search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stress"

    • கவுரி ஒரு கண் மருத்துவமனையில் செவிலியராக பயிற்சி பெற்று வந்தார்.
    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கவுரி தற்கொலை செய்து கொண்டார்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள பிராஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் முத்துபாண்டியன். இவருக்கு மனைவி, ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு முத்துபாண்டியன் இறந்து விட்டார். இதனால் அவரது மனைவி, 2 குழந்தைகளையும் வளர்த்து வந்தார்.

    இதில் மூத்த மகள் கவுரி(வயது 21) நெல்லையில் உள்ள ஒரு கண் மருத்துவமனையில் 2 ஆண்டுகளாக செவிலியராக பயிற்சி பெற்று வந்தார். பயிற்சி முடிந்த பின்னர் புதுச்சேரியில் உள்ள ஆஸ்பத்திரியில் பணிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு வேலை பிடிக்காத காரணத்தால் கவுரி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்துவிட்டார்.

    அதன்பின்னர் அவர் வேலைக்கு செல்லாமல், வீட்டில் இருந்து வந்ததாகவும், இதனால் அவரது தாயார் வருத்தம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக மன வேதனையில் இருந்த கவுரி நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் அங்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இனிமையான மண வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை.
    • கருத்து வேறுபாடுகளால் மணமுறிவுகள் அதிகமாகி வருகின்றன.

    இனிமையான மண வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. கருத்து வேறுபாடுகளால் மணமுறிவுகள் அதிகமாகி வருகின்றன. விவாகரத்து செய்யாவிட்டாலும் சலிப்புடன் திருமண வாழ்க்கை வாழ்பவர்கள் பலர். இன்னொருபுறம் எனக்கு திருமணமே வேண்டாம், தனியாக வாழ்கிறேன் என்று திருமணத்தையே நிராகரிக்கும் போக்கும் சிலரிடம் நிலவுகிறது.

    வேலைக்கு போனதும் திருமணம் என்ற சமூக நியதி மெல்ல மெல்ல மாறி, சொந்தமாக ஒரு வாகனம், வீடு என்று வாங்கியதும் திருமணம் என்ற முடிவில் பலர் இருக்கிறார்கள். இதனால் வயதும் கூடிப்போகிறது. நிலைமை உயர உயர எதிர்பார்ப்புகள் எகிற ஆரம்பிக்கின்றன. இதனாலும் திருமணங்கள் தடைபடுகின்றன.

    திருமணம் எனும் அமைப்பு மிகுந்த சிக்கலான விஷயமாக மாறி வருவது உண்மை. இதற்கு முக்கிய காரணம் திருமணம் என்பது இன்றைக்கு குடும்ப நிகழ்வாக இல்லாமல் தனி மனித ஏற்பாடாக மாறியதுதான் அதற்கு காரணம். திருமணம் என்றில்லை, எல்லா உறவுகளிலும் ஏமாற்றம் வருவதற்கு காரணம் எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போவதுதான்.

    திருமணத்துக்கு தயாராதல் என்பது வீட்டை சரிசெய்து ஷோ செய்வது அல்ல. வரப்போகும் பந்தத்துக்காக தன்னை தயார்செய்துகொள்வது. மேலை நாடுகளில் இதற்கு கவுன்சலிங் போகிறார்கள்.

    கையில் இருக்கும் 'ஆப்'பை தட்டினால் அரை மணி நேரத்தில் எதுவும் வீடு தேடி வரும் என்ற மனப்பான்மை இன்றைய 20 வயசுக்காரர்களை பெரிதும் பலவீனப்படுத்தி விட்டது. "பிடிக்கலையாம், அதான் பிரிஞ்சிட்டாங்களாம்" என்று ஒற்றை வரியில் திருமண முறிவுக்கு பதில் தருகிறார்கள்.

    எனவே பொறுமையாக இருந்தால் சரியாகும் என்ற பழைய அறிவுரை போதாது. அடிப்படை மாற்றம் நிகழ வேண்டிய இடம் திருமணம் பற்றிய எண்ணங்கள், எதிர்பார்ப்புகளில்தான்.

    அதேபோல் உங்கள் மேல் உங்கள் வாழ்க்கைத் துணை கொண்ட எதிர்பார்ப்புகள் என்னவாக இருக்கும் என யூகித்து பட்டியல் இடுங்கள். பட்டியலை பரிமாறிக்கொள்ளுங்கள். இது பிரச்சினையை தீர்க்காது. ஆனால், பிரச்சினை எங்கு இருந்து தொடங்கி இருக்கிறது? என்பதை புரிய வைக்கும்.

    • காலையிலேயே யோகாசனம் செய்வதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால்கள் கரைகிறது.
    • கணினி சார்ந்த வேலை செய்பவர்கள், மன அழுத்தம் உள்ளவர்களுக்கு மன அமைதி தருவது யோகாசனம்.

    உடலையும், மனதையும் வலிமையாக்கும் பயிற்சிகளில் யோகாசனம் முக்கியமானது. காலையிலேயே யோகாசனம் செய்யலாமா? யோகாவின் பயன்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.

    * கணினி சார்ந்த வேலை செய்பவர்கள், மன அழுத்தம் உள்ளவர்களுக்கு மன அமைதி தருவது யோகாசனம்.

    * யோகாசனம் மூலம் செய்யும் மூச்சு பயிற்சி சீரான சுவாசத்தை அளித்து சுவாச பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது.

    * யோகா செய்வதால் ரத்த ஓட்டம் சீராவதுடன் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.

    * பல கோணங்களில் வளைந்து யோகா செய்வதால் உடல் அழகான வடிவத்தை பெறுகிறது.

    * தினசரி காலை யோகா செய்வதால் மூளை புத்துணர்ச்சி அடைந்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.

    * காலையிலேயே யோகாசனம் செய்வதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால்கள் கரைகிறது.

    * காலை சூரிய ஒளியில் யோகா செய்வதால் விட்டமின் டி சத்து கிடைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.

    • இடுப்பை வளைத்து முக்கோண நிலையில் இருக்கும்.
    • தோள்பட்டை, கைகள், கால் ஆகியவற்றுக்கு வலிமையையும் நெகிழ்வுத் தன்மையையும் கொடுக்கும்.

    திரிகோணாசனம் என்பது ஆங்கிலத்தில் triangle pose என்று அழைப்பார்கள். இடுப்பை வளைத்து முக்கோண நிலையில் உடல் இருக்கும்படி செய்யும் இந்த ஆசனம் ஜீரணத்தை மேம்படுத்தவும், தொப்பையை குறைக்கவும், இன்சுலின் உற்பத்தியை தூண்டுவதற்கும் என பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை நமக்கு கொடுக்கிறது.

