search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Speaker"

    தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், அவர்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #speakerdhanapal #dinakaransupportmla
    சென்னை:

    சென்னையில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், அதிமுக கொறடா ராஜேந்திரன் ஆகியோர் சபாநாயகர் தனபாலை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின்போது, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது. 

    அதன்படி, அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு மற்றும் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரி ஆகியோரிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #speakerdhanapal #dinakaransupportmla

    புதுச்சேரியில் ஆளுநருக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி நடத்தும் தர்ணா போராட்டம் 3வது நாளாக நீடிக்கும் நிலையில், மாநிலத்திற்கு இடைக்கால நிர்வாகியை நியமிக்க வேண்டும் என சபாநாயகர் கேட்டுக்கொண்டுள்ளார். #PuducheryCMDharna #KiranBedi
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கிரண்பேடி கவர்னராக பொறுப்பேற்றதில் இருந்து அவருக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கும் இடையிலான பனிப்போர் இப்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டத்தை போலீசார் அமல்படுத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    ஹெல்மெட் விவகாரம் பெரும் கொந்தளிப்பு ஏற்படுத்தியதை அறிந்த முதல் அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். நாராயணசாமி தலைமையில் 3வது நாளாக இன்றும் தர்ணா போராட்டம் நீடிக்கிறது. போராட்டம் ஒருபுறம் நடைபெற்றாலும், இதனை கண்டுகொள்ளாமல் புதுச்சேரியில் இருந்து புறப்பட்ட கவர்னர் கிரண்பேடி, டெல்லி சென்றார்.



    அதேசமயம், ஆளுநர் மாளிகை வளாகம் போராட்டக்களமாக மாறியிருப்பதால், அதிவிரைவு அதிரடிப்படை, துணை ராணுவம் மற்றும் தொழில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு அவசர கடிதம் அனுப்பி உள்ளார். புதுச்சேரியில் தற்போது அசாதாரண சூழல் நிலவுவதால் இடைக்கால நிர்வாகியை நியமிக்கவேண்டும் என சபாநாயகர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  #PuducheryCMDharna #KiranBedi
    இலங்கை பாராளுமன்றத்தில் ராஜபக்சே அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்தார். #SriLankaParliament #RajapaksaWalkout
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா நீக்கிவிட்டு, ராஜபக்சேவை அப்பதவியில் நியமித்ததில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. அத்துடன் பாராளுமன்றத்தையும் முடக்கிய அவர், பின்னர் பல்வேறு தரப்பினரின் வலியுறுத்தலை தொடர்ந்து நவம்பர் 14-ம்தேதி பாராளுமன்றத்தை கூட்டுவதாக அறிவித்தார்.  

    இதற்கிடையே, பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு போதிய ஆதரவு இல்லை. எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியும் பலன் அளிக்காததால் பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் அதிபர் சிறிசேனா. மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந் தேதி பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. அத்துடன், அதிபரின் உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்தது.



    இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி இலங்கை பாராளுமன்றம் இன்று காலை கூடியது. அவை நடவடிக்கை தொடங்கியதும், அதிபரால் நியமிக்கப்பட்ட ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த ராஜபக்சே வெளிநடப்பு செய்தார்.

    அதன்பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவாக பெரும்பாலான எம்பிக்கள் வாக்களித்தனர். இதையடுத்து ராஜபக்சே அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்றும் ராஜபக்சே அரசுக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றதாகவும் சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்தார். #SriLankaParliament #RajapaksaWalkout
    18 எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்கம் வழக்கில் சபாநாயகர் எடுத்த நடவடிக்கை செல்லும் என்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளதால் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் உள்ள 18 பேரின் வீடுகளுக்கும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். #18MLAs
    சென்னை:

    தமிழக எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள விடுதியில் அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட அடுக்குமாடி வீடு உள்ளது. சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் வரை இந்த வீட்டில் தங்கிக் கொள்ளலாம். இரண்டு படுக்கை அறைகொண்ட விசாலமான இந்த வீட்டுக்கு மாதவாடகை ரூ.200 ஆகும். எம்.எல்.ஏ.பதவி காலியான பிறகு வீட்டை காலி செய்யாமல் இருந்தால் மாத வாடகை ரூ.5375 கொடுக்க வேண்டும்.

    தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான தங்க தமிழ்ச்செல்வன், பழனியப்பன், வெற்றிவேல் உள்பட 18 பேர் சபாநாயகரால் ஏற்கனவே தகுதி நீக்கம் செய்யப்பட்ட காரணத்தால் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் உள்ள 18 பேரின் வீடுகளை அதிகாரிகள் பூட்டி விட்டனர்.

    இப்போது 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்கம் வழக்கில் சபாநாயகர் எடுத்த நடவடிக்கை செல்லும் என்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளதால் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் உள்ள 18 பேரின் வீடுகளுக்கும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர்.


    சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் கோர்ட்டு தீர்ப்பை சுட்டிக்காட்டி 18 பேருக்கும் நோட்டீசு அனுப்பி உள்ளார். அதில் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் உள்ள வீட்டுக்கு சீல் வைத்துள்ளதாகவும் அந்த வீட்டில் உள்ள உங்கள் பொருட்களை எடுக்க விரும்பினால் முன்கூட்டி தகவல் தெரிவித்துவிட்டு எடுத்து செல்லலாம் என்றும் தெரிவித்துள்ளனர். நிலுவையில் உள்ள வாடகை தொகையையும் செலுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். #18MLAs
    சபாநாயகரை பதவி நீக்கம் செய்யக்கோரி மனு கொடுத்திருக்கும் கருணாசின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்கலாம் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #Karunas #Speaker
    சென்னை:

    முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாசை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகர் தனபால் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இதற்காக விரைவில் கருணாசுக்கு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் திட்டமிட்டுள்ளார்.

    இந்த நிலையில் சபாநாயகர் தனபாலை பதவியில் இருந்து நீக்கக்கோரி தீர்மானம் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் கருணாஸ் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் நேற்று 2 மனுக்களை சட்டசபை செயலாளர் சீனிவாசனிடம் கொடுத்தார். அவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் உள்ளதால் அவர் சார்பில் அவரது வக்கீல் அழகிரி மனுக்களை கொடுத்தார்.

    முதல் மனுவில், “சபாநாயகர் தனபால் அரசியல் சட்டப்படி செயல்படவில்லை. அவர் ஒருதலைபட்சமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். எனவே அவரை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான தீர்மானத்தை அளித்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.

    மற்றொரு மனுவில், “தமிழ்நாடு சட்டபேரவை விதி 68-ன்படியும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 179(சி)படியும் சபாநாயகர் தனபாலை பதவியில் இருந்து நீக்க வேண்டும். இதற்கான தீர்மானம் கொண்டுவர விரும்புகிறேன். இதை பேரவை அலுவல்களில் சேர்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.



    கருணாஸ் அளித்துள்ள இந்த மனுக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. இந்த மனுக்கள் அவருக்கு எதிராக பயன்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து சட்ட நிபுணர் ஒருவர் கூறுகையில், “ஒரு எம்.எல்.ஏ. சபாநாயகரை பதவி நீக்க கோரி தீர்மானம் கொண்டு வர வேண்டுமானால் கட்சி தலைமைக்கு தான் முதலில் பரிந்துரைக்க வேண்டும். அதை விடுத்து பேரவை செயலகத்தில் மனு கொடுக்க கூடாது.

    அவ்வாறு மனு அளிக்கும் பட்சத்தில் அவர் கட்சி விதிகளை மீறுவதாக அர்த்தம். அந்த அடிப்படையிலேயே அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும்” என்றார். அதன்படி பார்த்தால் கருணாஸ் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை என்ற தனிக்கட்சியின் தலைவராக இருந்தாலும் அவர் கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனவே சபைக்குள் அவர் அ.தி.மு.க. ஆதரவு எம்.எல்.ஏ. என்றே கருதப்படுகிறது.

