தவித பயமோ... கூச்சமோ இன்றி பொதுவெளி யில் குடிப்பது அதி கரித்துக் கொண்டே செல்கிறது.இப்படி மதுஅருந்தும் குடி மகன்கள் ஊறுகாய் பாக் கெட், மிக்சர் பாக்கெட், சில்லி சிக்கன் என 'சைடிஸ்' களை உள்ளே தள்ளி விட்டு வெற்று கவர்களை ரோட்டி லேயே வீசிவிட்டு சென்று விடுகிறார்கள்.

    அதேபோன்று காலி மது பாட்டில்களையும் ரோட்டி லேயே போட்டுவிட்டு சென்று விடுவதால் 'பார்' களில் குவிய வேண்டிய குப்பைகள் ரோட்டில் சேர்ந்து கொண்டிருக்கிறது.

    சென்னையில் கடந்த சில நாட்களாகவே டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டு இது போன்ற சாலையோர 'பார்'களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இதனால் குடியிருப்பு வாசிகளும், குடும்பத்தோடு வெளியில் செல்பவர்களும் முகம் சுழிப்பதுடன் இந்த பிரச்சினைக்கு டாஸ்மாக் நிர்வாகத்தினர் தீர்வு காண உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத் தலைவரான அன்ப ரசனிடம் இந்த பிரச்சி னைக்கு தீர்வு தான் என்ன என்று கேட்டபோது, டாஸ் மாக் நிர்வாகம் நினைத்தால் ரோட்டில் மது அருந்துவது நிச்சயம் குறையும் என்றார்.

    இதற்கு முன்பு 2014 மற்றும் 2021-ம் ஆண்டுகளி லும் இதுபோன்ற பிரச் சினை இருந்தது. அப்போது பார்களுக்கு தற்காலிக உரிமம் வழங்கப்பட்டு குடி மகன்கள் பார்களில் போய் குடித்தார்கள். இப்போதும் அதுபோன்று செய்யலாம் என்றார்.

    குடிமகன்களின் திண் டாட்டத்துக்கு டாஸ்மாக் நிர்வாகம் முற்றுப்புள்ளி வைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

    • கரூர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு மது விற்றால் நடவடிக்கை எடுக்கபடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்
    • கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 94 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    கரூர்,

    கரூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மதுபானங்கள் கூடுதல் விலை விற்பனை தொடர்பாக துணை ஆட்சியர் தலைமையில் கிடங்கு மேலாளர், தாசில்தார், உதவி மேலாளர் உட்பட அதிகாரிகள் அடங்கிய 5 குழுக்கள் அமைக்கப்பட்டு கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 94 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மது விற்பனையாகும் கடைகளுக்கு பணியிடமாற்றம் செய்ய கோவை முதுநிலை மண்டல மேலாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் கூடுதல் விலை விற்பனை செய்த 15 கடைப்பணியாளர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 800-ம், இந்த மாதத்தில் கூடுதல் விலை விற்பனை செய்த 17 கடைப்பணியாளர்களிடம் இருந்து ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 800-ம் அபராதமாக பெறப்பட்டு அரசுக்கணக்கில் சேர்க்கப்பட்டது. இவ்வாறு அதில்


    • பாண்டிகோவில் ரிங் ரோட்டில் பொது இடத்தில் மது குடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • பொதுமக்களுக்கு இடையூறு செய்து வந்தனர்.

    மதுரை

    மதுரை பாண்டி கோவில் ரிங்ரோட்டில் சனி, ஞாயிற்று கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். வேண்டுதல் வைத்துள்ளவர்கள் உறவினர்களை அழைத்து வந்து கோவிலில் கிடாய் வெட்டி பூஜை செய்வது வழக்கம். இதனால் எப்போதும் கூட்டம் நிரம்பி இருக்கும்.

    இந்தநிலையில் சிலர் பொது இடங்களில் மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்துவந்தனர். இதனையறிந்த போலீசார் அந்தப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பொது இடத்தில் மது அருந்தி கொண்டிருந்த உத்தங்குடி அய்யணன் நகர் ஸ்ரீராமன்(வயது27), வாடிப்பட்டி கச்சைகட்டி பசும்பொன் நகர் ரமேஷ்(35), சுரேந்தர்(36) ஆகிய 3பேைர போலீசார் கைது செய்தனர். 

    ×