search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிரந்தர தீர்வு"

    • மன அழுத்தம் என்பது ஒரு பிரச்சினை அல்ல.
    • எல்லா பிரச்சினைகளையும் எல்லாராலேயும் எளிதாக கையாண்டுவிட முடியாது.

    முதலில் மன அழுத்தம் என்பது ஒரு சிம்டம். மன அழுத்தம் என்பது ஒரு பிரச்சினை அல்ல. அது பிரச்சினையின் வெளிப்பாடு என்பது முதலில் புரிந்துகொள்ள வேண்டும். சிலபேர்களின் வாழ்க்கையில் மன அழுத்தம் தான் பிரச்சினை என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மன அழுத்தம் என்பது ஒரு பிரச்சினையே இல்லை. மன அழுத்தம் எங்கிருந்து அல்லது எதில் இருந்து ஆரம்பித்தது என்பதை கண்டறிந்தாலே நாம் அதில் இருந்து வெளியே வருவதற்கு எளிதாக இருக்கும்.

    மன அழுத்தம் என்பது வாழ்க்கையில் ஏற்படுகிற பிரச்சினை அல்லது ஒருவர் மீது வைக்கப்படுகிற அழுத்தம். அதாவது இதை இப்படி செய்ய வேண்டும். இந்த வேலையை நாம் இந்த காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்பதன் வெளிப்பாடே மன அழுத்தம். இது நாம் மற்றவர்கள் மேல் வைத்ததாக இருக்கலாம். அல்லது மற்றவர்கள் நம்மேல் வைப்பதாக கூட இருக்கலாம். உலகத்தில் நமக்கு தேவைப்படுகிற விஷயமாக இருந்தாலும் சரி, நாமே நம் மனதில் உருவாக்கி கொள்கின்ற விஷயமாக இருந்தாலும் சரி இதுவே மன அழுத்தத்தை கொண்டுவந்துவிடுகிறது.

    மன அழுத்தத்தை உங்களால் கையாள் முடியும் என்றால் அதனை நீங்களே உடைத்து எரிந்து உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பெரிய நிலையை அடைய முடியும். எல்லா பிரச்சினைகளையும் எல்லாராலேயும் எளிதாக கையாண்டுவிட முடியாது. இந்த அழுத்தத்தை முறையாக கையாள தெரியாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

    உதாரணத்திற்கு ஒரு நிறுவனத்தில் உங்களுக்கு வேலை கிடைத்துள்ளது என்று வைத்துக்கொள்வோம். அந்த வேலைக்கு உங்களுக்கு மோட்டார்சைக்கிள் தேவை. அங்கு 10 நாட்களுக்கும் சேர வேண்டும். உங்களிடம் பைக் இல்லை, பைக் வாங்கினாலும் 10 நாட்களில் உங்களுக்கு லைசென்சும் கிடைக்காது. எனவே இதனால் உங்களது மனதில் ஒரு அழுத்தம் உருவாகிறது. அதுவே சிலநாட்கள் தொடர்ந்து இருந்தால் அதுவே ஒரு மன அழுத்தமாக மாறிவிடும். இது ஸ்கில் லெவல் பிரச்சினை.

    மற்றொரு உதாரணம் நீங்கள் ஒரு ஆபிசில் வேலைசெய்கிறீர்கள் அங்கு நீங்கள் டாக்குமெண்ட் டைப் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் சுமாராக ஒரு நாளைக்கு 100 டாக்குமெண்ட் டைப் செய்வதாக வைத்துக்கொள்வோம். அப்போது ஆபிசில் சிலபேர்களை வேலையைவிட்டு எடுத்துவிடுகிறார்கள் அதனால் என்ன ஆகிறது அவர்களுடைய வேலையும் உங்கள் தலைமேல் விழுகிறது. இப்போது நீங்கள் ஒருநாளைக்கு 150 டாக்குமெண்ட் தயார்செய்ய வேண்டும் இல்லை என்றால் வேலையைவிட்டு நிறுத்திவிடுவோம் என்கிறார்கள். அப்போது வேலைபளு காரணமாக ஒருவித அழுத்தம் ஏற்படும். இந்த வேலை இல்லை என்றால் நான் என்ன செய்வது? அல்லது இவ்வளவு வேலையை நாம் ஒருவரே எப்படி செய்வது, இந்த கூடுதல் வேலையினால் வீட்டில் உள்ள வேலைகள் எல்லாம் தடைபடும். குடும்பத்திலும் பிரச்சினை ஏற்படும். இதனால் மன அழுத்தம் உருவாகும்.

