search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ram Temple"

    • அழைப்பு வரவில்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே கூறி இருந்தார்.
    • லட்சக்கணக்கான மக்கள் அயோத்தி கோவிலுக்கு சென்று வருகின்றனர்.

    டெல்லி முதல்மைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு மனைவி மற்றும் குடும்பத்துடன் சாமி கும்பிட செல்கிறார். அவருடன் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த்மான் செல்கிறார்.

    அயோத்தி ராமர்கோவிலில் கடந்தமாதம் நடந்த கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து அதிக அளவிலான மக்கள் அங்கு சென்று வருகிறார்கள். கடந்த 22 -ந்தேதி நடந்த அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு தனக்கு முறையான அழைப்பு வரவில்லை என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே கூறி இருந்தார்.

     


    மேலும் அவர் குடும்பத்துடன் அயோத்தி கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட விரும்புவதாகவும் கூறி இருந்தார். கும்பாபிஷேக விழாவுக்கு பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கோவில் திறக்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் இருந்து பல லட்சக்கணக்கான மக்கள் அயோத்தி கோவிலுக்கு சென்று வருகின்றனர். 

    கட்சி பேதங்களைக் கடந்து ஏராளமான தலைவர்களும் கூட ராமர்கோவிலுக்கு செல்கிறார்கள். உத்தர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று எம்.எல்.ஏ.க்களுடன் ராமர் கோவிலுக்கு சென்றார்.

    எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதன் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கோவிலுக்கு செல்லும் பயணத்தை இன்று புறக்கணித்தனர். பா.ஜ.க., காங்கிரஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, ஓ.பி. ராஜ்பார் தலைமையிலான எஸ்.பி.எஸ்.பி., ஜெயந்த் சவுத்ரி தலைமையிலான ராஷ்டிரிய லோக் தளம் உள்ளிட்ட பிற கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களும் அயோத்தி சென்றனர்.

    • ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்றுவர்களுக்கானதா? அல்லது ஒட்டு மொத்த இந்தியாவுக்கானதா?
    • தீர்மானத்தின் மூலம், மற்ற மதங்களை தாண்டி ஒரு மதத்தின் வெற்றி குறித்த செய்தியை இந்த அரசு வெளியிடுகிறதா?.

    பாராளுமன்றத்தில் நேற்று ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது மக்களவையில் ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஒவைசி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பகவான் ராமர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், நாதுராம் கோட்சேவை வெறுக்கிறேன். ஏனென்றால், அவரால் கொல்லப்பட்ட நபர் கூறிய கடைசி வார்த்தை ஹேம் ராம்.

    இன்று நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன். மோடி தலைமையிலான அரசு ஒரு குறிப்பிட்ட மதத்திற்கானதா?. ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்றுவர்களுக்கானதா? அல்லது ஒட்டு மொத்த இந்தியாவுக்கானதா? இந்த அரசு சொந்த மதத்தை கொண்டுள்ளதா?. இந்த அரசு எந்தவொரு குறிப்பிட்ட மதத்தையும் சார்ந்திருக்கவில்லை. இந்த நாடு எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்காகவும் நிற்காது, நிற்கக் கூடாது என்று நான் நம்புகிறேன்.

    ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் நடந்த நிகழ்வு குறித்த இந்தத் தீர்மானத்தின் மூலம், மற்ற மதங்களை தாண்டி ஒரு மதத்தின் வெற்றி குறித்த செய்தியை இந்த அரசு வெளியிடுகிறதா?. நாட்டிலுள்ள 17 கோடி முஸ்லிம்களுக்கு இதைவிட இந்த அரசு தெரிவிக்கும் பெரிய செய்தி என்ன?" என்றார்.

    மேலும், முஸ்லிம் தலைவர்களின் படையெடுப்பு மற்றும் ஆட்சிக்குப் பிறகு, சிறுபான்மையினர் பிரிவில் இருந்து வந்த தலைவர்கள் என பா.ஜனதாவால் முத்திரை குத்தப்பட்டு வரும் நிலையில் "நான் என்ன பாபர், ஜின்னா அல்லது அவுரங்கசீப்பின் செய்தி தொட்பாளரா?" என கடுமையாக தாக்கி பதில் அளித்தார்.

    • காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அமலாக்கத்துறை 5 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளை மட்டுமே பறிமுதல் செய்தது.
    • எங்களுடைய ஆட்சிக் காலத்தில் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்துள்ளோம்.

    ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு பதில் அளிக்கும் விதமாக பிரதமர் மோடி நேற்று பாராளுமன்றத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாங்கள் ஏழைகளுக்க 4 கோடி வீடுகள் கட்டி கொடுத்தோம். நகர்ப்புற ஏழைகளுக்கு 80 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுத்துள்ளோம். காங்கிரஸின் வேகத்தில் இந்த வீடுகள் கட்டப்பட்டிருந்தால், 100 வருடங்கள் ஆகியிருக்கும். ஐந்து தலைமுறையினர் இதை கடந்து சென்றிருப்பார்கள்.

    பகவான் ராமர் வீட்டிற்கு மட்டுமல்ல, இவ்வளவு பெரிய பிரமாண்ட கோவிலுக்கும் திரும்பியுள்ளார். இந்த முறை 400 இடங்களுக்கு அதிகமாக பா.ஜனதா கூட்டணி கைப்பற்றும். மல்லிகார்ஜூன கார்கே கூட இதை கூறியிருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணி மட்டும் 400 இடங்களுக்கு மேல் பிடிக்கும் என்பதில்லை. பா.ஜனதா தனியாக 370 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும்.

    விசாரணை அமைப்புகள் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதனால் அதன்மீது கோபம் கொள்கிறார்கள். 10 வருடத்திற்கு முன் நமது பாராளுமன்றத்தில் இது தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது எந்த நேரத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    ஆனால், இன்று தற்போது ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது, சிலர் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?. காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் விசாரணை அமைப்புகள் அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டன.

    நீங்கள் (ஊழல் வழக்கில் சிக்கியுள்ள எதிர்க்கட்சி தலைவர்கள்) ஊழல் செய்த பணத்தை நாட்டிற்கு திருப்பி தர வேண்டும். நாட்டை கொள்ளையடிக்க நான் அனுமதிக்கமாட்டேன்.

    பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நாங்கள் முன்பை விட இரண்டு மடங்கு வழக்குகளை பதிவு செய்துள்ளோம். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அமலாக்கத்துறை 5 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளை மட்டுமே பறிமுதல் செய்தது. எங்களுடைய ஆட்சிக் காலத்தில் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்துள்ளோம்.

    இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

    • விமானத்துக்கான டிக்கெட் முன்பதிவை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஏற்கெனவே தொடங்கியது.
    • அயோத்திக்கு விமானத்தில் செல்லலாம் என்று முடிவு செய்திருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    சென்னை:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த மாதம் 22-ந்தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு 23-ந்தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் தரிசனம் செய்து வருகிறார்கள்.

    அயோத்தி ராமர் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து இன்று முதல் விமான சேவை தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி அயோத்திக்கு இன்று முதல் விமான சேவை தொடங்கப்பட்டது.

    சென்னையில் இருந்தும் இன்று முதல் அயோத்திக்கு தினசரி விமான சேவை தொடங்கப்பட்டது. சென்னையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 3.15 மணிக்கு அயோத்தி சென்றடையும். அதேபோல மறு மார்க்கமாக அயோத்தியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6.20 மணிக்கு சென்னை வந்து சேரும்.

    இந்த விமானத்தில் பயணிப்பதற்கான கட்டணம் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விமானத்துக்கான டிக்கெட் முன்பதிவை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஏற்கெனவே தொடங்கியது.

    முன்பதிவு தொடங்கியபோது நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், நேரம் செல்லச்செல்ல முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் சில மணி நேரங்களில் விமான கட்டணம் பல மடங்கு எகிறியது.

    அதன்படி இன்று அயோத்திக்கு சென்று வர நபர் ஒருவருக்கு ரூ.52,134 வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இதனால் அயோத்திக்கு விமானத்தில் செல்லலாம் என்று முடிவு செய்திருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறைந்த கட்டணத்தில் பக்தர்களை அயோத்திக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

    • வருகிற 8-ந் தேதி முதல் இந்த மாத இறுதி வரை 23 சிறப்பு ரெயில்களில் பக்தர்கள் செல்கிறார்கள்.
    • மானாமதுரையில் இருந்து 14 மற்றும் 28-ந் தேதிகளில் சிறப்பு ரெயில் செல்கிறது.

