search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "special"

    • கிருத யுகத்தில் சிம்ம வாகனத்தில்தான் பிள்ளையார் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
    • பரப்பிரம்ம சொரூபமாக விளங்குபவர் கணபதி,

    விநாயகரின் வாகனங்கள்

    விநாயகர் மூஷிக வாகனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆனால் அவர் மூஞ்சுறுவைத் தவிர மயில், சிங்கம், ரிஷபம், யானை என்ற வாகனங்களிலும் பவனி வருவார் என்பது அனைவருக்கும் தெரியாத ஒன்றாகும்.

    கிருத யுகத்தில் சிம்ம வாகனத்தில்தான் பிள்ளையார் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இன்றும் ஹேரம்ப கணபதி சிம்ம வாகனத்தில்தான் வீற்றிருப்பார்.

    திரேதா யுகத்தில் முருகனுக்கு உதவுவதற்காக மயில் வாகனத்தில் வந்தார்.

    ஆண் குழந்தை தரும் விநாயகர்

    திண்டிவனம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் 12 கி.மீ மேற்கே அமைந்துள்ள கிராமம் தீவனூர்.

    அந்த கிராமத்தில் உள்ள பொய்யாமொழிப் பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை.

    கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை

    கணபதி என்ற சொல்லில் உள்ள "க" என்னும் எழுத்து ஞானத்தையும், "ண" என்னும் எழுத்து ஜீவன்களின் மோட்சத்தையும், "பதி" என்னும் சொல் தலைவன் என்பதையும் குறிக்கிறது.

    பரப்பிரம்ம சொரூபமாக விளங்குபவர் கணபதி, ஞானத்திற்கும் மோட்சத்திற்கும் அவரே தலைவன் என்பதால்தான் அவர் கணபதி என்றழைக்கப்படுகிறார்.

    மேலும் கணபதி என்னும் சொல் சிவபெருமானின் கணங்களுக்கு அதிபதி என்பதையும் குறிக்கும்.

    விநாயகரின் அன்பு வேண்டுமா?

    1. விநாயகர் அகவல்

    2. விநாயகர் கவசம்

    3. விநாயகர் சகஸ்ரநாமம்

    4. காரிய சித்தி மாலை

    5. விநாயகர் புராணம்

    ஆகியவற்றை தினமும் படித்து அருகம்புல்லால் விநாயகனை வழிபட்டு வந்தால் விநாயகரின் அருள் நமக்குக் கிடைக்கும்.

    • வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழி பட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.
    • விபூதியால் விநாயகர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.

    பிள்ளையார் உருவ பலன்கள்

    மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட, சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.

    மண்ணால் செய்த பிள்ளையாரை வழிபட, நல்ல பதவி, அரசு வேலை கிடைக்கும்.

    குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்.

    புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும். விவசாயம் செழிக்கும்

    வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும்,வெளியேயும் உள்ள கட்டிகள்(கொப்பளம்) கரையும்.வளம் தருவார்

    உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின்தொல்லை நீங்கும்.எதிரிகளை விரட்டுவார்.

    வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும். செல்வம் உயரச் செய்வார்.

    விபூதியால் விநாயகர் பிடித்து வழிபட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.

    சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.

    சாணத்தால் பிள்ளையார் செய்துவழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழி வகுக்கும்.

    வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.

    வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும்.

    சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழிபட சர்க்கரை நோயின் வீரியம் குறையும்.

    பசுஞ்சாண விநாயகர்- நோய்களை நீக்குவார்.

    கல் விநாயகர்- வெற்றி தருவார்.

    யானைத்தலை விளக்கம்

    தலை என்பது உள் அவயங்களான மூளை, கண், காது, வாய், மூக்கு என முக்கியமான உறுப்புகளைத் தன்னுள் கொண்ட ஒரு கூட்டமைப்பு.

    அறிவின் இருப்பிடத்தை விசாலமான நுண்ணறிவை, பேரறிவை, காக்க அமைந்ததே யானைத்தலை.

