search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்தராமையா"

    • கர்நாடக மாநில சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
    • முதல் மந்திரி சித்தராமையா நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தின் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. முதல் மந்திரி சித்தராமையா 2024-25ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்.

    அப்போது, தேவையான அனுமதிகளை விரைவில் பெற்று மேகதாதுவில் அணை கட்டப்படும். அங்கு அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. இதற்காக ஒரு தனி மண்டல குழுவும், இரண்டு துணை மண்டல குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. அனுமதி கொடுத்தால் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும்.

    பெங்களூரு குடிநீர் பிரச்சனையை தீர்ப்போம். மேகதாது அணை கட்டும் போது நீருக்குள் செல்லும் நிலப்பரப்பு மற்றும் வெட்டப்பட வேண்டிய மரங்களை அடையாளப்படுத்தும் பணி நிறைவு அடைந்துள்ளது என தெரிவித்தார்.

    இந்த பட்ஜெட் உரையை சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக வாசித்தார்.

    • சித்தரமையா நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் உறுப்பினர்களுடன் போராட்டம் நடத்தினார்.
    • இன்று பினராயி விஜயன், கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் போராட்டம்.

    வரிப் பகிர்வு விவகாரத்தில் தென்மாநிலங்களுக்கு மத்திய அரசு அநீதி இழைப்பதாக கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு ஆகியவை குற்றஞ்சாட்டி வருகின்றன.

    கர்நாடக மாநிலத்திற்கு உரிய நிதியுதவி வழங்கவும், வரிப் பகிர்வில் பாரபட்சம் காட்டுவதை கண்டித்தும் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, அம்மாநில காங்கிரஸ் அமைச்சர்கள், காங்கிரஸ் உறுப்பினர்களுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று போராட்டம் நடத்தினார்.

    இந்த நிலையில் இன்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துகிறார். அவருடன் கேரள மாநில கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    பினராயி விஜயன் முன்னெடுக்கும் நடவடிக்கைகளைக்கு திமுக ஆதரவு அளிக்கும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்று தெரிவித்திருந்தார்.

    இதனால் திமுக எம்.பி.க்கள், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே போராட்டம் நடத்துகிறார்கள்.

    நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறுகையில் "நாங்கள் எங்களுடைய உரிமையை கேட்டுக் கொண்டிருக்கிறோம். நாங்கள் எங்களுடைய பங்கீட்டை கேட்டுக் கொண்டிருக்கிறோம். மத்திய அரசிடம் இருந்து வறட்சிக்கான நிவாரண தொகையை கர்நாடக அரசு கேட்டது. ஆனால் ஒரு பைசா கூட மத்திய அரசு கொடுக்கவில்லை" என்றார்.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய பிறகு மத்திய அரசு- தென்மாநிலங்களுக்கு இடையில் வரிப் பகிர்வு தொடர்பான பிரச்சினை வெடித்துள்ளது.

    • மத்திய அரசின் பட்ஜெட்டில் சமமான நிதிப்பகிர்வு இல்லை.
    • கர்நாடகாவில் முன்னேற்றத்திற்காக அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து அனைவரும் பங்கேற்க வேண்டும்.

    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த 1-ந் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். இதற்கு கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., டி.கே.சுரேஷ், பட்ஜெட்டில் தென் இந்தியா புறக்கணிக்கப்பட்டு இருப்பதாகவும், தென் மாநிலங்கள் தனி நாடு தேட வேண்டியிருக்கும் என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

    அவரது இந்த கருத்துக்கு பா.ஜனதா சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் டி.கே. சுரேசுக்கு எதிராக பா.ஜனதாவினர் போராட்டமும் நடத்தினர். மேலும் மாண்டியா மாவட்டத்தில் டி.கே. சுரேஷ் மீது போலீசிலும் புகார் செய்தனர்.

