என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "RS Bharathi"
- ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
- குறைந்தது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கணக்கிடுகிறோம்.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இந்திய தலைமை தேர்தல் கமிஷனருக்கு புகார் கடிதம் அனுப்பி இருந்தார்.
அந்த கடிதத்தில் ஈரோடு தொகுதியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வெற்றி பெற வைக்க ஆளும் கட்சியான தி.மு.க. பண பலத்தை பயன்படுத்தி வருவதாகவும், இதுகுறித்து தி.மு.க. அமைச்சரும் காங்கிரஸ் வேட்பாளரும் பேசிய ஆடியோ தேர்தல் கமிட்டியில் சமர்பிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி இருந்தார்.
பாரதிய ஜனதாவின் குற்றச்சாட்டு குறித்து தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-
ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. குறைந்தது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கணக்கிடுகிறோம்.
அவரது வெற்றியை தடுத்து நிறுத்தும் வகையில் பாரதிய ஜனதா கட்சி சதி செய்கிறது. இதற்கு முன்பு அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தலை நிறுத்தியது போல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும் என்பதுதான் பாரதிய ஜனதா கட்சியின் குறிக்கோளாக தெரிகிறது.
அவ்வாறு தேர்தலை நிறுத்தினால் நாங்கள் கோர்ட்டுக்கு செல்வோம். அதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம்.
இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
- வழக்கறிஞர்கள் உடனே தங்களுக்கு பொறுப்பு கிடைக்க வேண்டும் என்று நினைக்கக்கூடாது.
- கட்சி என்று வந்து விட்டால் பதவி வருதோ, இல்லையோ கடைசி வரை அந்த கட்சியில் இருப்பவன்தான் விசுவாசமான தொண்டன்.
சென்னை:
மறைந்த முன்னாள் தி.மு.க. எம்.பி. ஜின்னாவின் படத்திறப்பு விழா சென்னையில் தி.மு.க. சட்டத்துறை சார்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு பேசும்போது கூறியதாவது:-
தி.மு.க.வில் உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். நான், ஜின்னா போன்றவர்கள் கட்சியில் பொறுமையாக இருந்தோம். அவருக்கு மேல்-சபை எம்.பி. பதவி 68 வயதில் கிடைத்தது. எனக்கும் அதே போல பதவி வழங்கப்பட்டு இருக்கிறது.
வழக்கறிஞர்கள் உடனே தங்களுக்கு பொறுப்பு கிடைக்க வேண்டும் என்று நினைக்கக்கூடாது. ஜின்னா கடைசி வரை கட்சிக்காக பாடுபட்டு பொறுமையாக இருந்தார். நிச்சயம் ஒருநாள் பதவி உங்களை தேடி வரும். அதற்கு ஜின்னா ஒரு பாடமாகும்.
அவரைப் போலவே கட்சியில் உறுதியாக இருந்தால் உரிய மரியாதை கிடைக்கும். ஒரே கொடி, ஒரே தலைவர், ஒரே லட்சியத்துடன் இருக்கும் தொண்டர்களுக்கு என்றைக்கும் மரியாதை உண்டு. கட்சியில் இருந்து எம்.ஜி.ஆர்., வைகோ போன்றவர்கள் விலகி சென்ற நெருக்கடியான காலத்தில் கட்சிக்கு உறுதுணையாக இருந்தோம். பாதை மாறவில்லை. எந்த பதவியையும் எதிர்பார்க்காமல் கட்சிக்காக உழைத்தோம்.
கட்சி என்று வந்து விட்டால் பதவி வருதோ, இல்லையோ கடைசி வரை அந்த கட்சியில் இருப்பவன்தான் விசுவாசமான தொண்டன். அதுபோல எல்லோரும் இருக்க வேண்டும். எங்களோடு ஆரம்ப காலத்தில் இருந்தவர்களில் சிலர்தான் தற்போது உள்ளோம். மற்றவர்கள் வந்தனர், சென்றனர்.
கட்சியை பிளவுப்படுத்த நினைத்தால் அதில் தோற்றுதான் போவார்கள். தொண்டர்கள் ஏமாற மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் இரா.கிரிராஜன் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பாளை ஜோதிபுரத்தில் நடந்த கூட்டத்தில் தி.மு.க மாநில அமைப்பு செய லாளர் ஆர்.எஸ். பாரதி கலந்து கொண்டு பேசினார்.
