search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் பொதுமக்கள் கண்காணிப்பு காமிராக்களை பொருத்த முன்வர வேண்டும்-போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேச்சு
    X

    கோவையில் பொதுமக்கள் கண்காணிப்பு காமிராக்களை பொருத்த முன்வர வேண்டும்-போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேச்சு

    • மோட்டார் சைக்கிள் திருட்டு போனது சம்பந்தமாக 100 நாட்களுக்கும் மேல் வழக்குப்பதிவு செய்யப்படாமல் இருந்தது. தற்போது 15 நாட்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
    • கோவை மாநகரம் முழுவதும், கண்காணிப்பு காமிராக்களை பொருத்த பொதுமக்கள் முன்வர வேண்டும்.

    கோவை:

    கோவை மாவட்டம் சிங்காநல்லூர் போலீஸ்நிலைய எல்லைக்கு உட்பட்ட, நந்தா நகர் பகுதியில், ஒருங்கிணைந்த கண்காணிப்பு காமிரா மையம் தொடக்கவிழா நடந்தது.

    இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை மாநகர் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், 32 கண்காணிப்பு காமிராக்களை தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.முழுக்க முழுக்க இந்த பகுதி முழுவதும் உள்ள 300க்கும் மேற்பட்ட தெருக்களின் நுழைவு வாயில், சாலை என அனைத்து பகுதிகளிலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்களை பார்வையிட்டு மக்களை பாராட்டினார்.அப்போது அவர் பேசியதாவது:-

    இங்கு தொடங்கப் பட்ட கண்காணிப்பு காமிராக்களின் பணியை நான் வரவேற்கிறேன், மேலும், கோவை மாநகரம் முழுவதும், கண்காணிப்பு காமிராக்களை பொருத்த பொதுமக்கள் முன்வர வேண்டும். உங்களது வீடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், உங்களது வீதி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் அந்த பகுதி முழுவதும், மூன்றாவது கண் எனப்படும், இது போன்ற கண்காணிப்பு காமிராக்கள் இருக்க வேண்டும்.

    ரத்தினபுரியை சேர்ந்த 6 திருநங்கைகள் ஊர்காவல் படையில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களை பணியில் சேர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரகிறது. வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த சி.சி.டி.வி. காமிராக்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்.மக்கள் தங்கள் சொந்த செலவில் காமிராக்களை பொருத்தி உள்ளனர். அது மகிழ்ச்சியை தருகிறது. கோவையில் 50 மீட்டர் தூரத்திற்கு ஒரு காமிரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    காந்திபுரத்தில் அடிக்கடி தகராறு ஏற்படுவதை தடுக்க அதிகளவிலான ரோந்து செல்ல போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மோட்டார் சைக்கிள் திருட்டு போனது சம்பந்தமாக 100 நாட்களுக்கும் மேல் வழக்குப்பதிவு செய்யப்படாமல் இருந்தது. தற்போது 15 நாட்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 90 நாளில் திருட்டு போன மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை என்றால் தடையில்லா சான்று தரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் கோவை சரகம் சிங்காநல்லூர் காவல் உதவி ஆணையாளர் எம்.ஜி. அருண்குமார், கோவை மாநகரம் தெற்கு, காவல் துணை ஆணையாளர் சிலம்பரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×