    எனவே எப்போதும் ஸ்டிரஸ் (மன அழுத்தம்) எதனால் உருவாகிறது என்பதை ஆராய வேண்டும். எனவே உங்களுடைய எண்ண ஓட்டத்தை அறிந்துகொள்ள ஒரு 10 நாட்கள் தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்னர் இன்றைக்கு நம் மனதை பாதித்த மற்றும் அழுத்தத்தை கொடுத்த விஷயங்கள் என்னென்ன என்பதை தினமும் எழுதிக்கொண்டு வர வேண்டும்.

    10 நாட்கள் கழித்து அன்றைக்கு உங்களுக்கு மிகவும் பிரச்சினையாக இருக்கக்கூடிய விஷயங்களை கண்டறிந்து அவற்றை வட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அந்த 10 பிரச்சினைகளுக்கும் உங்களால் தீர்வு காண முடியுமா என்பதை குறித்து முடிவு எடுக்க வேண்டும். அதில் நீங்கள் யோசித்த பிரச்சினைக்கான தீர்வுகளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக செயல்படுத்திக்கொண்டே வர வேண்டும். எழுதிவைத்த எல்லா தீர்வுகளும் முடிவுக்கு வராது. ஆனால் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நாம் எடுக்கும் முயற்சிகள் தான் பிரச்சினைகளில் இருந்தும், மன அழுத்தத்தில் இருந்து வெளியே வருவதற்கு உதவியாக இருக்கும்.

    சிலநேரங்களில் நாம் தோல்வியை கூட தழுவலாம். ஆனால் தொடர்ந்து இதை செயல்படுத்துக்கொண்டே வந்தால் நமக்கு பிரச்சினை வந்தால் அதனை எப்படி தீர்த்துக்கொள்வது என்பதை பற்றிய புரிதல் இருக்கும். சில நேரங்களில் நமக்கு எழுதி வைத்த சில பிரச்சினைகளுக்கு தீர்வே இல்லை என்றால் அதனைவிட்டு நாம் வெளியேற முடியுமா என்பதை பார்க்க வேண்டும். இப்போதுதான் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் கடுமையான நிலைக்கு வருவீர்கள்.

    இதில் நீங்கள் புரிந்துகொள்வது என்னவென்றால் வாழ்க்கையில் எப்போதும் ஒன்று இருந்தால் ஒன்று இருக்காது. எனக்கு நிறைய சம்பளமும் வேணும், நான் குறைந்த நேரம் தான் வேலை செய்ய வேண்டும். நான் குடும்பத்துடன் நிறைய நேரம் செலவிட வேண்டும் என்றால் அனைத்தும் எல்லாருக்கும் நடந்துவிடுவதில்லை. ஏதாவது ஒரு விஷயம் மட்டும் உங்கள் வாழ்க்கையில் இழக்க வேண்டி வரும். பணத்தையோ, குடும்பத்துடன் நேரம் செலவிடுவதையோ அல்லது உழைப்பையோ என்பதை யோசித்து பார்த்து அதற்கு நீங்கள் நிரந்தர தீர்வு எடுக்க வேண்டும்.

    அதாவது உங்களுக்கு எது முக்கியம் என்பதை தேடி ஆராய்ந்து பார்த்து அது உங்களுக்கு எந்த அளவுக்கு பயனை தருகிறது என்று ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். அடுத்தது ரொம்ம முக்கியமான விஷயம் என்னவென்றால் எடுத்த முடிவை ஃபாளோ செய்ய வேண்டும். ஒவ்வொரு தடவையும் முடிவை மாற்றி மாற்றி எடுக்காமல் எடுத்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர முடியும். இல்லையென்றால் மன அழுத்தத்தில் இருந்து வெளியே வருவது கடினம்.

    எனவே நாம் ஒரு முடிவெடுத்தால் அந்த முடிவில் நிலைத்திருக்க வேண்டும். அல்லது கொஞ்ச நாளைக்காவது அதை கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு தடவையும் முடிவெடுத்த பிறகு நீங்கள் எடுத்த முடிவில் இருந்து மாற்றிக்கொண்டே வந்தால் மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர முடியாது.

    இந்த மன அழுத்தத்தில் இருந்து வெளியேற யோகா, தியானம் செய்வது சிறந்தது. அதிலும் சென் எனப்படுகிற தியானம் இதற்கு மிகவும் உதவும்.