    உடல் தசைகளை நன்கு நீட்டி மடக்கும் இலகுவான தன்மையையும் உடலுக்கு நல்ல நெகிழ்வுத் தன்மையையும் கொடுக்கும். குறிப்பாக தோள்பட்டை, கைகள், கால் ஆகியவற்றுக்கு வலிமையையும் நெகிழ்வுத் தன்மையையும் கொடுக்கும்.

    ஜீரணக்கோளாறுகள் தான் உடலில் நிறைய பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கின்றன. அவற்றை சரிசெய்யவும் ஜீரண ஆற்றலை மேம்படுத்தவும் திரிகோணாசனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    கை, கால், இடுப்பு, கழுத்து, தோள்பட்டை ஆகியவற்றை வளைத்து நீட்டி செய்கின்ற இந்த ஆசனம் அடிவயிற்று பகுதி மற்றும் ஜீரண மண்டலத்தை தூண்டும் வேலையை செய்கிறது.

    முக்கோணம் போன்ற நிலையில் இருக்கும் இந்த திரிகோணாசத்தை செய்வதன் மூலம் சுவாச மண்டலத்தில் இருக்கும் அடைப்பு போன்றவை நீங்கும். ஆழமாக சுவாசிக்க உதவி செய்யும்.

    நன்கு மூச்சை இழுத்து அதிகமான ஆக்சிஜன் அளவைப் பெற முடியும். இதனால் நுரையீரலுக்கும் அதிக அழுத்தம் ஏற்படாமல் அதன் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்யும். ஆஸ்துமா, வீசிங் போன்ற சுவாச மண்டல பிரச்சினை இருப்பவர்கள் இந்த திரிகோணாசனத்தை செய்து வருவது நல்லது.

    முதுகு வலி பிரச்சினை உள்ளவர்களுக்கு இந்த திரிகோணாசனம் மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். இந்த ஆசனம் செய்யும்போது மார்பு பகுதி விரிவடைந்து மூச்சு விடுவது மிக எளிதாக இருக்கும். ஆழமாக மூச்சை இழுத்து விட முடியும். இதனால் மார்பு மற்றும் இடுப்பு பகுதியில் ஏற்படும் அழுத்தம் குறைந்து இடுப்பு மற்றும் முதுகுவலி குறைய ஆரம்பிக்கும்.

    இந்த திரிகோணாசனம் செய்யும் போது உடல், மனம் இரண்டுமே ரிலாக்சாக இருக்கும். இது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கச் செய்யும். இதனால் மன அழுத்தம், பதட்டம், டென்ஷன், மனச்சோர்வு ஆகியவை குறையும்.

    சிலருக்கு இடுப்பை வளைத்து செய்யும் எந்தவித வேலைகளும் செய்யவே முடியாது. ஏனெனில் இடுப்பு பகுதியில் உள்ள தசைகள் மிகவும் இறுக்கமாக இருக்கும். இந்த இறுக்கத்தை குறைத்து இடுப்பு தசைகளை நெகிழ்வுத் தன்மையோடும் வலுவாகவும் வைத்திருக்க உதவும்.

    திரிகோணாசனம் செய்யும் போது ஒட்டுமொத்த உடலும் வலிமை அடையும். அதோடு இடுப்பு பகுதியில் உள்ள தசைகளை வலுப்படுத்தும். குறிப்பாக இடுப்பு தசைகளை வலுப்படுத்துவது மட்டுமின்றி, அடிவயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்கச் செய்து தொப்பையை குறைக்க உதவி செய்கிறது.

    • மன அழுத்தம் என்பது ஒரு பிரச்சினை அல்ல.
    • எல்லா பிரச்சினைகளையும் எல்லாராலேயும் எளிதாக கையாண்டுவிட முடியாது.

    முதலில் மன அழுத்தம் என்பது ஒரு சிம்டம். மன அழுத்தம் என்பது ஒரு பிரச்சினை அல்ல. அது பிரச்சினையின் வெளிப்பாடு என்பது முதலில் புரிந்துகொள்ள வேண்டும். சிலபேர்களின் வாழ்க்கையில் மன அழுத்தம் தான் பிரச்சினை என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மன அழுத்தம் என்பது ஒரு பிரச்சினையே இல்லை. மன அழுத்தம் எங்கிருந்து அல்லது எதில் இருந்து ஆரம்பித்தது என்பதை கண்டறிந்தாலே நாம் அதில் இருந்து வெளியே வருவதற்கு எளிதாக இருக்கும்.

    மன அழுத்தம் என்பது வாழ்க்கையில் ஏற்படுகிற பிரச்சினை அல்லது ஒருவர் மீது வைக்கப்படுகிற அழுத்தம். அதாவது இதை இப்படி செய்ய வேண்டும். இந்த வேலையை நாம் இந்த காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்பதன் வெளிப்பாடே மன அழுத்தம். இது நாம் மற்றவர்கள் மேல் வைத்ததாக இருக்கலாம். அல்லது மற்றவர்கள் நம்மேல் வைப்பதாக கூட இருக்கலாம். உலகத்தில் நமக்கு தேவைப்படுகிற விஷயமாக இருந்தாலும் சரி, நாமே நம் மனதில் உருவாக்கி கொள்கின்ற விஷயமாக இருந்தாலும் சரி இதுவே மன அழுத்தத்தை கொண்டுவந்துவிடுகிறது.

    மன அழுத்தத்தை உங்களால் கையாள் முடியும் என்றால் அதனை நீங்களே உடைத்து எரிந்து உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பெரிய நிலையை அடைய முடியும். எல்லா பிரச்சினைகளையும் எல்லாராலேயும் எளிதாக கையாண்டுவிட முடியாது. இந்த அழுத்தத்தை முறையாக கையாள தெரியாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

    உதாரணத்திற்கு ஒரு நிறுவனத்தில் உங்களுக்கு வேலை கிடைத்துள்ளது என்று வைத்துக்கொள்வோம். அந்த வேலைக்கு உங்களுக்கு மோட்டார்சைக்கிள் தேவை. அங்கு 10 நாட்களுக்கும் சேர வேண்டும். உங்களிடம் பைக் இல்லை, பைக் வாங்கினாலும் 10 நாட்களில் உங்களுக்கு லைசென்சும் கிடைக்காது. எனவே இதனால் உங்களது மனதில் ஒரு அழுத்தம் உருவாகிறது. அதுவே சிலநாட்கள் தொடர்ந்து இருந்தால் அதுவே ஒரு மன அழுத்தமாக மாறிவிடும். இது ஸ்கில் லெவல் பிரச்சினை.