    சென்னை:

    அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றதும் சிரமம் இல்லாமல் அயோத்தி செல்ல ஏற்பாடு செய்யும்படி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பா.ஜனதா தொண்டர்களும், பக்தர்களும் கட்சி தலைமைக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து இதற்கான ஏற்பாடுகளை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை செய்தார்.

    ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 3 பொறுப்பாளர்கள், 6 மாவட்டங்களுக்கு ஒரு பார்வையாளர் வீதம் நியமிக்கப்பட்டு அயோத்தி செல்ல விரும்புபவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. ஏராளமானவர்கள் ஆர்வப்பட்டதால் சிறப்பு ரெயில்கள் பல பகுதிகளில் இருந்து புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வருகிற 8-ந் தேதி முதல் இந்த மாத இறுதி வரை 23 சிறப்பு ரெயில்களில் பக்தர்கள் செல்கிறார்கள்.

    கோவையில் இருந்து 8, 13, 18, 23, 28 ஆகிய தேதிகளில் ரெயில் செல்கிறது. கட்டணம் ரூ.2,600.

    திருப்பூரில் இருந்து 10, 15, 20 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ரெயில் செல்கிறது. கட்டணம் ரூ.2,600 ஈரோட்டில் இருந்து 11, 16, 21 மற்றும் 26-ந் தேதிகளில் ரெயில் செல்கிறது. கட்டணம் ரூ.2,400.

    சேலத்தில் இருந்து 12, 17, 22 மற்றும் 27 ஆகிய தேதிகளில் புறப்படுகிறது. கட்டணம் ரூ.2,300.

    மானாமதுரையில் இருந்து 14 மற்றும் 28-ந் தேதிகளில் சிறப்பு ரெயில் செல்கிறது. கட்டணம் ரூ.3,100.

    21-ந் தேதி மதுரை, 29-ந் தேதி திருநெல்வேலி, 8-ந் தேதி கன்னியாகுமரி, 15-ந் தேதி நாகர்கோவில் ஆகிய இடங்களில் இருந்து புறப்பட்டு செல்கிறது.

    நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இருந்து செல்லும் ரெயில்கள் கேரளா வழியாக செல்லும். நெல்லை, கன்னியாகுமரியில் இருந்து ரூ.3,800-ம், நாகர்கோவிலில் இருந்து ரூ.3,700-ம் கட்டணம். 

    • அயோத்தியில் 3200 ராமர் கோவில்கள் இருக்கிறது. இன்றைக்கு மோடி கட்டி உள்ளது 3201-வது கோவில் அவ்வளவு தான்.
    • பாபர் மசூதி இருந்த இடத்திற்கு 3 கிலோ மீட்டருக்கு அப்பால் தான் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகி இல்ல திருமண விழாவில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார்.

    பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவின் பொருளாதாரம் எங்கே வளர்ந்து இருக்கிறது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருகிறேன் என்று சொன்னார்கள் வேலை தந்தார்களா?

    விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக ஆக்குகிறேன் என்று சொன்னார்கள் செய்தார்களா, பண மதிப்பிழப்பு செய்யப்பட்டு கருப்பு பணம் மீட்கப்பட்டு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 15 லட்ச ரூபாய் போடப்படும் என்று சொன்னார்கள் போட்டார்களா, கல்வியில் மாற்றத்தை கொண்டு வந்தார்களா, அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு புதிய தொழிற்சாலைகள் வந்துள்ளதா, எந்த வகையில் இந்தியாவின் பொருளாதார முன்னேறி இருக்கின்றது.

    மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்தபோது இந்தியாவின் கிராமப்புற வளர்ச்சி திட்டத்தின் மூலமாக 15 கோடி குடும்பங்களை வறுமையின் பிடியில் இருந்து வெளியே கொண்டு வந்தார். அதனை ஐ.நா. மன்றம் பாராட்டி சான்றிதழ் வழங்கி இருக்கிறது.

    உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோலையும், டீசலையும் விற்பது மோடி அரசாங்கம் தான். அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவினுடைய பொருளாதாரம் சீரழிந்து உள்ளது.

