search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில்களில்"

    • ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமையான இன்று சேலத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது.
    • இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சேலம்:

    ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமையான இன்று சேலத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்து நின்று பக்தர்கள் அம்மனை வழிபட்டு வருகிறார்கள்.

    கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கூழ், பிரசாதம் வழங்கி வருகிறார்கள்.

    வளையல் அலங்காரம்

    சேலம் அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அதிகாலையில் பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பட்டாடை உடுத்தி வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

    பின்னர் 1 லட்சம் வளை யல்களைக் கொண்டு அம்மன் சிலை முழுவதும் வளையல்களால் அலங்கா ரம் செய்யப்பட்டது. மேலும் கோவில் பிரகாரம் அனைத்து இடங்க ளிலும் வளையல்களால் அலங்க ரிக்கப்பட்டது. அம்மனை காண அப்பகு தியில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர்.

    தங்க கவசம்

    இதேபோல எல்லை பிடாரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு பல்வேறு விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் தங்க கவசம் சாத்துப்படி வைபவம் நடைபெற்றது. பெரிய எல்லை பிடாரி கருவறை அம்மனுக்கு முத்துக்களால் ஆன அங்கியை கொண்டு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து மந்திரங்கள் ஓத அர்ச்சனைகள் நடை பெற்றது. இதில் அப்பகு தியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    நெத்திமேடு தண்ணீர் பந்தல் ஸ்ரீ மகா காளியம்மன் கோவிலில் பவள கற்கள் அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார்.

    இதே போல சேலம் மாநகரில் அம்மாபேட்டை, தாதகாப்பட்டி, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, கிச்சிபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களை சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. குறிப்பாக மணியனுர் காளியம்மன் கோவிலில் ஆயிரம் கண் அலங்காரம் செய்திருந்தனர். 3-வது வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் கோவில்களில் பக்தர்களின் வருகை அதிகரித்து இருந்தது. அவர்கள் நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்து நின்று அம்மனை தரிசனம் செய்தனர். அம்மனை காண வந்த பக்தர்கள் அனை வருக்கும் மாங்கல்யம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • ஆடி மாதம் 3-வது வெள்ளி கிழமையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்க ளிலும் இன்று சிறப்பு வழிபாடு நடந்தது.
    • இதில் திரளான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாமக்கல்:

    ஆடி மாதம் 3-வது வெள்ளி கிழமையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்க ளிலும் இன்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு கூழ், துள்ளு மாவு உள்ளிட்ட வற்றை படைத்து வழிபட்டனர்.

    இதேபோல், செல்லாண் டியம்மன், வண்டிக்காரன் தெரு பகவதியம்மன், அன்பு நகர் சுய வேம்பு மாரியம்மன், கொண்டி செட்டிபட்டி காளியம்மன் கோவில், மாருதிநகர் மகா மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    அன்ன அலங்காரம்

    ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அன்ன அலங்காரம் செய் யப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட் டது. இதில் ராசிபுரம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராள மானோர் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.

    பரமத்திவேலூர் தாலுகா, கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்ம னுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    தீபாராதனை

    அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு கூழ் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் பரமத்தி வேலூர் காவிரி ஆற்றங்க ரையில் அமைந்துள்ள காசி விசாலாட்சி, பேட்டை மகா மாரியம்மன், நன்செய் இடையாறு மாரியம்மன், பரமத்திவேலூர் செல்லாண்டி யம்மன், புது மாரியம்மன், பேட்டை பகவதியம்மன், பரமத்தி அங்காளம்மன், பரமத்தி வேலூர் எல்லையம்மன், பாண்ட மங்கலம் மாரி யம்மன், பகவதி அம்மன், கொந்தளம் மாரியம்மன், சேளூர் மாரி யம்மன், குன்னத்தூர் மாரி யம்மன், அய்யம்பாளையம் பகவதி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், பகவதி அம்மன், செல்லாண்டி யம்மன், வட கரையாத்தூர் மாரி யம்மன், பகவதி அம்மன் மற்றும் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்க ளில் சிறப்பு அபிஷேக ஆரா தனை களும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாரா தனையும் நடைபெற்றது.

