search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "soldier"

    • சோழவந்தான் அருகே வைகை ஆற்றில் மூழ்கி ராணுவ வீரர் பலியானார்.
    • இவர் கடந்த 9-ந் தேதி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் செக்காணூரணி அருகே அனுப்பபட்டியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது25). இவர் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார்.

    இவர் கடந்த 9-ந் தேதி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். அவர் நண்பர்கள் 5 பேருடன் திருவேடகம்-மேலக்கால் தடுப்பணை அருகே வைகை ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது குளித்து கொண்டிருந்த வினோத்குமார் மற்றும் அதே பகுதியை சேர்ந்த அய்யங்காளை என்பவரின் மகன் அன்பரசன் ஆகியோர் சுழலில் சிக்கினர்.

    இதுபற்றி தீயணைப்பு மீட்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள் ஆற்றில் மூழ்கிய 2 பேரையும் தேடினர். இதில் அன்பரசனின் உடல் மீட்கப்பட்டது. ஆனால் வினோத்குமார் உடல் கிடைக்கவில்லை. அவரது உடலை தொடர்ந்து தேடி வந்தனர்.

    இந்த நிலையில் ஆற்றில் மூழ்கி பலியான வினோத்குமார் உடல் இன்று காலை மிதந்தது. அவரது உடலை தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் மீட்டனர்.

    பலியான வினோத்குமாருக்கும், நிறைமதி என்ற பெண்ணுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் வினோத்குமார் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • நீலமேகம் காஷ்மீரில் துணை ராணுவப்படை பிரிவில் வீரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கலைவாணி.
    • தொட்டியத்தில் மணிகண்டனுக்கு சொந்தமான இடத்தில் புதைத்து வைத்திருந்த 5 பவுன் தங்க கட்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    திருச்சி :

    திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே ஜெம்புநாதபுரம் போலீஸ் சரகம் பேரூர் கிராமத்தை சேர்ந்தவர் நீலமேகம். இவர் காஷ்மீரில் துணை ராணுவப்படை பிரிவில் வீரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கலைவாணி. இந்தநிலையில் கடந்த 27.4.2022 அன்று பேரூர் கிராமத்தில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த கலைவாணியிடம் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தாலி சங்கலியை நள்ளிரவில் மர்மநபர் பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

    இந்த சம்பவத்தில் கழுத்தில் காயமடைந்த கலைவாணி முசிறி அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து நீலமேகம் காஷ்மீரில் இருந்து வாட்ஸ்அப் மூலமாக தனது குடும்பத்திற்கு பாதுகாப்பு வேண்டும் என பேசிய வீடியோ வைரலானது.

    பின்னர் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு ராணுவ வீரர் நீலமேகம் மற்றும் அவரது மனைவியிடம் காவல்துறை சார்பில் உரிய பாதுகாப்பு குறித்தும், குற்றவாளியை கைது செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

    திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் சம்பவ இடத்தினை நேரில் பார்வையிட்டு போலீசாருக்கு பல்வேறு அறிவுரைகள் கூறியிருந்தார். தா.பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையில் போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கலைவாணியிடம் தாலிசங்கிலி திருட்டில் ஈடுபட்ட நபர் வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்தியசிறையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் சிறையில் இருந்த தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த மணிகண்டன் என்கிற கண்ணன் (வயது 40) என்பவரை போலீஸ் காவலில் எடுத்து ஜெம்புநாதபுரம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பேரூர் கிராமத்தில் ராணுவ வீரர் மனைவியிடம் தாலி சங்கிலி பறித்து சென்றதை ஒப்புக் கொண்டார். பின்னர் தொட்டியத்தில் மணிகண்டனுக்கு சொந்தமான இடத்தில் புதைத்து வைத்திருந்த 5 பவுன் தங்க கட்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    திருச்சி, தஞ்சை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மணிகண்டன் மீது வழிப்பறி, திருட்டு, அடிதடி, உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. பின்னர் போலீசார் மணிகண்டனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.

    • திருமங்கலம் அருகே விடுமுறையில் வந்த ராணுவவீரர் உயிரிழந்தார்.
    • வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது.

     திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கப்பலூர் பொம்மையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல்(42). அரியானா மாநிலத்தில் ராணுவத்தில் பணிபுரிந்தார். 5 தினங்களுக்கு முன்பு வடிவேல் விடுமுறையில் வீட்டுக்கு வந்தார்.