    யானைத்தலையானின் தலையில் கிரீடம் சூடி அவரை வணங்கும் மக்களுக்கு ராஜபோக வாழ்வுகிட்டும்.

    • வீடுகளில் பிள்ளையார் அகவல், காப்பு, புராணம் போன்றவற்றைப்படித்து வரலாம்.
    • அடுத்த நாளோ ஓரிருநாட்களிலோ ஆற்றிலோ கடலிலோ கரைத்தல் வேண்டும்.

    விநாயகர் சதுர்த்தி சிறப்பு

    ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் வருவது விநாயகர் சதுர்த்தி விநாயகரின் அவதார தினம். சிவனார் அபிஷேகப்பிரியர், திருமால் அலங்காரபிரியர், பிள்ளையாரோ நைவேத்தியப்பிரியர்.

    அவருக்கு பிடித்த அவல், பொரி, கடலை கொழுக்கட்டை, கரும்பு போன்ற நிவேதனப் பொருள்களை ஏழை எளியோருக்கு தானம் செய்தால் நல்லது.

    விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலையிலேயே எழுந்து, நற்சிந்தனையோடு நன்னீரில் குளித்துப் பூஜைக்கு வேண்டிய பொருள்களைச்சேகரிக்க வேண்டும்.

    களிமண்ணில் செய்த பிள்ளையாரைப் பல்வேறு விதமான இலைகள், பூக்களில் (21 வகையான) அருகம் புல்லையும் இரண்டு இரண்டாக சேர்த்து பூஜிக்க எடுத்து வைத்து கொள்ளலாம்.

    வீடுகளில் பிள்ளையார் அகவல், காப்பு, புராணம் போன்றவற்றைப்படித்து வரலாம். பிள்ளையார் வழிபாடு என்ற அத்தியாயத்தில் கூறியுள்ளபடி, அவருக்கு உபச்சரங்களான,

    ஆவாகனம், ஆசனம், ஸ்தாபனம், பாதபூஜை, நீர் அளித்தல், பால், தயிர், மோர் அளித்தல், பஞ்சாமிருதம், துணிகள், சந்தனம், குங்குமம், ஆபரணங்கள், மலர், அட்சதை, தூபம், தீபம், குடை, தாம்பூலம், சுற்றி வணங்குதல், தரையில் வீழ்ந்து வணங்குதல், சாமரம் வீசுதல், போன்ற சேவைகளை செய்தல் வேண்டும்.

    வீட்டில் இது போல் நம்மால் செய்ய முடியாதவர்கள் கோவில் சென்று சிறப்பாக சேவை செய்தல், பாடல் கேட்டல், காப்பு, அகவல், படிப்பதும் நல்ல பயன் தரும்.

    பூஜையில் வைத்த பிள்ளையார் பிம்பத்தை அடுத்த நாளோ ஓரிருநாட்களிலோ ஆற்றிலோ கடலிலோ கரைத்தல் வேண்டும்.

    ஒளவையார் விநாயகருக்கு பாலும், தேனும் பாகும், பருப்பும் கொடுத்தார்.

    அருணகிரிநாதர் விநாயகப் பெருமானுக்கு உகந்ததாக கனியும், அப்பம், அவல், பொரி, அமுது, இளநீர், எள்ளுருண்டை, வெள்ளரி, விளாம்பழம், நாவற்பழம் போன்ற பலபொருள்களைத் திருப்புகழில் குறிப்பிடுகின்றார்.

    • போக்குவரத்து கழகம் சார்பில் பண்டிகை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.
    • நாளை 16-ந் தேதி ஆடி அமாவாசை கொண்டாடப்படுகிறது.

    சேலம்:

    போக்குவரத்து கழகம் சார்பில் பண்டிகை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.