    இதை தொடர்ந்து டி.கே.சுரேஷ் எம்.பி. பேசும்போது, கர்நாடக மக்களுக்காக சிறை செல்லவும் தயார் என்று அறிவித்தார். டி.கே. சுரேஷ் கருத்துக்கு அவரது மூத்த சகோதரரும், கர்நாடக துணை முதல்-மந்திரியுமான டி.கே. சிவக்குமார், தென்னந்திய மக்களின் வலியையும், வேதனையையும் தான் டி.கே.சுரேஷ் உள்ளிட்ட தலைவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

    இந்த நாடு ஒரே தேசம்தான். ஆனால் நீங்கள் இந்தி பெல்ட் மாநிலங்களைத் தாண்டி பார்ப்பதே இல்லை. மத்திய அரசின் பட்ஜெட்டில் சமமான நிதிப்பகிர்வு இல்லை. மத்திய அரசுக்கு கர்நாடகா பெருமளவு வரி வருவாய் வசூலித்து வருகிறது. ஆனால் தென்னிந்திய மாநிலங்களுக்கு என முக்கியமான அறிவிப்புகள் எதுவுமே இந்த பட்ஜெட்டில் இடம் பெறவே இல்லை. தென்னிந்திய மக்கள் புறக்கணிக்கப்படுவதாகவே கருதுகின்றனர். நாங்கள் இந்தியர்கள். இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும். பிராந்திய அடிப்படையிலான தனிநாடு கோரிக்கை பேச்சுகளுக்கே இடமில்லை என தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கர்நாடகாவுக்கு மத்திய அரசு அநீதி இழைக்கிறது. கர்நாடகாவுக்கான உரிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என குற்றம் சாட்டினார்.

    மேலும் மத்திய அரசை கண்டித்து இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் கர்நாடகா மாநிலம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்தார். மேலும் இந்த போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தெரிவிக்கும்படி கடிதம் எழுதினார். அதில் சமச்சீரற்ற வரி விநியோகம் மற்றும் திட்ட அனுமதியில் தாமதம் ஆகியவை கர்நாடக மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வரி பகிர்வில் கடுமையான அநீதி, வறட்சி நிவாரணம் வழங்காதது, அலட்சியம் மற்றும் மாநிலத்தின் பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி மற்றும் மானியங்களை வழங்குவதில் தாமதம் போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்து இருந்தார்.

    தொடர்ந்து முதல் மந்திரி சித்தராமையா நிருபர்களிடம் கூறும்போது, இந்த போராட்டம் கட்சி சார்பற்றது. அநீதி மற்றும் வரி ஒதுக்கீட்டில் உள்ள பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டமாக இது வடிவமைக்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் முன்னேற்றத்திற்காக அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து அனைவரும் பங்கேற்க வேண்டும். இது எந்த கட்சிக்கும் எதிரான போராட்டம் அல்ல. அநீதிக்கு எதிரான போராட்டம் என்று தெரிவித்தார்.

    இவரது இந்த கருத்துக்கு முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது இது ஒரு தேர்தல் ஸ்டண்ட். போராட்டத்திற்கு பதிலாக மத்திய நிதி அமைச்சருடன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்க்கலாம். இந்த போராட்டம் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தால் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் அரசின் பணத்தில் அதை செய்கிறார்கள். விமான கட்டணம், தங்கும் விடுதி, உணவு மற்றும் இதர செலவுகள் வரி செலுத்துவோரின் பணத்தால் ஏற்கப்படுகிறது என்று கூறினார்.

    இந்த நிலையில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏக்கள் அனைவரும் நேற்று தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டனர். அவர்கள் அனைவரும் இரவு டெல்லி போய் சேர்ந்தனர்.

    இதை தொடர்ந்து டெல்லி ஜந்தர் மந்திர் பகுதியில் சித்தராமையா தலைமையில் கர்நாடக காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து இன்று போராட்டம் நடத்தினர். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:

    வரி வசூலில் கர்நாடகா 2-வது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. இந்த வருடம் கர்நாடகா 4.30 லட்சம் கோடியை விட அதிக வரிவசூல் பங்களிப்பை கொடுத்துள்ளது. நாங்கள் 100 ரூபாய் வரிவசூல் செய்து, அதை மத்திய அரசிடம் கொடுத்தால், அதன்பின் மத்திய அரசு எங்களுக்கு 12 ரூபாய் முதல் 13 ரூபாய் வரைதான் தருகிறது. இதுதான் எங்களுடைய பங்கீட்டு தொகை." என்று பேசினார்.