    நேற்று வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. பின்பு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். வடிவேல் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மனைவி பாக்கியலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொண்டி அருகே ராணுவ வீரருக்கு மணிமண்டபம் திறப்பு - மனைவி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • ராணுவ வீரர் பழனியின் மனைவி, குழந்தைகளுடன் மணிமண்டபம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஹவில்தார் பழனி (வீர் சக்ரா) கடந்த

    2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந் தேதி இந்திய- சீன எல்லையான லடாக் பகுதியில் கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்தார்.

    அவரது உடல் அவரது சொந்த ஊரான கடுக்கலூரில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவாக மணிமண்டபம் கட்ட அவரது பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இருப்பினும் அவரது பெற்றோர்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தங்களது சொந்த செலவில் தன் மகனுக்கு மணிமண்டபம் அமைத்தனர். அதனை பழனியின் தாயார் லோகம்பாள்-தந்தை காளிமுத்து ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிலையில் பழனியின் மனைவி மணிமண்டபம் திறப்பு விழாவில் தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது குழந்தை மற்றும் பெற்றோர்களுடன் மணி மண்டபம் எதிரே சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    தேர்தல் பிரசாரத்துக்கு ராணுவ வீரர்களின் புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாது என தேர்தல் கமிஷனின் செயலாளர் பிரமோத் குமார் சர்மா தெரிவித்துள்ளார். #ElectionCommission #ElectionCampaign #SoldiersPhoto
    புதுடெல்லி:

    அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் தேர்தல் கமிஷனின் செயலாளர் பிரமோத் குமார் சர்மா கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து உள்ளார். அதில், ராணுவ தளபதி, ராணுவ வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் ராணுவ விழாக்கள் தொடர்பான புகைப்படங்களை தேர்தல் தொடர்பான விளம்பரங்களுக்கோ, பிரசாரத்துக்கோ எந்த வகையிலும் பயன்படுத்தக்கூடாது என்றும், இது தொடர்பாக கட்சியினருக்கும், வேட்பாளர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

    சில அரசியல் கட்சிகள், தலைவர்கள், வேட்பாளர்கள் ராணுவத்தினரின் புகைப்படங்களை தங்கள் தேர்தல் பிரசார விளம்பரங்களில் பயன்படுத்துவதாக ராணுவ அமைச்சகம் தேர்தல் கமிஷனின் கவனத்துக்கு கொண்டு வந்ததாகவும், இதைத்தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருக்கிறது. 
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட ராணுவ வீரரின் தந்தை, பிரதமர் மோடியின் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். #SambaRally #PMModi
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி ராணுவ வீரரான அவுரங்கசீப், ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவதற்காக வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்று சுட்டுக்கொன்றனர்.

    இதனையடுத்து பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் தலைமை ராணுவ தளபதி பிபின் ராவத் ஆகியோர் அவுரங்கசீப்பின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். ஜவான் அவுரங்கசீப்புக்கு சவுர்யா சக்ரா விருது வழங்கப்பட்டது.

    இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டம் விஜய்பூரில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் பாஜக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது, பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட ராணுவ வீரர் அவுரங்கசீப்பின் தந்தை முகமது ஹனீப் மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரி ராகேஷ் குமார் ஷர்மா ஆகியோர் மோடியின் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். அப்போது, பாஜக மாநில தலைவர் ரவீந்தர் ரெய்னா உடனிருந்தார்.

    ஏழைகளுக்கான கொள்கைகள் கொண்ட பாஜகவில் சேர்ந்துள்ளதாகவும், முந்தைய அரசாங்கத்தினைப் போல் அல்லாமல் மோடி அரசு சிறந்த முறையில் ஆட்சி நடத்தி வருவதாகவும் ஹனீப் தெரிவித்துள்ளார்.  #SambaRally #PMModi

    காஷ்மீரில் 2 இடங்களில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலியானார். #JK #MilitantsKilled
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் ரெட்ஹனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை மூலம் ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், மாநில போலீசார் ஆகியோர் இணைந்து அந்த வீட்டை நள்ளிரவில் முற்றுகையிட்டனர்.

    அவர்களை பார்த்ததும் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினர் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. வீடுகள் நிறைந்த பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    5 மணி நேரம் நடந்த இந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அவர்கள் யார்? எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை.

    இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலியானார். அங்கிருந்த ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர்.

    இதேபோல மற்றொரு என்கவுண்டர் சம்பவம் நிகழ்ந்தது.