    அதன்படி நாளை 16-ந் தேதி ஆடி அமாவாசை கொண்டாடப்படுகிறது. சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் சேலம் தர்மபுரியில் இருந்து நாளை மாதேஸ்வர மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் சேலம் டவுன் பஸ் நிலையத்திலிருந்து சித்தர் கோவிலுக்கும், சேலத்தில் இருந்து பவானி கூடுதுறைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதே போல சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்தும் மேட்டூர் மாதேஸ்வரன் மலைக்கும் தர்மபுரி பஸ் நிலையத்தில் இருந்து மேட்டூர் மாதேஸ்வரன் மலைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இது குறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், ஆடி அமாவாசை முன்னிட்டு சேலத்தில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு மேச்சேரி-மேட்டூர் வழியாகவும், மேட்டூரில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு கொளத்தூர்- பாலாறு வழியாகவும், தர்மபுரியில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு மேச்சேரி-மேட்டூர் வழியாகவும், கிருஷ்ணகிரியில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு தர்மபுரி, மேச்சேரி, மேட்டூர், வழியாகவும்,ஓசூரில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு கிருஷ்ணகிரி, தர்ம புரி, மேச்சேரி, மேட்டூர், வழியாகவும், மாதேஸ்வரன் மலைக்கு நாளை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் என்றார்.

    • ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் இன்று சிறப்பு வழிபாடு நடந்தது.
    • இதில் திரளான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாமக்கல்:

    ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் இன்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வெள்ளி கவசம்

    நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு கூழ், துள்ளு மாவு உள்ளிட்டவற்றை படைத்து வழிபட்டனர்.

    இதேபோல், செல்லாண்டியம்மன், வண்டிக்காரன்தெரு பகவதியம்மன், அன்புநகர் சுய வேம்பு மாரியம்மன், கொண்டிசெட்டிபட்டி காளியம்மன் கோவில், மாருதிநகர் மகா மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    இதில் ராசிபுரம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர். இதேபோல் புதுப்பட்டி துலக்க சூடாமணி அம்மன், அழியா இலங்கை அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி வழிபாடு நடந்தது.

    அபிஷேகம்

    பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு கேழ்வரகு கூழ் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் பரமத்திவேலூர் பேட்டை மகா மாரியம்மன், நன்செய் இடையாறு மாரியம்மன், பரமத்திவேலூர் செல்லாண்டியம்மன், புது மாரியம்மன், பேட்டை பகவதியம்மன், பரமத்தி அங்காளம்மன், வேலூர் எல்லையம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன், கொந்தளம் மாரியம்மன், சேளூர் மாரியம்மன், குன்னத்தூர் மாரியம்மன், அய்யம்பாளையம் பகவதி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், பகவதிஅம்மன், செல்லாண்டியம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன், பகவதி அம்மன் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    சேந்தமங்கலம் அடுத்த காந்திபுரம் கருமாரியம்மன் கோவிலில் சாமிக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அதேபோல் முத்து காப்பட்டி மாரியம்மன், பச்சுடையாம்பட்டி காளியம்மன், சேந்தமங்கலம் பெரிய மாரியம்மன், கொல்லி மலை அடிவாரத்தில் உள்ள வேங்கமரத்து நாச்சியம்மன், காளப்பநாயக்கன்பட்டி மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. 

    • ஆடி மாதம் 3-வது வெள்ளி கிழமையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்க ளிலும் இன்று சிறப்பு வழிபாடு நடந்தது.
    • இதில் திரளான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாமக்கல்:

    ஆடி மாதம் 3-வது வெள்ளி கிழமையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்க ளிலும் இன்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு கூழ், துள்ளு மாவு உள்ளிட்ட வற்றை படைத்து வழிபட்டனர்.

    இதேபோல், செல்லாண் டியம்மன், வண்டிக்காரன் தெரு பகவதியம்மன், அன்பு நகர் சுய வேம்பு மாரியம்மன், கொண்டி செட்டிபட்டி காளியம்மன் கோவில், மாருதிநகர் மகா மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    அன்ன அலங்காரம்

    ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அன்ன அலங்காரம் செய் யப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட் டது. இதில் ராசிபுரம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராள மானோர் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.