- ஆர்.எஸ் பாரதி மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜனதா மாவட்ட செயலாளர் வக்கீல் வெங்கடாஜலபதி என்ற குட்டி தலைமையில் புகார் கொடுக்கப்பட்டது.
நெல்லை:
பாளை ஜோதிபுரத்தில் சமீபத்தில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் இந்தி திணிப்புக்கு எதிரான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க மாநில அமைப்பு செய லாளர் ஆர்.எஸ். பாரதி கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் அவர் பேசிய போது, கவர்னரை பற்றியும், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பற்றியும் அவதூறாக பேசியதாக கூறி அவர் மீது நெல்லை மாவட்டத்தில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பா.ஜனதா சார்பில் புகார் அளிக்க வேண்டும் என்று நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் தயா சங்கர் தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று ஆர்.எஸ் பாரதி மீது நடவடிக்கை எடுக்க கோரி பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் பா.ஜனதா மாவட்ட செயலாளர் வக்கீல் வெங்கடாஜலபதி என்ற குட்டி தலைமையில் புகார் மனு கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மண்டல தலைவர் குரு கண்ணன், நிர்வாகிகள் முருகன், செந்தில் முருகன், செந்தில் முத்துக்குமார், வை கோபால், சண்முகசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் த. பத்ம நாபன் நாடார் தலைமையில் கூட்டம் நடந்தது
- ஆர்.எஸ்.பாரதியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போராட்டம் நடத்த வேண்டும் என்று நிர்வாகிகள் கூறினார்கள்.
ஆலந்தூர்:
நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம் சார்பில் அனைத்து நாடார் சங்க ஆலோசனை கூட்டம் ஆலந்தூரில் நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் த. பத்மநாபன் நாடார் தலைமையில் இன்று நடந்தது.
கொட்டிவாக்கம் முருகன், ஆலந்தூர் கணேசன், சந்திரசேகர பாண்டியன், ராஜ்குமார், சுந்தரேஸ்வரன் ,மின்னல் ஸ்டீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதியை கண்டித்து அனைத்து நாடார் சங்கங்களும் ஒன்று கூடி கண்டன ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போராட்டம் நடத்த வேண்டும் என்று நிர்வாகிகள் கூறினார்கள்.
பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு-
காமராஜர் குறித்து அவதூறாக பேசிய ஆர்.எஸ்.பாரதி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஆர்.எஸ்.பாரதியை கண்டித்து சென்னையில் நவம்பர் 1-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது. அவர் வருத்தம் தெரிவிக்கும் வரையில் காந்திய வழியில் தொடர் அறப்போராட்டங்கள் நடத்துவது, அனைத்து போராட்டங்களையும் தலைவர் த.பத்மநாபன் நாடார் தலைமையில் நடத்துவது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரன் ஜெயபால் நாடார், தங்கமுத்து நாடார், கொட்டிவாக்கம் முருகன், சநதிரசேகர பாண்டியன் நாடார், சுந்தரேஸ்வரன் நாடார், மாரி தங்கம் நாடார், ஆலந்தூர் கணேசன் நாடார், பூவை ஜெயக்குமார் நாடார், மின்னல் ஸ்டீபன் நாடார், முத்து ரமேஷ் நாடார், உத்திர குமார் நாடார், ஆனந்தராஜ் நாடார், மனோகரன் நாடார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வார்த்தைகளை அளந்து பேச வேணடும் என ஆர்.எஸ்.பாரதிக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்
- மடியில் கனம் இல்லையென்றால் வழியில் பயப்படவேண்டிய அவசியம் கிடையாது
சென்னை:
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் பினாமி விசாரிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் அவரின் உண்மைகள் வெளிவரும் என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். ஜெயக்குமார் மேலும் கூறியதாவது:-
வார்த்தைகளை அளந்து பேச வேணடும். நீங்கள் ஒரு வார்த்தை பேசினால், நாங்கள் 100 வார்த்தை பேசுவோம். வார்த்தைகளை எப்படி பிரயோகிக்கவேண்டும், எந்த நேரத்தில் பிரயோகிக்க வேண்டும், யார் மீது பிரயோகிக்க வேண்டும் என அனைத்து வித்தைகளும் எங்களுக்குத் தெரியும். ஆனால் அரசியல் பண்பாடு கருதி அப்படி பேசவில்லை.
