search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடவள்ளி"

    • 200 -க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் வசித்து வருகின்றனர்.
    • செல்போன் டவர் அமைக்க வேலை நடைப்பெறுவதாக கூறினர்.

    வடவள்ளி,

    கோவை வடவள்ளியை அடுத்த லட்சுமி நகர் பகுதியில் சுமார் 200 -க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இன்று காலை தனியாருக்கு செந்தமான இடத்தில் பொக்லைன் கொண்டு ஆழமாக குழி தோண்டும் பணி நடைப்பெற்றது. அருகில் குடியிருப்பவர்கள் இது குறித்து கேட்ட பொழுது செல்போன் டவர் அமைக்க வேலை நடைப்பெறுவதாக கூறினர்.

    இந்த தகவல் லட்சுமி நகர் குடியிருப்பு சங்கத்தினர் வாட்ஸ்அப் குழுவில் பரவியது. சம்பவ இடத்திற்கு சிறிது நேரத்தில் அனைத்து குடியிருப்பு வாசிகளும் வந்தனர். அந்த இடத்தில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் அந்த பகுதி கிணறு இருந்த பகுதி எனவும், செல்போன் டவர் அமைத்தால் இங்கு வசிக்கும் கர்ப்பிணி பெண்கள், மற்றும் பறவைகள் கதிர் வீச்சால் பாதிக்கப்படும் என்று கூறி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

    மேலும் சம்பவ இடத்திற்கு வடவள்ளி போலீஸ் நிலைய போலீசார் வந்து விசாரணை நடத்தி சென்றனர். தொடர்ந்து உடனடியாக பணியை நிறுத்த வேண்டும். நாளை வடவள்ளி காவல் நிலையம் , மாவட்டம் கலெக்டரிடம் புகார் மனு இப்பகுதி குடியிருப்பு சங்கம் சார்பாக கொடுக்க உள்ளதாக தெரிவித்து உள்ளார். நடவடிக்கை எடுக்காத நிலையில் மறியலில் ஈடுபட்ட உள்ளதாக தெரிவித்தனர்.

    • வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே வாகனங்களை இயக்கி ெசல்கின்றனர்.
    • கடந்த சில மாதங்களாக இந்த பகுதியில் பேனர் கலாசாரம் பெருகி வருகிறது.

    வடவள்ளி

    கோவை மருதமலை சாலையில் வடவள்ளி ரவுண்டானா பகுதி உள்ளது. இந்த பகுதி மருதமலை, தொண்டாமுத்தூர், இடையர்பா–ளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய முக்கிய சந்திப்பாக உள்ளது.

    போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்த காரணத்தால் இங்கு ரவுண்டானா அமைக்கப்பட்டது. மேலும் வாகனங்கள் நின்று செல்லும் வகையில், சிக்னல்களும் பொருத்தப்பட்டன.கடந்த சில மாதங்களாக இந்த பகுதியில் பேனர் கலாசாரம் பெருகி வருகிறது.

    அந்த பேனர்களையும் சிக்னல்களை மறைத்தபடி வைக்கின்றனர். இதனால் எப்போது எந்த சிக்னல் விழுகிறது என்பதே தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடையும் நிலை உள்ளது.மேலும் அந்த பேனர்கள் ரவுண்டாவில் இருக்கும் மின்னொளி கம்பத்தில் சாய்ந்தபடி இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் அந்த பேனர்கள் வாகன ஓட்டிகள் மீது விழும் அபாயமும் காணப்படுகிறது.எனவே இவ்வாறான பேனர்களை அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை எடுத்துள்ளனர். 

    • கோழி கழிவுகளை கொண்டு வந்து கொட்டிய நபரை அப்பகுதி மக்கள் சிறைபிடித்தனர்.
    • பேரூராட்சி செயலாளர் ரமேஷ் குமார் கடையை பூட்டி சீல் வைத்தார்.

    வடவள்ளி:

    கோவை தொண்டாமுத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட புத்தூர் பாலம் அருகே நேற்று இரவு கோழி கழிவுகளை கொண்டு வந்து கொட்டிய நபரை அப்பகுதி மக்கள் சிறைபிடித்தனர். அதைத்தொடர்ந்து தொண்டாமுத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

    விசாரணையில் சதிஷ் என்பவர் பேரூராட்சி அனுமதி இன்றி கோழி கடை நடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து பேரூராட்சி செயலாளர் ரமேஷ் குமார் கடையை பூட்டி சீல் வைத்தார்.