    புல்ஹமா மாவட்டம் டிரால் பகுதியை அடுத்த ஹபு என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    காஷ்மீரில் கடந்த ஒரு வாரத்தில் 20 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #JK #MilitantsKilled

    ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். #PakistanViolatesTruce #JKAttack
    ஜம்மு:

    காஷ்மீர் எல்லையில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் படையினர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர். இந்திய நிலைகளை குறிவைத்து அவர்கள் தாக்கும்போது, இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்துகிறது.

    அவ்வகையில், மீண்டும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான் ராணுவம், சுந்தர்பானி செக்டார் கோவூர் பகுதியில் இன்று காலை துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவம் தரப்பில் வருண் என்ற வீரர் உயிரிழந்தார்.



    இதேபோல், நேற்று அக்னுர் பகுதியில் நடந்த தாக்குதலில் ஒரு வீரர் உயிரிழந்தார். பிப்மர் காலி பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. #PakistanViolatesTruce #JKAttack

    புவனேஸ்வரம் அருகே ராணுவ வீரருன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புவனேஸ்வரம்:

    மேற்கு வங்காளம் மெத்னிப்பூரை சேர்ந்தவர் மந்துப்பத்ரா. இவர் ஒரிசா மாநிலம் தென்கானல் என்ற இடத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி அருணா. இவர் சமூக வலைதளம் மூலம் பலருடன் நட்பு வைத்திருந்தார். பேஸ்புக்கில் சஞ்சய்குமார் என்ற எல்லை பாதுகாப்புபடை வீரர் அருணாவுக்கு அறிமுகமானார்.

    அரியான மாநிலத்தை சேர்ந்த சஞ்சய்குமார் அசாமில் நேபாளம் எல்லையில் பணியாற்றி வந்தார். அருணாவும், சஞ்சய்குமார் அடிக்கடி பேஸ்புக்கில் தொடர்பு கொள்வது வழக்கம். இது அவர்களுக்குள் காதலை ஏற்படுத்தியது.

    சஞ்சய்குமார் அடிக்கடி தென்கானலுக்கு வந்து அருணாவை சந்திப்பார். அப்போது அவர்கள் தனிமையில் இருப்பது வழக்கம். இந்த காதல் விவகாரம் மந்துப்பத்ராவுக்கு தெரிய வந்தது. அவர் அருணாவை கண்டித்தார்.

    இதனால் கணவரை தீர்த்து கட்டிவிட்டு சஞ்சய் குமாரை திருமணம் செய்து கொள்ள அருணா முடிவு செய்தார். இதற்கு சஞ்சய்குமார் சம்மதித்தார். கடந்த 3-ந் தேதி இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக சஞ்சய்குமார் தென்கானலுக்கு வந்தார்.

    அன்று காலை அருணா கணவர் மந்துப்பத்ராவுக்கு காலை உணவில் வி‌ஷத்தை கலந்து கொடுத்தார். இதில் அவர் மயங்கி விழுந்தார். உடனே அருணா காதலர் சஞ்சய் குமாரை வீட்டுக்கு அழைத்தார். அவர் கத்தியால் மந்துப்பத்ராவின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் அவர் அசாம் சென்று விட்டார்.

    தனது கணவரை யாரோ கொன்று விட்டதாக போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் விசாரணையில் அருணா கொலை பின்னணியில் இருப்பதை கண்டுபிடித்தனர். அவரை போனை ஆய்வு செய்த போது சஞ்சய் குமாருடன் பேஸ் புக்கில் அடிக்கடி தொடர்பு கொண்டது தெரியவந்தது.

    அது பற்றி தீவிரமாக விசாரித்த போது காதலருடன் சேர்ந்து கொலை செய்ததை அருணா ஒத்துக்கொண்டார். இதையடுத்து போலீசார் அசாமுக்கு சென்று சஞ்சய் குமாரை கைது செய்தனர். அருணா மற்றும் சஞ்சய் குமார் இருவரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். #tamilnews
    ராணுவ வீரரை கன்னத்தில் அறைந்ததற்காக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலஸ்தீன பெண் அஹெத் தமிமி தற்போது சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். #Israel #Palestine #AhedTamimi
    ஜெருசலேம்:

    பாலஸ்தீன நாட்டின் மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் தனது ராணுவ அடக்குமுறை மூலம் அப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்து அங்கு குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பாலஸ்தீன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராணுவத்தின் அத்துமீறல்களை எதிர்த்தும், அடக்குமுறைகளை கண்டித்தும் பாலஸ்தீன மக்கள் போராடி வருகின்றனர்.

    இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது வீட்டின் அருகில் இருந்த பகுதியில் ராணுவ வீரர்கள் தனது உறவினரை தாக்குவதை கண்ட 15 வயது அஹெத் தமிமி என்ற பாலஸ்தீன சிறுமி ராணுவ வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, வீரர் ஒருவர் அவரை கன்னத்தில் அறைய, தமிமியும் ராணுவ வீரரை உதைத்து, கன்னத்தில் அறைந்தும் பதிலடி கொடுத்துள்ளார்.



    இந்த சம்பவத்தை தமிமியின் தாயார் வீடியோ பதிவு செய்து பேஸ்புக்கில் வெளியிட்டார். இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. பாலஸ்தீன் மக்கள் மத்தியில் தமிமி முக்கியத்துவம் பெற்றார்.

    இதையடுத்து, ராணுவ வீரரை தாக்கியதாக அவர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. அதில் தமிமிக்கு 8 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், ராணுவ வீரரை தாக்கியதாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீன சிறுமி தமிமி, தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். #Israel #Palestine #AhedTamimi
    கப்பலூர் அருகே குடிபோதையில் டோல்கேட் ஊழியர்களை கத்தியால் குத்திய சம்பவம் குறித்து 3 பேரை கைது செய்த போலீசார் ராணுவ வீரர் உள்பட 2 பேரை தேடி வருகின்றனர்.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர், காந்திநகரைச் சேர்ந்தவர் காசி மகன் விக்னேஷ் (வயது 23). ராணுவ வீரரான இவர் விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளார்.

    நேற்று மாலை விக்னேஷ் தனது நண்பர்கள் சரத் (28), கார்த்திக் (28) ஆகியோருடன் மது குடித்ததாக தெரிகிறது. பின்னர் 3 பேரும் போதையில் கப்பலூர் டோல்கேட்டுக்கு சென்றனர். அங்கு அவர்கள் பணியில் இருந்த ஊழியர்களிடம் தகராறு செய்தனர்.

    இது குறித்து டோல்கேட் பொறுப்பாளர் சங்கர், திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விக்னேஷ் உள்பட 3 பேரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் அவர்களை எச்சரித்து விடுவித்தனர்.

    இந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜா, சுரேஷ் ஆகியோருடன் கப்பலூரில் தங்கியிருக்கும் டோல்கேட் ஊழியர்களின் வீட்டுக்கு நேற்றிரவு சென்றனர்.

    அங்கிருந்த ஊழியர்கள் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தாருண் போஸ், ஒரிசாவைச் சேர்ந்த சஞ்சய் ஆகியோருடன் தகராறு செய்தனர்.

    பின்னர் 5 பேரும் சேர்ந்து 2 ஊழியர்களையும் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பினர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக், ராஜா, சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர். ராணுவ வீரர் விக்னேஷ், சரத் ஆகியோரை தேடி வருகின்றனர். #tamilnews
    பாதுகாப்புபடை வீரர் வீட்டில் தங்கிய 15 வயது சிறுமி மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் சிறுமியை தேடி வருகிறார்கள்.

    நெய்வேலி:

    நெய்வேலி புதுநகர் 22-வது வட்டம் என்.எல்.சி. குடியிருப்பை சேர்ந்தவர் வீரேந்திரகவுதம் (வயது 38). இவரது மனைவி அனுராதா (32). இவர்களுக்கு 2 வயதில் பெண்குழந்தை ஒன்று உள்ளது. இவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    கணவனும், மனைவியும் நெய்வேலி மத்திய தொழிலக பாதுகாப்பு படையில் வீரர்களாக பணியாற்றி வருகிறார்கள். கணவனும், மனைவியும் வேலைக்கு செல்வதால் குழந்தையை கவனிக்க ஆள்இல்லாமல் இருந்தது. இதனைத்தொடர்ந்து வீரேந்திரகவுதம் தனது சித்தப்பா மகள் பலாக் (15) என்ற சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார். வீரேந்திரகவுதமும், அனுராதாவும் வேலைக்கு சென்றிருந்தபோது குழந்தையை சிறுமி பலாக் கவனித்து வந்தார்.

    நேற்று முன்தினம் காலையில் கணவனும், மனைவியும் வேலைக்கு சென்றிருந்தனர். இரவு அவர்கள் பணிமுடிந்து வீட்டுக்கு வந்தனர். அப்போது குழந்தை மட்டும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தது. பலாக்கை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர். எங்கும் அவரை காணவில்லை. இதனைத்தொடர்ந்து நெய்வேலி தெர்மல் போலீசில் அனுராதா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சிறுமி பலாக்கை தேடி வருகின்றனர்.

    ×