பழையகோட்டை சந்தையில் காங்கேயம் இன மாடுகள் ரூ.30 லட்சத்துக்கு விற்பனை

மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது.107 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

காங்கயம் :

திருப்பூா் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 107 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

இதில் 74 மாடுகள் மொத்தம் ரூ.30 லட்சத்துக்கு விற்பனையாயின. இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.73 ஆயிரத்துக்கு காங்கேயம் இன மயிலைப்பசு விற்பனையானது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com