அரசியல் ரீதியாக வந்து விமர்சனம் செய்யுங்கள், நாங்கள் பதில் கொடுக்கிறோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திருப்திப்படுத்தி பதவி வாங்குவதற்கு நாங்கள்தான் கிடைத்தோமா? ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தைகளை பயன்படுத்தி அதிமுகவுக்கும், அண்ணன் எடப்பாடியாருக்கும் களங்கம் ஏற்படுத்தும் விஷயத்தில் ஈடுபட்டால் தகுந்த பதிலடி அவ்வப்போது கொடுப்போம்.
கொடநாடு வழக்கை சட்டப்படி சந்திப்போம். மடியில் கனம் இல்லையென்றால் வழியில் பயப்படவேண்டிய அவசியம் கிடையாது. சும்மா கொடநாடு வழக்கை பயன்படுத்தி பூச்சாண்டி காட்டவேண்டாம். இதுபோல் எத்தனையோ பூச்சாண்டி வேலைகளையெல்லாம் திமுக காலத்தில் அப்போதே பார்த்து பழக்கப்பட்டவர்கள் நாங்கள். இதற்கு பயப்படும் கட்சி அதிமுக அல்ல.
இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.
- ஜெயக்குமார், என்னை பற்றி அவதூறாக ஒரு குற்றச்சாட்டை சுமத்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதற்கு விளக்கம் அளிப்பது எனது கடமை.
- ஏறத்தாழ 12 ஆண்டுகள், அதற்குப் பிறகு முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவால், எந்த ஒரு வழக்குகூட போட முடியவில்லை.
சென்னை:
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அமைச்சர் ஜெயக்குமார் நான் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு தெம்பில்லாமல்-திராணியில்லாமல், என்னுடைய கேள்விகளுக்கு தொடர்பு இல்லாமல் "பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப்பாக்கு என்ன விலை?" என்ற பழமொழிக்கேற்பவும்-"பந்தை உதைப்பதற்கு பதிலாக, ஆளை உதைப்பதாக" சம்பந்தா சம்பந்தமில்லாமல்-பொறுப்பற்ற தன்மையில்-ஆதாரமில்லாமல்-வாய்க்கு வந்தபடி அறிக்கை என்ற பெயரில் உளறிக் கொட்டியிருக்கிறார்.
தி.மு.க.வின் மீது சுமத்தப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளையும், நாங்கள் நீதிமன்றத்தின் மூலம் தவிடுபொடியாக்கிறோம் என்ற வரலாற்றை ஏனோ ஜெயக்குமார் மூடி மறைக்க முயற்சிக்கிறார்.
கலைஞர் உள்ளிட்ட கழக முன்னோடிகள் மீதும், என் மீதும் போடப்பட்ட அத்தனை வழக்குகளிலும் நீதிமன்றங்களில் வாதாடி குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பை பெற்றிருக்கிறோம்.
ஆனால், உங்கள் நிலை அப்படியா? அவரது தலைவியிலிருந்து அத்தனை பேரும் குற்றம் நிரூபிக்கப்பட்டு, சிறைத்தண்டனை பெற்றிருப்பதோடு, ஜெயக்குமார் போன்ற பலரின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, தண்டனை பெற உள்ளார்கள்.
ஜெயக்குமார், என்னை பற்றி அவதூறாக ஒரு குற்றச்சாட்டை சுமத்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதற்கு விளக்கம் அளிப்பது எனது கடமை.
2001-ம் ஆண்டு வரை நான் நங்கநல்லூர் வீடு கட்டும் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருந்தபோது, என் மீது புகார் வந்ததாக கூறுகிறார். கடந்த கால வரலாற்றை ஜெயக்குமாருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். 2001-ம் ஆண்டு இவரது தலைவி ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது, நங்கநல்லூர் வீடு கட்டும் கூட்டுறவு சங்கம் மற்றும் நான்கு முறை நகராட்சித் தலைவராக இருந்த ஆலந்தூர் நகராட்சியில் கோப்புகளை துருவி துருவி தேடிப் பார்த்தார். இதற்கு காரணமே, ஜெயலலிதா மீது நான் டான்சி வழக்கு தொடுத்ததுதான்.