    • தொடர்ந்து பெய்த திடீர் மழையால், வெயிலின் தாக்கம் குறைந்து குளிர் காற்று வீசியது.
    • இந்த மழை விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருந்தது

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி, ஆவினங்குடி, பெண்ணாடம் சுற்று வட்டார பகுதி மக்கள் வெயிலினால் அவதியடைந்து வந்தனர். குருவை சாகுபடி செய்த விவசாயிகள் பாசன நீர் பற்றாக்குறையால் பயிர்கள் வாடுவதை கண்டு வேதனை அடைந்து வந்தனர். இந்நிலையில், திட்டக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் கரு மேகங்கள் சூழ்ந்தது. தொடர்ந்து பெய்த திடீர் மழையால், வெயிலின் தாக்கம் குறைந்து குளிர் காற்று வீசியது. இதில் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். மேலும், இந்த மழை விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. அதே நேரத்தில் திட்டக்குடி, விருத்தாசலம் சாலை, திட்டக்குடி பஸ் நிலையம் ஆகிய இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. குறிப்பாக திட்டக்குடி பஸ் நிலையத்தில் தேங்கி நிற்கும் மழை நீருடன் சாக்கடை நீர் கலக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்கள் இதில் நடந்து செல்லவேண்டியுள்ளது.

    மழை பெய்தாலே திட்டக்குடி பஸ் நிலையத்தில் இந்நிலை தொடர்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி, ஆவினங்குடி, பெண்ணாடம் சுற்று வட்டார பகுதி மக்கள் வெயிலினால் அவதியடைந்து வந்தனர். குருவை சாகுபடி செய்த விவசாயிகள் பாசன நீர் பற்றாக்குறையால் பயிர்கள் வாடுவதை கண்டு வேதனை அடைந்து வந்தனர். இந்நிலையில், திட்டக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் கரு மேகங்கள் சூழ்ந்தது. தொடர்ந்து பெய்த திடீர் மழையால், வெயிலின் தாக்கம் குறைந்து குளிர் காற்று வீசியது.

    இதில் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். மேலும், இந்த மழை விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. அதே நேரத்தில் திட்டக்குடி, விருத்தாசலம் சாலை, திட்டக்குடி பஸ் நிலையம் ஆகிய இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. குறிப்பாக திட்டக்குடி பஸ் நிலையத்தில் தேங்கி நிற்கும் மழை நீருடன் சாக்கடை நீர் கலக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்கள் இதில் நடந்து  செல்ல வேண்டியுள்ளது. மழை பெய்தாலே திட்டக்குடி பஸ் நிலையத்தில் இந்நிலை தொடர்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • அளவீடு, பட்டா மாறுதல் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பித்தால், பல மாதங்கள் அலைகழிக்கின்றனர்.
    • முதியோர், விதவை உதவி தொகை பலருக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    உடுமலை :

    உடுமலையில் நடந்த ஜமாபந்தியில் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழங்கிய மனுவில், அரசு போக்குவரத்து கழகம் சார்பில், கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்களில் பாதி பஸ்கள் இயக்கப்படுவதில்லை.சர்வே துறையில் அளவீடு, பட்டா மாறுதல் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பித்தால், பல மாதங்கள் அலைகழிக்கின்றனர்.

    முதியோர், விதவை உதவி தொகை பலருக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உடுமலை தங்கம்மாள் ஓடை பகுதியில் கான்கிரீட் கரை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. பருவ மழைக்கு முன் முடிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பா.ஜ.க., சார்பில் வழங்கிய மனுவில், கபூர்கான் வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.இந்திய கம்யூனிஸ்டு சார்பில், கணக்கம்பாளையம், கணேசபுரம் பகுதியில் 20 ஆண்டுக்கும் மேலாக வசித்து வருபவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.

    மேலும் சின்ன வீரம்பட்டி பகுதி நேர ரேஷன் கடையை முழு நேர கடையாக மாற்றவும், இந்திராநகரில் ஓட்டுச்சாவடி அமைக்க வேண்டும்.உடுமலை, சின்னவீரம்பட்டி, பெரியகோட்டை, அய்யம்பாளையம், மடத்துக்குளம் தாலுகா, தாந்தோணி, மைவாடி, ராஜாவூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த ஒரு ஆண்டாக மர்ம விலங்குகள் கடித்து நூற்றுக்கணக்கான ஆடு, மாடுகள் இறந்துள்ளன. பெருமளவு விவசாயிகள் பாதித்துள்ள நிலையில் இதற்கு தீர்வு காணவும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. 