    அதனால் தான் அவர்கள் மற்றதை பேசுவதை விட்டுவிட்டு ராமர் கோவில் கையில் எடுத்துள்ளனர். ராமருக்கு கோவில் கட்டக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை. எல்லாருமே ராமருடைய பக்தர்கள் தான்.

    வட இந்தியாவில் இருக்கக்கூடிய இஸ்லாமியர்கள் கூட ராமர் கோவிலை கட்டுங்கள் என்று தான் சொல்கிறார்கள். மசூதியை இடித்து விட்டு ராமருக்கு என்று தனியாக கோவில் கட்ட வேண்டாம் என்று தான் அன்று காங்கிரஸ், கம்யூனிஸ்டு, தி.மு.க. கட்சிகள் சொன்னது. அயோத்தியில் 3200 ராமர் கோவில்கள் இருக்கிறது. இன்றைக்கு மோடி கட்டி உள்ளது 3201-வது கோவில் அவ்வளவு தான்.

    பாபர் மசூதி இருந்த இடத்திற்கு 3 கிலோ மீட்டருக்கு அப்பால் தான் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதற்கு ஏன் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

    மக்களை திசை திருப்புவதற்காக எல்லாவற்றிலும் பொய் சொல்கின்றனர்.

    ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்திற்கு எல்லா இடத்திலும் ஏராளமான மக்கள் வரவேற்பு அளிக்கின்றனர். கோவில் கட்டுவதால் இன்றைக்கு தேர்தலில் யாரும் ஜெயித்து விட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராமர் கோவிலுக்கு கடந்த 23ம் தேதி முதல் பொது மக்கள் செல்ல அனுமதி.
    • அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா விமான சேவையை தொடங்கி வைக்கிறார்.

    அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 22ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது.

    ராமர் கோவிலுக்கு கடந்த 23ம் தேதி முதல் பொது மக்கள் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டது.

    இதனையொட்டி சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை நாளை முதல் தொடங்கப்படுகிறது. இதற்கான விமான டிக்கெட் முன்பதிவை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஏற்கனவே தொடங்கியது. சென்னையில் இருந்து அயோதிக்கு விமான சேவை கட்டணம் ரூ.6,499 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னையில் இருந்து அயோத்திக்கு பகல் 12:40-க்கு புறப்படும் விமானம் மாலை 3:15-க்கு சென்றடையும். அயோத்தியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6:20-க்கு சென்னை வந்து சேரும்.

    இதேபோல், மும்பை, பெங்களூரு, அகமதாபாத், ஜெப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கும் அயோத்தியில் இருந்து நேரடி விமான சேவை தொடங்கப்படுகிறது.

    மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா விமான சேவையை தொடங்கி வைக்கிறார்.


    • பல்லாயிரக்கணக்கான லைக்குகளையும், பார்வைகளையும் குவித்து வருகிறது.
    • 498 ரூபிக்ஸ் கியூப்ஸ்களை பயன்படுத்தி ஹிருதய் படேல் ராமர் படத்தை உருவாக்கி உள்ளார்.

    அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஐதராபாத்தில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் ஹிருதய் படேல் என்ற 11 வயது சிறுவன் ரூபிக் கன சதுரத்தை பயன்படுத்தி கியூப்பில் ராமபிரானின் உருவத்தை வரைந்து அசத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பல்லாயிரக்கணக்கான லைக்குகளையும், பார்வைகளையும் குவித்து வருகிறது.

    498 ரூபிக்ஸ் கியூப்ஸ்களை பயன்படுத்தி ஹிருதய் படேல் ராமர் படத்தை உருவாக்கி உள்ளார். சிறுவனின் இந்த வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் அவரது திறமையை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், நம்ப முடியவில்லை! என்ன ஒரு அசாத்திய திறமை உங்களிடம் உள்ளது, கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.

    மற்றொரு பயனர் என்ன ஆச்சரியம், ஜெய் ஸ்ரீராம் என பதிவிட்டுள்ளார். இதுபோன்று பயனர்கள் பலரும் ஹிருதய் படேலின் திறமையை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • அயோத்தி ஆலயத்துக்கு 500 ஆண்டுகளுக்கு பிறகு ராமர் திரும்பி இருப்பதாக உத்தரபிரதேச மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    • 2-வது, 3-வது நாட்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள்

    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த 22-ந் தேதி ராமர் கோவிலில் பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா மிகவும் கோலாகலமாக நடந்தது. பிரதமர் மோடி அதில் கலந்துகொண்டு ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.