நான் ஊழல் செய்ததாக எந்த அடிப்படை ஆதாரமும் கிடைக்காத காரணத்தால், சென்னை மாநகராட்சியின் மருத்துவ அதிகாரியாக பணிபுரிந்து வந்த துணைவியாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டுமென்று, அன்றைக்கு மாநகராட்சி ஆணையராக விஜயகுமார், முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவரது இல்லமான போயஸ் கார்டனுக்கு அழைத்து, நேரடியாகவே விஜயகுமாரிடத்தில், "எட்டாண்டு காலமாக, ஆர்.எஸ்.பாரதி என் தூக்கத்தை கலைத்தார். எனவே, அவருக்கும் அதே நிலை உருவாக்க வேண்டும்" என்று சொல்லி, விஜயகுமாருக்கு ஆணையிட்டதாக, விஜயகுமார் என்னை அழைத்து, ஜெயலலிதா சொன்ன செய்தியை என்னிடம் சொன்னார்.
அப்பொழுது என்னுடன் இன்றைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியமும்-அன்றைய மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பெ.வீ.கல்யாணசுந்தரமும் உடனிருந்தனர்.
நான் சிரித்துக்கொண்டே "என் தூக்கத்தை யாராலும் கலைக்க முடியாது" என்பதை அந்த அம்மையாரிடம் சொல்லுங்கள் என்று சொல்லி விட்டு வந்து விட்டேன். அதில் என்ன வேடிக்கை என்னவென்றால், எனது டாக்டர் மனைவிக்கு மாநகராட்சியின் சார்பில், "சிறந்த மருத்துவர்" என்ற அவார்டு கொடுத்த ஒரு வாரத்திற்குள், அவரை பணி நீக்கம் செய்து உத்தரவு அளிக்கப்பட்டது. அதற்காக நான் வருத்தப்படவில்லை.
இப்பணி நீக்கம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, வெற்றி பெற்றேன். இச்செய்தி உண்மையா, இல்லையா என்பதை ஜெயக்குமார் மாநகராட்சியிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
ஏறத்தாழ 12 ஆண்டுகள், அதற்குப் பிறகு முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவால், எந்த ஒரு வழக்குகூட போட முடியவில்லை.
அதைபோலத்தான், நங்கநல்லூர் வீடு கட்டும் கூட்டுறவு சங்கத்தலைவராக நான் இருந்தபோது, என்மீது எவ்வித கையாடல் வழக்கும் இல்லை. அப்படி இருந்திருந்தால், இவரது தலைவி ஜெயலலிதா என்னை விட்டு வைத்திருப்பாரா?
எடப்பாடி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில், தி.மு.க. சார்பில் நான் தொடர்ந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். அதேபோல, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் புகார் குறித்து நான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன் என்பதற்காக, என்னை பழிவாங்கும் நோக்கத்தோடு, என்னை அதிகாலையில் கைது செய்தனர்.
ஆனால், தி.மு.க.வின் பலம் வாய்ந்த சட்டத்துறை வழக்கறிஞர்களின் வாதத்திறமையால், ஒரு மணி நேரத்தில் நான் வெளியே வந்துவிட்டேன். இதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், எனக்கு வழங்கப்பட்ட ஜாமீனை, ரத்து செய்ய வேண்டும் என்று அரசின் பணத்தில் உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதாடினர். ஆனால், அவைகள் எல்லாம் தவிடுபொடியாக்கப்பட்டு, என்மீது போடப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது என்ற உண்மையை ஜெயக்குமார் தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வருமானவரித்துறை தனிப்பட்ட நிறுவனங்கள் மீது எடுக்கும் நடவடிக்கைகளுக்கெல்லாம் எந்த அரசியல் கட்சியாவது மத்திய அரசைக் கண்டித்து போர்க்குரல் எழுப்பி இருக்கிறதா?
- தி.மு.க.வைச் சேர்ந்த ஒருசில அமைச்சர்கள் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி, மத்திய அமலாக்கத்துறை விசாரணைக்காக சம்மன் அனுப்பி உள்ளது என்று செய்திகள் வந்துள்ளன.
சென்னை:
அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பாவது:-
ஆளும் தி.மு.க.வில் மேலும் ஒருமுறை தனக்கு பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கும் என்று நம்பி ஏமாந்துபோன அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தேவையில்லாமல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரச்சினைகளில் மூக்கை நுழைப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
தி.மு.க.வில் எங்கே ஒரு ஏக்நாத் ஷிண்டே உருவாகிவிடுவாரோ என்ற பயத்தில், கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்ட கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பனை அவசர அவசரமாக மீண்டும் தங்களுடன் இணைத்துக் கொண்டதை தமிழக மக்கள் கைகொட்டி எள்ளி நகையாடுகிறார்கள்.
