search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sold"

    • விவசாயிகள் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
    • ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்ச ந்தை செயல்படுகிறது. வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.

    நேற்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.10, கத்தரிக்காய் ரூ.40, பீர்க்கங்காய் ரூ.60, பெரிய வெங்காயம் ரூ.20, சின்ன வெங்காயம் ரூ. 30, உருளைக்கிழங்கு ரூ.30, பீட்ரூட் ரூ.40, புடலங்காய் ரூ.50, முட்டை கோஸ் ரூ.25, பீன்ஸ் ரூ.120, கேரட் ரூ.40, பாவற்காய் ரூ.60,வெண்டை க்காய் ரூ.60, இஞ்சி ரூ.100, அவரைக்காய் ரூ.80, நேரோ காய் ரூ. 30, கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.60,சுரக்காய் ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது.இத்தகவலை வாரச்சந்தை காய்கறி வியாபாரி குமார் தெரிவித்தார்.

    • கலைநிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் நடந்தது.
    • ரூ.15 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை ஆகி இருந்தது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் முதலாவது புத்தக திருவிழா கண்காட்சி கடந்த 5-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடந்தது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு ஒவ்வொரு நாளும் பள்ளி மாணவ- மாணவிகள், பழங்குடியினர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் நடந்தது.

    புத்தக திருவிழாவில் பல்வேறு புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் மிகவும் பழமை வாய்ந்த புத்தகங்கள் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது. இது உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலாபயணிகளிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.

    புத்தக திருவிழா கடந்த 14-ந் தேதி நிறைவு பெறுவதாக இருந்தது. புத்தக ஆர்வலர்கள், பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று 19-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. கடந்த 5-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 33,257 பார்வையாளர்கள் புத்தக கண்காட்சியை பார்வையிட்டு இருந்தனர். இதில் ரூ.15 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை ஆகி இருந்தது.

    பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால் இனி ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்படும் என அதிகாரிகள் தெரி வித்தனர்.

    • ஞாயிறுதோறும் முருங்கை க்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
    • 85 விவசாயிகள் 25 டன் முருங்கைகாய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையொட்டி ஞாயிறுதோறும் முருங்கை க்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது, இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து செல்கின்றனர். நேற்று 85 விவசாயிகள் 25 டன் முருங்கைகாய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.25 முதல் 30வரைக்கும், மரம் முருங்கை ரூ.25முதல் 30வரைக்கும், கரும்பு முருங்கை ரூ.45 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர், இத்தகவலை முருங்கைக்காய் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • தேவகோட்டையில் நாட்கணக்கில் வைத்து விற்கப்படும் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • ஷாகுல் அமீது என்பவர் 10 நாட்களுக்கு மேல் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை விற்பது தெரியவந்தது.

    தேவகோட்டை,

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 1 லட்சத்திற்கும் மேலான மக்கள் வசித்து வருகின்றனர்.

    இங்குள்ள இறைச்சி கடைகளில் விற்கப்படும் ஆட்டுக்கறி சுகாதாரமற்ற முறையிலும், நாட்கணக்கில் பதப்படுத்தப்பட்டு விற்கப்படுவதாகவும் புகார்கள் வந்தன.

    இது தொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரி வேல்முருகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் உதவியாளர் மாணிக் கம் ஆகியோர் தலைமையில் தேவகோட்டை பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் அதிரடி சோதனை நடத்தி னர்.

    அப்போது நகைக்கடை பஜாரில் இறைச்சி கடை நடத்தி வரும் ஷாகுல் அமீது என்பவர் 10 நாட்களுக்கு மேல் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை விற்பது தெரியவந்தது. அவருக்கு சொந்தமாக அண்ணாநகர், ஆறாவயல், வெள்ளையன் ஊரணி ஆகிய பகுதி களிலும் இறைச்சி கடை கள் உள்ளன. இங்கும் கெட்டுப்போன இறைச்சி விற்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து மேற்கண்ட 4 கடைகளில் இருந்தும் 1000 கிலோ ஆட்டுக்கறி பறிமுதல் செய்யப்பட்டு சாகுல் அமீதுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தேவகோட்டையில் இறைச்சி களுக்காக ஆடுகள் அறுக்கும் போது பரிசோதனை செய்து ரசீது வழங்கி கடைகளுக்கு இறைச்சிகளில் சீல் வைத்து அனுப்பப்படுவது வழக்கம்.