    இந்த போராட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், 28 எம்.எல்.சி.க்கள், ஒரு எம்.பி., 5 மேல்சபை எம்.பி.க்கள் உள்பட மொத்தம் 135 பேர் கலந்து கொண்டனர்.

    கர்நாடகா சார்பில் டெல்லியில் நடந்த இந்த போராட்டத்தை பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் புறக்கணித்தன.

    • மத்திய அரசுக்கு எதிராக கர்நாடக மாநில காங்கிரஸ் டெல்லியில் போராட்டம்.
    • சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

    மத்திய அரசு வரிப் பகிர்வில் பாரபட்சம் பார்க்கிறது. தென்மாநிலங்களில் அதிக அளவில் வரி வசூல் ஆகும் நிலையில், குறைந்த அளவே ஒதுக்கப்படுகிறது. தென்மாநில வரிகள் வடமாநிலங்களுக்கு செல்கிறது. இதனை எதிர்த்து டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் போராட்டம் நடத்தப்படும் என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.

    கர்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்களுடன் இணைந்து சித்தராமையான டெல்லி சென்றுள்ளார். அவர் ஜந்தர் மந்தர் போராட்டத்தில் கலந்து கொள்கிறார்.

    இந்த நிலையில் கர்நாடக மாநில அரசு போராட்டம் நடத்தும் நிலையில், மத்திய நிதியமைச்சர் கிரிராஜ் சிங், "கர்நாடகாவின் காங்கிரஸ் அரசு பொய்யர்களின் அரசு. ராகுல் காந்தில் பாரத் ஜோடி யாத்திரை (நடைபயணம்) மெற்கொண்டு வரும் நிலையில், காங்கிரஸ் நாட்டை உடைப்பதற்கான யாத்திரையை செய்து கொண்டிருக்கிறது" என்றார்.

    • வரிப் பகிர்வு பங்கு குறைந்துள்ளது. இது கர்நாடக மாநிலத்திற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.
    • கர்நாடகா கடந்த 4 வருடங்களில் 45 ஆயிரம் கோடி ரூபாயை இழந்துள்ளது.

    கர்நாடக மாநிலத்திற்கான வரிப் பகிர்வை மத்திய அரசு குறைத்துவிட்டது. அது கர்நாடகாவிற்கு இழைக்கப்பட்ட அநீதி என அம்மாநில முதல்வர் சித்தராமையா குற்றஞ்சாட்டியுள்ளார்.

    கர்நாடக மாநில மக்கள் செலுத்தும் வரிப்பணம், மாநிலத்தினுடைய இக்கட்டான நிலையின்போது பயன்படவில்லை. அந்த பணம் எல்லாம் வடக்கு மாநிலத்திற்கு செல்கின்றன.

    15-வது நிதிக் கமிஷனுக்குப் பிறகு வரிப் பகிர்வு பங்கு குறைந்துள்ளது. இது கர்நாடக மாநிலத்திற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. இதன்மூலம் கடந்த 4 வருடங்களில் 45 ஆயிரம் கோடி ரூபாயை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அநீதியை தாங்க முடியாது. நம்முடைய மாநிலத்தின் நலத்தை பாதுகாக்க, நியாயமான முறையில் நடத்த நாம் ஒன்றாக இணைந்து வலியுறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ள அவர் "SouthTaxMovement" ஹேஷ்டேக்கை பதிவிட்டுள்ளார்.

    கர்நாடக மாநில காங்கிரஸ் சட்டமன்ற பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்ற பிரதிநிதிகள் பிப்ரவரி 7-ந்தேதி (நாளைமறுநாள்) டெல்லியில் போராட்டம் நடத்துகிறார்கள். மத்திய அரசு கர்நாடக மாநிலத்திற்கு அநீதி இழைக்கப்படுவதற்கு எதிராக இந்த போராட்ம் நடத்தப்படுகிறது. இதில் சித்தராமையா கலந்து கொள்ள இருக்கிறார்.

