search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதட்டம்"

    • வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் சிதம்பரம் நடராஜர் கோவில், பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு வந்து செல்வது வழக்கம்.
    • கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமிற்கு தகவல் கொடுத்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் சுற்றுலா மையம் உள்ளது. இங்கு தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து படகு சவாரி செய்து செல்வர். மேலும், தமிழ்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் சிதம்பரம் நடராஜர் கோவில், பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு வந்து செல்வது வழக்கம். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தால் பராமறிக்கப்படும் இந்த சுற்றுலா மையத்தில் அரசின் தங்கும் விடுதியும், தனியார் தங்கும் விடுதிகளும் உள்ளது. இந்த விடுதிகள் அனைத்து விடுமுறை நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் நிரம்பி வழியும்.

    சுற்றுலா வளர்ச்சி கழக தங்கும் விடுதியை சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு பணியாளர்கள் நேற்று ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த ஒரு அறையில் கைத்துப்பாக்கி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனைக் கண்டு பதறிப்போன ஊழியர்கள், அந்த அறையை விடடு தலைதெரிக்க ஓடிவந்தனர். இதனால் மற்ற அறைகளில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள், பதட்டமடைந்து சுற்றுலா கழக விடுதியை விட்டு வெளியில் வந்தனர். பின்னர் தகவலறிந்து தங்களின் அறைக்கு திரும்பி சென்றனர் இது குறித்து துப்புரவு பணியாளர்கள் சுற்றுலா கழக மேலாளர் பைசலிடம் தகவல் கூறினர். துப்புரவு ஊழியர்களுடன் தங்கும் அறைக்கு சென்று பார்வையிட்டார். அங்கிருந்த கைத்துப்பாக்கி ஏர்கண் என்பதை உறுதி செய்தார். இது தொடர்பாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமிற்கு தகவல் கொடுத்தார்.

    இதனைத் தொடர்ந்து கிள்ளை போலீசார் பிச்சாவரத்தில் உள்ள சுற்றுலா கழக தங்கும் விடுதிக்கு விரைந்து சென்ற னர். அங்கிருந்த அறையில் கிடந்த கைத்துப்பாக்கியை கைப்பற்றினர். மேலும், கடந்த 2 தினங்களாக இங்கு தங்கியிருந்தவர்களின் பட்டியலை பெற்றுக் கொண்டனர். அவர்களை தொடர்பு கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பிச்சாவரம் சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இடுப்பை வளைத்து முக்கோண நிலையில் இருக்கும்.
    • தோள்பட்டை, கைகள், கால் ஆகியவற்றுக்கு வலிமையையும் நெகிழ்வுத் தன்மையையும் கொடுக்கும்.

    திரிகோணாசனம் என்பது ஆங்கிலத்தில் triangle pose என்று அழைப்பார்கள். இடுப்பை வளைத்து முக்கோண நிலையில் உடல் இருக்கும்படி செய்யும் இந்த ஆசனம் ஜீரணத்தை மேம்படுத்தவும், தொப்பையை குறைக்கவும், இன்சுலின் உற்பத்தியை தூண்டுவதற்கும் என பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை நமக்கு கொடுக்கிறது.

    உடல் தசைகளை நன்கு நீட்டி மடக்கும் இலகுவான தன்மையையும் உடலுக்கு நல்ல நெகிழ்வுத் தன்மையையும் கொடுக்கும். குறிப்பாக தோள்பட்டை, கைகள், கால் ஆகியவற்றுக்கு வலிமையையும் நெகிழ்வுத் தன்மையையும் கொடுக்கும்.

    ஜீரணக்கோளாறுகள் தான் உடலில் நிறைய பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கின்றன. அவற்றை சரிசெய்யவும் ஜீரண ஆற்றலை மேம்படுத்தவும் திரிகோணாசனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    கை, கால், இடுப்பு, கழுத்து, தோள்பட்டை ஆகியவற்றை வளைத்து நீட்டி செய்கின்ற இந்த ஆசனம் அடிவயிற்று பகுதி மற்றும் ஜீரண மண்டலத்தை தூண்டும் வேலையை செய்கிறது.