    ஆளுங்கட்சி உறுப்பினராக இருப்பவர் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சபாநாயகரை பதவி நீக்க செய்யக்கோரி மனு கொடுப்பது அ.தி.மு.க. சட்ட விதிகளின்படி கட்சி விரோத நடவடிக்கையாக கருதப்படும். எனவே இதை அடிப்படையாக வைத்து கட்சி தாவல் தடை சட்டத்தின்படி கருணாசின் எம்.எல்.ஏ. பதவியை மிக எளிதாக அ.தி.மு.க. தலைவர்களால் பறிக்க முடியும் என்று பெரும்பாலான சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    எனவே கருணாஸ் கொடுத்த கடிதம் அவருக்கே சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

    இதற்கு முன்பு 1972-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது சபாநாயகராக இருந்த கே.ஏ.மதியழகன் கட்சி மேலிடத்தின் உத்தரவை ஏற்க மறுத்தார். அதாவது எம்.ஜி.ஆர். மீது நடவடிக்கை எடுக்க மறுத்தார்.

    இதையடுத்து அவர் மீது ஆற்காடு வீராசாமி பதவி நீக்கக் கோரி தீர்மானம் கொண்டு வந்தார். அதன் மூலம் சபாநாயகர் பதவியில் இருந்து மதியழகன் நீக்கப்பட்டார்.

    தமிழக சட்டசபை வரலாற்றில் சபாநாயகரை பதவி நீக்கம் செய்தது அப்போதுதான். அதன் பிறகு எந்த சபாநாயகரும் பதவி நீக்கம் செய்யப்படவில்லை.

    கடந்த 2006 மற்றும் 2007-ம் ஆண்டுகளில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க. அப்போதைய தி.மு.க. சபாநாயகர் ஆவுடையப்பனை பதவி நீக்க கோரி 2 தடவை தீர்மானம் கொண்டு வந்தது. அந்த 2 தீர்மானங்களும் தோல்வியை தழுவின.

    அதுபோல கடந்த ஆண்டு சபாநாயகர் தனபாலை பதவி நீக்க செய்யக்கோரி எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானமும் தோல்வியை தழுவியது.

    தற்போது தனபால் மீது 2-வது முறையாக பதவி நீக்கக் கோரி தீர்மானம் கொண்டு வர மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தடவை அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டவரே மனு கொடுத்துள்ளார். தி.மு.க. அவருக்கு ஆதரவு கொடுக்கும் பட்சத்தில் என்ன நடக்கும் என்பதற்கு சட்டசபை நிகழ்வு தான் விடை தரும். #Karunas #Speaker
    ஜெ.பி.எல். நிறுவனத்தின் புதிய ஹெட்போன் மற்றும் ஸ்பீக்கர் தள்ளுபடி விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. #headphones


    இந்தியாவில் ஜெ.பி.எல். சாதனங்களை பிரபலப்படுத்தும் நோக்கில் புதிய வலைதளம் துவங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஜெ.பி.எல். நிறுவனத்தின் இரண்டு சாதனங்கள்: ஜெ.பி.எல். கோ பிளஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் மற்றும் ஜெ.பி.எல். T250BT ஹெட்போன் உள்ளிட்டவற்றை அறிமுகமாகி உள்ளன.

    இத்துடன் ஆகஸ்டு 7, 2018 துவங்கி நான்கு நாட்களுக்கு சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையில் அனைத்து ஜெ.பி.எல். சாதனங்களிலும் அதிகபட்சம் 50% வரை தள்ளுபடி பெற முடியும். மேலும் ஒவ்வொரு 50-வது வாடிக்கையாளருக்கு அவரவர் வாங்கும் பொருளுடன் இலவச ஜெ.பி.எல். ஸ்போர்ட்ஸ் இயர்போன் வழங்கப்படுகிறது.