    பால்குட ஊர்வலம்

    சேந்தமங்கலம் அடுத்த முத்துகாப்பட்டி மாரி யம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்தது. இதில் பெண்கள் திரளாக கலந்து கொண்டு பால்குடங்களை சுமந்து ஊர்வலமாக சென்று கோவிலை அடைந் தனர். தொடர்ந்து அம்ம னுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.

    இதேபோல் பச்சுடை யாம்பட்டி காளியம்மன், காந்திபுரம் கருமாரி அம்மன், சேந்தமங்கலம் பெரிய மாரி யம்மனுக்கு ஆடி வெள்ளியை முன் னிட்டு சிறப்பு அலங்கா ரம் செய்யப்பட்டு, பக்தர்க ளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 

    • நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாமக்கல்:

    ஆடி மாதம் 2-வது வெள்ளிக் கிழமையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    சந்தனகாப்பு

    நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல், செல்லாண் டியம்மன் கோவில், வண் டிக்காரன்தெரு பகவதி யம்மன் கோவில், அன்புநகர் சுய வேம்பு மாரியம்மன் கோ வில், கொண்டிசெட்டிபட்டி காளியம்மன் கோவில், மாருதிநகர் மகா மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    ராசிபுரம்

    ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் வளையல் அலங்காரம் செய்யப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராத னைகள் நடைபெற்றது. எல்லை மாரியம்மன் கோவில், அங்காள பர மேஸ்வரி அம்மன் கோவில், அழியா இலங்கை அம்மன் கோவில், அத்தனூர் மாரியம்மன் கோவில்களிலும் அம்ம னுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.

    பரமத்திவேலூர்

    இதேபோல் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதி களில் உள்ள நன்செய் இடை யாறு மகா மாரி யம்மன், செல்லாண்டி யம்மன், மகாமாரியம்மன், பேட்டை மாரியம்மன், பகவதி யம்மன், கொந்தளம் மாரியம்மன், பாண்ட மங்கலம் மாரியம்மன், பகவதியம்மன், சேளூர் மாரியம்மன், குன்னத்தூர் மாரியம்மன், அய்யம்பாளை யம் பகவதி அம்மன், பர மத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன், ஆனங்கூர் மாரி யம்மன், செல்லாண்டி அம்மன், வடகரை யாத்தூர் பகவதிஅம்மன் கோவில்களில் பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். சேந்த மங்கலத்தில் பச்சு டையாம்பட்டி காளியம்மன் கோவில், கொல்லி மலை நாச்சியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்க ளில் சிறப்பு வழி பாடு மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

    எருமப்பட்டி

    எருமப்பட்டி அருகே பொட்டிரெட்டிபட்டி கிராமத்தில் உள்ள கன்னி மார் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையை யொட்டி சாமிக்கு மலர் அலங்காரங்கள் செய்யப் பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் பொட்டி ரெட்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ஆடி மாதம் அம்மனை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும், திருமணங்கள் கைகூடும் என்பது ஐதீகம்.
    • அம்மன் பிறந்த நாள் அன்று ஆடி பூர விழாவாக கொண்டாடப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    ஆடி மாதம் அம்மனை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும், திருமணங்கள் கைகூடும் என்பது ஐதீகம். இதனால் ஆடி மாதம் அம்மன் கோவில்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆடி மாதம் தற்போது பிறந்ததையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அம்மன் பிறந்த நாள் அன்று ஆடி பூர விழாவாக கொண்டாடப்படுகிறது.

    நாளை (22-ந்தேதி) ஆடிப்பூர விழா கொண்டா டப்படுவதையடுத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வையார் அம்மன் கோவில், நடுக்காட்டு இசக்கி அம்மன் கோவில், முப்பந்தல் இசக்கி யம்மன் கோவில், சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் நாளை சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அம்மனுக்கு கொழுக் கட்டை, கூழ் கஞ்சி படைத்து வழிபாடு செய்ய வும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பெண்கள் அம்மனுக்கு பொருட்களை சீர்வரிசையாக கொண்டு வந்து வழிபடவும் தயாராகி வருகிறார்கள்.

