search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Surveillance camera"

    • குற்ற செயலை தடுக்க நடவடிக்கை
    • போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துடன் கேமராக்கள் இணைப்பு

    திருப்பத்தூர்:

    கந்திலி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடமான கரியம்பட்டி அரசு கலைக் கல்லூரி, கெஜல்நா யக்கன்பட்டி அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளி, ஆம்பள்ளி ரோடு, தோக்கியம் கூட்ரோடு, கந்திலி சந்தை போன்ற முக்கிய இடங்களில் குற்றங்களை தடுக்கவும் விபத்துக்களை குறைக்கவும் பொதுமக்கள் உதவியுடன் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 10 கண்காணிப்பு கேமரா க்கள் பொருத்தப்பட்டுள்ளன. நேற்று கேமராக்கள் தொடங்கி வைக்கப்பட்டது.

    இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    திருப்பத்தூர் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கும் விபத்துக்களை குறைக்கவும் 3-வது கண் கண்காணிப்பு கேமரா பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அமைக்கப்பட்டு வருகிறது. கந்திலி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட 10 இடங்களில் தற்போது கேமராக்கள் அமைக்க ப்பட்டுள்ளன.

    இந்த கேமராக்கள் நேரடியாக கந்திலி போலீஸ் நிலையம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம் இதன் மூலம் மாவட்ட முழுவதும் குற்ற செயல் மற்றும் விபத்தில்லா மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

    • பொதுமக்கள் பெரும்பாலான நேரங்களில் அலட்சியப்படுத்தி விடுகின்றனர்.
    • கேமராக்களின் பதிவைக் கொண்டு குற்றவாளிகளை கண்டறிவதற்கு மிகவும் உதவியாக இருந்தது.

    பல்லடம் :

    பல்லடம் வட்டாரத்தில் உள்ள வீடுகளில், திருட்டு உள்பட குற்றச்சம்பவங்களைத் தடுக்க போலீசார் தீவிரம் காட்டுகின்றனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:- முக்கிய சாலைகள், பொது இடங்கள், வணிக நிறுவனங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இதன் மூலம் குற்றச்செயல்கள் தடுக்கப்படுகின்றன.

    மேலும் குற்றவாளிகள் எளிதில் போலீசாரிடம் சிக்குவதற்கு இவைகள் உதவிகரமாக இருக்கின்றன. வீடுகளில் ஆட்கள் இல்லாத சமயத்தை பயன்படுத்தி குற்றவாளிகள் கைவரிசை காட்டுகின்றனர். போலீஸ் நிலையங்களுக்கு தகவல் கொடுத்து வெளியூர் செல்லுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டாலும் இதை, பொதுமக்கள் பெரும்பாலான நேரங்களில் அலட்சியப்படுத்திவிடுகின்றனர்.

    வீடுகளின் வெளிப்புறம் மற்றும் உட்புறங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவதன் மூலம் வீடுகளில் திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களை எளிதாகத் தடுக்க முடியும்.

    திருப்பூரில் நடந்த சில கொலை மற்றும் கொள்ளை வழக்குகளை வீடுகளின் வெளிப்புறங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் பதிவைக் கொண்டு குற்றவாளிகளை கண்டறிவதற்கு மிகவும் உதவியாக இருந்தது.

    எனவே வீடுகளில் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்துவதோடு நில்லாமல் அவை முறையாக இயங்குகிறதா என்பதையும் அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

    • அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 3 கிராம் பொட்டு தாலி உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர் திருடிச்சென்றார்.
    • 2 கோவில்களிலும் ஒரே நபர் புகுந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள கீழகுளம் கிராமத்தில் முத்தாரம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மர்ம நபர் புகுந்து அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 3 கிராம் பொட்டு தாலி மற்றும் 2 வெள்ளி கிரீடம் உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்றார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கொள்ளை சம்பவம் நடந்த அதே நாளில் அருகில் உள்ள கிராமமான கீழகொம்பகுளத்தில் உள்ள மற்றொரு அம்மன் கோவிலில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

    கோவிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிரா காட்சி களை கோவில் நிர்வாகிகள் ஆய்வு செய்தபோது மர்மநபர், கடப்பாரையுடன் கோவிலில் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபடுவதும், கதவை உடைக்க முடியாததால் அந்த நபர் திரும்பி செல்வதும் காமிராவில் பதிவாகியுள்ளது.

