search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடவள்ளியில் அ.தி.மு.க நிர்வாகி மனைவி விஷம் குடித்து தற்கொலை
    X

    வடவள்ளியில் அ.தி.மு.க நிர்வாகி மனைவி விஷம் குடித்து தற்கொலை

    • புனிதா சிலரிடம் கடன் வாங்கியதாகவும், அதனை திருப்பி செலுத்த முடியவில்லை எனவும் தெரிகிறது.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை

    கோவை வடவள்ளியை அடுத்த தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் மனோகரன் (வயது 49). இவர் வீரகேரளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராகவும், அ.தி.மு.க.வில் செயலாளராகவும் உள்ளார்.மேலும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி புனிதா (37). சேலை வியாபாரம் செய்து வந்தார். அவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் புனிதா சிலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது.

    அந்த கடனை அவரால் சரியான நேரத்தில் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் அவர் கடந்த சி ல நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கை யில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இற ந்தார்.

    பின்னர் இதுகுறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் ெதரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×