    ஆனால் இந்த நடைமுறை கடந்த சிலமாதங்களாக பின்பற்றப்படுவது இல்லை. இதனால் சுகாதாரமற்ற நாட்கணக்கில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் விற்கப்பட்டு வருகிறது. இதனை வாங்கி உட்கொள்ளும் பொது மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    எனவே இனியாவது நகராட்சி நிர்வாகம் கடுமையாக கண்காணித்து ஆட்டு இறைச்சி விற்ப னைக்கு விதிகளை பின் பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

    • ஏலத்தில் 11, 036 தேங்காய்கள் வரத்து இருந்தன.
    • ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 2 லட்சம்.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 5.70 டன் வேளாண் விளைபொருள்கள் விற்பனையாயின.இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமைதோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 11, 036 தேங்காய்கள் வரத்து இருந்தன.இவற்றின் எடை 4,743 கிலோ.தேங்காய் கிலோ ரூ.21.10 முதல் ரூ.27.25 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.24.65. 51 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது. இவற்றின் எடை 980 கிலோ.கொப்பரை கிலோ ரூ.61.15 முதல் ரூ.85.35 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.78.85.ஏலத்தில் 96 விவசாயிகள், 10 வணிகா்கள் பங்கேற்றனா். ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 2 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

    • 92 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
    • சந்தையில் அதிகபட்சமாக ரூ.65 ஆயிரத்துக்கு காங்கேயம் இன பூச்சி வகை காளை விற்பனையானது.

    காங்கயம் :

    திருப்பூா் மாவட்டம் காங்கயம் அருகே நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 92 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

    இதில் 65 மாடுகள் மொத்தம் ரூ.24 லட்சத்துக்கு விற்பனையாயின. இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.65 ஆயிரத்துக்கு காங்கேயம் இன பூச்சி வகை காளை விற்பனையானது. காங்கேயம் காளை என அடையாளப்படுத்தப்படும் காளை மாடுகள் இந்த பூச்சி வகையைச் சோ்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

    • சேலத்தில் வீடு வாடகைக்கு எடுத்து லாட்டரி தயாரித்து விற்ற கும்பல் கைது செய்யப்பட்டனர்.
    • சேலத்தில் மட்டுமின்றி தமிழகம் ஏெஜண்டுகளை நியமித்து, லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதும், தெரிந்தது

    சேலம்:

    சேலம் கருப்பூர் மேட்டுப்பதி சுடுகாடு அருகே தகரக்கொட்டகை வீட்டை வாடகைக்கு எடுத்து லாட்டரி சீட்டு விற்பதாக கருப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார், நேற்று மாலை அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது ஒரு நம்பர் லாட்டரி சீட்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த கருப்பூர் பனங்காட்டை சேர்ந்த ஏழுமலை (வயது 48), சங்ககிரி கேசவன் (35), கருப்பூர் செல்லப்பட்டி புதூர் செல்லதுரை (42) உள்பட 6 பேரை கைது செய்தனர்.

    இவர்கள் ஆன்லைன் மூலம் ஒரு நம்பர் லாட்டரி விற்று வந்ததும், சேலத்தில் மட்டுமின்றி தமிழகம் ஏெஜண்டுகளை நியமித்து, லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதும், தெரிந்தது. அவர்களிடம் இருந்து 4 லட்சத்து 19 ஆயிரத்து 840 ரூபாய், மடிக்கணினி, உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

    • அதிகபட்சமாக கிலோ ரூ.25-க்கும், குறைந்த பட்சமாக ரூ.21.77-க்கும், சராசரியாக ரூ.24-க்கும் ஏலம் போனது.மொத்தம் ரூ.67 ஆயிரத்து 166-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
    • ஏலத்திற்கு 5 ஆயிரத்து 535 கிலோ தேங்காய்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.


    பரமத்திவேலூர்:


    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மின்னனு தேசிய வேளாண்மை சந்தையில் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம் போனது. பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை தோறும் முழுத்தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது.


    கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 2ஆயிரத்து 791 கிலோ தேங்காய்களை ‌ விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.25-க்கும், குறைந்த பட்சமாக ரூ.21.77-க்கும், சராசரியாக ரூ.24-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.67 ஆயிரத்து 166-க்கு வர்த்தகம் நடைபெற்றது.


    நேற்று செவ்வாய்க் கிழமை நடைபெற்ற ‌ஏலத்திற்கு 5 ஆயிரத்து 535 கிலோ தேங்காய்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ‌ஒன்று ரூ.25.11 -க்கும், குறைந்தபட்சமாக ரூ20- க்கும், சராசரியாக ரூ.‌24.51-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 544 -க்கு வர்த்தகம் நடைபெற்றது.


    • ஏலத்திற்கு 1825 மூட்டை பருத்தி வந்திருந்தது.
    • பருத்தி குவிண்டால் ரூ.9000 முதல் ரூ. 3 ஆயிரம் வரையிலும் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர்.

    அவினாசி :

    அவினாசி வேளாண்மை உற்பதியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பிரதிவாரம் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும். ஏலத்திற்கு 1825 மூட்டைபருத்தி வந்திருந்தது.