    மற்றொரு உதாரணம் நீங்கள் ஒரு ஆபிசில் வேலைசெய்கிறீர்கள் அங்கு நீங்கள் டாக்குமெண்ட் டைப் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் சுமாராக ஒரு நாளைக்கு 100 டாக்குமெண்ட் டைப் செய்வதாக வைத்துக்கொள்வோம். அப்போது ஆபிசில் சிலபேர்களை வேலையைவிட்டு எடுத்துவிடுகிறார்கள் அதனால் என்ன ஆகிறது அவர்களுடைய வேலையும் உங்கள் தலைமேல் விழுகிறது. இப்போது நீங்கள் ஒருநாளைக்கு 150 டாக்குமெண்ட் தயார்செய்ய வேண்டும் இல்லை என்றால் வேலையைவிட்டு நிறுத்திவிடுவோம் என்கிறார்கள். அப்போது வேலைபளு காரணமாக ஒருவித அழுத்தம் ஏற்படும். இந்த வேலை இல்லை என்றால் நான் என்ன செய்வது? அல்லது இவ்வளவு வேலையை நாம் ஒருவரே எப்படி செய்வது, இந்த கூடுதல் வேலையினால் வீட்டில் உள்ள வேலைகள் எல்லாம் தடைபடும். குடும்பத்திலும் பிரச்சினை ஏற்படும். இதனால் மன அழுத்தம் உருவாகும்.

    எனவே எப்போதும் ஸ்டிரஸ் (மன அழுத்தம்) எதனால் உருவாகிறது என்பதை ஆராய வேண்டும். எனவே உங்களுடைய எண்ண ஓட்டத்தை அறிந்துகொள்ள ஒரு 10 நாட்கள் தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்னர் இன்றைக்கு நம் மனதை பாதித்த மற்றும் அழுத்தத்தை கொடுத்த விஷயங்கள் என்னென்ன என்பதை தினமும் எழுதிக்கொண்டு வர வேண்டும்.

    10 நாட்கள் கழித்து அன்றைக்கு உங்களுக்கு மிகவும் பிரச்சினையாக இருக்கக்கூடிய விஷயங்களை கண்டறிந்து அவற்றை வட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அந்த 10 பிரச்சினைகளுக்கும் உங்களால் தீர்வு காண முடியுமா என்பதை குறித்து முடிவு எடுக்க வேண்டும். அதில் நீங்கள் யோசித்த பிரச்சினைக்கான தீர்வுகளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக செயல்படுத்திக்கொண்டே வர வேண்டும். எழுதிவைத்த எல்லா தீர்வுகளும் முடிவுக்கு வராது. ஆனால் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நாம் எடுக்கும் முயற்சிகள் தான் பிரச்சினைகளில் இருந்தும், மன அழுத்தத்தில் இருந்து வெளியே வருவதற்கு உதவியாக இருக்கும்.

    சிலநேரங்களில் நாம் தோல்வியை கூட தழுவலாம். ஆனால் தொடர்ந்து இதை செயல்படுத்துக்கொண்டே வந்தால் நமக்கு பிரச்சினை வந்தால் அதனை எப்படி தீர்த்துக்கொள்வது என்பதை பற்றிய புரிதல் இருக்கும். சில நேரங்களில் நமக்கு எழுதி வைத்த சில பிரச்சினைகளுக்கு தீர்வே இல்லை என்றால் அதனைவிட்டு நாம் வெளியேற முடியுமா என்பதை பார்க்க வேண்டும். இப்போதுதான் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் கடுமையான நிலைக்கு வருவீர்கள்.

    இதில் நீங்கள் புரிந்துகொள்வது என்னவென்றால் வாழ்க்கையில் எப்போதும் ஒன்று இருந்தால் ஒன்று இருக்காது. எனக்கு நிறைய சம்பளமும் வேணும், நான் குறைந்த நேரம் தான் வேலை செய்ய வேண்டும். நான் குடும்பத்துடன் நிறைய நேரம் செலவிட வேண்டும் என்றால் அனைத்தும் எல்லாருக்கும் நடந்துவிடுவதில்லை. ஏதாவது ஒரு விஷயம் மட்டும் உங்கள் வாழ்க்கையில் இழக்க வேண்டி வரும். பணத்தையோ, குடும்பத்துடன் நேரம் செலவிடுவதையோ அல்லது உழைப்பையோ என்பதை யோசித்து பார்த்து அதற்கு நீங்கள் நிரந்தர தீர்வு எடுக்க வேண்டும்.

    அதாவது உங்களுக்கு எது முக்கியம் என்பதை தேடி ஆராய்ந்து பார்த்து அது உங்களுக்கு எந்த அளவுக்கு பயனை தருகிறது என்று ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். அடுத்தது ரொம்ம முக்கியமான விஷயம் என்னவென்றால் எடுத்த முடிவை ஃபாளோ செய்ய வேண்டும். ஒவ்வொரு தடவையும் முடிவை மாற்றி மாற்றி எடுக்காமல் எடுத்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர முடியும். இல்லையென்றால் மன அழுத்தத்தில் இருந்து வெளியே வருவது கடினம்.

    எனவே நாம் ஒரு முடிவெடுத்தால் அந்த முடிவில் நிலைத்திருக்க வேண்டும். அல்லது கொஞ்ச நாளைக்காவது அதை கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு தடவையும் முடிவெடுத்த பிறகு நீங்கள் எடுத்த முடிவில் இருந்து மாற்றிக்கொண்டே வந்தால் மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர முடியாது.

    இந்த மன அழுத்தத்தில் இருந்து வெளியேற யோகா, தியானம் செய்வது சிறந்தது. அதிலும் சென் எனப்படுகிற தியானம் இதற்கு மிகவும் உதவும்.

    • இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள்.
    • ‘உடற்பயிற்சியை தொடருவது அதிகப்படியான மன அழுத்தத்தை குறைக்கிறது.

    வயது அதிகரித்தாலும் இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள். நோய் நொடியின்றி ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக வாழவும் ஆசைப்படுகிறார்கள். உடலையும், உள்ளத்தையும் மேம்படுத்தி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை கட்டமைக்க மேற்கொள்ள வேண்டிய பழக்கவழக்கங்களில் உடற்பயிற்சி அத்தியாவசியமானது. உடல் எடையை குறைக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் நாள்பட்ட நோய்களை தடுக்கும் வல்லமையும் பெற்றது.

    ''உடற்பயிற்சியை தொடருவது அதிகப்படியான மன அழுத்தத்தை குறைக்கிறது என்று நோயாளிகள் அடிக்கடி கூற கேட்டிருக்கிறேன். உடற்பயிற்சி செய்யும்போது மன அழுத்தத்தை தூண்டும் கார்டிசோல் ஹார்மோனின் செயல்பாடு குறைகிறது. கார்டிசோல் ஹார்மோன் அதிகமானால் இனிப்பு பதார்த்தங்களையும், கார்போஹைட்ரேட் மிகுந்த உணவுகளையும் சாப்பிட தோன்றும். இன்சுலினின் செயல்பாட்டில் மாற்றம் நிகழும். உடலில் கொழுப்பும் அதிகம் சேரும்'' என்கிறார், அமெரிக்க மருத்துவரும், எழுத்தாளருமான டாக்டர் மார்க் ஹைமன். உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை தவறாமல் தினமும் பின்பற்றுவதால் உடலில் நிகழும் மாற்றங்கள் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.