    சிறப்பு விற்பனையின் கீழ் அனைத்து சாதனங்களுக்கும் ஒரு ஆண்டு கூடுதல் வாரண்டி வழங்கப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டு கொண்டு பணம் செலுத்தும் போது 10% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஹெட்போன்கள், ப்ளூடூத் ஸ்பீக்கர்களில் துவங்கி, ஹோம் மற்றும் மல்டிமீடியா சாதனங்களும் புதிய ஜெ.பி.எல். ஆன்லைன் தளத்தில் விற்பனை செய்யப்படுன்கிறன.

    புதிய சாதனங்களின் படி ஜெ.பி.எல். கோ பிளஸ் ஆல்-இன்-ஒன் ஸ்பீக்கர் இசையை ப்ளூடூத் வழியே ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்களில் இருந்து இசைக்கிறது. இதனுடன் 5 மணி நேர பிளேடைம் கொண்டுள்ள ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி வழங்கப்படுகிறது. இத்துடன் நாய்ஸ்-கேன்சலிங் வசதி கொண்ட ஸ்பீக்கர்போன் வழங்கப்பட்டுள்ளதால், பயனர்கள் ஸ்பீக்கரை ஆஃப் செய்யாமல் ஸ்மார்ட்போனிற்கு வரும் அழைப்புகளை எடுத்து பேச முடியும்.



    இத்துடன் ஜெ.பி.எல். TBT ஹெட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் 12.5 எம்எம்-இல் டிரைவர்கள் மற்றும் ஒற்றை பட்டன் கொண்ட ரிமோட் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு பயனர்கள் மியூசிக் பிளேபேக் இயக்குவதோடு, அழைப்புகளையும் பேச முடியும்.

    மூன்று நிறங்களில் கிடைக்கும் ஜெ.பி.எல். கோ பிளஸ் ஸ்பீக்கர் விலை ரூ.3499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று ஜெ.பி.எல். T205BT ஹெட்போன் விலை ரூ.2999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, எனினும் இரண்டு சாதனங்களும் தற்சமயம் ரூ.1,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. புதிய ஜெ.பி.எல். சாதனங்கள் பிரத்யேகமாக ஜெ.பி.எல். வலைதளத்தில் மட்டும் விற்பனை செய்யப்படுகின்றன. #headphones #speakers
    நிதி ஒதுக்க மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்த பின்னர் மீண்டும் சட்டமன்றத்தை கூட்டி சபையின் ஒப்புதல் பெறப்படும் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார். #puducherryassembly

    புதுச்சேரி:

    இன்று காலை 11.30 மணிக்கு சபாநாயகர் காலவரையின்றி சபையை ஒத்தி வைத்தார். இதைத்தொடர்ந்து சபாநாயகர் வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    துறைரீதியான நிதி ஒதுக்க மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். ஒட்டுமொத்த நிதி ஒதுக்க மசோதாவை கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி இருந்தோம்.

    ஆனால், அவர் அதில் கையெழுத்திடவில்லை. இதனால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாத நிலை ஏற்படும். அரசு கொடுத்த பணிகளை நான் முடித்துவிட்டேன். நிதி ஒதுக்க மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்த பின்னர் மீண்டும் சட்டமன்றத்தை கூட்டி சபையின் ஒப்புதல் பெறப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #puducherryassembly

    பாராளுமன்றத்தில் ஒரு நாளைக்கு 5 கேள்விகள் மட்டுமே கேட்க அனுமதி அளிக்கப்படும் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். #SumitraMahajan #parliament
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் இதுவரை ஒரு நாளைக்கு 10 கேள்விகள் வரை கேட்க எம்.பி.க்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்  ஒரு நாளைக்கு 5 கேள்விகள் மட்டுமே கேட்க அனுமதி அளிக்கப்படும் என மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் புதிய உத்தரவை பிறப்பித்து உள்ளார்.