    தெற்கு மாநிலங்களின் வரிப்பணம் வடக்கு மாநிலங்களுக்கு சென்றடைகிறது. இதனால் ஒருபோதும் நமக்கு முன்மாதிரியாக இருக்க முடியாது. இந்த தவறான எண்ணத்தை அனைவரும் கைவிட வேண்டும். கடின உழைப்பால் வலுவான தேசத்தை உருவாக்கி வரும் கர்நாடகா இந்தியாவுக்கே முன்மாதிரியாக உள்ளது.

    • கர்நாடகாவில் உள்ள கோவில்கள் சிறப்பு பூஜை நடத்தப்படும்.
    • புதிய ராமர் கோவிலை திறந்து வைக்க இருக்கிறேன்.

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற இருக்கிறது. கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு இந்தியாவில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கும்பாபிஷேக விழாவை நேரலையாக ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆனால் சில மாநிலங்களில் நேரடி ஒளிபரப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா இதுகுறித்து கூறியதாவது:-

    நாளை முஜ்ராய் துறை சார்பாக கோவில்களில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் பெங்களூருவில் உள்ள மகாதேவபுராவில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலை திறந்து வைக்க இருக்கிறேன். நான் விடுமுறை அறிவிக்கப்போவதில்லை. கர்நாடகாவில் எந்தவொரு நேரலையையும் நிறுத்தப்போவதில்லை.

    இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    • தீண்டாமை, சாதிவெறி, மூடநம்பிக்கை ஆகியவற்றை எதிர்க்கிறோம்.
    • அனைத்து மதத்தினரையும் மதிக்க வேண்டும் என்ற அரசியல் சாசனக் கொள்கையில் நான் உறுதியாக உள்ளேன்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வரும் 22ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் உள்ள முக்கிய தலைவர்கள், பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில், காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் மல்லிகார்ஜூனா கார்கே ஆகியோர் அழைப்பை நிராகரித்ததாக அறிவித்தனர்.

    இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, "ராமர் கோவில் திறப்பு விழா, பிரதமர் மோடியின் கட்சி நிகழ்வாக மாறியுள்ளது" என தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    ராமர் கோவில் திறப்பு விழாவில் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ஆதிர் சௌத்ரி ஆகியோர் பங்கேற்காததை ஆதரிக்கிறேன்.

    சாதி, மதம், கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நடத்தப்பட வேண்டிய ஒரு நிகழ்வு, பிரதமர் மோடியின் கட்சி நிகழ்வாக மாறியுள்ளது. இது ராமர் மற்றும் 140 கோடி மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவமரியாதை.

    பக்தியுடன் நடத்த வேண்டிய மதச் சடங்கை அரசியல் பிரசாரமாக மாற்றி, இந்துக்களுக்கு துரோகம் இழைத்துள்ளனர். நாங்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் தீண்டாமை, சாதிவெறி, மூடநம்பிக்கை ஆகியவற்றை எதிர்க்கிறோம்.

    பாஜக மற்றும் சங்பரிவார் தங்களின் அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தும் தவறான இந்துத்துவத்தை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம். அனைத்து மதத்தினரையும் மதிக்க வேண்டும் என்ற அரசியல் சாசனக் கொள்கையில் நான் உறுதியாக உள்ளேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • குடியரசு தினவிழாவில் கர்நாடக மாநில அலங்கார ஊர்திகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
    • விரோத மனப்பான்மையுடன் மத்திய அரசு நடந்து கொள்கிறது என முதல் மந்திரி குற்றம் சாட்டினார்.

    பெங்களூரு:

    தலைநகர் டெல்லியில் குடியரசு தினவிழா வரும் 26-ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல்வேறு மாநிலங்களின் சிறப்புகளை பிரதிபலிக்கும் வகையிலான அலங்கார ஊர்திகள் இடம்பெற்று காண்போரைக் கவர்ந்திழுக்கும்.

    இதற்காக மத்திய அரசு முன்கூட்டியே மாநிலங்கள் அனுப்பும் மாடல்களை பரிசீலனை செய்து விழாவில் இடம்பெறும் ஊர்திகளை தேர்வு செய்யும்.

