search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bus Operation"

    • கார்த்திகை தீப திருவிழாவுக்கு திருவண்ணாமலை செல்ல வசதியாக 695 அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    • காரைக்குடி-ராமேசுவரத்தில் இருந்து செல்கிறது.

    மதுரை

    அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலை அருள்மிகு அண்ணா மலையார் திருக்கோவில் கார்த்திகை தீபத்திருநாள் வருகிற 26ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை )மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. மேலும் 27-ந் தேதி பவுர்ணமி கிரிவலம் நடக்கி றது. இதையொட்டி நாளை 25-ந் தேதி முதல் 27 -ந் தேதி வரை அனைத்து பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் கும்ப கோணம் கோட்டத்தின் மூலம் 695 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    இந்த சிறப்பு பஸ்கள் காரைக்குடி, ராமேஸ்வரம், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கும்ப கோணம் உள்ளிட்ட பகுதி களில் இருந்து இயக்கப்பட உள்ளது. மேலும் திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக 9 தற்காலிக பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த பஸ் நிலையங்களில் இருந்து பக்தர்கள் கிரிவலப் பாதை சென்று திரும்பி வருவதற்கு வசதியாகவும் மினி பஸ்கள் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    எனவே பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய எதுவாக www.tnstc.in என்ற இணைய தளம் மூலம் முன்பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் மொபைல் ஆப் மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • போக்குவரத்து கழகம் சார்பில் பண்டிகை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.
    • நாளை 16-ந் தேதி ஆடி அமாவாசை கொண்டாடப்படுகிறது.

    சேலம்:

    போக்குவரத்து கழகம் சார்பில் பண்டிகை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.

    அதன்படி நாளை 16-ந் தேதி ஆடி அமாவாசை கொண்டாடப்படுகிறது. சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் சேலம் தர்மபுரியில் இருந்து நாளை மாதேஸ்வர மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் சேலம் டவுன் பஸ் நிலையத்திலிருந்து சித்தர் கோவிலுக்கும், சேலத்தில் இருந்து பவானி கூடுதுறைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதே போல சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்தும் மேட்டூர் மாதேஸ்வரன் மலைக்கும் தர்மபுரி பஸ் நிலையத்தில் இருந்து மேட்டூர் மாதேஸ்வரன் மலைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இது குறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், ஆடி அமாவாசை முன்னிட்டு சேலத்தில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு மேச்சேரி-மேட்டூர் வழியாகவும், மேட்டூரில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு கொளத்தூர்- பாலாறு வழியாகவும், தர்மபுரியில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு மேச்சேரி-மேட்டூர் வழியாகவும், கிருஷ்ணகிரியில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு தர்மபுரி, மேச்சேரி, மேட்டூர், வழியாகவும்,ஓசூரில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு கிருஷ்ணகிரி, தர்ம புரி, மேச்சேரி, மேட்டூர், வழியாகவும், மாதேஸ்வரன் மலைக்கு நாளை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் என்றார்.

    • எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • பொதுமக்கள் கோரிக்கையால் நடவடிக்கை

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த இரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் வழூர், ஆரியாத்தூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர்.

    இவர்கள் பள்ளிக்கு செல்ல பஸ் வசதி இல்லாததால் அவதிப்பட்டு வந்தனர். எனவே வழூர், ஆரியாத்தூர் வழியாக இரும்பேடுக்கு அரசுப் பஸ் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் வந்தவாசியிலிருந்து வழூர், ஆரியாத்தூர் வழியாக இரும்பேடுக்கு புறநகர அரசுப் பஸ் இயக்கப்பட்டது.

    இதையொட்டி ஆரியாத்தூர் கிராமத்தில் நடைபெற்ற விழாவுக்கு தி.மு.க. மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமை வகித்தார். தி.மு.க. வந்தவாசி மத்திய ஒன்றியச் செயலர் ஆரியாதூர் பெருமாள் வரவேற்றார்.

    வந்தவாசி எம்.எல்.ஏ. எஸ்.அம்பேத்குமார் கொடியசைத்து பஸ் சேவையை தொடக்கி வைத்தார்.

    வந்தவாசியிலிருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும் இந்தப் பஸ் வழூர், ஆரியாத்தூர் வழியாக இரும்பேடு கிராமத்துக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட்டு அதே கிராமங்கள் வழியாக வந்தவாசி வந்தடையும்.

    • புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கத்தை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • நிர்வாகி சோனைமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது சிறுகுடி. இந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி கிடையாது. தற்போது சாலை, குடிநீர், தெருவிளக்கு வசதி வந்து விட்டாலும் பஸ் வசதி இல்லாமல் மதுரை-ராமேசுவரம் சாலையில் உள்ள முத்தனேந்தல் அல்லது இடைக்காட்டூர் வந்து சிறுகுடி மக்கள் பஸ் ஏறி வெளியூர் சென்று வந்தனர்.

    இது குறித்து மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசியிடம் உங்கள் முயற்சியால் சிறுகுடிக்கு பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    தமிழரசி எம்.எல்.ஏ. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 75 வருடமாக போக்குவரத்து வசதி இல்லாத சிறுகுடி கிராமத்திற்கு புதிய பஸ் வழித்தடத்தை தொடங்கி வைத்தார்.

    மேலும் அவர் கிராம மக்களோடு பஸ்சில் பயணமும் செய்தார். இதில் தி.மு.க. ஒன்றிய குழு துணை தலைவர் முத்துசாமி ஊராட்சி மன்ற தலைவர் பஞ்சவர்ணம், ஒன்றிய கவுன்சிலர்கள் ராதா சிவச்சந்திரன், மலைச்சாமி, நிர்வாகி சோனைமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட டவுன் பஸ்சை இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    • இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், மேல்பனையூர் பாலம் அருகே உள்ளது ஆயிரவேலி கிராமம். இங்கு ஏராளமான விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்திற்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. இதனால் மேல்பனையூர், கீழ்பனையூர், ஆயிரவேலி, நடுவக்குடி, குமரங்காலி ஆகிய கிராமங்கள் வழியாக திருவெற்றியூர் கிராமத்திற்குச் செல்லும் மாணவ-மாணவிகள், வயதா னோர் பயனடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக டவுன் பஸ் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர்.

    இந்த பஸ் இயக்கப்படும் சாலையில் மேல்பனையூர் சாலை மட்டும் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. கீழ்பனையூர், ஆயிரவேலி கிராமங்களில் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலைவசதி இல்லாத, பழுதடைந்த சாலைகளில் எத்தனையோ பஸ்கள் இயக்கப்படும் நிலையில், சாலை வசதி உள்ள கிராமங்களுக்கு டவுன்பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்று இந்தப்பகுதி கிராமமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    ×