search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New Route"

    கோவில்பட்டி அருகே புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கப்பட்டது. அதனை துரை வைகோ தொடங்கி வைத்தார்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே ம.தி.மு.க தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ நேரில் விடுத்த வேண்டுகோளை ஏற்று, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கு இணங்க, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வரகனூர் (வழி புளியங்குளம், லட்சுமிபுரம், இளையரசனேந்தல்) வழித்தடத்தில் தினமும் 5 முறை வந்து செல்லும் வகையில் பஸ் இயக்க உத்தரவிட்டுள்ளார். இதன் தொடக்க விழா இன்று காலை  இளையரசனேந்தலில் நடைபெற்றது.

     இதில் துரைவைகோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்து பயணச்சீட்டெடுத்து பஸ்சில் பயணித்தார்.  

    நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் ஆர். எஸ். ரமேஷ், ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ், மத்திய பகுதி ஒன்றிய செயலாளர் சரவணன், கோவில்பட்டி நகர செயலாளர் பால்ராஜ், இளையரசனேந்தல் பஞ்சாயத்து துணைத்தலைவர் ராஜாராம், முன்னாள் யூனியன் சேர்மன் எல்.எஸ். கணேசன், மேற்குபகுதி ஒன்றிய செயலாளர் கேசவன், கோவில்பட்டி நகர துணை செயலாளர் வனராஜன், ம.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் நகராஜன், லியோ செண்பகராஜ், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கொம்பையா, உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    ×