    இந்த வீடியோ காட்சிகள், சாத்தான்குளம் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஒரே நாளில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் 2 கோவில்களிலும் ஒரே நபர் புகுந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எனவே காமிராவில் பதிவான காட்சி அடிப்படையில் கீழகுளம் கிராமத்தில் கோவிலில் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

    • பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் விநாயகர் கோவில் தெருவில் வீடு கட்டி வாடகைக்கு விட்டுள்ளோம்.
    • சேதப்படுத்திய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

      பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் வாய்க்கால் மேடு தோட்டத்தைச் சேர்ந்த முத்துசாமி மனைவி காந்திமதி பல்லடம் போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:- பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் விநாயகர் கோவில் தெருவில் வீடு கட்டி வாடகைக்கு விட்டுள்ளோம். இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி இரவு அங்கு வந்த மர்ம நபர்கள் 6 பேர் வீட்டின் முன்பு பொறுத்தி இருந்த 3 கண்காணிப்பு கேமராக்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். கேமராக்களை உடைக்கும் முன்பு அதில் 6 பேர் உள்ளதாக தெரிகிறது. எனவே கண்காணிப்பு கேமராக்களை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் சுமார் 26 ஆயிரம் மதிப்புள்ள 3 கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • உடுமலை வழியாக 4 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • தினமும் நூற்றுக்கணக்கான ரெயில் பயணிகள் பல்வேறு நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.

    உடுமலை:

    கோவை திண்டுக்கல் வழித்தடத்தில் உடுமலை ரெயில்வே நிலையம் உள்ளது. உடுமலை வழியாக 4 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் நூற்றுக்கணக்கான ரெயில் பயணிகள் பல்வேறு நகரங்களுக்கு சென்று வருகின்றனர். இங்கு வரும் பணிகளின் பாதுகாப்பை கருதியும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலும் கண்காணிப்பு கேமரா வைக்க ெரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தட்டார்மடத்தில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பில் பஜாரில் ரவுண்டா அருகில் 4 கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கப்பட்டது
    • கண்காணிப்பு காமிராவில் காட்சிகள் பதிவாகாமல் காட்சி பொருளாக உள்ளது.

    சாத்தான்குளம்:

    தட்டார்மடத்தில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பில் பஜாரில் ரவுண்டா அருகில் நான்கு திசையிலும் காட்சிகளை பதிவு செய்யும் வகையில் 4 கண்காணிப்பு காமிராக் கள் அமைக்கப்பட்டன.

    இந்த கண்காணிப்பு காமிரா காட்சிகள் போலீசார் கண்காணிப்பில் பஜாரில் உள்ள தனி–யார் கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது. தட்டார்மடம் பஜாரில் அசம்பாவிதம் ஏதும் நடந்தால் கண்காணிப்பு காமிராவில் கோப்புகளை வைத்து கண்டுபிடிக்க ஏதுவாக இருந்து வந்தது. இந்த கண்காணிப்பு காமிரா பதிவு செய்யும் கணினி முன்புள்ள கட்டிடத்தில் இருந்து மற்றொரு கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது.

    இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் கண்காணிப்பு காமிரா கட்டுபாட்டு அறைக்கு செல்லும் வயர் அப்பகுதியில் சென்ற லாரியால் அறுந்து போனது. இதனால் கண்காணிப்பு காமிராவில் காட்சிகள் பதிவாகாமல் காட்சி பொருளாக உள்ளது. அதனால் சேதமாகி காணப்படும் கண்காணிப்பு காமிராவை சீரமைத்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கண்காணிப்பு கேமராக்கள் இயக்கத்தை பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தொடங்கி வைத்தார்.
    • போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் பல்லடம் பஸ் நிலையத்தில் அதிக அளவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவுசெய்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் பகுதியில், நடைபெறும் விபத்துக்கள் மற்றும் குற்றச் சம்பவங்களை கண்காணிக்க பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அந்த கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்த நிலையில் உள்ளது குறித்தும், பஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்களை அதிகளவில் நிறுவவேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 18ந்தேதி" மாலைமலர் "நாளிதழில் விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் பல்லடம் பஸ் நிலையத்தில் அதிக அளவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவுசெய்தனர். அதன்படி பல்லடம் பஸ் நிலையம் மற்றும் அம்மா உணவகம் பகுதியில் ரூ.1லட்சத்து15 ஆயிரம் மதிப்பில் 13 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் நடமாட்டத்தை 24 மணி நேரமும் போலீசார்,நகராட்சி நிர்வாகம் மூலம் கண்காணிக்கப்படவுள்ளது.

