search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்காணிப்பு காமிராக்கள்"

    • கோவை மாநகரில் சுமார் 5,400 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
    • கண்காணிப்பு காமிராக்களில் பதிவுகளை கொண்டு குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    கோவை,

    கோவையில் வர்த்தக நிறுவனங்கள், கடைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், முக்கிய சாலை சந்திப்புகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் பாதுகாப்புக்காக கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    இந்த கண்காணிப்பு காமிராக்களில் பதிவுகளை கொண்டு குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    கோவையில் மாநகர பகுதிகளில் கண்காணிப்பு காமிராக்கள் அதிக அளவில் அளவில் பொருத்தப்பட்டு உள்ளது. பெரும்பாலான பகுதிகளில் உள்ள கேமராக்கள் பழுதடைந்துள்ளதால், முக்கிய மான நிகழ்வுகளி ன்போது அவற்றிலிருந்து ஆதாரங்க ளைச் சேகரிக்க முடியாத நிலை உள்ளது.

    இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:- கோவை மாநகரில் சுமார் 5,400 கண்காணிப்பு காமிராக்க பொருத் தப்பட்டுள்ளன. இந்த கண்காணிப்பு காமிராக்களின் தேவை தற்போது அதிகரித்துள்ள து. இந்த சூழலில் அனைத்து முக்கிய பகுதிகளிலும் காமிராக்களை பொருத்துவது கட்டாயமாக்கப்படும்.

    முக்கிய சாலை சந்திப்புகள், வழி பாட்டுத்தலங்கள் அமைந்துள்ள சாலைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்து கடைகளின் எதிரிலும்கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட வேண்டும்.இதை கட்டாயமாக செயல்ப டுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    இதற்கான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ள தால் வருகிற 2 மாதங் களுக்குள் கோவை மாநகரின் அனைத்து பகுதிகளிலும் கூடுதலான அளவில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • புலி நடமாட்டமும் உள்ளதால் அச்சம் மேலும் அதிகரித்து உள்ளது.
    • 2 இடங்கிளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் கூடலூர் ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட சேமுண்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடம் உள்ளது.

    இந்த இடம் புதர்கள் மண்டி வனப்பகுதி போல் காணப்படுவதால் இங்கு புலி மற்றும் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

    சில நாட்களுக்கு முன்பு நாய்களை சிறுத்தை வேட்டையாடி உள்ளதால் இப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    தற்போது புலிநடமா ட்டமும் உள்ளதால் அச்சம் மேலும் அதிகரித்து உள்ளது.

    எனவே வனத்துறை கண்காணிப்பில் ஈடுபட்டு அப்பகுதியில் உள்ள புதர்களை அகற்ற நடவ–டிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீமதுரை ஊராட்சி தலைவர் சுனில் கோரிக்கை விடுத்துள்ளார்.அதன்பேரில் ஸ்ரீமதுரை செமுண்டி பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக பொது மக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் அபகுதியில் ஆய்வு செய்து 2 இடங்கிளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

    • மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் சி.சி.டி.வி காமிரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • நியூ தில்லை நகர் பகுதியில் 4 வீதிகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    வடவள்ளி

    கோவை வடவள்ளி பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் சி.சி.டி.வி காமிரா பொருத்த வடவள்ளி போலீசார் சார்பில் கூட்டம் நடத்தப்பட்டு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதன் ஒரு பகுதியாக தமிழக வியாபாரிகள் சம்மேளனம் சார்பில் வடவள்ளி நியூ தில்லை நகர் பகுதியில் 4 வீதிகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் கண்காணிப்பு மையம தமிழக வியாபாரிகள் சம்மேளனம் மீட்டிங் ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து அனைத்து காமிராக்களையும் கண்காணிக்கப்பட உள்ளது.