    முக்கோணம் போன்ற நிலையில் இருக்கும் இந்த திரிகோணாசத்தை செய்வதன் மூலம் சுவாச மண்டலத்தில் இருக்கும் அடைப்பு போன்றவை நீங்கும். ஆழமாக சுவாசிக்க உதவி செய்யும்.

    நன்கு மூச்சை இழுத்து அதிகமான ஆக்சிஜன் அளவைப் பெற முடியும். இதனால் நுரையீரலுக்கும் அதிக அழுத்தம் ஏற்படாமல் அதன் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்யும். ஆஸ்துமா, வீசிங் போன்ற சுவாச மண்டல பிரச்சினை இருப்பவர்கள் இந்த திரிகோணாசனத்தை செய்து வருவது நல்லது.

    முதுகு வலி பிரச்சினை உள்ளவர்களுக்கு இந்த திரிகோணாசனம் மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். இந்த ஆசனம் செய்யும்போது மார்பு பகுதி விரிவடைந்து மூச்சு விடுவது மிக எளிதாக இருக்கும். ஆழமாக மூச்சை இழுத்து விட முடியும். இதனால் மார்பு மற்றும் இடுப்பு பகுதியில் ஏற்படும் அழுத்தம் குறைந்து இடுப்பு மற்றும் முதுகுவலி குறைய ஆரம்பிக்கும்.

    இந்த திரிகோணாசனம் செய்யும் போது உடல், மனம் இரண்டுமே ரிலாக்சாக இருக்கும். இது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கச் செய்யும். இதனால் மன அழுத்தம், பதட்டம், டென்ஷன், மனச்சோர்வு ஆகியவை குறையும்.

    சிலருக்கு இடுப்பை வளைத்து செய்யும் எந்தவித வேலைகளும் செய்யவே முடியாது. ஏனெனில் இடுப்பு பகுதியில் உள்ள தசைகள் மிகவும் இறுக்கமாக இருக்கும். இந்த இறுக்கத்தை குறைத்து இடுப்பு தசைகளை நெகிழ்வுத் தன்மையோடும் வலுவாகவும் வைத்திருக்க உதவும்.

    திரிகோணாசனம் செய்யும் போது ஒட்டுமொத்த உடலும் வலிமை அடையும். அதோடு இடுப்பு பகுதியில் உள்ள தசைகளை வலுப்படுத்தும். குறிப்பாக இடுப்பு தசைகளை வலுப்படுத்துவது மட்டுமின்றி, அடிவயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்கச் செய்து தொப்பையை குறைக்க உதவி செய்கிறது.

    • கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சத்ரபதி வீர சிவாஜியின் 9 அடி சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
    • சிலையின் தலைப்பகுதியை போலீசார் துணியால் மூடினர்.

    கன்னியாகுமரி :

    குழித்துறை அருகே மேல்புறத்தை அடுத்த வட்டவிளையில் தோட்டத்துமடம் நவநீதகி ருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலையொட்டி கோவில் குளம் உள்ளது. இந்த குளத்தின் அருகே கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சத்ரபதி வீர சிவாஜியின் 9 அடி சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

    இந்த சிலைக்கு சத்ரபதி வீரசிவாஜி பிறந்த தினம், சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் ராம நவமி, விஜயதசமி ஆகிய தினங்களில் இந்து அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

    இந்த சிலையை நேற்று நள்ளிரவில் ஒரு கும்பல் உள்ளே புகுந்து தலைப்பா கத்தை உடைத்து உள்ளது. இச்சம்பவம் இன்று அதிகாலை முதல் காட்டுத்தீ போல் பரவியது. இதை யடுத்து ஆலய நிர்வாகிகள் மற்றும் இந்து அமைப்பினர் அங்கு குவிந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். சிலையின் தலைப்பகுதியை போலீசார் துணியால் மூடினர். மேலும் ஆலய தலைவர் நடராஜன் குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். தற்போது அப்பகுதியில் பதட்ட நிலை வருவதால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • அருப்புக்கோட்டை அருகே கோவில் திருவிழா முளைப்பாரி ஊர்வலம் செல்வதில் பிரச்சினை ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
    • இது தொடர்பாக அந்த சமூகத்தினர் போராட்டமும் நடத்தினர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதை முன்னிட்டு அந்தப்பகுதியை சேர்ந்த ஒரு சமூகத்தினர் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று அங்குள்ள பெரிய கண்மாயில் கரைப்பது வழக்கம்.