வேலை இல்லாமல் பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கும் ஆர்.எஸ். பாரதி கடந்த வாரத்தில் வருமானவரித் துறை தனிப்பட்ட இரண்டு தொழில் அதிபர்களின் நிறுவனங்களில் மேற்கொண்ட சோதனையைப் பற்றி குறிப்பிட்டு, இதற்காக மத்திய அரசை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கண்டிக்காதது ஏன்? என்று கேட்டிருக்கிறார்.
வருமானவரித் துறை தனிப்பட்ட நிறுவனங்கள் மீது எடுக்கும் நடவடிக்கைகளுக்கெல்லாம் எந்த அரசியல் கட்சியாவது மத்திய அரசைக் கண்டித்து போர்க்குரல் எழுப்பி இருக்கிறதா?
தி.மு.க.வைச் சேர்ந்த ஒருசில அமைச்சர்கள் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி, மத்திய அமலாக்கத்துறை விசாரணைக்காக சம்மன் அனுப்பி உள்ளது என்று செய்திகள் வந்துள்ளன. விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் வாய்தா வாங்கிக்கொண்டு, காலம் தாழ்த்தி வரும் அந்த அமைச்சர்களை பற்றி ஆர்.எஸ். பாரதி வாய் திறக்கத் தயாரா?
சம்மன் அனுப்பிய மத்திய அமலாக்கத் துறையையும், மத்திய அரசையும் கண்டித்து திமுக வாய் திறந்திருக்கிறதா? இதே போல், பல தி.மு.க. அமைச்சர்கள் மீது நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள ஊழல் வழக்குகளையும் விரைந்து நடத்த ஆர்.எஸ். பாரதி இந்த அரசை கேட்டுக்கொள்வாரா?
அன்னக் காவடிகளாக நாட்டிலே அலைந்து திரிந்த தி.மு.க.வைச் சார்ந்த பலர், இன்றைக்கு அரபு நாட்டு சுல்தான்கள் போல் வாழ்ந்து, வலம் வந்து கொண்டிருப்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். தான் திருடி பிறரை நம்பாள் என்பது போல் ஊழலிலேயே ஊறித் திளைத்த கட்சியைச் சார்ந்த ஒருவர், காமாலை கண்ணுடையவனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாகத் தெரியும் நபர் ஒருவர் பிதற்றுவதுபோல், தூய்மை உள்ளம் கொண்ட பரிசுத்தமான, மக்கள் சேவையை முன்னெடுக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை களங்கப்படுத்த முயற்சிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.
ஆர்.எஸ். பாரதி வீட்டு வசதி கூட்டுறவு சங்கத்தின் பொறுப்பில் இருந்த போது, பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாகப் புகார்கள் வந்ததும், காவல் துறையால் விசாரிக்கப்பட்டதும் எல்லோரும் மறந்திருப்பார்கள் என்ற நினைப்பில் அடுத்த வீட்டில் எட்டிப் பார்க்கிறார். இந்தப் போக்கைக் கைவிடா விட்டால் இன்றைக்கு, தான் தப்பித்ததாக அவர் நினைத்துக் கொள்ளலாம். ஆனால், வீட்டு வசதி கூட்டுறவு சங்க ஊழல் பூமாரங்காக அவரது தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருப்பதை மறந்துவிடக் கூடாது. உப்பைத் தின்ற பாரதியை, அ.தி.மு.க. தண்ணீர் குடிக்க வைக்கும் காலம் வரும் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
25 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்.எஸ்.பாரதி எப்படி இருந்தார்? இப்போது அவர் எப்படி இருக்கிறார் என்பது, அவரது அடுத்த வீட்டுக்காரர்களுக்கே நன்கு தெரியும். ஊருக்கு உபதேசம் செய்வதை விட்டுவிட்டு, அவரது கட்சியை சீர்திருத்தும் பணியில் பாரதி ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அ.தி.மு.க.வைத் தொடங்கியபோது அதற்கு டெல்லியில் மறைமுக எஜமானர்கள் இருந்தார்கள்.