    மறுநாள் 23-ந்தேதி முதல் பாலராமரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    அயோத்தி ஆலயத்துக்கு 500 ஆண்டுகளுக்கு பிறகு ராமர் திரும்பி இருப்பதாக உத்தரபிரதேச மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். எனவே பால ராமரை தரிசிக்க அயோத்தி நோக்கி கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள்.

    முதல் நாளிலேயே 5 லட்சம் பக்தர்கள் அயோத்தியில் திரண்டனர். 2-வது, 3-வது நாட்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் அயோத்தி போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த திணறினார்கள்.

    இந்த நிலையில் நேற்று முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால் அயோத்தியில் பக்தர்கள் கூட்டம் இன்று அதிகரித்தது. இன்று காலை அதிகாலை 3 மணி முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தரிசன நேரம் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதால் ஏராளமான பக்தர்கள் ராமரை தரிசிக்க முடிகிறது.

    இன்று (சனிக்கிழமை) 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அயோத்தியில் குவிந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 4 நாட்கள் மட்டும் சுமார் 20 லட்சம் பக்தர்கள் பாலராமரை தரிசனம் செய்து இருக்கிறார்கள்.

    அடுத்த வாரத்துக்குள் ராமரை தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வருகை அதிகரித்து இருப்பதால் அயோத்தி ராமர் கோவிலுக்கு கிடைக்கும் காணிக்கை பணத்தின் அளவும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராமரை வணங்கிய கரங்கள், பிரதமரை நன்றியுடன் வணங்குவதை காண முடிந்தது.
    • பகவான் ராமரின் பாத சுவடில், நீங்கள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் தேசத்துக்கு சேவை செய்கிறீர்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 22-ந் தேதி அயோத்தியில் நடந்த ராமர் கோவில் கும்பாபிஷேக வரலாற்று நிகழ்வில், மில்லியன் கணக்கான இந்தியர்களின் இதயங்கள் மகிழ்ச்சியாலும், பக்தியாலும் நிறைந்திருந்ததை உணர முடிந்தது.

    ராமரை வணங்கிய கரங்கள், பிரதமரை நன்றியுடன் வணங்குவதை காண முடிந்தது. பகவான் ராமரை போலவே, பிரதமரின் மனிதநேயம், தார்மீக ஒருமைப்பாட்டிற்கான சேவை ஈடு இணையற்றது.

    பகவான் ராமர் அனைத்து சவால்களுக்கும் எதிராக உறுதியாக நின்று தனது வாழ்க்கையை நிலத்திற்கும், உயிர்களுக்கும் சேவை செய்து அர்ப்பணித்தார்.

    பகவான் ராமரின் பாத சுவடில், நீங்கள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் தேசத்துக்கு சேவை செய்கிறீர்கள். தேசம் உங்களை எப்போதும் நினைவில் வைத்திருக்கும். பிரதமருக்கு புதுவை மக்கள் சார்பிலும், எனது சார்பிலும் நன்றி தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் ரங்கசாமி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டு வருகிறார்கள்.
    • அயோத்திக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து இருப்பதால் நகருக்குள் வாகன போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த திங்கட்கிழமை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி விழாவில் கலந்து கொண்டு ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.

    மிக கோலாகலமாக நடந்த இந்த விழாவில் சுமார் 8 ஆயிரம் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர். இதையடுத்து மறுநாள் செவ்வாய்க்கிழமை முதல் ராமரை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள ராமர் சிலை சிரித்த முகத்துடன் கண்கவரும் வகையில் இருப்பதால் வடமாநில மக்களிடம் அவரை உடனடியாக தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் அயோத்தியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    ஏற்கனவே கடந்த வாரம் முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் தங்கி இருந்தனர். இதனால் முதல் நாளிலேயே சுமார் 5 லட்சம் பக்தர்கள் ராமரை தரிசித்தனர். நேற்றும் சுமார் 4 லட்சம் பக்தர்கள் ராமரை கண்டு வழிபட்டனர்.