    • 50-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ் சார்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடந்தது.
    • பட்டிமன்றத்தில் பங்கு பெற்றவர்களுக்கு நினைவு பரிசுகளை முன்னாள் அமைச்சர் வழங்கினார்.

    வடவள்ளி,

    கோவை வடவள்ளி மருதமலை அடிவாரம் வள்ளியம்மன் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. 50-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ் சார்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடந்தது. இதனை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

    கழகம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க காரணம் கழகம் வென்று வந்த சோதனைகளே...கழகம் நிகழ்த்திக்காட்டிய சாதனைகளே... என்னும் தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைப்பெற்றது.

    பட்டிமன்ற நிகழ்ச்சியை கழக தலைமை நிலையச் செயலாளரும், எதிர்க்கட்சி கொறடாவும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்து பேசினார்.

    கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ.,மாநகர் மாவட்ட கழக செயலாளர், அம்மன் கே.அர்ச்சுனன் எம்.எல்.ஏ., ஆகியோர் வரவேற்று பேசினார்கள்.

    அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ., ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தசாமி எம்.எல்.ஏ., வால்பாறை தொகுதி அமுல் கந்தசாமி எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ் ஆசிரியரும், செய்தி தொடர் பாளருமான பேராசிரியர் கல்யாணசுந்தரம், செய்தி தொடர்பாளர் வக்கீல் ஏ.எஸ்.மகேஸ்வரி, கோவை புறநகர் தெற்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் லட்சுமிகாந்தன் ஆகியோர் கழகம் வென்று வந்த சோதனைகளே என்னும் தலைப்பிலும், கழக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி. பரமசிவம், சென்னை மண்டல தகவல் தொழில்நுட்ப செயலாளர் கோவை சத்யன், ெபாதுக்குழு உறுப்பினர் சிங்கை அம்புஜம் ஆகியோர் கழகம் நிகழ்த்திகாட்டிய சாதனைகளே...என்னும் தலைப்பிலும் பேசினர்.

    பட்டிமன்றத்திற்கு நடுவராக முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. இலக்கிய அணி செயலாளரும், செய்தி தொடர்பாளருமான வைகைச்செல்வன் பொறுப்பேற்று நடத்தினார். முன்னதாக பட்டிமன்றத்தில் பங்கு பெற்றவர்களுக்கு நினைவு பரிசுகளை முன்னாள் அமைச்சர் வழங்கினார்.

    முடிவில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளரும், நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான ஆர்.சந்திரசேகர் நன்றிகூறினார்.

    நிகழ்ச்சியில் கோவை மாநகர், வடக்கு, புறநகர் தெற்கு மாவட்டங்கள் மற்றும் ஒன்றிய கழகச் செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள் , சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • உற்சாக வரவேற்பு அளிக்க மாவட்ட செயலாளர்கள் ஏற்பாடு.
    • அனைவரும் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும்.

    வடவள்ளி,

    கோவை மாவட்ட தி.மு.க செயலா ளர்கள் மாநகர் மாவட்டம் கார்த்திக், தெற்கு மாவட்டம் தளபதி முருகேசன், வடக்கு மாவட்டம் தொண்டா முத்தூர் ரவி ஆகியோர் கூட்டாக வெளியி ட்டுள்ள அறிக்கை யில் கூறியிரு ப்பதாவது:-

    தி.மு.க துணை பொதுச்செ யலாளர் கனிமொழி எம்.பி. நாளை காலை கோவை வருகை தர உள்ளார். அவருக்கு பீளமேடு விமான நிலையத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. எனவே ஒருங்கிணைந்த தி.மு.க நிர்வாகிகள், தலைமை கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மேயர், துணை மேயர், பொதுக்குழு உறுப்பினர்கள், நகரகழகம், பகுதி கழகம், ஒன்றிய கழகம், பேரூர் கழகம், ஒன்றிய கழகம் செயலாளர்கள், மண்டல் தலைவர்கள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மன்ற தலைவர்கள், நிலைகுழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், வட்டக் பொறுப்பாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள், செயல் வீரர்கள், தொண்டர்கள் அனைவரும் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புனிதா சிலரிடம் கடன் வாங்கியதாகவும், அதனை திருப்பி செலுத்த முடியவில்லை எனவும் தெரிகிறது.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை

    கோவை வடவள்ளியை அடுத்த தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் மனோகரன் (வயது 49). இவர் வீரகேரளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராகவும், அ.தி.மு.க.வில் செயலாளராகவும் உள்ளார்.மேலும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி புனிதா (37). சேலை வியாபாரம் செய்து வந்தார். அவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் புனிதா சிலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது.