- இப்போது பழனிசாமி - பன்னீர்செல்வம் கூட்டத்திற்கு டெல்லிதான் நேரடி எஜமானர்கள்.
சென்னை:
தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தானே கூட்டி, தன்னையே தலைமையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட பொதுக்குழுவில் பேசிய 'தற்காலிக அ.தி.மு.க. பொதுச்செயலாளர்' எடப்பாடி பழனிசாமி, தேவையில்லாமல் தி.மு.க.வை சுரண்டிப் பார்த்திருக்கிறார்.
"பழைய பழனிச்சாமின்னு நினைச்சிக்கிட்டீங்களா.. நடக்காது ஸ்டாலின் அவர்களே" என்று மைக்கைக் கடித்தபடி பேசியிருக்கிறார்.
அவர்களின் கட்சியில் வான(க)ரக் கூட்டம், ராயப்பேட்டை ரவுடிகள் கலவரம் என எதிரும் புதிருமாக கோஷ்டி மோதல்கள் நடத்திக்கொண்டு, தி.மு.க. மீது பாய்வது என்பது திசைத் திருப்புகிற வேலையன்றி, வேறு எதுவுமல்ல.
அ.தி.மு.க.வைத் தொடங்கியபோது அதற்கு டெல்லியில் மறைமுக எஜமானர்கள் இருந்தார்கள். இப்போது பழனிசாமி - பன்னீர்செல்வம் கூட்டத்திற்கு டெல்லிதான் நேரடி எஜமானர்கள். அங்கே கயிறு இழுக்கப்படுவதற்கேற்ப இங்கே பொம்மைகள் ஆடிக் கொண்டிருக்கின்றன. ஆடும் பொம்மைகளுக்கு வெற்று வசனங்கள் எதற்கு?
பழனிசாமி எதற்காகத் திடீரென பழைய பழனிசாமி பற்றி அவரே நினைவூட்டிக் கொள்கிறார்?
பழைய பழனிசாமி கொலை வழக்குகளை எதிர்கொண்டார். புது பழனிசாமி கொடநாடு வழக்கை எதிர்கொள்கிறார்.
பழைய பழனிசாமி ஜெயலலிதா - சசிகலா கால்களில் விழுந்து கிடந்தார். புது பழனிசாமி மோடி - அமித்ஷா கால்களில் விழுந்து கிடக்கிறார்.
வழக்குகள் போட்டு தி.மு.க. பழி வாங்குகிறது என்று பொங்கிய பழனிசாமி, வருமான வரித்துறை - அமலாக்கத்துறை - சி.பி.ஐ என அவரது ஆட்சிக்காலத்திலேயே ஒன்றிய அரசின் துறைகள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக எப்போதாவது குரல் உயர்த்தியது உண்டா?
இப்போதுகூட அவருடைய ஆட்சிக்காலத்து அமைச்சர்கள் முதல் ஒப்பந்தக்காரர்கள் வரை பலருக்கும் சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை ரெய்டு நடத்தியிருக்கிறதே?
பொதுக்குழுவில் தி.மு.க.வை நோக்கிப் பொங்கிய பழனிசாமி, ஒன்றிய பா.ஜ.க. அரசு பழிவாங்குகிறது என்று பொங்க வேண்டாம், முணுமுணுக்கக்கூட தைரியம் உண்டா?
தி.மு.க. குடும்ப அரசியல் நடத்துகிறது என்று வாய்கூசாமல் சொல்லிக்கொண்டு, தனது ஆட்சிக்காலம் முழுவதும் குடும்ப டெண்டர் அரசியல் நடத்தியவர்தான் பழனிசாமி. இதோ அண்மையில்கூட கோவை சந்திரசேகர், அருப்புக்கோட்டை செய்யாதுரை ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைகளில் கணக்கில் வராத 500 கோடி ரூபாய் வருமானம் கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. சோதனைக்குள்ளான இந்த இருவரும் யார்?
இப்போது நடவடிக்கை எடுத்தவர்களிடம் மோதுவதற்குத் திராணியில்லாத - பழனிசாமிக்கு தி.மு.க.வையும், அதன் தலைவரான இந்தியாவின் 'நம்பர் ஒன்' முதல்- அமைச்சரை நோக்கி கேள்வி எழுப்ப எந்த அருகதையும் இல்லை.