    இன்சுலின் உணர்திறன்:

    உடற்பயிற்சி செய்யும்போது செல்கள் மற்றும் தசைகளின் செயல்பாடுகள் சீராக நடைபெறும். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் இன்சுலின் செயல்பாடும் சுமூகமாக நடைபெற வழிவகுக்கும். அப்படி இன்சுலின் உணர்திறன் சமநிலையில் பராமரிக்கப்படும்போது உடல் பருமன், தொப்பை பிரச்சினையும் எட்டிப்பார்க்காது.

    மூளை ஆரோக்கியம்:

    உடற்பயிற்சியை தொடர்ந்து வந்தால் மூளை சிறப்பாக செயல்படும். நினைவாற்றல், கற்றல் திறன், கவனிக்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும். உடற்பயிற்சி செய்யும் போது மூளை மேலும் மீள்தன்மை அடையும். அதனால் மனநிலை மேம்படும். உடல் ஆற்றலும் அதிகரிக்கும். உடலிலும், மனதிலும் அழுத்தத்தை குறைக்கவும் வழிவகை செய்யும். மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாத்து மனச்சோர்வு, அல்சைமர் போன்ற மன நலம் சார்ந்த பிரச்சினைகளை விலக்கி வைக்கவும் உதவும். சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பின்பற்ற வைத்து முதுமை பருவத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை திறம்பட சமாளிக்க வித்திடும்.

    நாள்பட்ட நோய்கள்:

    உடற்பயிற்சி பல வழிகளில் உடலுக்கு நன்மை சேர்க்கிறது. இதயத்தை பாதுகாக்கிறது. மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகிறது. உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இதய நோய், வகை ௨ நீரிழிவு, பக்கவாதம், மார்பக மற்றும் பிற புற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் குறைவாக இருப்பதாக பல்வேறு ஆய்வுகளும் உறுதிபடுத்தியுள்ளன.

    நச்சு நீக்கம்:

    உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றவும் முடியும். கடுமையான உடற்பயிற்சி முறைகளை பின்பற்றும்போது வியர்வை வெளியேறும். அதன் மூலம் நச்சுக்களும் வெளியேறிவிடும். தினசரி உடற்பயிற்சி செய்யும்போது அதிக வியர்வை வெளிப்படவில்லை என்றால் நீராவி பிடிக்கும் பழக்கத்தை பின்பற்றலாம். அதன் மூலம் சருமத்தில் படிந்திருக்கும் நச்சுக்கள், அழுக்குகள் வெளியேறிவிடும்.

    கடினமான உடற்பயிற்சி முறைகளை பின்பற்றமுடியாதவர்கள் இந்த வழக்கத்தை பின்பற்றலாம். மென்மையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதும் நன்மை பயக்கும். அது ரத்த ஓட்டத்தை சீராக பராமரிக்கவும், நிணநீர் மண்டலத்தில் உருவாகும் அனைத்து நச்சு திரவங்களைவெளியேற்றவும் உதவி புரியும்.

    • இந்தியர்களுக்கு சர்க்கரைநோய் வரும் தன்மை அதிகம்.
    • நம் உடலியல் கடிகார சுழற்சியே மாறியிருக்கிறது.

    பொதுவாகவே இந்தியர்களுக்கு சர்க்கரைநோய் வரும் தன்மை அதிகம். ஏனென்றால் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுப்பொருட்களையே நாம் அதிகம் உணவாக எடுத்துக்கொள்கிறோம். முன்பெல்லாம் 40- 45 வயதுக்குப் பிறகு சர்க்கரைநோய் இருக்கிறதா என்பதற்கான டெஸ்ட் செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். இப்போது 30 வயதை எட்டியதுமே சர்க்கரைநோய்க்கான டெஸ்ட் எடுக்கச் சொல்கிறோம்.

    ஒருகாலத்தில் மனிதர்கள் வேட்டையாடி, அதில் கிடைத்த உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்தனர். அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள். அளவுக்கு அதிகமான அந்த உணவு கொழுப்பாக உடலில் சேரும். கொழுப்பாக சேரும் அந்த தன்மை இன்றளவும் நம் மரபணுக்களில் இருக்கிறது.

    நம்மில் பலரும் பசித்த பிறகு உணவு உண்ணும் பழக்கம் இல்லை. நேரத்துக்கு சாப்பிடுகிறோம். அப்படி சாப்பிடுவதால் தேவைக்கு அதிகமான உணவானது கொழுப்பாக போய் சேர்ந்துவிடுகிறது. அதனால் நமக்கு சர்க்கரைநோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம். அதனால்தான் 30 ப்ளஸ்சிலேயே சர்க்கரை நோய்க்கான பரிசோதனை செய்ய சொல்கிறோம்.

    பெற்றோர் இருவரில் யாரேனும் ஒருவருக்கு சர்க்கரைநோய் இருந்தால் பிள்ளைகளுக்கும் அந்த நோய் பாதிக்க 60 சதவிகிதம் வாய்ப்பு உண்டு. பெற்றோர் இருவருக்குமே சர்க்கரைநோய் இருந்தால் அந்த வாய்ப்பு 90 சதவிகிதமாக அதிகரிக்கும்.

    நம் வாழ்க்கைமுறையும் சர்க்கரைநோய் வருவதற்கான காரணங்களில் பிரதானமாக இருக்கிறது. உடலியக்கமே இல்லாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்வது, இரவில் தாமதமாகவும் அதிகமாகவும் சாப்பிடுவது, காலை உணவை தவிர்ப்பது, இரவில் கண்விழித்திருப்பது என நம் உடலியல் கடிகார சுழற்சியே மாறியிருக்கிறது.

    இயற்கையோடு இணைந்த வாழ்க்கைக்குப் பழகும்போது சர்க்கரைநோய் உள்ளிட்ட பல பிரச்னைகளை வரவிடாமல் தடுக்க முடியும். ஸ்ட்ரெஸ்சும் மிக முக்கிய காரணம்.

    ஏற்கெனவே நம் மரபணுக்களில் நீரிழிவுநோய்க்கான தன்மை இருக்கும்போது மேற்குறிப்பிட்ட வாழ்வியல் மாற்றங்களும் சேரும்போது 30 ப்ளஸ்சிலேயே சர்க்கரைநோய் பாதிக்கும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. எனவே பெற்றோருக்கு சர்க்கரைநோய் இருந்தால் 30 ப்ளஸ்சிலும், வாழ்வியல் மாற்றங்கள் இருப்பதாக உணர்பவர்கள் 40 ப்ளஸ்சிலும் நீரிழிவுக்கான பரிசோதனையைச் செய்து பார்ப்பது அவசியம்.

    • வெயில் காலத்தில் அதிக வியர்வை தலையில் தங்குவதால் முடி உதிர்வு ஏற்படுகிறது.
    • நிறைய பேருக்கு முடி உதிரும் கட்டம் கோடை காலத்தில் தொடங்குகிறது.