    இந்த ஆண்டு கர்நாடக மாநில ஊர்திகளைச் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையை அம்மாநில அரசு அனுப்பியிருந்தது.

    இந்நிலையில், இந்த ஆண்டு குடியரசு தினவிழா அணிவகுப்பில் மாநில ஊர்திகளை சேர்க்க வேண்டும் என கர்நாடகா அனுப்பிய அனைத்துப் பரிந்துரைகளையும் மத்திய அரசு நிராகரித்துள்ளது. கடந்த ஆண்டும் இதேபோல் மத்திய அரசு கர்நாடகாவை அவமானப்படுத்தியது என கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.

    • தர்கா, மசூதிகளில் மதரீதியிலான வழிபாடு செய்வதில் அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
    • இந்துக்கள் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு?

    கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையா இருந்து வருகிறார். இவர் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள தாவேரியில் உள்ள ஒரு கோவில் விழாவில் பங்கேற்க சென்றுள்ளார்.

    அப்போது கோவில் உள்ளே வருமாறு அங்கிருந்தவர்கள் அழைப்பு விடுத்தனர். ஆனால், சித்தராமையா உள்ளே செல்ல மறுத்துவிட்டார். வெளியில் இருந்து ஆரத்தி மற்றும் பூ மாலையை ஏற்றுக் கொண்டு வழிபட்டார்.

    இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், சித்தராமையா இந்து விரோதி என பா.ஜனதாவினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    "தர்கா மற்றும் மசூதிக்கு செல்லும் முதல்வர் சித்தராமையா அங்கு கொடுக்கும் அனைத்தையும் பெறுகிறார். ஆனால் மாநிலத்தின் நலனுக்கான தெய்வத்திற்கு மரியாதை செலுத்த அவருக்கு நேரம் இல்லை. உங்களுக்கு இந்து கடவுள் மற்றும் இந்து மக்கள் மீது இவ்வளவு வெறுப்பு ஏன்?" என பா.ஜனதா விமர்சனம் செய்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வருகிற 22-ந்தேதி அயோத்தில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.
    • அயோத்தி ராமர் கோவிலை வைத்து பா.ஜனதா அரசியல் ஆதாயம் தேடுகிறது என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு.

    அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், சாதனைப் படைத்தவர்கள், துறவிகள், முக்கிய பிரபலங்கள் என அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.

    ஆனால், பெரும்பாலான எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களுக்கு அழைப்பு வரவில்லை என்கிறார்கள். சிலர் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள மாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர்.

    கர்நாடக மாநில முதல்வரான சித்தராமையாவும் முறைப்படியாக அழைப்பிதழ் கிடைக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார். மேலும், அவர் பங்கேற்பாரா? என்றும் தெரியவில்லை.

    இந்த நிலையில்தான் கர்நாடக மந்திரி ஆஞ்சநேயா, சித்தராமையா எங்களுடைய ராமர் எனக் கூறியுள்ளார். இந்த கருத்து தற்போது சர்ச்சையாகியுள்ளது.

    இது தொடர்பாக கர்நாடக மாநில மந்திரி ஆஞ்சநேயா கூறுகையில் "அவர் (சித்தராமையா) எங்களுடைய ராமர். ஏன் அவர் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்த கொள்ள அயோத்தி செல்ல வேண்டும். அவரது சொந்த கிராமத்தில் உள்ள ராமர் கோவிலில் வழிபாடு செய்வார்.

    அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு அவர் ஏன் செல்ல வேண்டும். பா.ஜனதாவின் ராமர்தான் அங்கே நிறுவப்படுகிறது. அவர்கள் பா.ஜனதாவினருக்கு மட்டும் அழைப்பிதழ் அனுப்பியுள்ளனர். அதேபோல் பஜனை பாடுபவர்களுக்கும் அனுப்பியுள்ளனர். ஆகவே, அவர்கள் அதை செய்யட்டும். எங்களுடைய ராமர் எல்லா இடத்திலும் இருக்கிறார். அவர் எங்களுடைய இதயத்தில் இருக்கிறார்."

    இவ்வாறு கர்நாடக மாநில மந்திரி ஆஞ்சநேயா தெரிவித்துள்ளார்.

