search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூச்சு பயிற்சி"

    • காலையிலேயே யோகாசனம் செய்வதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால்கள் கரைகிறது.
    • கணினி சார்ந்த வேலை செய்பவர்கள், மன அழுத்தம் உள்ளவர்களுக்கு மன அமைதி தருவது யோகாசனம்.

    உடலையும், மனதையும் வலிமையாக்கும் பயிற்சிகளில் யோகாசனம் முக்கியமானது. காலையிலேயே யோகாசனம் செய்யலாமா? யோகாவின் பயன்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.

    * கணினி சார்ந்த வேலை செய்பவர்கள், மன அழுத்தம் உள்ளவர்களுக்கு மன அமைதி தருவது யோகாசனம்.

    * யோகாசனம் மூலம் செய்யும் மூச்சு பயிற்சி சீரான சுவாசத்தை அளித்து சுவாச பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது.

    * யோகா செய்வதால் ரத்த ஓட்டம் சீராவதுடன் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.

    * பல கோணங்களில் வளைந்து யோகா செய்வதால் உடல் அழகான வடிவத்தை பெறுகிறது.

    * தினசரி காலை யோகா செய்வதால் மூளை புத்துணர்ச்சி அடைந்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.

    * காலையிலேயே யோகாசனம் செய்வதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால்கள் கரைகிறது.

    * காலை சூரிய ஒளியில் யோகா செய்வதால் விட்டமின் டி சத்து கிடைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.

    • கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் மன அழுத்தம், பதற்றம், படபடப்பு ஏற்படும்.
    • அதிக தூரம் நடக்கும் போது இளைப்பு ஏற்படும்.

    அவினாசி :

    சோமனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துறை சார்பில் கர்ப்பிணிகளுக்கு யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி அளிக்கப்படுகிறது.கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி அளித்து ஆயுஷ் மருத்துவ அலுவலர் அருள் ஜோதி பேசியதாவது:- கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் மன அழுத்தம், பதற்றம், படபடப்பு ஏற்படும். சிறிய பிரச்னைக்கு பெரிய அளவில் பதற்றம் உண்டாகும். அதை எளிதில் தவிர்க்க முடியும். மேலும் எடை அதிகரிப்பு, உணவு சாப்பிடும் போது மூச்சடைப்பு, அதிக தூரம் நடக்கும் போது இளைப்பு ஆகியவை ஏற்படும். பிரசவ நேரத்திலும் அவதி ஏற்படும்.இவற்றை தவிர்க்க தினமும் மூச்சு பயிற்சி செய்வது அவசியமாகும்.

    காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து மூச்சு பயிற்சி செய்ய வேண்டும். இதன்மூலம் மனதுக்கு அமைதியும் உடலுக்கு வலிமையும் கிடைக்கும்.அதேபோல் சிறு சிறு யோக பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.கர்ப்ப காலத்தில் உடல் முழுவதும் தசை நார்கள், ரத்த குழாய்கள் நீட்சி அடைய பயிற்சி செய்யவேண்டும். அப்போதுதான் பிரசவ காலத்தில் எந்த பிரச்னையும் ஏற்படாது.இவ்வாறு அவர் பேசினார். 

    • சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் யோகாசன பயிற்சியில் ஈடுபட்டனர்.
    • மூச்சு பயிற்சி, நாடிசுத்தி, சூரிய நமஸ்காரம், சர்வங்காசனம், சிரசாசனம், புஜங்காசனம், தனுராசனம், சலபாசனம், பிரணாயாமம், தியானம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனம் பயிற்றுவிக்கப்பட்டது.

    சீர்காழி:

    சர்வதேச யோகா தினம் இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஷ் கண்ணா தலைமையில் யோகா மாஸ்டர் நிமல் முன்னிலையில் சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் இன்று யோகாசன பயிற்சியில் ஈடுபட்டனர். முதலில் மூச்சு பயிற்சி, நாடிசுத்தி, சூரிய நமஸ்காரம், சர்வங்காசனம், சிரசாசனம், புஜங்காசனம், தனுராசனம், சலபாசனம், பிரணாயாமம், தியானம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனம் பயிற்றுவிக்கப்பட்டது.

    ×