துணிவிருந்தால் - நேர்மையிருந்தால் கோவை சந்திரசேகர், அருப்புக்கோட்டை செய்யாதுரை ஆகியோரிடம் வருமானவரித்துறை கைப்பற்றிய 500 கோடி ரூபாய் வருமானம் பற்றியும் அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன உறவு என்றும் பதில் சொல்லுங்கள் பழனிசாமி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை தி.மு.க.வில் குழப்பம் ஏற்படுத்த நினைக்கிறார். அது நடக்காது.
- தி.மு.க. கட்டுக்கோப்பான இயக்கம். அவர் பப்ளிசிட்டிக்காக இப்படி பேசுகிறார். அவரது பேச்சை யாரும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை.
சென்னை:
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பாரதிய ஜனதா கட்சி சார்பில் நேற்று மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டிப்பதாக கூறி நடைபெற்ற இந்த போராட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை பேசும்போது, மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்-அமைச்சராக இருந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனது மகனுக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைச்சரவைக்குள் கொண்டு வந்தார்.
அதனால் அங்கே பிளவு ஏற்பட்டு ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய ஆட்சி உருவானது. அதேபோல் தமிழகத்திலும் முதல்-அமைச்சரின் மகனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அவரும் அமைச்சரவைக்குள் வருவார் என்று பேசப்படுகிறது.
அப்படி நடந்தால் தி.மு.க.வில் இருந்தும் ஒரு ஏக்நாத் ஷிண்டே புறப்படுவார் என்று பேசினார்.
சிவசேனாவையும், தி.மு.க.வையும் ஒப்பிட்டு அண்ணாமலை பேசியது அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுபற்றி தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கருத்து கேட்டபோது அவர் கூறியதாவது:-
தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை தி.மு.க.வில் குழப்பம் ஏற்படுத்த நினைக்கிறார். அது நடக்காது. தி.மு.க. கட்டுக்கோப்பான இயக்கம். அவர் பப்ளிசிட்டிக்காக இப்படி பேசுகிறார். அவரது பேச்சை யாரும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை.
பிள்ளை பிடிக்கிற கட்சி தான் பி.ஜே.பி. ஆரம்பத்தில் சஞ்சய் காந்தியின் மகன் வருண்காந்தியை பாரதிய ஜனதாவுக்கு இழுத்தார்கள். தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த குமரிஅனந்தனின் மகள் தமிழிசை சவுந்தரராஜனை பா.ஜ.க. வில் சேர்த்து பதவி கொடுத்தனர்.
தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யாவை பா.ஜ.க.வில் சேர்த்தனர். இப்படி பிள்ளை பிடிக்கும் பணியைதான் பாரதிய ஜனதா கட்சி செய்து கொண்டிருக்கிறது.
இனிமேல் எந்த பிள்ளையும் அங்கு போகாது. அண்ணாமலையின் முயற்சி பலிக்காது.
இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
காலியாக இருக்கும் அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் உரிய நேரத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இதனால் இந்த 3 தொகுதிகளுக்கு உடனடியாக தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை என்று பலர் கூறி வருகின்றனர்.
இதுபற்றி இந்த வழக்கை தொடர்ந்த தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
3 தொகுதிகளுக்கும் உரிய நேரத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று சுப்ரீம் கோட்டில் தேர்தல் கமிஷன் கூறி உள்ளது. நாங்கள் ஏப்ரல் 19-ந் தேதிக்குள் ஒரு தேதியில் தேர்தல் நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டதால்தான் அப்படி முடியாது என்று கூறிவிட்டனர்.
ஆனால் 7 கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் தேர்தல் கமிஷன் நினைத்தால் ஒரு தேதியை முடிவு செய்து அறிவிக்க முடியும். எனவே மே 19-ந்தேதிக்குள் 3 தொகுதி இடைத்தேர்தலை நடத்த வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #DMK #RSBharathi #TNBypoll
தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கவர்னருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒரு மாநிலத்தின் முதல்- அமைச்சராக பொறுப்பேற்கும் ஒருவர், அவர் அமர்ந்து பணியாற்றும் அரசின் தலைமைச் செயலகத்தை, அரசுப் பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது விதிமுறை.
அ.தி.மு.க. கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதும் குற்றம் சாட்டியதால், அ.தி.மு.க.விலிருந்து விலக்கி வைக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமியை தேர்தல் நெருங்கும் இவ்வேளையில், மீண்டும் கட்சியில் இணைக்கும் செயலை, அரசின் தலைமைச் செயலகத்தில் செய்துள்ளனர். இந்நிகழ்ச்சி குறித்து தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் செய்திகள் வெளிவந்துள்ளன.