    இதற்கிடையே கண்காணிப்பு கேமராக்கள் இயக்கத்தை பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தொடங்கி வைத்தார். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி, நகர தி.மு.க. செயலாளர் ராஜேந்திரகுமார், திமுக. நிர்வாகிகள் ஜெகதீஷ்,நடராஜ் மற்றும் போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • செல்போன் வாங்குவது போல் நடித்து, ஒரு செல்போனை திருடிய 2 பெண்களை, கண்காணிப்பு கேமரா உதவியுடன் ஊழியர்கள் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.
    • பெண்களையும் பிடித்து விசாரித்தபோது, 2 பெண்களும் செல்போனை திருடவில்லையென கூறினர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் திருநள்ளாறு சாலையில் உள்ள செல்போன் கடையில், செல்போன் வாங்குவது போல் நடித்து, ஒரு செல்போனை திருடிய 2 பெண்களை, கண்காணிப்பு கேமரா உதவியுடன் ஊழியர்கள் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். காரைக்கால் திருநள்ளாறு சாலையில் உள்ள, தனியார் செல்போன் கடையில், 2 பெண்கள், செல்போன்கள் வாங்குவதாகக் கூறி பல செல்போன்களை எடுத்து காட்டச்சொல்லி பார்த்துள்ளனர். அப்போது கடையின் ஊழியர் கவனிக்காத நேரத்தில், ரூ.8 ஆயிரம் மதிப்பிலான செல்போனை ஒரு பெண் எடுத்து மற்றொரு பெண்ணிடம் கொடுப்பதையும், அந்த செல்போனை அந்தப்பெண் தனது புடவையில் மறைத்து வைப்பதையும், கடையின் மேலாளர் முகமது பக்ருதீன் கண்காணிப்பு கேமராவில் பார்த்துள்ளார்.

    தொடர்ந்து, கடை மேலாளர், ஊழியர்கள் உதவியுடன், 2 பெண்களையும் பிடித்து விசாரித்தபோது, 2 பெண்களும் செல்போனை திருடவில்லையென கூறினர். பின்னர், செல்போனை திருடுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது என எடுத்து கூறியதும், 2 பெண்களும் செல்போன் திருடியதை ஒப்புகொண்டனர். தொடர்ந்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளையும், 2 பெண்களையும், காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பேரில், போலீசார் விசாரணை செய்ததில், அந்த 2 பெண்களும், நாகப்பட்டினம் ெரயிலடி தெருவைச் சேர்ந்த பழனியம்மாள் (வயது60) மற்றும் அவரது மகள் மணிமேகலை (36) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து கடை மேலாளர் கொடுத்தப் புகாரின் பேரில், போலீசார் 2 பெண்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • பரமக்குடியில் வருகிற 11-ந்தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
    • பரமக்குடி நகா் முழுதும் 70 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்க துரை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    பரமக்குடியில் வருகிற 11-ந்தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், அஞ்சலி செலுத்துவோரின் நலனுக்காக பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன.

    அதன்படி விதிகளை மீறுவோா் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் அரசு சாா்பில் பரமக்குடி நகா் முழுதும் 70 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. காவல் துறை சாா்பில் பரமக்குடி நகா் மற்றும் சுற்றுப்புறங்களில் 75 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு மேற்கொ ள்ளப்படும்.

    பரமக்குடி நகா் முழு வதும் ஆளில்லா விமானம் (டிரோன்) மூலம் கண்காணிப்பதற்கு ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. பரமக்குடியில் உள்ள இமானுவேல்சேகரன் நினைவிடம் அருகே புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் சுழற்சி முறையில் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனா். 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • வீட்டிற்கு திரும்பிய போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • 40சவரன் நகை,கால் கிலோ வெள்ளி பொருட்கள் பத்தாயிரம் பணம் ஆகியவை திருட்டுப் போனது தெரியவந்தது.

    திண்டிவனம் சாய் லட்சுமி நகரை சேர்ந்தவர் சசிவிக்குமார். இவர் கருவம்பாக்கம் அரசுப் பள்ளியில்ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லதா. விழுக்கத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று சசிவிக்குமார்தனது மனைவி மற்றும் மகள், மகன் ஆகியோர் காலை பள்ளிக்கு சென்று விட்டனர்.நேற்று மாலை 5 மணி அளவில் வீட்டிற்கு திரும்பிய போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கே படுக்கை அறையில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தது, மேலும், அங்கிருந்த இரண்டு பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 40சவரன் நகை,கால் கிலோ வெள்ளி பொருட்கள் பத்தாயிரம் பணம் ஆகியவை திருட்டுப் போனது தெரியவந்தது. இது குறித்து ஆசிரியர் சசிவிகுமார்.ரோசனை போலீசில் புகார் செய்தார். தகவல் அறிந்த திண்டிவனம் ஏ.எஸ்.பி. அபிஷேக் குப்தா தலைமையிலான போலீசார்அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து தடயவியல் நிபுண ஏடிஎஸ்பி சோமசுந்தரம்,சப் இன்ஸ்பெக்டர்கள் தக்ஷிணாமூர்த்தி,கல்பனா காவலர் சரவணன் கொண்ட குழு வரவழைத்து கொள்ளை நடந்த இடத்தில் கிடைத்த தடயங்களைச் சேகரித்தனர்.