    அந்த கடனை அவரால் சரியான நேரத்தில் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் அவர் கடந்த சி ல நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கை யில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இற ந்தார்.

    பின்னர் இதுகுறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் ெதரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரேக்ளா பந்தயத்தில் வாலிபர்கள் பங்கேற்று மாட்டு வண்டிகளில் சீறிப்பாய்ந்தனர்.
    • வாலிபர்கள் பங்கேற்று 20 மாட்டு வண்டிகளில் சீறிப்பாய்ந்த னர்.

    வடவள்ளி

    கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ளது தேவராயபுரம். இந்த பகுதியில் அதிகாலை ரேக்ளா பந்தய போட்டி நடைபெற்றது.

    இதில் நரசீபுரம், பேரூர், தீத்திபாளையம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வாலிபர்கள் பங்கேற்று 20 மாட்டு வண்டிகளில் சீறிப்பாய்ந்த னர்.

    ரேக்ளா பந்தயம் தேவராயபுரத்தில் தொடங்கி நரசீபுரம் வரை சென்றது. இதனால் அந்த பகுதியில் அதிகாலை நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாலையில் சத்தம் கேட்டு மக்கள் எழுந்து பார்த்தனர்.

    அதிகாலை நேரத்தில் ரேக்ளா பந்தயத்தில் ஈடுபட்டதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி யடைந்தனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறிய தாவது:-

    கடந்த சில மாதங்களாக இந்த பகுதியில் இரவு நேரங்களில் ரேக்ளா பந்தயம் போட்டி நடத்தி வருகின்றனர். இதனால் இரவில் வெளியில் வருவதற்கே அச்சமாக உள்ளது. மேலும் இரவில் யாருக்காவது உடல் நிலை சரியில்லை என்றால் அவசரமாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் ஆம்புலன்சுக்கும் வழிவிடுவதில்லை. இதனால் மிகவும் சிரமமாக உள்ளது.

    அதிகாலை நேரத்தில் மக்கள் தூங்கி கொண்டிருக்கும் வேளையில் அதிக சத்தத்துடன் செல்வதால் அவதியாக உள்ளது. எனவே போலீசார் இரவு நேரங்களில் தடையை மீறி ரேக்ளா பந்தயம் நடத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மருதமலை செல்லும் வழியில் பாரதியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
    • கல்லூரி பேராசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வடவள்ளி 

    கோவை மருதமலை செல்லும் வழியில் பாரதியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் வேலை பார்த்து வரும் பேராசிரியர்கள் ஒன்றிணைந்து ஆசிரியர் சங்கம் ஒன்றும் வைத்துள்ளனர். இந்த நிலையில் கல்லூரி பேராசிரியர்கள் இன்று காலை திடீரென பல்கலைக்கழகத்தின் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.


    தகவல் அறிந்ததும் துணைவேந்தர் காளிராஜ், பதிவாளர் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள் நேரில் வந்து பேராசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தனர்.அதனை ஏற்று பேராசிரியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்த கல்லூரிக்கு சென்றனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் மீண்டும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

    • வரதராஜனுக்கும் அவரது மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • விபத்தால் அரை மணிநேரம் மருதமலை சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    வடவள்ளி

    கோவை வடவள்ளி அடுத்த நவாவூர் மருதாபுரம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 45). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கல்பனா. இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன.

    வரதராஜனுக்கும் அவரது மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மாலை வரதராஜன் வழக்கம் போல வீட்டிற்கு சென்றார்.

    அப்போது மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனைவிடம் கோபித்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளை எடுத்து வீட்டில் இருந்து வெளியே சென்றார்‌.