    கொட்டாரம் கீழத்தெரு வில் உள்ள ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா நாளை நடக்கிறது. இதையொட்டி இந்த கோவிலில் நாளை காலை 8.45 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், 11 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் பகல் 12 மணிக்கு கஞ்சி தானம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு அலங்கார தீபாரா தனையும், இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகமும் அர்ச்சனையும் நடக்கிறது. 8 மணிக்கு அலங்கார தீபாராதனையும், 9 மணிக்கு அருட்பிரசாதம் வழங்கு தலும் நடக்கிறது.

    கன்னியாகுமரி வடக்கு ரத வீதியில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா நாளை நடக்கிறது. இதையொட்டி மூன்று முகம் கொண்ட முத்தாரம்மனுக்கு மா காப்பு அலங்காரம் செய்யப் பட்டு மாலை 6 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. பின்னர் இரவு 8 மணிக்கு முத்தாரம்மனுக்கு 1008 வளையல்கள் அணி விக்கப்பட்டு அலங்காரத்து டன் சிறப்பு வழிபாடுகளும், விசேஷ பூஜைகளும் நடக்கிறது.

    முன்னதாக விநாயக ருக்கு முதல் பூஜை நடக் கிறது. அதன்பிறகு முத் தாரம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. மேலும் இந்த கோவிலில் உள்ள உச்சிமாகாளி அம்மன், பைரவர் சுவாமி, சுடலை மாடசுவாமி, பலவேச காரசுவாமி, முண்டன்சுவாமி ஆகிய பரிவார சுவாமிகளுக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. இதில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொணடு அம்மனுக்கு வளையல் வழங்கி வழிபாடு செய்வார்கள். பின்னர் பக்தர்களுக்கு அந்த வளை யல் பிரசாதமாக வழங்கப் படுகிறது.

    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் ஸ்ரீ குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பார்வதி அம்பாள் சன்னதி அமைந்துள்ளது. இங்கு அம்மன் பிறந்த நட்சத்திர மான பூரம் நட்சத்திரமான நாளை (சனிக்கிழமை) ஆடிப்பூர விழா கொண்டா டப்படுகிறது. இதையொட்டி நாளை காலை 10.30 மணிக்கு பார்வதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், 11.30 மணிக்கு தீபாராதனையும், மதியம் 12 மணிக்கு பிரசாதம் வழங்குதலும் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்கிறார்கள்.

    இரவு 7 மணிக்கு ஊஞ்சல் வழிபாடு நடக் கிறது. அப்போது பார்வதி அம்பாளை அலங்கரிக் கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருள செய்து தாலாட்டு நிகழ்ச்சி நடக் கிறது. 8 மணிக்கு பள்ளியறை வைபவம் நடக்கிறது. இந்த வைபவத்தின்போது சுவாமியும், அம்பாளும் பள்ளியறை எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவை யினர் செய்து வருகிறார்கள்.

    மேலும் ஆடிப்பூரத்தை யொட்டி குமரி மாவட்டத் தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆடிப்பூரம் நாளை கொண்டாடப்படு வதையடுத்து தோவாளை மார்க்கெட்டுகளில் பூ விலையும் வழக்கத்தை விட சற்று அதிகமாக இருந்தது. வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

    • தை மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு சஷ்டியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர் ,இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு தை மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர் ,இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் கோப்பணம்–பாளையம் பரமேஸ்வரர் ஆல யத்தில் உள்ள பாலமுருகன், நன்செய் இடையாறு காவிரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து செங்கலை கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத முருகன், கபிலர்–மலையில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசாமி, பரமத்தியை அடுத்த பிராந்த கத்தில் 34.5 அடி உயரத்தில் உள்ள ஆறுமுகக்கடவுள், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன், அனிச்சம்பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர், நன்செய் இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், ராஜா சாமி கோவில், அய்யம்பாளையம் முருகன், அய்யம்பாளையம் மாரியம்மன் கோவிலில் உள்ள முருகன் உள்பட பல்வேறு முருகன் கோவில்களில் தை மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 

    • பரமத்திவேலூர் வட்டாரத்தில் உள்ள அம்மன் மற்றும் குலதெய்வ கோயில்களில் தை மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை பூஜைகள் நடைபெற்றது.
    • 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டாரத்தில் உள்ள அம்மன் மற்றும் குலதெய்வ கோயில்களில் தை மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை பூஜைகள் நடைபெற்றது.

    கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் தை மாத அமாவாசை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் ,அரசாயி அம்மன், மாசாணி அம்மனுக்கு பால் ,தயிர், பன்னீர் ,இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது . அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    அதேபோல் நன்செய் இடையாறு காவேரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ண சாமி கோவில், பரமத்தியில் உள்ள அங்காளம்மன், பரமத்திவேலூரில் உள்ள மாரியம்மன்,பேட்டையில் உள்ள புதுமாரியம்மன், பகவதி அம்மன்,கரூர் மெயின் ரோட்டில் உள்ள செல்லாண்டியம்மன், நன்செய்இடையாற்றில் உள்ள மாரியம்மன் மற்றும்

    ராஜா சுவாமி, பாண்டமங்க லம் மாரியம்மன், பகவதி

    அம்மன், கொந்தளம் மாரி யம்மன், சேளூர் மாரியம்மன், அய்யம்பாளையம் மாரி யம்மன், பகவதி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், பகவதி அம்மன், செல்லாண்டி யம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன்கோவில் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் தை மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது .இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் மற்றும் குடிபாட்டு மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத அமாவா சையை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் தாலுகா கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத அமாவா சையை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன், அரசாயி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் வாழவந்தி அங்காளம்மன் கோவிலில் அமாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் பரமத்தியில் உள்ள அங்காளம்மன், பரமத்திவேலூரில் உள்ள மாரியம்மன், பேட்டையில் உள்ள புதுமாரியம்மன்,‌‌ செல்லாண்டி அம்மன், நன்செய்இடையாறில் உள்ள மாரியம்மன் மற்றும் ராஜா சுவாமி கோவில், பாண்டமங்கலம் மாரியம்மன் கோவில், பகவதி அம்மன் கோவில், கொந்தளம் மாரியம்மன் கோவில், சேளூர் மாரியம்மன் கோவில், அ.குன்னத்தூர் மாரியம்மன் கோவில், அய்யம்பாளையம் பகவதி அம்மன் கோவில், ஆனங்கூர் மாரியம்மன் கோவில், செல்லாண்டி அம்மன் கோவில், வடகரை யாத்தூர் மாரியம்மன் கோவில், பச்சையம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்கள் மற்றும் குல தெய்வ கோயில்களில் சிறப்பு அபிஷேகம், சிறப்பு

    அலங்காரம், மகா தீபாரா தனையும் நடைபெற்றது. இதில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • சென்னிமலை முருகன் கோவிலில் இன்று, அமாவசை தினத்தில் ஏரளாமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • சூரிய கிரகணத்தை யொட்டி இன்று மதியம் 1 மணிக்கு அனைத்து கோவில்களின் நடை அடைக்கப்பட்டது.

    ஈரோடு:

    சென்னிமலை முருகன் கோவிலில் இன்று, அம்மாவசை தினத்தில் ஏரளாமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று அமாவசை நாளில் தீபாவளி பண்டிகை விடுமுறை, செவ்வாய்கிழமையும் ஒருங்கிணைந்து வந்ததால் சென்னிமலை முருகன் கோவிலில் அதிகாலை 5.30 மணி முதலே கூட்டம் அதிகமாக இருந்தது. இதைத்தொடர்ந்து மதியத்துக்கு மேல் நடை சாத்தப்பட்டது,

    இதே போல் சத்திய மங்கலம் அடுத்த பண்ணாரி யம்மன் கோவிலில் அமா வாசையை யொட்டி இன்று ஏராள மான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இதையொட்டி இன்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்ய ப்பட்டது. தொடர்ந்து ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி கர்நாடகா மாநில பக்தர்களும் அதிகளவு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    சூரிய கிரகணத்தை யொட்டி இன்று மதியம் 1 மணி கோவில் நடை சாத்த ப்பட்டது. இதே போல் ஈரோடு பெரிய மாரியம்மன், சத்திய மங்கலம் தண்டு மாரியம்மன், கோபிசெட்டிபாளையம் சாரதா மாரியம்மன், பாரியூர் கொண்டத்து காளியம்மன் அந்தியூர் பக்தர காளியம்மன் கோவில் உள் அனைத்து கோவில் களிலும் ஏராளமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து சூரிய கிரகணத்தை யொட்டி இன்று மதியம் 1 மணிக்கு அனைத்து கோவில்களின் நடை அடைக்கப்பட்டது.