    பரமத்திவேலூர் தாலுகா, கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்ம னுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    தீபாராதனை

    அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு கூழ் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் பரமத்தி வேலூர் காவிரி ஆற்றங்க ரையில் அமைந்துள்ள காசி விசாலாட்சி, பேட்டை மகா மாரியம்மன், நன்செய் இடையாறு மாரியம்மன், பரமத்திவேலூர் செல்லாண்டி யம்மன், புது மாரியம்மன், பேட்டை பகவதியம்மன், பரமத்தி அங்காளம்மன், பரமத்தி வேலூர் எல்லையம்மன், பாண்ட மங்கலம் மாரி யம்மன், பகவதி அம்மன், கொந்தளம் மாரியம்மன், சேளூர் மாரி யம்மன், குன்னத்தூர் மாரி யம்மன், அய்யம்பாளையம் பகவதி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், பகவதி அம்மன், செல்லாண்டி யம்மன், வட கரையாத்தூர் மாரி யம்மன், பகவதி அம்மன் மற்றும் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்க ளில் சிறப்பு அபிஷேக ஆரா தனை களும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாரா தனையும் நடைபெற்றது.

    பால்குட ஊர்வலம்

    சேந்தமங்கலம் அடுத்த முத்துகாப்பட்டி மாரி யம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்தது. இதில் பெண்கள் திரளாக கலந்து கொண்டு பால்குடங்களை சுமந்து ஊர்வலமாக சென்று கோவிலை அடைந் தனர். தொடர்ந்து அம்ம னுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.

    இதேபோல் பச்சுடை யாம்பட்டி காளியம்மன், காந்திபுரம் கருமாரி அம்மன், சேந்தமங்கலம் பெரிய மாரி யம்மனுக்கு ஆடி வெள்ளியை முன் னிட்டு சிறப்பு அலங்கா ரம் செய்யப்பட்டு, பக்தர்க ளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நன்செய் இடையாரில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ளது.
    • விநாய கருக்கு ஆடி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் ,திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது .

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நன்செய் இடையாரில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள விநாய கருக்கு ஆடி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் ,திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது .அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதே போல் பரமத்திவேலூர் பஞ்சமுக விநாயகர், கோப்ப ணம் பாளையம் பரமேஸ்வ ரர் ஆலயத்தில் உள்ள விநாயகர் ,பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள விநாயகர் ,பாண்டமங்கலம் விநாயகர், ஆனங்கூர் விநா யகர், அய்யம்பாளையம் விநா யகர், பிலிக்கல்பா ளையம், கொந்தளம் வேலூர் வட கரையா்தூர், ஜேடர்பாளை யம்,சோழசிரா மணி, கபிலர்மலை, பரமத்தி மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    • நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாமக்கல்:

    ஆடி மாதம் 2-வது வெள்ளிக் கிழமையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    சந்தனகாப்பு

    நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல், செல்லாண் டியம்மன் கோவில், வண் டிக்காரன்தெரு பகவதி யம்மன் கோவில், அன்புநகர் சுய வேம்பு மாரியம்மன் கோ வில், கொண்டிசெட்டிபட்டி காளியம்மன் கோவில், மாருதிநகர் மகா மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    ராசிபுரம்

    ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் வளையல் அலங்காரம் செய்யப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராத னைகள் நடைபெற்றது. எல்லை மாரியம்மன் கோவில், அங்காள பர மேஸ்வரி அம்மன் கோவில், அழியா இலங்கை அம்மன் கோவில், அத்தனூர் மாரியம்மன் கோவில்களிலும் அம்ம னுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.

    பரமத்திவேலூர்

    இதேபோல் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதி களில் உள்ள நன்செய் இடை யாறு மகா மாரி யம்மன், செல்லாண்டி யம்மன், மகாமாரியம்மன், பேட்டை மாரியம்மன், பகவதி யம்மன், கொந்தளம் மாரியம்மன், பாண்ட மங்கலம் மாரியம்மன், பகவதியம்மன், சேளூர் மாரியம்மன், குன்னத்தூர் மாரியம்மன், அய்யம்பாளை யம் பகவதி அம்மன், பர மத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன், ஆனங்கூர் மாரி யம்மன், செல்லாண்டி அம்மன், வடகரை யாத்தூர் பகவதிஅம்மன் கோவில்களில் பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். சேந்த மங்கலத்தில் பச்சு டையாம்பட்டி காளியம்மன் கோவில், கொல்லி மலை நாச்சியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்க ளில் சிறப்பு வழி பாடு மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

