search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் வீடு வாடகைக்கு எடுத்து லாட்டரி தயாரித்து விற்ற கும்பல் கைது
    X

    சேலத்தில் வீடு வாடகைக்கு எடுத்து லாட்டரி தயாரித்து விற்ற கும்பல் கைது

    • சேலத்தில் வீடு வாடகைக்கு எடுத்து லாட்டரி தயாரித்து விற்ற கும்பல் கைது செய்யப்பட்டனர்.
    • சேலத்தில் மட்டுமின்றி தமிழகம் ஏெஜண்டுகளை நியமித்து, லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதும், தெரிந்தது

    சேலம்:

    சேலம் கருப்பூர் மேட்டுப்பதி சுடுகாடு அருகே தகரக்கொட்டகை வீட்டை வாடகைக்கு எடுத்து லாட்டரி சீட்டு விற்பதாக கருப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார், நேற்று மாலை அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது ஒரு நம்பர் லாட்டரி சீட்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த கருப்பூர் பனங்காட்டை சேர்ந்த ஏழுமலை (வயது 48), சங்ககிரி கேசவன் (35), கருப்பூர் செல்லப்பட்டி புதூர் செல்லதுரை (42) உள்பட 6 பேரை கைது செய்தனர்.

    இவர்கள் ஆன்லைன் மூலம் ஒரு நம்பர் லாட்டரி விற்று வந்ததும், சேலத்தில் மட்டுமின்றி தமிழகம் ஏெஜண்டுகளை நியமித்து, லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதும், தெரிந்தது. அவர்களிடம் இருந்து 4 லட்சத்து 19 ஆயிரத்து 840 ரூபாய், மடிக்கணினி, உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×