    அப்போது மருதமலை நால்வர் நகர் அருகே வந்த போது மருதமலையில் இருந்து காந்திபுரம் நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென கட்டுப்பட்டை இழந்து வரதராஜன் மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை, விபத்தில் இறந்து கிடந்த வரதராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விபத்தால் அரை மணிநேரம் மருதமலை சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
    • 30 பவுன் நகை மற்றும் 15 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    கோவை:

    கோவை வடவள்ளி, சின்மயா நகரை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 45). இவர் காட்டூரில் உள்ள ஒரு எலக்ட்ரிக்கல் கடையில் வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் தனது மனைவியை அழைத்து கொண்டு பாலக்காட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது அவரது வீட்டில் திடீரென ஏதோ சத்தம் கேட்டது. இதனை கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் உடனே பத்மநாபனுக்கு செல் போனில் அழைத்து தகவல் தெரிவித்தார்.பத்மநாபன் தனது தந்தை பாலசுப்ரமணியனுக்கு போன் செய்து வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறினார்.

    அவர் பத்மநாபன் வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 30 பவுன் நகை மற்றும் 15 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து பாலசுப்ரமணி வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் கைரேகை நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை ஆய்வு செய்து சேகரித்தனர்.இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். 

    • நரசீபுரம் உள்ளிட்ட பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கிராமங்கள் ஆகும்.
    • ஒற்றை யானை என இரவு நேரங்களில் விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது

    வடவள்ளி

    கோவை தொண்டா முத்தூர் சுற்றுவட்டர பகுதியான அட்டுக்கல், குப்பேபாளையம், தேவரா யபுரம், சிலம்பனூர், நரசீபுரம் உள்ளிட்ட பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கிராமங்கள் ஆகும்.

    இந்த பகுதி மக்கள் அதிக அளவில் விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில வாரங்களாக யானைகள் கூட்டமாகவும், ஒற்றை யானை என இரவு நேரங்களில் விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதில் சுமார்‌ 20 வயது மதிக்கத்தக்க ஒற்றை டஸ்கர் இன யானை குப்போபாளையம், அட்டுக்கல் உள்ளிட்ட பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக விளை நிலங்களில் புகுந்து சோளம், கடலை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    குப்பேபாளையம் பகுதியில் வெங்காய பட்டறை ஒன்றை இடித்து தள்ளி சூறையாடியது. ஜெயப்பரகாஷ் என்பவரது தோட்டத்தில் புகுந்து மோட்டார் பம்புகளை இடித்து தள்ளியது. யானையை பார்த்து அங்கு கட்டி வைக்கப்பட்டு இருந்த கால்நடைகள் மிரண்டு ஓடியது.

    இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் அட்டுக்கல் வழியாக கெம்பனூர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஒற்றை காட்டுயானை வடக்கு வீதியில் ரங்கராஜ் என்பவர் வீட்டின் முன்பு நீண்ட நேரம் நின்றது.

    நாய்கள் சத்தம் கண்டதை கண்டு வெளியில் வந்த சிலர் யானை நிற்பதை கண்டு திடுக்கிட்டனர். உடனடியாக செல்போன் மற்றும் வாட்ஸ் அப் மூலமாக அருகில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்து உஷார் படுத்தினர். யானை ஊருக்குள் பல இடங்களில் சுற்றி இன்று அதிகாலை 5 மணியளவில் வனப்பகுதியை நோக்கி சென்றது.

    யானை ஊருக்குள் வீதியில் வந்ததை மாடியில் நின்றவாறு சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். தொண்டாமுத்தூர் அருகே விளைநிலம் மற்றும் குடியிருப்பையொட்டி பகுதிகளில் யானைகள் முகாமிட்டு இருப்பது அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த ஒரு‌மாதத்தில் மட்டும் போளுவாம்பட்டி வனச்சரகத்தில் இரண்டு நபர்கள் யானை தாக்கி இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விநாயகர் சிலை வைப்பவர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.
    • சிலை வைப்பது தொடர்பான நெறிமுறைகள் பற்றி போலீசார் தரப்பில் தெளிவாக எடுத்துரைத்தனர்.

    வடவள்ளி 

    விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவை பேரூர் சரக டி.எஸ்.பி.ராஜபாண்டியன் தலைமையில் விநாயகர் சிலை வைப்பவர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.


    இதில் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஊர் பொதுமக்கள் சார்பில் ஒருவர் மற்றும் இந்து முன்னணி, பாரதிய ஜனதா கட்சி , விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிலை வைப்பது தொடர்பான நெறிமுறைகள் பற்றி போலீசார் தரப்பில் தெளிவாக எடுத்துரைத்தனர். இந்த கூட்டத்தில் தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, பேரூர், மதுக்கரை உள்ளிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

    ×