    மக்களவை பொதுச் செயலாளர் சினேகலதா ஸ்ரீவத்சவா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மக்களவையில் இதற்கு முன்பு எம்.பி.க்கள் நாள் ஒன்றுக்கு 10 கேள்விகள் வரை கேட்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் அதிக கேள்விகள் குவிவதுடன், ஒரு சில எம்.பி.க்கள் கேள்வி கேட்க வாய்ப்பு கிடைப்பதில்லை. 

    எனவே தற்போது 5 கேள்விகள் மட்டுமே கேட்க அனுமதி அளிக்கப்படுகிறது. அதற்கு மேல் கேட்கும் எம்.பி.க்களின் கேள்விகள் பரிசீலிக்கப்பட்டு அடுத்த நாள் அவை சபையில் இடம்பெறும். இந்த உத்தரவு, வரும் மக்களவை கூட்டத்தொடரில் இருந்து அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. #SumitraMahajan #parliament
    கவர்னர் குறித்து ஸ்டாலின் பேசியதற்கு விளக்கம் கூற முயன்ற ஓ.எஸ் மணியனுக்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால், அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். #TNAssembly
    சென்னை:

    சட்டசபையில் கவர்னர் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது தொடர்பாக ஒரு விளக்கத்தை சொல்ல கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச முற்பட்டார். ஆனால் அவருக்கு சபாநாயகர் பேச அனுமதி மறுத்தார்.

    ஏற்கனவே கவர்னர் குறித்து இங்கு மேற்கொண்டு விவாதிக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சி தலைவருக்கு சொல்லிவிட்டேன். எனவே நீங்கள் அதுதொடர்பாக பேசி புதுப்பிரச்சினைக்கு போக வேண்டாம் என்றார். ஆனாலும், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை கேட்காமலேயே ஏன் பேசவேண்டாம் என்கிறீர்கள் என்று சபாநாயகரை பார்த்து கேட்டார். இதனால், சபாநாயகருக்கும் அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது சபாநாயகர் கூறுகையில், ‘‘நீங்கள் பேசுவது எனக்கு சரியாக படாவிட்டால் உங்கள் பேச்சை நீக்க வேண்டியது வரும் என்றார். ஆனாலும், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தான் சொல்ல நினைத்த கருத்தை எப்படியும் பேசியே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் பேச முற்பட்டார்.

    அப்போது துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குறுக்கிட்டு, கவர்னர் பற்றி மேற் கொண்டு பேச வேண்டாம் என்ற கருத்தில் சில வார்த்தைகளை தெரிவித்தார். உடனே சபாநாயகர், அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு பேச வாய்ப்பு வழங்காமல் வேறு நிகழ்ச்சி நிரலை நடத்த தொடங்கினார்.

    தன்னை பேச அனுமதியுங்கள் என்று நின்று கொண்டிருந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தனக்கு பேச வாய்ப்பு கிடைக்காததால் கோபத்தில் இருக்கையில் அமர்ந்தார். பின்னர், உடனே தனது இருக்கையில் இருந்து எழுந்து வெளியே சென்றார்.
    கோவை மாவட்டம் குன்னத்தூர் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் ரூ 8.5 லட்சம் மதிப்பிலான அங்கன்வாடி கட்டிடத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார்.
    அன்னூர்:

    அன்னூர் ஊராட்சி ஒன்றியம், குன்னத்தூர் பஞ்சாயத்து குன்னத்தூரில் அங்கன்வாடி கட்டிட திறப்பு விழா திட்ட இயக்குனர் ரூபன்சங்கர்ராஜா தலைமையில் நடந்தது. அன்னூர் தாசில்தார் ராஜன் வரவேற்றார்.

    விழாவில் குன்னத்தூர் பஞ்சாயத்து குன்னத்தூரில் ரூ 8.5 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம், பொகளூர் பஞ்சாயத்து கோபிராசிபுரத்தில் ரூ 8.5 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம், பச்சாபாளையம் பஞ்சாயத்து மோளபாளையத்தில் ரூ 8.5 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம், நாராணபுரம் பஞ்சாயத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், காரேகவுண்டன் பாளையம் பஞ்சாயத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார்.