    இளம்பிள்ளைகள் முதல், வயதானவர்கள் வரை எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை, முடி உதிர்வு. சில நாள்களுக்கு நன்றாக முடி வளரும், திடீரென்று முடி உதிரத் தொடங்கிவிடும். இதற்கு காரணம் என்னவென்றே புரியாது. பலவிதமான எண்ணெய் வகைகள், ஷாம்பூ போன்றவற்றை மாற்றி மாற்றிப் பயன்படுத்துவார்கள். முடி உதிர்வுக்கு மன அழுத்தம், சீரான பராமரிப்பின்மை, மரபணு, ஊட்டச்சத்துக் குறைபாடு என பல காரணங்கள் இருந்தாலும், பருவகால மாற்றம் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    இதை ஆங்கிலத்தில் 'சீசனல் ஹேர்ஃபால்' என்று சொல்வார்கள். மழைக்காலங்களில் காற்றில் உள்ள கூடுதலான ஹைட்ரஜனை கிரகித்துக்கொண்டு தலை முழுக்க வறட்சி ஏற்பட்டு முடி உதிரும். அதேபோல வெயில் காலத்தில் அதிக வியர்வை தலையில் தங்குவதால் முடி உதிர்வு ஏற்படுகிறது. ஒவ்வொரு கால மாற்றத்தின் போதும் முடி உதிர்வது இயல்பானது தான். ஆனால் சிலருக்கு இது முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

    "பொதுவாக நமது கூந்தல், வளரும் கட்டம், தலையில் தங்கும் கட்டம், உதிரும் கட்டம்என மூன்று சுழற்சி கட்டங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு நூறு நாள்களுக்கும் இந்த சுழற்சி மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் இந்தச் சுழற்சி எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்காது.

    நிறைய பேருக்கு முடி உதிரும் கட்டம் கோடை காலத்தில் தொடங்குகிறது. ஏனெனில் அதிக வியர்வை தலையிலேயே தங்கி அந்த ஈரப்பதம் இருந்துகொண்டே இருப்பதால் முடி உதிரும் பிரச்னை ஏற்படும். குளிர்காலத்தில் முடி உடையும் பிரச்னை அதிகமாக இருக்கும். அதுவே நமக்கு முடி அதிகமாக உதிர்வது போலவும் தோன்றலாம். அத்துடன், நாம் அடிக்கடி தலைக்கு குளிக்கும்போது, தலை மற்றும் முடியில் வறட்சி உண்டாகும். நாம் பயன்படுத்தும் தண்ணீரில் உள்ள குளோரின், உப்பு போன்றவையும் நம் முடி உதிர்வுக்கு வழிவகுக்கும்.

    பருவகால முடி உதிர்வு என்றாலும், ஒரு நாளைக்கு 50 முதல் 100 முடிகள்வரை கொட்டுவது இயல்பானது. அதற்கும் மேல் முடி உதிர்ந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். முடியின் வேர்களில் ஏற்படும் குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு, ஹார்மோன் மற்றும் வைட்டமின் சார்ந்த பிரச்னைகள் இருந்தாலும் முடி அதிகமாக உதிரும்.

    மைல்டான ஷாம்பூக்கள் மற்றும் நல்ல கண்டிஷனர்களை பயன்படுத்துவதால் முடி உதிர்வதைத் தடுக்கலாம். குளிப்பதற்கு முன்பு ஆயில் மசாஜ் செய்து ஹேர் வாஷ் செய்வது நல்லது. நீண்ட நேரத்திற்கு அந்த எண்ணெயோடு இருக்காமல் 10 முதல் ௧௫ நிமிடத்திற்குள் ஹேர் வாஷ் செய்து விட வேண்டும்.

    தலைமுடி புரதத்தால் ஆனது. அதனால் உதிர்வைத் தடுப்பதற்கு புரதம் நிறைந்த உணவு முறையைப் பின்பற்றுவது மிகச் சிறந்த வழி. அதற்காக முட்டை, பச்சைப்பயிறு, பனீர், சிக்கன், சுண்டல், பருப்பு வகைகள் இவற்றை நம் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்த கேரட், நீர்ச்சத்துள்ள பழங்கள், பப்பாளி மற்றும் காய்கறிகளைச் சாப்பிட வேண்டும்.

    வெளியே செல்லும்போது தலையில் அதிகமாக எண்ணெய் வைப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் வெளியே இருக்கும் தூசு நம் தலையில் தங்கி அதுவே பொடுகு அதிகமாக உருவாகக் காரணமாகிவிடும். வெளியே செல்லும் போது துணியால் தலைமுடியை முழுதாக மூடிக்கொள்வது நல்லது. அது வெயில், காற்று, தூசு என அனைத்து பிரச்னைகளில் இருந்தும், நம் கூந்தலை பாதுகாக்க உதவும்.

    • ஒரு வேளை சாப்பாடை தவிர்ப்பதால் கூட தலைவலி ஏற்படலாம்.
    • வலி உணர்திறன் கொண்ட நியூரான்களை மூளை தூண்டுவதால் தலைவலி ஏற்படுகிறது.

    தலைவலியை அனுபவிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு பொதுவான விஷயம் இந்த தலைவலி. அதிலும் ஆண்களை விடவும் பெண்களுக்கு தலைவலி வருவது அதிகம்.

    இன்றைய காலத்தில் பல காணரங்களால் அடிக்கடி தலைவலி ஏற்படுகின்றது. தலைவலி சில மணி நேரமோ, சில நாட்களுக்கோ காணப்படும். இதனை அலட்சியமாக எடுத்து கொள்ளக்கூடாது.

    முதலில் தலைவலி ஏன் வருகிறது என்பது குறித்து சில அடிப்படையான விஷயங்களை புரிந்து கொள்வது அவசியம். அந்த வகையில் தற்போது தலைவலி எதனால் ஏற்படுகின்றது என்ற காரணத்தை தெரிந்து கொள்வோம். இந்த பிரச்சினை ஏற்படாமல் உங்களால் முன்கூட்டியே தடுக்க முடியும்.

    காரணங்கள்:

    கோடை காலத்தில் ஏற்படும் தலைவலி வெப்பத்தின் காரணமாக ஏற்படலாம். இந்த வெப்பம் காரணமாக மூளைக்கு செல்கின்ற ஆக்சிஜன் குறைகிறது. இதனால் தலைவலி ஏற்படுகிறது. இந்த கோடைகாலத்தில் ஏற்படும் தலைவலிக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை.

    வலி நிவாரண மாத்திரைகளை அதிகமாக பயன்படுவதால் கூட தலைவலி ஏற்பட ஒரு காரணமாக அமைகிறது. இந்த மாத்திரைகளை அடிக்கடி எடுத்துக்கொள்ளும்போது, காஃபின் அல்லது ஆன்ட்டி ஹிஸ்டமைன் கலந்துள்ள இந்த மருந்துகள் நமது மூளையின் கட்டுப்பாட்டில் இடர்பாடுகளை ஏற்படுத்துகிறது.