    • மீனவர்களின் படகுகளுக்கு காப்பீடு எடுப்பதில் அரசு உதவி செய்ய வேண்டும்
    • மத்திய மந்திரி எல்.முருகனிடம் விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை

    நாகர்கோவில்:

    டெல்லியில் மத்திய மந்திரி முருகனை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்தித்தார்.

    அப்போது குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் அடிக்கடி நிகழும் கடல் சீற்றத்தால் மீனவர் கிராமங்களில் கடல் நீர் புகுந்து சேதங்கள் விளைவிப்பதை தெரிவித்து அதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனக்கோரி மனு கொடுத்தார்.

    மேலும் கடற்கரை கிராம சாலைகள் கடலால் அடித்து சொல்லப்படுவதால் மக்களின் பயண சிரமங்களையும் விவரித்தார். மக்களின் உயிர் மற்றும் உடமைகளுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் கடல் தடுப்பு சுவர் எழுப்பி கிராமங்களை பாதுகாக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி, இதற்காக மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

    கடலில் வழி தவறி அன்னிய நாட்டு கடல் எல்லைக்குள் செல்லும் மீனவர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அந்நாடுகளுடன் சிறப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை விஜய் வசந்த் எம்.பி. மீண்டும் வலியுறுத்தினார். கடலில் மீன் பிடிக்கும் மீனவர்கள் விபத்தில் சிக்கும் போது அவர்களை கால விரயம் செய்யாமல் மீட்பதற்கு ஹெலிகாப்டர் தளம் அமைப்பது மற்றும் விரைவு படகுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    மேலும் மீனவர்களின் படகுகளில் தொலைதொடர்பு கருவிகள் பொருத்தவும் படகுகளின் காப்பீடு எடுப்பதில் அரசு உதவி செய்ய வேண்டும் எனவும் கேட்டு கொண்டார். இது தொடர்பான மனுவையும் அளித்தார்.

    • ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற நிரந்தர தீர்வு கான கோரிகை விடுக்கப்பட்டுள்ளது
    • மக்களின் வரிப்பணம் ரூ.3 கோடி வீணாகி விட்டதாக புலம்பல்

    திருச்சி:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய இரண்டு சாலைகளிலும் ெரயில்வே தண்டவாளத்தை மக்கள் கடந்து செல்லும் வகையில் ெரயில்வே மேம்பாலம் மற்றும் ெரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் ரூ.3 கோடி மதிப்பீட்டில் திருச்சி மற்றும் திண்டுக்கல் சாலைகளில் ெரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டதில் இருந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலைதான் இன்றளவும் நீடித்து வருகிறது. சாதாரண மழை பெய்தாலே மழைநீர் சுரங்கப்பாதையில் முழுவதுமாக நிரம்பி விடுகிறது. சாலை எது, பாதை எது என்று தெரியாத அளவுக்கு முழுமையாக குளம்போல் காணப்படும் இந்த சுரங்கப்பாதையில் தண்ணீர் வற்ற பல நாட்கள் ஆகும். அதுவரை பல கிலோ மீட்டர் சுற்றிச்செல்லும் நிலைதான் உள்ளது.

    அதேபோல் உடனடியாக அந்த மழை நீரை அகற்றுவதற்கான எந்த முயற்சியிலும் அதிகாரிகள் ஈடுபடுவதில்லை. இதனால் இரு சுரங்கப்பாதைகளிலும் சுமார் ஐந்து அடிக்கு மேல் நீர் முழுவதுமாக நிரம்பி இருக்கும். இப்படி இருக்கும் சூழலில் திருச்சி சாலையில் உள்ள ெரயில்வே சுரங்கப்பாதையில் இதுவரை நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதேபோல் திண்டுக்கல் சாலையில் உள்ள ெரயில்வே சுரங்கப்பாதையிலும் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    இப்படியான மனித உயிர்களை காவு வாங்கும் சம்பவம் அதிகரித்துக் கொண்டே இருக்கின்ற சூழலில் இரண்டு சுரங்கப்பாதைகளிலும் உள்ள மழை நீரை நிரந்தரமாக வெளியேற்றும் வகையில் அதிகாரிகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். சுரங்கப் பாதையின் அருகே உள்ள கழிவுநீர் கால்வாய்களை ஆழமாக தூர்வாரி சுரங்கப்பாதையில் தேங்கும் நீரை மின் மோட்டார் மூலம் கழிவுநீர் வாய்க்கால் வழியாய் உடனே வெளியேற்றினால் மட்டுமே இனிவரும் காலங்களில் உயிர்பப்லி இல்லா நிலையை ஏற்படுத்த முடியும்.