    கடந்த 2 நாட்களில் சுமார் 9 லட்சம் பக்தர்கள் பாலராமரை வழிபட்டுள்ளனர். இன்று (வியாழக்கிழமை) 3-வது நாளாக சிறப்பு ஆரத்தியுடன் அயோத்தி ராமர் ஆலயம் திறக்கப்பட்டது. இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டு வருகிறார்கள்.

    இன்றும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் ராமரை வழிபட வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள மிகப் பெரிய ஆலயங்கள் வரிசையில் ராமர் ஆலயம் முதன்மை இடத்துக்கு வந்துள்ளது.

    அயோத்திக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து இருப்பதால் நகருக்குள் வாகன போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து அயோத்திக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் அனைத்தும் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. என்றாலும் மக்கள் 4 சக்கர வாகனங்களில் வருவது அதிகரித்து உள்ளது.

    அந்த வாகனங்கள் அனைத்தும் அயோத்தியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்தப்படுகின்றன. அங்கிருந்து பக்தர்கள் நடந்தே சென்று ராமரை தரிசிக்கிறார்கள். கடும் குளிரையும் கண்டு கொள்ளாமல் பக்தர்கள் அதிகாலையிலேயே ராமர் ஆலயத்துக்கு வருவது ஆலய நிர்வாகிகளை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

    பக்தர்கள் வருகை அதிகரித்து இருப்பதால் தேவையான குடிநீர், உணவு மற்றும் தங்கும் வசதிகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார். வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

    இதற்கிடையே அயோத்தி ராமர் கோவிலுக்கு கடந்த 2 தினங்களாக காணிக்கையும் குவிந்து வருகிறது. முதல் நாளில் இணைய தளம் வழியாக ரூ.3.17 கோடி காணிக்கை கிடைத்தது. பக்தர்கள் காணிக்கையை நேரடியாக செலுத்துவதற்காக அயோத்தி ஆலய வளாகத்தில் 10 இடங்களில் காணிக்கை மையங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

    அயோத்தி ராமருக்கு தினமும் 5 ஆரத்தி நடத்தப்படுகிறது. காலையில் 2 ஆரத்தி, மதியம் ஒரு ஆரத்தி, மாலை 2 ஆரத்தி என 5 ஆரத்தி நடக்கிறது. இதை பார்க்கவே அதிக பக்தர்கள் திரள்கிறார்கள்.

    ராமருக்கு தினமும் ஆகம விதிகளின்படி அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. ஆடைகளின் வண்ணங்கள், நகைகள் ஆகியவையும் பாரம்பரிய முறைப்படி அணிவிக்கப்படுகிறது.

    வாரத்தில் 7 நாட்களும் கிழமைக்கு ஏற்ப ராமருக்கு உடை அணிவிக்கப்படுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை ராமருக்கு மெரூன் கலரில் பட்டாடை அணிவிக்கப்பட்டது. நேற்று பச்சை நிறத்திலும், இன்று மஞ்சள் நிறத்திலும் வஸ்திரங்கள் சாத்தப்பட்டன.

    ராமருக்கு ஏற்கனவே நாடு முழுவதும் இருந்து ஏராளமான பரிசு பொருட்கள் வந்து குவிந்துள்ளன. தொடர்ந்து பரிசு பொருட்கள் வந்து கொண்டே இருக்கிறது. நேற்று மும்பையில் இருந்து ஒருவர் 7 அடி உயரமுள்ள வாள் ஒன்று பரிசாக வழங்கினார்.

    அந்த வாள் 80 கிலோ எடை கொண்டது. தங்க முலாம் பூசப்பட்ட அந்த வாள் ராமர் பூஜைகளின்போது பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    • தி.மு.க.வினர் தவறான முன்னெடுப்பை எடுக்கின்றனர்.
    • முழுமையடையாத சட்டசபையை திறந்தவர்கள், இன்று மக்கள் சேர்ந்து உணர்வுபூர்வமாக திறந்த கோவிலை பற்றி கூறுகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் மாளிகையில் உத்தரபிரதேச மாநில உதயநாள் கொண்டாடப்பட்டது. விழாவில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    வளர்ச்சியடைந்த பாரதம் திட்டத்தில் அதிகாரிகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர் சிவா குற்றச்சாட்டு கூறி போராட்டம் நடத்தியுள்ளார். இது முழுமையாக அரசு நிகழ்ச்சி. இதில் அரசு அதிகாரிகள் பங்கேற்காமல் யார் பங்கேற்பது?