    ஒருவேளை சாப்பாடை தவிர்ப்பதால் கூட தலைவலி ஏற்படலாம். நமது மூளை இரண்டு விஷயங்களை முக்கியமாக கொண்டு இயங்குகிறது. அவை குளுக்கோஸ் மற்றும் ஆக்சிஜன். நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் இருந்து இவை இரண்டும் நமது மூளைக்கு கிடைக்கிறது. இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் மூளைக்கு கிடைக்காத பொழுது, வலி உணர்திறன் கொண்ட நியூரான்களை மூளை தூண்டி நமக்கு தலைவலி ஏற்படுகிறது.

    புளித்த அல்லது பழைய உணவுகள் கூட தலைவலியை ஏற்படுத்தக்கூடும். மேலும் நீண்ட நாள் அடைத்து வைக்கப்பட்ட வைக்கப்பட்ட வினிகர், சோயா சாஸ், மற்றும் சீஸ் உணவுகள் ஆகியவற்றில் அமினோ அமிலம் உள்ளது. இது நமது உடலில் ரத்த நாளங்களை கட்டுப்படுத்தி விரிவடையச் செய்வதன் மூலம் தலைவலியை தூண்டுகிறது.

    உடலில் உள்ள முக்கிய உறுப்புகளுக்கு போதுமான அளவு மெக்னீசியம் சத்து இல்லை என்றால் உங்களுக்கு தலைவலி ஏற்படலாம்.

    உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாகவும் தலைவலி ஏற்படலாம். நாம் பகல் நேரங்களில் உடலுக்கு தேவையான தண்ணீரை அருந்தாமல் இருப்பது, இந்த தலைவலி ஏற்பட காரணமாகிறது. உடலில் நீர்சத்து இல்லாமல் இருந்தால் ரத்தம் கெட்டியாகி, இதன் விளைவாக மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைகிறது. இதனால் மூளையில் தூண்டப்படும் ரசாயன செரடோனின் காரணமாக ஒற்றைத்தலைவலி ஏற்படுகிறது.

    உடலுக்கு தேவையான ஓய்வு கிடைக்காததன் காரணமாகவும் தலைவலி ஏற்படுகிறது. தினசரி வேலையின் காரணமாக ஹார்மோன்களின் அளவு குறைகிறது. இதனால் ரத்த நாளங்கள் சுருங்கி நீர்ச்சத்து குறையும்.

    மாதவிடாய் காலங்களில் மன அழுத்தம் மற்றும் தசைப்பிடிப்புகளுக்கு மத்தியில் இந்த தலைவலி பொதுவாக ஏற்படும் ஒரு பக்க விளைவாகும்.

    தொடர்ந்து நாற்காலியில் அமர்ந்து கணினியில் நேரத்தை செலவிடுவதால், உங்களுக்கு தலைவலி ஏற்படலாம். இதனால் உங்கள் தோள்கள் இறுக்கமாகிறது மற்றும் கண்களுக்கு ஓய்வு கிடைக்காமல் இருக்கிறது.

    சில வாசனை காரணமாகவும் தலைவலி ஏற்படுகிறது. வாசனைகள் மூக்கின் வழியாக நேரடியாக மூளைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அதிக வேதிப்பொருட்கள் அடங்கிய ஒரு நறுமணம் தலைவலிக்கு வழிவகுக்கிறது.

    தூக்கத்தில் உங்கள் பற்களை கடிப்பதாலும் தலைவலி ஏற்படலாம். இந்த பிரச்சினை மன அழுத்தம், மருந்து அல்லது மோசமான பல் சீரமைப்பு ஆகியவற்றால் கூட அதிகரிக்கலாம்.

    • தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள் மற்றும் உங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.
    • மன அழுத்தத்திற்கான தியானம் எல்லாவற்றிலும் சிறிது நேரம் ஒதுக்கி மன அழுத்தத்தை தவிர்க்கவும்.

    மன அழுத்த ஹார்மோன்கள் பெண்களின் உடலை ஆண்களை விட வித்தியாசமாக பாதிக்கிறது. இந்த பகுதியில் அதிக ஆராய்ச்சி தேவைப்பட்டாலும், பெண்களில் உள்ள லிம்பிக் அமைப்பு ஆண்களை விட பெண்களில் ஆழமாக உள்ளது. இது ஆண்களை விட உணர்ச்சிகளை ஆழமாக உணர வைக்கிறது. அது அவர்களை நீண்ட நேரம் புண்படுத்தும் மற்றும் வலிமிகுந்த சூழ்நிலைகளை நினைவில் வைத்திருக்கவும், அவற்றை பற்றி சிந்திக்கவும் மற்றும் வலுவான எதிர்வினைகளை உருவாக்கவும் முடியும்.

    பெரும்பாலும், பெண்கள் குடும்ப பொறுப்புகளை கையாள்வதோடு, அதே நேரத்தில் வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது அவர்களை அதிகமாக உணர வைக்கும். மன அழுத்தம் காரணமாக கர்ப்பம் தரிக்க முடியாமல் போவது போன்ற சூழ்நிலைகள் அவர்களை மேலும் மன அழுத்தத்திற்கு ஆளாக்கும். இத்தகைய சூழ்நிலைகள் மன அழுத்தத்தை உருவாக்கி, நீண்ட காலத்திற்கு கார்டிசோலின் அளவை அதிகமாக வைத்திருக்கலாம், இதனால் நீண்ட காலத்திற்கு உடலை சேதப்படுத்தலாம்.

    பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது?

    நீங்கள் ஒரு ஆணாக இருந்தால், உங்கள் வாழ்க்கையில் மன அழுத்தத்திற்கு ஆளாகும் பெண்களை பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், அவர்களுக்கு உதவக்கூடிய சில விஷயங்கள்:

    * அவர்களுக்கு காது கொடுத்து, அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்

    * கேட்கும் வரை அறிவுரை வழங்காதீர்கள்

    * அவர்களின் உணர்ச்சிகளை நிராகரிக்காதீர்கள்

    * முடிந்தால் அவர்களுக்கு 'எனக்கு நேரம்' கொடுக்க சில பொறுப்புகளைப் பகிரவும் அல்லது எடுத்துக்கொள்ளவும்.

