search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Major areas"

    • கம்பெனிகளுக்கு வேலை ஆட்களை கூட்டிச்செல்லும் வாகனங்கள் ஏராளமாக வந்து செல்கின்றன.
    • முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் நகரில் திருச்சி -கோவை பிரதான சாலைகள் முக்கிய வழித்தடமாக உள்ளது. வெள்ளகோவில் வழியாக ஏராளமான கனரக மற்றும் சுற்றுலா வாகனங்கள், வெளியூர்களிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், திருப்பூர்,கரூர் போன்ற பகுதியில் உள்ள பனியன் கம்பெனிகளுக்கு வேலை ஆட்களை கூட்டிச்செல்லும் வாகனங்கள் ஏராளமாக வந்து செல்கின்றன. இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் உள்ளன. பிரசித்தி பெற்ற வீரக்குமாரசாமி கோவில், நாட்ராயசாமி கோவில், சோளீஸ்வரர்கோவில் ஆகியவை உள்ளன.

    இப்பகுதியில் உள்ள நூற்பாலைகளில் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் வந்து தங்கி வேலை செய்து வருகின்றனர். இதனால் வெள்ளகோவில் பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்கள், வாகன விபத்துக்கள், போக்குவரத்து இடையூறுகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் நோக்கத்தில் வெள்ளகோவில் நகர் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    ×