    • நவராத்திரி கடைசி நாளை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
    • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவில், கொப்பளம் பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி கடைசி நாளை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பகவதி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பகவதி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    விஜயதசமி நாளை முன்னிட்டு ப‌.வேலூர் சுல்தான் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள அம்மனுக்கு கொலு மேடை அமைத்து சிறப்பு அபிஷேகம் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.

    அதேபோல் பரமத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மானை தரிசனம் செய்து அருள் பெற்றனர் .பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம்பாளையத்தில் உள்ள ஆடி மாத கடைசி நாளை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
    • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம்பாளையத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத கடைசி நாளை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் பரமத்தி வேலூர் காவேரி சாலையில் உள்ள மகா மாரியம்மனுக்கு ஆடி மாத கடைசி செவ்வாய் கிழமையினை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், காய்கனி அலங்காரமும் நடைபெற்றது .

    மேலும் பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன், வேலூர் செல்லாண்டியம்மன், நன்செய் இடையாறு மகாமாரியம்மன், பேட்டை மகா மாரியம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன், கொந்தளம் மாரியம்மன், சேளூர் மாரியம்மன், அய்யம்பாளையம் மாரி யம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன், பச்சையம்மன், பரமத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் ஆடி மாத கடைசி நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    • சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி கோவில்களில் ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி கோவில்களில் ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

    வாழப்பாடி அருகே பிரசித்திப்பெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர், வாழப்பாடி அக்ரஹாரம் காசி விஸ்வநாதர், பேளூர் அஷ்டபுஜமதன வேணுகோபால சாமி, வாழப்பாடி வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், அக்ரஹாரம் சென்றாயப்பெருமாள், வடபத்திர காளியம்மன் , புதுப்பாளையம் சக்தி மாரியம்மன், ஏத்தாப்பூர் சமயபுரம் மாரியம்மன் மற்றும் வாழப்பாடி ஆத்துமேடு பெரியாண்டிச்சி அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். புதுப்பாளையம் சக்தி மாரியம்மன் பட்டாடை அலங்காரத்திலும், ஏத்தாப்பூர் சமயபுரம் மாரியம்மன் வெற்றிலை அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    • பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சஷ்டியை முன்னிட்டு முருகன் கோவில்களில் அபிஷேக நடந்தது.
    • அதைத் தொடர்ந்து வள்ளி தெய்வானை கல்யாண சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பரமத்தி வேலூர்:

    ஆனி மாத வளர்பிறை சஷ்டியினை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகன், பரமத்தி வேலூர் தேரடி வீதியில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான வல்லப விநாயகர் ஆலயத்தில் உள்ள வள்ளி தெய்வானை உடனாகிய கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு பால் ,தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் ,தேன், விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வள்ளி தெய்வானை கல்யாண சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சிய ளித்தார். இதில் சுற்றுவ ட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருக பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் கோப்பணம் பாளையத்தில் உள்ள பாலமுருகன், நன்செய் இடையாறு காவிரி ஆற்றங்கரையில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பணசாமி கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன், திரு வேலீஸ்வரர் கோவில் உள்ள முருகன், அணிச்சம் பாளையத்தில் வேல்வடியில் உள்ள முருகன், பிலிக்கல் பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனியாண்டவர் கோவில் ,அய்யம்பாளையம் முருகன் கோவில்,ஆனங்கூர் மாரியம்மன் கோவில் உள்ள முருகன், பொத்த னூர் பச்சைமலை முருகன்,

    கபிலர்மலை பாலசுப்பிர மணியசுவாமி கோவில், பாலப்பட்டி முருகன் கோவில், மோகனூர் பாலசு ப்பிரமணிய சுவாமி கோவில், சுள்ளிப்பாளையம் அருகே அருணகிரி மலையில் உள்ள அருணகிரிநாதர் மற்றும் பரமத்தி வேலூர்

    சுற்றுவட்டார பகுதியில் உள்ள முருகன் கோவில்க ளில் ஆனி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    ×