    தமிழகத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் அதிகாரிகள் கலந்து கொள்ளும்போது நாம் என்ன சொல்கிறோம்? வளர்ச்சியடைந்த பாரத் திட்டம் அரசின் திட்டம் மட்டுமல்ல, யாருக்கெல்லாம் மத்திய அரசின் திட்டங்கள் சென்று சேரவில்லையோ அவர்களும் பயன்பெறும் வகையில் பதிவு செய்யும் நிகழ்ச்சி.

    அது விளம்பர நிகழ்ச்சி அல்ல. மக்களுக்கு திட்டங்கள் கிடைக்கக்கூடாது என நினைக்கிறார்களா? தமிழகத்தில் நான் முதலமைச்சர் நிகழ்ச்சி திட்டமே, விக்சித் பாரத் திட்டம்தான்.

    மக்களுக்கு கிடைக்க வேண்டிய திட்டங்கள் கிடைப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். அதில் அதிகாரிகளை பயன்படுத்த கூடாதா?

    தி.மு.க.வினர் தவறான முன்னெடுப்பை எடுக்கின்றனர். நான் என்ன கட்சி நடவடிக்கையில் ஈடுபடுகிறேன்.? மக்களுக்கான நலனில்தான் ஈடுபடுகிறேன். புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி செய்த திட்டங்கள் குறித்து பட்டியல் கொடுத்துள்ளார். மத்திய அரசின் திட்டம் குறித்து நான் பட்டியல் கொடுத்துள்ளேன். புதுச்சேரியில் எந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை என எதிர்க்கட்சியினர் பட்டியல் தரட்டும்.

    கட்டி முடிக்கப்படாத ராமர் கோவிலை திறந்தார்கள் என அயோத்தி கோவில் பற்றி பல விமர்சனங்கள் வருகிறது.

    தமிழகத்தில் முதலமைச்சராக கருணாநிதி இருந்தபோது, புதிய சட்டசபை கட்டிடத்தை பிரதமராக இருந்த மன்மோகன் சிங் திறந்து வைத்தார். அப்போது அதற்கு மேற்கூரையே போடவில்லை. தற்காலிக செட் அமைத்து திறந்தனர்.

    முழுமையடையாத சட்டசபையை திறந்தவர்கள், இன்று மக்கள் சேர்ந்து உணர்வுபூர்வமாக திறந்த கோவிலை பற்றி கூறுகின்றனர். ராமர் கோவில் திறப்பையும் அரசியலாக்கி கொண்டிருக்கின்றனர். எதிர்க்கட்சியினர் தயவு செய்து குடியரசு தின விழாவை முன்னிட்டு நடத்தப்படும் தேநீர் விருந்தை அரசியலாக்க வேண்டாம். கவர்னர் விருந்தாக பார்க்க வேண்டும், அரசியல் விருந்தாக பார்க்க வேண்டாம்.

    ராமர் கோவில் 500 ஆண்டுகள் எதிர்பார்த்த நிகழ்வு. மத்திய அரசு நேரடியாக ஒளிபரப்பியதை எல்லோரும் பார்த்து பரவசம் அடைய வேண்டும் என்பதற்காக விடுமுறை அளிக்கப்பட்டது. அரசியல்வாதிகளைத்தான் பிரித்தீர்கள். ராமன், முருகன், பிள்ளையாரை பிரித்து விடாதீர்கள்.

    புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி, நான் உட்பட எல்லா சாமியும் ஒன்றாக இருக்கிறோம். விடுமுறையை வைத்து பக்தியை எடை போடாதீர்கள். எல்லோரும் சேர்ந்து பக்தியோடு கொண்டாடுவோம்.

    வட சென்னை எம்.பி. தொகுதியில் போட்டியிடப் போவது குறித்து நான் முடிவு செய்யவில்லை. அப்படி ஒரு திட்டம் இருந்தால் நானே உங்களை அழைத்து தகவல் தெரிவிக்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×