    திட்ட இயக்குனர் ரூபன்சங்கர்ராஜா பேசும்போது, அன்னூர் ஊராட்சி பகுதியில் புதிய குடிநீர் திட்டத்திற்கு ஆய்வு நடைபெற்று வருகிறது. விரைவில் அறிக்கை தயாரிக்கப்படும்.

    தற்போது கோடை மழை பெய்து வருகிறது. தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் மரக்கன்று நடப்பட்டு வருகிறது. ஏக்கர் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 500 மரக்கன்று நடப்படுகிறது. இந்த திட்டத்தில் 10 சென்ட் முதல் 40 சென்ட் அளவில் உள்ள அரசு நிலங்களில் அன்னூர் பகுதியில் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மரக்கன்று வளர்க்க தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று பேசினார்.

    விழாவில் 50 பேருக்கு முதியோர் உதவித் தொகை பெற ஆணை வழங்கப்பட்டது.விழாவில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் விஜயராணி, அன்னூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் இளவரசு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து பேச, அவையை ஒத்திவைக்க வேண்டும் என்ற தி.மு.க.வின் தீர்மானத்தை சபாநாயகர் தனபால் ஏற்க மறுத்ததால் சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். #DMK #adjournmentmotion
    சென்னை:

    தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் முடிந்த நிலையில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்தி அந்தந்த துறைக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது.

    இந்த கூட்டத்துக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர திமுக சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

    சட்டப்பேரவை விதி 56-ன் படி ஸ்டெர்லைட் விவகாரம், துப்பாக்கிச்சூடு ஆகியவற்றை பற்றி நாள் முழுவதும் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கோரி  ஸ்டாலின் நோட்டீஸ் கொடுத்தார்.



    இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் தனபால் ஏற்க மறுத்துவிட்டார். ஏற்கனவே இதுபற்றி விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டிருப்பதால், அதன்மீது பேசும்படி தி.மு.க. உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார். ஆனால், தங்கள் தீர்மானத்தை சபாநாயகர் நிராகரித்ததை தி.மு.க. உறுப்பினர்கள் ஏற்க மறுத்தனர். சபாநாயகரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். #DMK #adjournmentmotion

    கர்நாடக சட்டப்பேரவையில் இன்று குமாரசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், சபாநாயகராக காங்கிரசைச் சேர்ந்த ரமேஷ்குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். #KarnatakaAssembly #KarnatakaSpeaker
    பெங்களூரு:

    சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. 104 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பா.ஜ.க.வை முதலில் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். அதன்படி எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். ஆனால் அவரால் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாததால், பதவி விலகினார். இதையடுத்து, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.  

    விதான் சவுதாவில் மஜத தலைவர் குமாரசாமி முதல் மந்திரியாக பதவியேற்றார். அவருடன் துணை முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்ட கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவும் பதவியேற்றார்.

    இவர்கள் இருவரை தவிர மேலும் 32 பேர் மந்திரிகளாக பதவியேற்க உள்ளனர். இதில் காங்கிரசுக்கு 22 மந்திரி பதவிகளும், மஜதவுக்கு 12 மந்திரி பதவிகளும் அடக்கம்.



    இந்நிலையில், குமாரசாமி தலைமையிலான அரசுக்கு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதற்காக சட்டப்பேரவை இன்று கூடியது. முதலில் சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் சார்பில் ரமேஷ்குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். பா.ஜ.க. சார்பில் சுரேஷ்குமார் நிறுத்தப்பட்டிருந்தார்.

    ஆனால், கடைசி நேரத்தில் பா.ஜ.க தனது வேட்பாளரை திரும்ப பெற்றது. இதனையடுத்து சபாநாயகராக ரமேஷ் குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சபாநாயகர் பதவியேற்றதையடுத்து மாலை 3.30 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. #KarnatakaAssembly #KarnatakaSpeaker
    ×