    எருமப்பட்டி

    எருமப்பட்டி அருகே பொட்டிரெட்டிபட்டி கிராமத்தில் உள்ள கன்னி மார் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையை யொட்டி சாமிக்கு மலர் அலங்காரங்கள் செய்யப் பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் பொட்டி ரெட்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சேலம்- –சென்னை தேசிய நெடுஞ்சாலையொட்டி பேரூராட்சி அலுவலகம் அருகிலுள்ள தனியார் நிலத்தில் வாமனன் உருவம் பொறிக்கப்பட்ட ஒரு வாமனக்கல் கேட்பாரற்று கிடந்தது.
    • இது மட்டுமின்றி பெருமாள் கோவிலின் நிலத்தை அப கரிப்பவர்கள் வாமனனால் தண்டிக்கப்படுவர் என்பதை யும் இந்த வாமனக்கல் உணர்த்துகிறது.

    வாழப்பாடி:

    தமிழகத்தில் சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல பகுதிகளில் பெருமாள் கோவிலுக்கு தானம் செய்யப்படும் நிலத்தின் எல்லைக்கல்லில் வாமனன் உருவம் பொறிக்கப்படுவது முன்னோர்களிடையே மரபாக இருந்துள்ளது.

    கோவிலுக்கு தானம் கொடுத்த நிலத்தை அப கரிப்பவர்கள், வாமனனால் தண்டிக்கப்படுவர் என்ற நம்பிக்கையில் வாமனன் உருவத்தை பொறித்ததாக கருதப்படுகிறது.

    சேலம் மாவட்டம் பெத்த நாயக்கன்பாளையத்தில் சேலம்- –சென்னை தேசிய நெடுஞ்சாலையொட்டி பேரூராட்சி அலுவலகம் அருகிலுள்ள தனியார் நிலத்தில் வாமனன் உருவம் பொறிக்கப்பட்ட ஒரு வாமனக்கல் கேட்பாரற்று கிடந்தது. இந்த கல்லில் வா மனன் உருவம் மட்டுமின்றி மேற்பகுதியில் சூரியன், சந்திரன் சின்னங்களும், வா மனன் கீழ் நோக்கிய வலது கையில் கமண்டலமும், மேல் நோக்கிய இடது கை யில் குடையும் பொறிக்கப் பட்டுள்ளது. சூரியன், சந்திரன் உள்ளவரை இந்த தானத்தை யாரும் அழிக்கக் கூடாது என்பது இந்த குறியீட்டின் பொருளாகும்.

    இக்கல்லை கண்டறிந்த சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர், வரலாற்று சிறப்பு மிக்க இந்த வாம னக்கல்லை பாதுகாக்குமாறு இப்பகுதியை சேர்ந்த தன்னார்வ லர்களிடம் கேட்டு க்கொண்டனர். இதனையடு த்து, இக்கல்லை மீட்ட இப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பேரூராட்சி அலுவல கத்தின் கிழக்குப்புற சுற்று சுவருக்கு அருகில் நட்டு வைத்து பாதுகாத்து வருகின்றனர். இந்த இளை ஞர்களுக்கு சேலம் வர லாற்று ஆய்வு மையத்தினர் பாராட்டு தெரி வித்துள்ள னர்.

    வாமனக்கல் அமைப்பது ஏன்?

