search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தை அமாவாசை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை
    X

    அமாவாசையை முன்னிட்டு மாரியம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த காட்சி.

    தை அமாவாசை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை

    • பரமத்திவேலூர் வட்டாரத்தில் உள்ள அம்மன் மற்றும் குலதெய்வ கோயில்களில் தை மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை பூஜைகள் நடைபெற்றது.
    • 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டாரத்தில் உள்ள அம்மன் மற்றும் குலதெய்வ கோயில்களில் தை மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை பூஜைகள் நடைபெற்றது.

    கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் தை மாத அமாவாசை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் ,அரசாயி அம்மன், மாசாணி அம்மனுக்கு பால் ,தயிர், பன்னீர் ,இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது . அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    அதேபோல் நன்செய் இடையாறு காவேரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ண சாமி கோவில், பரமத்தியில் உள்ள அங்காளம்மன், பரமத்திவேலூரில் உள்ள மாரியம்மன்,பேட்டையில் உள்ள புதுமாரியம்மன், பகவதி அம்மன்,கரூர் மெயின் ரோட்டில் உள்ள செல்லாண்டியம்மன், நன்செய்இடையாற்றில் உள்ள மாரியம்மன் மற்றும்

    ராஜா சுவாமி, பாண்டமங்க லம் மாரியம்மன், பகவதி

    அம்மன், கொந்தளம் மாரி யம்மன், சேளூர் மாரியம்மன், அய்யம்பாளையம் மாரி யம்மன், பகவதி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், பகவதி அம்மன், செல்லாண்டி யம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன்கோவில் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் தை மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது .இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் மற்றும் குடிபாட்டு மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×