    * அவர்களின் மன அழுத்தத்தை தூண்டுவதைக் கண்டறிய அவர்களுக்கு உதவுங்கள்

    * தொழில்முறை உதவியை நாடும் யோசனையை அறிமுகப்படுத்துங்கள்

    மன அழுத்தத்திற்கான தியானம் எல்லாவற்றிலும் சிறிது நேரம் ஒதுக்கி மன அழுத்தத்தை தவிர்க்கவும். ஒரு பெண்ணாக இருந்தால் மன அழுத்தத்தில் இருக்கும் ஆண்களை அதில் இருந்து தப்பிக்க வைக்க விரும்பும் விஷயங்கள்:

    * உங்களுக்கு மன அழுத்தத்தைத் தரும் விஷயங்களின் பட்டியலை எழுத முயற்சிக்கவும், அவற்றை குறைக்க நீங்கள் என்ன செய்யலாம் என்பதை பார்க்கவும்.

    * நாளிதழை பராமரித்து, உங்கள் எண்ணங்களை எழுதுங்கள்

    * தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள் மற்றும் உங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்

    * சர்க்கரை உணவுகளில் இருந்து விலகி இருங்கள்

    * புகைபிடித்தல் அல்லது மது அருந்துதல் போன்ற பழக்கங்களைக் குறைத்தல்

    * ஒரு பொழுதுபோக்கை தேர்ந்தெடுங்கள்

    * தவறாமல் தியானம் செய்யுங்கள்

    * தூக்க சுகாதாரத்தை கடைபிடிக்கவும், போதுமான தூக்கம் (6 முதல் 8 மணிநேரம்) பெறுவதை உறுதிப்படுத்தவும்

    * தினசரி போதுமான சுத்தமான காற்று மற்றும் சூரிய ஒளியை பெறுங்கள்

    சில சமயங்களில், பெண்கள் எதிர்பார்ப்புகள் மற்றும் பொறுப்புகளால் சுமையாக இருக்கலாம். அவர்களை அதிகமாகவும் அழுத்தமாகவும் ஆக்குகிறது. நீங்கள் நீண்ட காலமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கான மூல காரணத்தை கண்டறிந்து அதற்குத் தீர்வு காண்பது நல்லது. உங்களால் அதை செய்ய முடியாவிட்டால், தொழில்முறை உதவியை நாடுங்கள்.

    நீங்கள் ஒரு நண்பராகவோ அல்லது உங்கள் வாழ்க்கையில் பெண்களை கவனித்துக் கொள்ளும் ஆணாகவோ இருந்தால், அவர்களின் பிரச்சினைகளுக்கு நீங்கள் செவிசாய்த்து, தொழில்முறை உதவியை நாட அவர்களுக்கு உதவலாம். சில நேரங்களில், மன அழுத்தத்தை ஏற்படுத்தும் விஷயங்களின் பட்டியலை உருவாக்குவது, அவசரத்தின் அடிப்படையில் முன்னுரிமை அளிப்பது மற்றும் அவற்றை கையாள்வதற்கான மூளைச்சலவை செய்யும் வழிகள் ஒரு சிறந்த செயலாக இருக்கும்,

    மேலும் விஷயங்கள் குழப்பமாகத் தோன்றும்போது பெண்கள் கட்டுப்பாட்டை உணர உதவும். பெண்கள் பல பணிச்சுமை மற்றும் பல பொறுப்புகளை கையாள்வதில் சிறந்தவர்கள், ஆனால் ஏன், நீங்கள் விரும்புவதை செய்ய தினமும் உங்களுக்காக நேரம் ஒதுக்குவது இல்லை. நீங்கள் செய்ய வேண்டிய பட்டியலில் இதற்கான நேரமும் இருக்க வேண்டும்.

    மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்கு உங்கள் முழு ஆற்றலையும் செலுத்தலாம். நீங்கள் ஒரு வளர்ச்சி மனப்பான்மையை கடைப்பிடிக்கலாம் மற்றும் வாழ்க்கை வழங்கும் அனைத்து அனுபவங்களுக்கும் உங்களை தயாராக வைத்துக் கொள்ளலாம்.

    • மாதவிடாய் முறைகேடுகளுக்கு மன அழுத்தம் பொதுவான காரணங்களில் ஒன்றாகும்.
    • நீண்ட கால மன அழுத்தம் உங்கள் உடலில் அழிவை ஏற்படுத்தும்.

    மன அழுத்தம் என்பது உங்களை பதட்டமாகவும், விரக்தியாகவும், பயமாகவும் அல்லது மகிழ்ச்சியற்றதாகவும் ஆக்கும் எந்தவொரு நிகழ்வு அல்லது சூழ்நிலைக்கும் ஒரு உணர்ச்சி அல்லது உடல் ரீதியான எதிர்வினையாக இருக்கலாம். எப்போதாவது ஏற்படும் மன அழுத்தங்கள் உங்கள் செயல்திறனை சாதகமாக பாதிக்கும். அதே வேளையில், நீண்ட கால மன அழுத்தம் உங்கள் உடலில் அழிவை ஏற்படுத்தும்.

    ஆண்களும், பெண்களும் மன அழுத்தத்தை அனுபவித்தாலும், அது இரு பாலினத்திலும் வித்தியாசமாக வெளிப்படுகிறது. மன அழுத்தம் ஆண்களை விட மிகவும் தீவிரமான வழிகளில் பெண்களை பாதிக்கும். எளிமையான வார்த்தைகளில், மன அழுத்தம் ஒரு பெண்ணை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல்வேறு வழிகளில் அழிக்கக்கூடும்.

    பெண்களுக்கு மன அழுத்தம் எப்படி தீங்கு விளைவிக்கும்

    பெண்களுக்கு மன அழுத்தத்தின் மிக முக்கியமான விளைவு அவர்களின் உணர்ச்சி நல்வாழ்வில் உள்ளது. அவர்கள் மன அழுத்தமில்லாத நாட்களில் இருப்பதை விட இது அவர்களை எரிச்சல், மனநிலை, சோகம் அல்லது அதிக உணர்ச்சிவசப்பட வைக்கும். நீண்ட கால மன அழுத்தம் மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற மனநல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். குறைந்த அழுத்தச் செயல்பாடுகளைக் கூட அவர்கள் அதிகமாகக் காணலாம்.

    சிலர் போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு திரும்பலாம், இதையொட்டி, பரவலான சுகாதார நிலைமைகளை உருவாக்கலாம். தலைவலிக்கான பொதுவான தூண்டுதல் எந்த வகையான மன அழுத்தமும் ஆகும். இது தலையில் இறுக்கத்திற்கு வழிவகுக்கும். சில நேரங்களில் இது தோள்பட்டை வலிக்கு வழிவகுக்கும் மற்றும் ஒருவரின் அன்றாட செயல்பாட்டில் தலையிடலாம்.

    ஆண்களை விட பெண்களுக்கு மன அழுத்தம் காரணமாக மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம். மன அழுத்த ஹார்மோன் கார்டிசோல் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் தமனிகளை சுருக்கி, போதுமான அளவு ரத்தத்தை இதயத்தை அடைவதை கடினமாக்குகிறது.