    மேலும், மதம் மற்றும் சமூக அடிப்படையில் பா.ஜனதா மக்களை பிரிக்கிறது. நாடு எதிர்கொண்டு வரும் சமூக பிரச்சினைகளுக்கு பா.ஜனதா முக்கியத்துவம் கொடுப்பதில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுபோன்ற அறிவு இல்லாதவர்கள், இந்து எதிர்ப்பு தலைவர்களை நாம் மந்திரிகளாக பெற்றுள்ளது நம்முடைய துரதிருஷ்டம் என பா.ஜனதா எம்.எல்.ஏ. பசனகவுடா பாட்டீல் யாத்னால் பதில் கொடுத்துள்ளார்.

    • நாம் ராமருக்கு கோவில் கட்டவில்லையா? பஜனைப் பாடல்களை நாம் பாடவில்லையா?
    • என்னைப் பொறுத்தவரை இந்துத்துவம் என்றால் இந்துத்துவம்தான் என்றார் சித்தராமையா.

    பெங்களூரு:

    கர்நாடகாவின் பெங்களூருவில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முதல் மந்திரி சித்தராமையா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகளை இழக்காமல், இந்துக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு மென்மையான இந்துத்துவம் என்ற அரசியல் தந்திரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என கூறப்படுகிறது.

    மென்மையான இந்துத்துவம் என்றால் என்ன? கடுமையான இந்துத்துவம் என்றால் என்ன? என்னைப் பொறுத்தவரை இந்துத்துவம் என்றால் இந்துத்துவம்தான்.

    நான் ஒரு இந்து. இந்துத்துவம் என்பது வேறு, இந்து என்பது வேறு. நாம் ராமரை வணங்குவதில்லையா? பா.ஜ.க.வினர் மட்டும்தான் ராமருக்கு கோவில் கட்டுகிறார்களா? நாம் ராமருக்கு கோவில் கட்டவில்லையா? பஜனைப் பாடல்களை நாம் பாடவில்லையா?

    டிசம்பர் கடைசி வாரத்தில் மக்கள் பஜனைப் பாடல்கள் பாடுவார்கள். எங்கள் கிராமத்தில் நான் அந்தப் பாரம்பரிய நிகழ்வுகளில் பங்கெடுத்துள்ளேன். மற்ற கிராமங்களிலும் இது நடைமுறையில் உள்ளது. பா.ஜ.க.வினர் மட்டும்தான் இந்துக்களா, நாம் இந்துக்கள் இல்லையா என தெரிவித்துள்ளார்.

    • பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    • ஹிஜாப் தடை உத்தரவு நீக்குவதில் பல சட்டசிக்கல்கள் உள்ளன.

    பெங்களூர்:

    கர்நாடகத்தில் கடந்த பா.ஜனதா ஆட்சியில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் உள்பட மத அடையாள ஆடைகள் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை நீக்குவோம் என்று முதல்-மந்திரி சித்தராமையா நேற்று முன்தினம் மைசூருவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கூறினார்.

    இதற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஹிஜாப் விவகாரம் குறித்து முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஹிஜாப் தடை உத்தரவை திரும்ப பெறுவது குறித்து அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை. என்னிடம் ஹிஜாப் விவகாரம் குறித்து ஒருவர் கேள்வி எழுப்பினார். அப்போது நான், ஹிஜாப் தடையை நீக்குவோம் என்றேன். ஹிஜாப் தடை உத்தரவு நீக்குவதில் பல சட்டசிக்கல்கள் உள்ளன. உடனடியாக தடை உத்தரவை நீக்க முடியாது. அமைச்சரவையில் கலந்தாலோசிக்க வேண்டும். விரைவில் இதுபற்றி அரசு மட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தனிமனித உடை, உணவு விஷயத்தில் கட்டுப்பாடு விதிக்க கூடாது என்றும், ஹிஜாப் தடையை நீக்குவோம் என்றும் நேற்று முன்தினம் சித்தராமையா பேசிய நிலையில் அரசு மட்டத்தில் ஆலோசித்தே முடிவு எடுக்கப்படும் என திடீர் பல்டி அடித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×