    அது மட்டுமின்றி மக்கள் நிரந்தரமாக சுரங்கப்பாதையை பயன்படுத்திட ஏதுவாக இருக்கும். மணப்பாறையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக தற்பொழுதும் இரண்டு சுரங்கப்பாதைகளிலும் மழை நீர் முழுவதுமாக தேங்கி நிற்கிறது. திருச்சி சாலையில் உள்ள ெரயில்வே மேம்பாலத்திற்காக அமைக்கப்பட்ட மின் மோட்டார் பழுது ஏற்பட்டு சரி செய்யப்படாத நிலையில் உள்ளது. இதனால் அவ்வப்போது தற்காலிக மின் மோட்டாரை பயன்படுத்தி மட்டுமே நீரை வெளியேற்றும் நிலை இருந்து வருகிறது.

    சுரங்கப்பாதையில் முழுவதுமாக நீர் நிரம்பியது ஒருபுறம், ெரயில்வே மேம்பாலத்தை கடந்து செல்ல சிரமம் மறுபுறம் என மக்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. இதுபோன்ற நேரங்களில் ெரயில்வே தண்டவாளத்தை கடக்க முயற்சிக்கும்போது ெரயிலில் அடிபட்டு உயிரிழந்தவர்களும் ஏராளம். மக்களின் நலன் கருதி மட்டுமே சுமார் ரூ.3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ெரயில்வே சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளதே தவிர மக்களின் உயிர் போவதற்கு அல்ல என்பதை அதிகாரிகள் உணர வேண்டும்.

    அதற்கேற்ப இரண்டு சுரங்கப்பாதைகளிலும் உள்ள மழை நீரை போர்க்கால அடிப்படையில் வெளியேற்றுவதுடன், கழிவுநீர் கால்வாய்களை தூர்வார வேண்டும். இனி மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் சுரங்கப்பாதையில் மழை நீர் நிரம்பினால் அதை உடனே வெளியேற்றுவதற்கான துரித நடவடிக்கைக்கான நிரந்தர முயற்சி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மணப்பாறையில் உள்ள திருச்சி சாலை ெரயில்வே மேம்பாலத்தில் மழை நீர் முழுவதுமாக தேங்கி இருந்ததை படத்தில் காணலாம்.

    • குடிநீர் பிரச்சனைக்கு ஓரிரு ஆண்டுகளில் நிரந்தர தீர்வு காணப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
    • பணிகள் நடைபெற்றவருகிறது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மன்னர் ராஜகோபால தொண்டைமானின் திருஉருவ சிலைக்கு தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துைற அமைச்சர் கே.என்.நேரு, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    பின்னர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, தமிழகத்தில் பத்தாண்டு காலமாக நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் எந்த விதமான அடிப்படை வசதிகளையும் அப்போதைய அரசு ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.

    கடந்த ஆண்டு தமிழக முதல்வர் கலைஞர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.இந்த ஆண்டும் ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை கொண்டு நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் அவசர பணிகள் மற்றும் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

    நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவி வருவது தெரிகிறது. இருந்த போதிலும் தமிழக அரசு மிகப்பெரிய நிதி சுமையில் உள்ளதால் காலிப்பணியிடங்களை நிரப்புவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. நிதி சுமை சீரானதும் அது பற்றி பரிசீலனை செய்து தேவையான இடங்களில் பணியாளர் நிரப்பப்படும். இதற்கிடையில் தேவையான இடங்களில் பொறியாளர் பணியிடங்களை நிரப்ப கருத்துரிமை கோரப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சரின் அனுமதி பெற்று தேவைக்கு ஏற்ப அந்த பணியிடங்கள் நிரப்பப்படும்.

    புதுக்கோட்டையில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு தற்காலிக தீர்வு காணும் வகையில் 122 ேகாடி ரூபாய் மதிப்பீட்டில் தற்போது பணிகள் நடைபெற்றவருகிறது. புதுக்கோட்டை நகரின் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் 690 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஓரிரு ஆண்டுகளில் நிரந்தர தீர்வு காணப்படும்.

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    ×