    இதில் ஆர்.சி.எச்.ரகப் பருத்தி குவிண்டால் ரூ.9000 முதல் ரூ.12,019 வரையிலும், மட்டரக பருத்தி குவிண்டால் ரூ. 3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரையிலும் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர். ஏலத்தின் மொத்த மதிப்பு ரூ.56.70 லட்சம். அடுத்த வாரம் புதன்கிழமை ஆயுதபூஜை என்பதால் ஒருநாள் முன்னதாக 30ந்தேதி ( செவ்வாய்கிழமை) பருத்தி ஏலம் நடைபெறும் சங்க மேலாண்மை இயக்குனர் சரவணகுமார் தெரிவித்துள்ளார்.

    • மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது.
    • 107 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

    காங்கயம் :

    திருப்பூா் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 107 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

    இதில் 74 மாடுகள் மொத்தம் ரூ.30 லட்சத்துக்கு விற்பனையாயின. இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.73 ஆயிரத்துக்கு காங்கேயம் இன மயிலைப்பசு விற்பனையானது.

    • விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி ( புதன் கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
    • பாளை சமாதானபுரம், கிருபா நகர், மார்க்கெட் பகுதிகள், சீவப்பேரி சாலை உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி இரவு பகலாக மும்மரமாக நடைபெற்று வருகிறது.

    நெல்லை:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி ( புதன் கிழமை) கொண்டாடப்பட உள்ளது.

    இதை முன்னிட்டு இந்து முன்னணி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வார்கள்.

    தொடர்ந்து வழிபட்ட சிலைகளை கடல், ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைப்பார்கள்.நெல்லையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நகரின் முக்கிய பகுதிகளில் விற்பனைக்காக விநாயகர் சிலைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    பாளை சமாதானபுரம், கிருபா நகர், மார்க்கெட் பகுதிகள், சீவப்பேரி சாலை உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி இரவு பகலாக மும்மரமாக நடைபெற்று வருகிறது.

    ஒரு அடி உயரம் முதல் 9 அடி உயரம் வரை சிலைகள் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் குறைந்த பட்சமாக விநாயகர் சிலை ரூ.100 முதலும், அதிக பட்சமாக பெரிய சிலைகள் ரூ.27 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

    பொதுஇடத்தில் விநாயகர் சிலைகள் வழிபாட்டிற்காக பலர் கடந்த மாதமே ஆர்டர்கள் கொடுத்துள்ளனர்.

    சிவன், பார்வதியுடன் கூடிய விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடி வங்களிலும், வண்ணங்களிலும் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    இந்த பகுதிகளில் தயார் செய்யப்படும் சிலைகள் கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கும், திண்டுக்கல், திருச்சி, மதுரை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் சிலைகளை செய்வதற்கு அறி வுறுத்தப்ப ட்டுள்ளது. இதனால் காகித கூல், தேங்காய் நார்கள், நீரில் கரையும் வண்ணங்கள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி சிலைகள் செய்யப்படுகிறது.

    சிலைகள் செய்யும் பணியில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். லெட்சுமி விநாயகர், ராஜ விநாயகர், 3 முகம் கொண்ட விநாயகர், நந்தி விநாயகர், சிவன் விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    இதேபோன்று தென்காசி, செங்கோட்டை உள்ளிடட தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளிலும் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

    • புத்தகத்திருவிழாவின் நிறைவு விழா மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன் தலைமையில் நடைபெற்றது.
    • மாணவ-மாணவிகளுக்கான புத்தகப்பரிசு சான்றிதழ் 270 பேர்களுக்கு வழங்கப்பட்டது.

    தென்காசி:

    குற்றாலத்தில் சாரல் திருவிழா கடந்த 5- ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்றது அதேநாளில் தென்காசி புத்தகத் திருவிழாவும் தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.

    புத்தகத்திருவிழாவின் நிறைவு விழா மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம், மாவட்ட பிற்பட்டோட்டர் நல அலுவலர் குணசேகர், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஏடிபிசி சீவல முத்து, டாக்டர் அறிவழகன், வட்டார கல்வி அலுவலர்கள் இளமுருகன் , மாரியப்பன் கிளை நூலகர் சுந்தர் கலந்து கொண்டனர்.

    கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, வினாடி- வினா, பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான புத்தகப்பரிசு சான்றிதழ் 270 பேர்களுக்கு வழங்கப்பட்டது.புத்தக திருவிழாவில் சிறப்பாக பணி ஆற்றிய 150 அரசு அலுவலர்களுக்கு நினைவுப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.


    புத்தக திருவிழாவிற்கு இதுவரை 1,02,415 பேர் வருகை தந்துள்ளனர். ரூ.51 லட்சத்திற்கும் மேலான மதிப்பில் நூல்கள் விற்பனையும் நடந்து உள்ளது. தென்காசி மாவட்டத்தின் முதல் புத்தகத் திருவிழா சிறப்புடன் நடைபெற்றதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள், பபாசி நிறுவனத்தார் இதர பதிப்பகத்தார், விற்பனையாளர்கள், பொதுமக்கள், வாசகர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், தென்காசி மாவட்ட கல்வி நிறுவனங்கள் சிறப்பாக ஒருங்கிணைத்த அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பாக பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.

    ×