    இந்த ஆண்டு முளைப்பாரி ஊர்வலம் செல்லும் பாதை மிகவும் மோசமாக இருந்ததால் வேறு பாதையில் செல்ல அந்த சமூகத்தினர் முடிவு செய்தனர். இதற்கு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    வேறொரு பகுதி வழியாக முளைப்பாரி சென்றால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை பாதிக்கப்படும். எனவே குறிப்பிட்ட பகுதியில் முளைப்பாரி ஊர்வலத்தை அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தினர். இது தொடர்பாக அந்த சமூகத்தினர் போராட்டமும் நடத்தினர்.

    தகவல் அறிந்த போலீசார் அந்த சமுதாயத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் 40 பேர் மட்டும் அந்தப்பகுதியில் முளைப் பாரி எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக அந்த கிராமத்தில் பதட்டமான சூழல் ஏற்பட்டது. 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்தநிலையில் விருது நகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு சமுதா யத்தினர் கோரிக்கை மனு அளித்தனர். அதில், கடந்த காலங்களில் முளைப்பாரி ஊர்வலம் நடந்த பகுதியி லேயே தற்போது ஊர்வலம் நடத்த அனுமதிக்க வேண்டும். வேறொரு பகுதியில் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கக்கூடாது. இதனால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும் என தெரிவித்தனர்.

    கோவில் முளைப்பாரி ஊர்வலம் செல்வது தொடர்பாக இரு சமுகத்தினரிடையே பிரச்சினை ஏற்பட்ட சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • விழுப்புரத்தில் ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டதால் பதட்டம் ஏற்பட்டது.
    • அதிகாரிகள் மற்றும் போலீசாரை தடுத்து நிறுத்தி வாக்கு வாதம் செய்தனர்.

    விழுப்புரம், ஆக.5-

    விழுப்புரம் நகரின் மைய பகுதியில் வி.மருதூர் ஏரி உள்ளது. இந்த ஏரி 114 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியை ஆக்கிரமித்து சுமார் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இந்த ஏரியை நம்பி ஆயிரக்கணக்கான விளைநிலங்கள் உள்ளது. ஏரி ஆக்கிரமிக்கப்பட்ட தால் பாசனத்துக்கு வழியின்றி அனைத்து வாய்க்காலும் தூர்ந்து போய் காணப்பட்டது. எனவே நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. எனவே மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு வீடுகளை மாவட்ட நிர்வாகம் கணக்கெடுத்து வந்தது. வி.மருதூர் ஏரியில் கட்டப்பட்டுள்ள வீடுகளை அப்புறப்படுத்துமாறு மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே பலமுறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் ஆக்கிர மிப்பாளர்கள் வீடுகளை அகற்றவில்லை.

    இந்த நிலையில் இன்று வி.முருதூர் ஏரியில் உள்ள வீடுகள் அகற்றப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறி வித்திருந்தது. அதன்படி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமையில் ஏராளமான போலீசார் ஏரி பகுதிக்கு சென்ற னர். அப்போது அக்கிரமிப்பாளர்கள், அதிகாரிகள் மற்றும் போலீசாரை தடுத்து நிறுத்தி வாக்கு வாதம் செய்தனர். உடனே அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க அனுமதிக்காவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். இதனால் அங்கு பதட்ட மான சூழ்நிலை ஏற்பட்டது. எனவே கோர்ட்டு உத்தரவு படி ஆக்கிரமித்த வீடுகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. தொடர்ந்து இடிக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் அங்கு பதட்டம் நிலவியது. இதனைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமையில், டி.எஸ்.பி. பார்த்திபன், இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், ரவிச்சந்திரன், ஜெயசங்கர், தாசில்தார் ஆனந்தகுமார் ஆகியோர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

    ×