search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pakistan violates"

    காஷ்மீரில் உள்ள எல்லைப்பகுதியில் இன்று பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய எல்லை பாதுகாப்பு படை உதவி ‘கமான்டன்ட்’ வினய் பிரசாத் வீர மரணமடைந்தார். #Pakistanviolates #ceasefire #jawankilled #Hiranagarsector
    ஜம்மு: 
     
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய எல்லைக்கோட்டுப் பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் உரிய பதிலடி தந்து வருகின்றனர்.

    அவ்வகையில், கத்துவா மாவட்டத்தில் உள்ள ஹிராநகர் செக்டர் எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படைகள் இன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த ‘கமான்டன்ட்’ வினய் பிரசாத் வீர மரணமடைந்தார். #Pakistanviolates #ceasefire #jawankilled # Hiranagarsector
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் காயமடைந்தார். #Pakistanviolates #ceasefire #jawaninjured
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் உரிய பதிலடி தந்து வருகின்றனர்.

    அவ்வகையில், ஜம்மு பகுதிக்குட்பட்ட ரஜோரி மாவட்டம்,  சுந்தர்பானி செக்டர் பகுதியில் உள்ள இந்திய கண்காணிப்பு சாவடிகளின் மீது இன்று காலை சுமார் பத்து மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென்று துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்திய வீரர்களும் பதிலடி தந்தனர்.

    இதேபோல், கத்துவா மாவட்டத்தில் உள்ள சர்வதேச ஹிராநகர் செக்டர் எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயமடைந்தார். 

    இப்பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நீடித்து வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. #Pakistanviolates #ceasefire #jawaninjured
    காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தை ஒட்டியுள்ள எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படைகள் இன்று அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த இரு ராணுவ அதிகாரிகள் வீரமரணம் அடைந்தனர். #Armyofficerskilled #Pakistanviolates #Kupwaraceasefire
    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் , குப்வாரா மாவட்டத்தை ஒட்டியுள்ள எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படைகள் இன்று பகல் சுமார் 12 மணியளவில்  இந்திய நிலைகளின்மீது துப்பாக்கிளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

    இந்திய வீரர்களும் எதிர்தாக்குதலில் ஈடுபட்டனர். இருதரப்பினருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவத்தை சேர்ந்த ஒரு இளநிலை அதிகாரி வீரமரணம் அடைந்தார். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேலும் ஒரு இளநிலை அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் இன்றைய தாக்குதலில் பலி எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது. #Armyofficerskilled  #Pakistanviolates #Kupwaraceasefire 
    ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். #PakistanViolatesTruce #JKAttack
    ஜம்மு:

    காஷ்மீர் எல்லையில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் படையினர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர். இந்திய நிலைகளை குறிவைத்து அவர்கள் தாக்கும்போது, இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்துகிறது.

    அவ்வகையில், மீண்டும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான் ராணுவம், சுந்தர்பானி செக்டார் கோவூர் பகுதியில் இன்று காலை துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவம் தரப்பில் வருண் என்ற வீரர் உயிரிழந்தார்.



    இதேபோல், நேற்று அக்னுர் பகுதியில் நடந்த தாக்குதலில் ஒரு வீரர் உயிரிழந்தார். பிப்மர் காலி பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. #PakistanViolatesTruce #JKAttack

    ×