search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடி மாதம் 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி  அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
    X

    நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் கோவிலில் அம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பதையும், திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதையும் படத்தில் காணலாம்.

    ஆடி மாதம் 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

    • நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாமக்கல்:

    ஆடி மாதம் 2-வது வெள்ளிக் கிழமையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    சந்தனகாப்பு

    நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல், செல்லாண் டியம்மன் கோவில், வண் டிக்காரன்தெரு பகவதி யம்மன் கோவில், அன்புநகர் சுய வேம்பு மாரியம்மன் கோ வில், கொண்டிசெட்டிபட்டி காளியம்மன் கோவில், மாருதிநகர் மகா மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    ராசிபுரம்

    ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் வளையல் அலங்காரம் செய்யப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராத னைகள் நடைபெற்றது. எல்லை மாரியம்மன் கோவில், அங்காள பர மேஸ்வரி அம்மன் கோவில், அழியா இலங்கை அம்மன் கோவில், அத்தனூர் மாரியம்மன் கோவில்களிலும் அம்ம னுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.

    பரமத்திவேலூர்

    இதேபோல் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதி களில் உள்ள நன்செய் இடை யாறு மகா மாரி யம்மன், செல்லாண்டி யம்மன், மகாமாரியம்மன், பேட்டை மாரியம்மன், பகவதி யம்மன், கொந்தளம் மாரியம்மன், பாண்ட மங்கலம் மாரியம்மன், பகவதியம்மன், சேளூர் மாரியம்மன், குன்னத்தூர் மாரியம்மன், அய்யம்பாளை யம் பகவதி அம்மன், பர மத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன், ஆனங்கூர் மாரி யம்மன், செல்லாண்டி அம்மன், வடகரை யாத்தூர் பகவதிஅம்மன் கோவில்களில் பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். சேந்த மங்கலத்தில் பச்சு டையாம்பட்டி காளியம்மன் கோவில், கொல்லி மலை நாச்சியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்க ளில் சிறப்பு வழி பாடு மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

    எருமப்பட்டி

    எருமப்பட்டி அருகே பொட்டிரெட்டிபட்டி கிராமத்தில் உள்ள கன்னி மார் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையை யொட்டி சாமிக்கு மலர் அலங்காரங்கள் செய்யப் பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் பொட்டி ரெட்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×