    மன அழுத்தத்தில் உள்ள பெண்கள் பீஸ்ஸாக்கள், சாக்லேட்கள் மற்றும் ஐஸ்கிரீம்கள் போன்ற விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகளை உண்ணலாம், இது அவர்களின் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கம் போன்ற பிற பழக்கங்கள் பல்வேறு இதய பிரச்சினைகள் மற்றும் மாரடைப்புகளுக்கு வழிவகுக்கும்.

    கார்டிசோல் உடலில் இன்சுலின் அளவை அதிகரிப்பதால் பசியைத் தூண்டுகிறது. இது அவர்களுக்கு சர்க்கரை, கொழுப்பு நிறைந்த உணவுகளை ஏங்க வைக்கும், இது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். மன அழுத்தம், உணர்ச்சிவசப்பட்ட உணவு, உணவை தவிர்ப்பது மற்றும் நொறுக்குத் தீனிகளை அடைவது போன்ற ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்களையும் ஏற்படுத்தலாம்.

    மன அழுத்தத்தில் உள்ள பெண்கள் அதிக கலோரி உணவுகளை உட்கொள்ளாவிட்டாலும், கார்டிசோல் அவர்களின் வளர்சிதை மாற்றத்தை குறைக்கிறது, இதனால் அவர்கள் வழக்கத்தை விட குறைவான கலோரிகளை எரிக்கிறார்கள்.

    மாதவிடாய் முறைகேடுகளுக்கு மன அழுத்தம் மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்றாகும் என்று பல மகளிர் மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். கார்டிசோல் மாதவிடாய் சுழற்சியை கட்டுப்படுத்தும் ஹார்மோன்களில் தலையிடலாம் மற்றும் வழக்கத்தை விட இலகுவான, கனமான அல்லது அதிக வலியுடன் கூடிய காலங்களுக்கு வழிவகுக்கும். கார்டிசோல் அளவுகள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை இது மாதவிடாய்களை சிறிது நேரம் இடைநிறுத்தலாம்.

    மாதவிடாய் நிற்கும் பெண்களுக்கு, நீண்ட காலத்திற்கு அதிக கார்டிசோல் அளவு மாற்றத்தை கடினமாக்குகிறது, இதனால் சூடான ஃப்ளாஷ்கள், தூக்கம் மற்றும் பிற அசௌகரியங்கள் ஏற்படலாம். கர்ப்பம் தரிக்க முயற்சிக்கும் பெண்கள் மன அழுத்தத்திற்கு ஆளானால் அவர்களுக்கு சிரமமாக இருக்கும்.

    நீண்ட கால மன அழுத்தம் கார்டிசோலை பாலியல் ஹார்மோன்களை அடக்கி, ஒருவருடைய பாலியல் ஆசைகளை பாதிக்கும். அவர்கள் உடலுறவில் ஈடுபட்டாலும், அவர்கள் முழுமையாக இருக்க மாட்டார்கள் மற்றும் மகிழ்ச்சியை உணர மாட்டார்கள். வழக்கமான நாட்களில் உச்சக்கட்டத்தை அடைவது பெண்களுக்கு கடினமாக இருந்தாலும், மன அழுத்தத்தால் அதை மேலும் கடினமாக்கலாம்.

    மன அழுத்தம் அமில ரிஃப்ளக்ஸ், குமட்டல், வீக்கம் மற்றும் வயிற்றுப் பிடிப்புகளை ஏற்படுத்தும். மன அழுத்தம் மிக அதிகமாக இருந்தால், அது வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கிற்கும் வழிவகுக்கும். சிலருக்கு, மன அழுத்தம் அவர்களின் பசியை கொன்று, எடையை குறைக்கும். மன அழுத்தத்தின் போது ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகமாக உட்கொள்வது குடல் நுண்ணுயிரியை தொந்தரவு செய்யலாம்,

    மேலும் மனநிலை மற்றும் ஆற்றல் நிலைகளை பாதிக்கும். மன அழுத்தம் பெண்களுக்கு இருக்கும் தோல் நிலைகளை மோசமாக்கும். இது முகப்பரு வெடிப்பு, கடுமையான அரிப்பு, சொறி மற்றும் படை நோய்க்கு வழிவகுக்கும். பெண்கள் நீண்ட நேரம் மன அழுத்தத்தில் இருந்தால் கடுமையான முடி உதிர்வையும் சந்திக்கின்றனர்.

    அதிக அளவு மன அழுத்தத்தை அனுபவிக்கும் பெண்கள் தூங்குவது கடினம். இது தூக்கமின்மையை ஏற்படுத்தும், இதையொட்டி, உடல் பருமன், சிறுநீரகப் பிரச்சனைகள், சர்க்கரை நோய், இதய நோய்கள், பக்கவாதம் போன்றவற்றை உண்டாக்கும். தூக்கமின்மை உள்ள பெண், மன அழுத்தத்திற்கு உள்ளாகி, அன்றாட பணிகளை செய்வதில் சிரமப்படுவார்.

    மன அழுத்த ஹார்மோன் கார்டிசோலின் அதிக அளவு ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கிறது மற்றும் ஒருவரை தொற்று மற்றும் நோய்களுக்கு ஆளாக்குகிறது. எனவே, மன அழுத்தத்தை அனுபவிக்கும் ஒரு பெண் அடிக்கடி நோய்வாய்ப்படலாம்.

    • மன அழுத்தம் போக்கும் வகையில் போலீசாருக்கு புத்துணர்வு முகாம்களை நடத்த வேண்டும் என டி.ஜி.பி. சங்கர் ஜிவால் வலியுறுத்தியுள்ளார்.
    • கோவை டி.ஐ.ஜி. விஜயகுமார் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீசாரின் ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தலைமை தாங்கினார். இதில் மதுரை மாநகர், மாவட்டம், விருதுநகர் மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் போலீசாரின் மன அழுத்தத்தை போக்குவது குறித்தும், குற்ற சம்ப வங்களை தடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    கோவை டி.ஐ.ஜி. விஜயகுமார் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டது.

    கூட்டத்தில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பேசியதாவது:-

    போலீசார் பணியின் போது மன அழுத்தமின்றி வேலை பார்ப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக அவர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் புத்துணர்வு முகாம்களை நடத்த வேண்டும். பொதுமக்களின் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சைபர் கிரைம் குற்றங்களை தீவிர கவனத்துடன் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் தீவிர ரோந்து மேற்கொண்டு பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பொது மக்களுடன் நட்புறவை பேணி காக்க வேண்டும்.

    உரிய காரணங்களோடு விடுமுறைக்கு விண்ணப் பிக்கும் போலீசாருக்கு உடனடியாக விடுப்பு வழங்க வேண்டும். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசா ருக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை நடக்கிறது.

    அதனை தடுத்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பைக் ரேசில் ஈடுபடுவோர்களை கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் டி.ஜி.பி. சங்கர் ஜிவாலுக்கு காவல்துறை சார்பில் மரியாதை அணிவகுப்பு அளிக்கப்பட்டது.

    ×