    கொள்ளை நடந்த வீட்டில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு இருந்தது. அதனை கொள்ளையர்கள் துண்டித்து உள்ளனர். விழுப்புரத்தில் இருந்து மோப்பநாய் ராக்கி வர வைக்கப்பட்டுஅங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் திருவள்ளுவர் நகர் வரை சென்று நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இது தவிர அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்கள் மூலம் போலீசார் கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்கி வருகிறார்கள்

    • கம்பெனிகளுக்கு வேலை ஆட்களை கூட்டிச்செல்லும் வாகனங்கள் ஏராளமாக வந்து செல்கின்றன.
    • முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் நகரில் திருச்சி -கோவை பிரதான சாலைகள் முக்கிய வழித்தடமாக உள்ளது. வெள்ளகோவில் வழியாக ஏராளமான கனரக மற்றும் சுற்றுலா வாகனங்கள், வெளியூர்களிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், திருப்பூர்,கரூர் போன்ற பகுதியில் உள்ள பனியன் கம்பெனிகளுக்கு வேலை ஆட்களை கூட்டிச்செல்லும் வாகனங்கள் ஏராளமாக வந்து செல்கின்றன. இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் உள்ளன. பிரசித்தி பெற்ற வீரக்குமாரசாமி கோவில், நாட்ராயசாமி கோவில், சோளீஸ்வரர்கோவில் ஆகியவை உள்ளன.

    இப்பகுதியில் உள்ள நூற்பாலைகளில் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் வந்து தங்கி வேலை செய்து வருகின்றனர். இதனால் வெள்ளகோவில் பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்கள், வாகன விபத்துக்கள், போக்குவரத்து இடையூறுகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் நோக்கத்தில் வெள்ளகோவில் நகர் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் திருட்டு போனது சம்பந்தமாக 100 நாட்களுக்கும் மேல் வழக்குப்பதிவு செய்யப்படாமல் இருந்தது. தற்போது 15 நாட்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
    • கோவை மாநகரம் முழுவதும், கண்காணிப்பு காமிராக்களை பொருத்த பொதுமக்கள் முன்வர வேண்டும்.

    கோவை:

    கோவை மாவட்டம் சிங்காநல்லூர் போலீஸ்நிலைய எல்லைக்கு உட்பட்ட, நந்தா நகர் பகுதியில், ஒருங்கிணைந்த கண்காணிப்பு காமிரா மையம் தொடக்கவிழா நடந்தது.

    இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை மாநகர் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், 32 கண்காணிப்பு காமிராக்களை தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.முழுக்க முழுக்க இந்த பகுதி முழுவதும் உள்ள 300க்கும் மேற்பட்ட தெருக்களின் நுழைவு வாயில், சாலை என அனைத்து பகுதிகளிலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்களை பார்வையிட்டு மக்களை பாராட்டினார்.அப்போது அவர் பேசியதாவது:-

    இங்கு தொடங்கப் பட்ட கண்காணிப்பு காமிராக்களின் பணியை நான் வரவேற்கிறேன், மேலும், கோவை மாநகரம் முழுவதும், கண்காணிப்பு காமிராக்களை பொருத்த பொதுமக்கள் முன்வர வேண்டும். உங்களது வீடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், உங்களது வீதி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் அந்த பகுதி முழுவதும், மூன்றாவது கண் எனப்படும், இது போன்ற கண்காணிப்பு காமிராக்கள் இருக்க வேண்டும்.

    ரத்தினபுரியை சேர்ந்த 6 திருநங்கைகள் ஊர்காவல் படையில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களை பணியில் சேர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரகிறது. வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த சி.சி.டி.வி. காமிராக்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்.மக்கள் தங்கள் சொந்த செலவில் காமிராக்களை பொருத்தி உள்ளனர். அது மகிழ்ச்சியை தருகிறது. கோவையில் 50 மீட்டர் தூரத்திற்கு ஒரு காமிரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    காந்திபுரத்தில் அடிக்கடி தகராறு ஏற்படுவதை தடுக்க அதிகளவிலான ரோந்து செல்ல போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மோட்டார் சைக்கிள் திருட்டு போனது சம்பந்தமாக 100 நாட்களுக்கும் மேல் வழக்குப்பதிவு செய்யப்படாமல் இருந்தது. தற்போது 15 நாட்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 90 நாளில் திருட்டு போன மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை என்றால் தடையில்லா சான்று தரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் கோவை சரகம் சிங்காநல்லூர் காவல் உதவி ஆணையாளர் எம்.ஜி. அருண்குமார், கோவை மாநகரம் தெற்கு, காவல் துணை ஆணையாளர் சிலம்பரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×