நேற்று நடந்த இந்நிகழ்வால், தமிழக அரசின் முதல்-அமைச்சராக இருக்கின்ற எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்-அமைச்சராக இருக்கின்ற ஓ.பன்னீர் செல்வமும் தமிழக அரசின் தலைமைச் செயலாளரும் சட்ட விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டுள்ளனர்.
எனவே, தமிழக ஆளுநர் இப்பிரச்சனையில் தலையிட்டு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடமிருந்தும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடமிருந்தும் தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடமிருந்தும் உடனடியாக விளக்கம் கேட்டு, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMK #RSBharathi #EPS #OPS
பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. இந்த திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி, பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு இன்று முதல் வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, ‘இட ஒதுக்கீடு என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
இந்த இடஒதுக்கீடு என்பது சாதி ரீதியாகத்தான் வழங்க முடியுமே தவிர, பொருளாதார வசதிகளின் அடிப்படையில் வழங்க முடியாது என்று அரசியல் அமைப்புச் சட்டத்தில் தெளிவாக கூறியுள்ளது. இதுமட்டுமல்ல, சுப்ரீம் கோர்ட்டும் பல வழக்குகளில், பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று தீர்ப்புகள் அளித்துள்ளன. இவை தெரிந்து இருந்தும், பொருளாதார ரீதியாக பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. இந்த சட்டமசோதா, அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை தன்மையையே மாற்றுகிறது.
அதுமட்டுமல்ல பொருளாதாரத்தின் அடிப்படையில் மனிதர்களை பிரிக்க முடியாது. இன்று ஏழையாக இருப்பவர் நாளை பணக்காரராக மாறி விடலாம். ஆனால், சமூக ரீதியாக பல நூற்றாண்டுகளாக பாதிக்கப்பட்டவர்களுக்கு, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதால், அப்படிப்பட்ட சாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்குத்தான் இடஒதுக்கீடு வழங்க முடியுமே தவிர, பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு என்று கூறி பொதுப்பிரிவினருக்கு வழங்க முடியாது. அதுவும், ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு குறைவாக உள்ளவர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் என்று கூறுகின்றனர்’ என்று வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, ‘அந்த சட்ட மசோதாவில் ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு குறைவான வருமானம் பெறுபவர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதா?’ என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு மூத்த வக்கீல் வில்சன், ‘சட்ட மசோதாவில் குறிப்பிடவில்லை. ஆனால், கடந்த 7ந்தேதி நடந்த மந்திரி சபை கூட்டத்தில், மத்திய அரசு கொள்கை ரீதியாக முடிவு எடுத்துள்ளது’ என்றார்.
அரசியல் அமைப்புச் சட்டத்தில், பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு சலுகை வழங்கலாம் என்று கூறியுள்ளதே? என்று நீதிபதிகள் மற்றொரு கேள்வியை எழுப்பினர்.
அதற்கு மூத்த வக்கீல், ‘பின்தங்கியவர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் சாதி ரீதியாக பின்தங்கியவர்களே தவிர, பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் கிடையாது. எனவே, இந்த சட்டமசோதாவே அரசியல் அமைப்புச்சட்டத்துக்கு எதிரானது என்பதால், இதை செல்லாது என்று அறிவிக்கவேண்டும்’ என்று வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், ‘ஐகோர்ட்டை தவறாக பயன்படுத்துகிறார்’ என்று சொலிசிட்டர் ஜெனரல் கூறியதை ஏற்க முடியாது. அவரது இந்த வாதத்தை ஏற்க முடியாது’ என்றனர்.
பின்னர், ‘இந்த 10 சதவீத இடஒதுக்கீடு யாருக்கு?’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு இடஒதுக்கீடு பெறாதவர்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கியிருப்பவர்களுக்கு என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கூறினார்.
அவர்கள் யார்? இட ஒதுக்கீடு பெறாதவர்கள் என்றால், முற்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் தானே? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பின்னர், இந்த வழக்கிற்கு மத்திய அரசு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்று நோட்டீசு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற பிப்ரவரி 18ந்தேதிக்கு தள்ளிவைத்தனர். #MadrasHC
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்