    பெரு மாளின் அவதாரங் களில் 5- வது அவதாரமாக வாமனன் அவதாரம் குறிப்பிடப்படுகிறது. பிரகலாதனின் பேரன் மாவலியின் செருக்கை அடக்க திருமால், வாமனன் வடிவம் கொண்டு மாவலி யிடம் 3 அடி நிலம் கேட்ட தாகவும், ஒரு அடியில் வானத்தையும், 2-வது அடியில் பூமியையும் அளந்து விட்டு 3-வது அடியை வைக்க இடமின்றி, மாவலி யின் தலையில் வாமனன் வைத்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. இதன் அடிப்படையிலே பெருமாள் கோவிலுக்கு முன்னோர்கள் நிலம் தானம் செய்தால் அந்த எல்லைக்கல்லில் வாமனன் உருவம் பொறிக்கப்பட்ட தாக கருதப்படுகிறது. இது மட்டுமின்றி பெருமாள் கோவிலின் நிலத்தை அப கரிப்பவர்கள் வாமனனால் தண்டிக்கப்படுவர் என்பதை யும் இந்த வாமனக்கல் உணர்த்துகிறது.

    • எழுத்து தேர்வு மட்டுமே தேர்வர்கள் எதிர்கொள்ள இயலும்.
    • செய்முறை பிரிவில் தேர்ச்சி பெறாதவர்கள் எதிர்கொள்ள இயலாது.

    திருப்பூர்:

    கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் சிறப்பு அரியர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எழுத்து தேர்வு மட்டுமே தேர்வர்கள் எதிர்கொள்ள இயலும்.

    செய்முறை பிரிவில் தேர்ச்சி பெறாதவர்கள் எதிர்கொள்ள இயலாது.

    இதன்படி 2018-19ல் எம்.எஸ்சி., சாப்ட்வேர் சிஸ்டம், 2020-21 இளநிலை பிரிவினர், 2021-22 முதுநிலை பிரிவினர் ஒரு பாடத்தில் மட்டும் அரியர் வைத்திருப்பின், இத்தேர்வை எதிர்கொள்ளலாம். சிறப்பு அரியர் தேர்வு செப்டம்பர் 3-ந் தேதி பல்கலைக்கழக வளாகத்திலும், கோவை அரசு கலை கல்லூரியிலும் நடைபெறவுள்ளது.

    விண்ணப்பங்களை ஆகஸ்டு 16-ந் தேதிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவம் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கான கட்டணம் பிற விபரங்களை மாணவர்கள் https://b-u.ac.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

    • உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெற சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • 48 பேர் கலந்து கொண்டு சான்றிதழ்கள் பெறுவதற்கான விண்ணப்பங்களை வழங்கினர்.

     காங்கயம்

    காங்கயம் வட்டாரப் பகுதி உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் உணவுப் பொருள் வணிகம் செய்வோருக்கு உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெற சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள மளிகைக்கடைகள், டீ கடைகள், உணவகம், பேக்கரி, காய்கறி கடைகள், எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் மட்டன், சிக்கன் கடை நடத்துபவர்கள் உரிமம் பதிவு பெற்றுக்கொண்டு பயன்பெறலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    இதையடுத்து காங்கயம் பஸ் நிலையம் எதிரே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் காங்கயம் பகுதியைச் சேர்ந்த 48 பேர் கலந்து கொண்டு சான்றிதழ்கள் பெறுவதற்கான விண்ணப்பங்களை வழங்கினர்.

    விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு இவர்களுக்கு விரைவில் சான்றிதழ் வழங்கப்படும் என காங்கயம் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

    • ஸ்ரீ கோதாநாயகி ஆண்டாள்- ரங்கமன்னார் சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.
    • பக்தர்கள் ஆண்டவர் பாடல்கள் பாடி கோவிலை சுற்றி வந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரரட்சிக்குட்பட்ட சுமார் 350 வருடங்களுக்கு மேலான புகழ்வாய்ந்த நவநீத கிருஷ்ணன் கோவிலில் உள்ள ஸ்ரீ கோதாநாயகி ஆண்டாள்- ரங்கமன்னார் சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்கள், பால், பன்னீர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், நெய் பழங்கள், நலங்கு பொடி, போன்ற பொருட்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    ஸ்ரீ கோதாநாயகி ஆண்டாள்- ரங்கமன்னார் திருக்கோலத்தில் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    பக்தர்கள் ஆண்டவர் பாடல்கள் பாடி கோவிலை சுற்றி வந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    ×