search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுவை ஒழிக்க தி.மு.க. அரசு தயங்குவது ஏன்? டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி
    X

    டாக்டர் கிருஷ்ணசாமி பேசியபோது எடுத்த படம்.

    மதுவை ஒழிக்க தி.மு.க. அரசு தயங்குவது ஏன்? டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி

    • மதுவை ஒழிக்க தி.மு.க. அரசு தயங்குவது ஏன்? என டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி விடுத்துள்ளார்.
    • நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வந்து விடும்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் புதிய தமிழகம் கட்சியின் கிழக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற டாஸ்மாக்கில் ஒரு லட்சம் கோடி ஊழல் ஒழிப்பு யுத்தம் குறித்த பொதுக் கூட்டம் நடந்தது. இதில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசியதாவது:-

    தமிழகத்தில் ஆட்சிபுரிந்து வரும் தி.மு.க. கடந்த 2021 தேர்தல் வாக்குறுதியில் தமிழகத்தில் பூரண மது விலக்கு கொண்டு வரப்படும் என வாக்குறுதி களை கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டது. மேலும் மதுவால் தமிழகமே தள்ளாடுகிறது. ஒரு புறத்தில் டாஸ்மாக்கை அடைத்து விட்டு மறுபுறம் திறக்கப் பட்டு வருகிறது.

    தி.மு.க. ஆட்சியில் அமர்ந்து 2 ஆண்டுகளுக்கு பிறகும் மதுவை ஒழிக்க தயங்குவது ஏன்?. நாடாளு மன்ற தேர்தல் விரைவில் வந்து விடும்.

    அப்போது மீண்டும் தி.மு.க.வினர் வாக்குகள் கேட்டு உங்களி டம் வரும்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையான மதுவிலக்கு குறித்து பொது மக்கள் கேள்வி கேட்க வேண்டும்.

    மது ஒழிப்பு பிரச்சினை யில் கட்சி பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக் கும் சேர்த்தே புதிய தமிழகம் போராடுகிறது. தமிழகத்தில் டாஸ்மாக் கடையை வருகிற அக்டோபர் 2-ந் தேதிக்குள் மூட வேண்டும். இல்லை என்றால் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×