வந்தவாசி- இரும்பேடு வழித்தடத்தில் பஸ் இயக்கம்

எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார் பொதுமக்கள் கோரிக்கையால் நடவடிக்கை
வந்தவாசி- இரும்பேடு வழித்தடத்தில் பஸ் இயக்கம்
Published on

வந்தவாசி:

வந்தவாசியை அடுத்த இரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் வழூர், ஆரியாத்தூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர்.

இவர்கள் பள்ளிக்கு செல்ல பஸ் வசதி இல்லாததால் அவதிப்பட்டு வந்தனர். எனவே வழூர், ஆரியாத்தூர் வழியாக இரும்பேடுக்கு அரசுப் பஸ் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் வந்தவாசியிலிருந்து வழூர், ஆரியாத்தூர் வழியாக இரும்பேடுக்கு புறநகர அரசுப் பஸ் இயக்கப்பட்டது.

இதையொட்டி ஆரியாத்தூர் கிராமத்தில் நடைபெற்ற விழாவுக்கு தி.மு.க. மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமை வகித்தார். தி.மு.க. வந்தவாசி மத்திய ஒன்றியச் செயலர் ஆரியாதூர் பெருமாள் வரவேற்றார்.

வந்தவாசி எம்.எல்.ஏ. எஸ்.அம்பேத்குமார் கொடியசைத்து பஸ் சேவையை தொடக்கி வைத்தார்.

வந்தவாசியிலிருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும் இந்தப் பஸ் வழூர், ஆரியாத்தூர் வழியாக இரும்பேடு கிராமத்துக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட்டு அதே கிராமங்கள் வழியாக வந்தவாசி வந்தடையும்.

X

Maalai Malar
www.maalaimalar.com