    தமிழக வியாபாரிகள் சம்மேளனம் கோவை மாவட்ட தலைமை தலைவர் எஸ்.எம்.முருகன் தலைமையில், பேரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தலின் படி வடவள்ளி இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை, கண்காணிப்பு காமிராவை திறந்து வைத்தார்.முதற்கட்டமாக 35 காமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இதில் தமிழக வியாபாரிகள் சம்மேளனம் கோவை மாவட்ட வடவள்ளி கிளை தலைவர் சுந்தரபாண்டியன், பொருளாளர் சேகர் மற்றும் தலைமை பொருளாளர் வெனிஸ், தமிழக வியாபாரிகள் சம்மேளனம் வடவள்ளி கிளை துணைத்தலைவர்கள் செல்வசிங், அர்ஜுனன், ராஜேந்திரன், சாமிநாதன் மற்றும் துணைச் செயலாளர்கள் பாலகிருஷ்ணன், கந்தசாமி, கோவை ஜுடுததேயுஸ், விஜயகுமார், ஆலோசகர்கள் சேர்மதுரை, லியாகத் அலி மற்றும் வடவள்ளி கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • மோட்டார் சைக்கிள் திருட்டு போனது சம்பந்தமாக 100 நாட்களுக்கும் மேல் வழக்குப்பதிவு செய்யப்படாமல் இருந்தது. தற்போது 15 நாட்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
    • கோவை மாநகரம் முழுவதும், கண்காணிப்பு காமிராக்களை பொருத்த பொதுமக்கள் முன்வர வேண்டும்.

    கோவை:

    கோவை மாவட்டம் சிங்காநல்லூர் போலீஸ்நிலைய எல்லைக்கு உட்பட்ட, நந்தா நகர் பகுதியில், ஒருங்கிணைந்த கண்காணிப்பு காமிரா மையம் தொடக்கவிழா நடந்தது.

    இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை மாநகர் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், 32 கண்காணிப்பு காமிராக்களை தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.முழுக்க முழுக்க இந்த பகுதி முழுவதும் உள்ள 300க்கும் மேற்பட்ட தெருக்களின் நுழைவு வாயில், சாலை என அனைத்து பகுதிகளிலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்களை பார்வையிட்டு மக்களை பாராட்டினார்.அப்போது அவர் பேசியதாவது:-

    இங்கு தொடங்கப் பட்ட கண்காணிப்பு காமிராக்களின் பணியை நான் வரவேற்கிறேன், மேலும், கோவை மாநகரம் முழுவதும், கண்காணிப்பு காமிராக்களை பொருத்த பொதுமக்கள் முன்வர வேண்டும். உங்களது வீடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், உங்களது வீதி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் அந்த பகுதி முழுவதும், மூன்றாவது கண் எனப்படும், இது போன்ற கண்காணிப்பு காமிராக்கள் இருக்க வேண்டும்.

    ரத்தினபுரியை சேர்ந்த 6 திருநங்கைகள் ஊர்காவல் படையில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களை பணியில் சேர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரகிறது. வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த சி.சி.டி.வி. காமிராக்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்.மக்கள் தங்கள் சொந்த செலவில் காமிராக்களை பொருத்தி உள்ளனர். அது மகிழ்ச்சியை தருகிறது. கோவையில் 50 மீட்டர் தூரத்திற்கு ஒரு காமிரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    காந்திபுரத்தில் அடிக்கடி தகராறு ஏற்படுவதை தடுக்க அதிகளவிலான ரோந்து செல்ல போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மோட்டார் சைக்கிள் திருட்டு போனது சம்பந்தமாக 100 நாட்களுக்கும் மேல் வழக்குப்பதிவு செய்யப்படாமல் இருந்தது. தற்போது 15 நாட்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 90 நாளில் திருட்டு போன மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை என்றால் தடையில்லா சான்று தரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் கோவை சரகம் சிங்காநல்லூர் காவல் உதவி ஆணையாளர் எம்.ஜி. அருண்குமார், கோவை மாநகரம் தெற்கு, காவல் துணை ஆணையாளர் சிலம்பரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×